Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்

Featured Replies

இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்

 

 

இலங்கை மற்றும் சிம்­பாப்வே அணிகள் மோதும் ஒருநாள் தொடர் நாளை ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

DSC_8033.JPG

இலங்­கைக்கு சுற்றுப்பயணம் மேற்­கொண்­டுள்ள சிம்­பாப்வே அணி ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொட­ரிலும் ஒரே ஒரு டெஸ்ட் போட்­டி­யிலும் விளை­யா­டு­கின்­றது. 

இவ்­விரு அணி­களும் மோதும் ஒருநாள் தொடரின் முத­லி­ரண்டு போட்­டிகள் காலி மைதா­னத்தில் நடை­பெ­று­கின்­றன. மீத­முள்ள மூன்று போட்­டி­களும் ஹம்­பாந்­தோட்டை மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளன. ஒருநாள் தொடரின் முத­லா­வது போட்டி நாளை காலி மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.

சிம்­பாப்வே அணி­யுடன் மோத­வுள்ள இலங்கை அணி நேற்­று­முன்­தினம் அறி­விக்­கப்­பட்­டது. அதுவும் முத­லி­ரண்டு போட்­டி­க­ளுக்­கான அணியே அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதில் திஸர பெரேரா, சந்­திமால், நுவன் குல­சே­கர ஆகி­யோ­ருக்கு இடம் கொடுக்­கப்­ப­ட­வில்லை. அத்­தோடு பயிற்­சியின் போது காய­ம­டைந்த சீகுகே பிர­சன்­ன­வுக்கும் ஓய்­வ­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் ஒழுக்­காற்று விசா­ர­ணைக்கு உள்­ளாக்­கப்­பட்டு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்ள லசித் மலிங்க அணியில் இடம்­பெற்­றுள்ளார். அதன்­படி அஞ்­சலோ மெத்­தியூஸ் தலை­வ­ரா­கவும் உபுல் தரங்க உப தலை­வ­ரா­கவும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

நாளை ஆரம்­ப­மா­க­வுள்ள ஒருநாள் தொடர் எதிர்­வரும் ஜூலை மாதம் 10ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளது.

அதைத் தொடர்ந்து இவ்­விரு அணி ­களும் மோதும் ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொழும்பு ஆர்.பிரே­ம­தாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் ஜூலை மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

http://www.virakesari.lk/article/21324

  • தொடங்கியவர்
விருந்தாளியாக வரும் ஜிம்பாப்வேயை இலங்கை எவ்வாறு எதிர்கொள்ளும்?
Sri Lanka v Zimbabwe match Preview

விருந்தாளியாக வரும் ஜிம்பாப்வேயை இலங்கை எவ்வாறு எதிர்கொள்ளும்?

 
 
elite-davis-cup-2017-728.jpg

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி கிட்டத்தட்ட 17 வருடங்களின் பின்னர் இருதரப்பு  தொடரொன்றில் விளையாடுவதற்காக இலங்கை வந்திருக்கின்றது.  இந்நிலையில், வித்தியாசமான ஒரு குழாத்தைக் கொண்டுள்ள இலங்கை வீரர்கள் எவ்வாறு விருந்தாளிகளை எதிர்கொள்வார்கள் என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது.

இலங்கை அணி இறுதியாக, 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜிம்பாப்வேயின் சொந்த மண்ணில் இடம்பெற்ற முக்கோண ஒரு நாள் தொடரில் அவ்வணியை சந்தித்திருந்தது. குறித்த தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்த இலங்கை, 6 விக்கெட்டுக்களால் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரின் சம்பியனாகவும் மாறியிருந்தது.

அந்த முக்கோண ஒரு நாள் தொடரினை அடுத்து, 8 மாதங்களின் பின்னர் காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவிருக்கும் ஒரு நாள் தொடரில்,  நாளை (30) ஜிம்பாப்வே அணியினை இலங்கை எதிர்கொள்கின்றது.

இலங்கை – ஜிம்பாப்வே ஒரு நாள் போட்டிகள் வரலாறு

நடைபெறப்போகும் போட்டியானது, இரண்டு அணிகளும் மோதும் 51 ஆவது ஒரு நாள் போட்டியாக அமையவிருக்கின்றது. முன்னதாக நடைபெற்ற போட்டிகளில் 41 போட்டிகளினை இலங்கை கைப்பற்றியதோடு, 7 போட்டிகளில் மாத்திரமே கத்துக்குட்டி அணியான ஜிம்பாப்வே வெற்றி பெற்றிருக்கின்றது. 2 போட்டிகள் சமநிலையில் நிறைவுற்றுள்ளன.SlvZIm stats

இதுவரை தமது சொந்த மண்ணில், ஜிம்பாப்வே அணியுடன் விளையாடியிருந்த எந்த போட்டியிலும் தோல்வியினை சந்திக்காத இலங்கை அணியானது இறுதியாக, 2011ஆம் ஆண்டு உலக கிண்ணப் போட்டிகளில்  ஜிம்பாப்வே அணியினை 139 ஓட்டங்களால் வீழ்த்தியிருந்தது.

அணிகளது அண்மைய ஆட்டங்களின் கள நிலவரங்கள்

இலங்கை அணி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதி வாய்ப்பினை கோட்டை விட்டிருந்ததாலும், அத்தொடரில் பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டம் ஆகிய துறைகளில் திறமைகளை வெளிக்காட்டத் தவறியிருக்கவில்லை என்றே கூற முடியும்.

முக்கிய வீரர்கள் இல்லாத நிலையிலும், இலங்கை அணி சவால் மிக்க இந்திய அணியின் பந்து வீச்சினை சமாளித்து, சாதனை இலக்கு ஒன்றினை விரட்டி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருந்தது. அதேபோன்று அரையிறுதி வாய்ப்பினை தீர்மானிக்க முக்கிய ஆட்டமாக காணப்பட்ட, பாகிஸ்தான் அணியுடனான போட்டியிலும் இறுதி வரை அவ்வணிக்கு பந்து வீச்சில் நெருக்கடி கொடுத்த இலங்கை அணி களத்தடுப்பில் விட்டிருந்த சில தவறுகள் காணரமாகவே, அப்போட்டியில் துரதிஷ்டவசமான தோல்வியினை சந்தித்திருந்தது.  

எனவே, இந்த தவறுகளை சரிப்படுத்த இலங்கை அணி முயற்சி செய்யும் எனில், பலம் குறைந்த ஜிம்பாப்வே அணியினை இலகுவாக வீழ்த்தும்.

2016ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து, இதுவரை 30 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் இலங்கை அணியானது அவற்றில் 9 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது.

ஒரு நாள் தரவரிசையில் 11 ஆவது  இடத்தில் இருக்கும் ஜிம்பாப்வே அணியானது அண்மையில் பலம்மிக்க அணிகளை ஒரு நாள் போட்டிகளில் வீழ்த்திய பதிவுகள் ஏதும் இல்லை.  

எனினும், 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்றிருந்த முக்கோண ஒரு நாள் தொடரில், ஒரு நாள் தரவரிசைப் பட்டியலில் 9ஆம் இடத்தில் இருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியினரை 5 ஓட்டங்களால் வீழ்த்தியிருந்தது. அதோடு, அதே தொடரில் அவ்வணியுடனான ஏனைய போட்டியை சமநிலை செய்திருந்தது.

எனினும்,  கத்துக்குட்டி அணிகளில் ஒன்றான பங்களாதேஷ் ஆனது இலங்கையில் அண்மையில் நடைபெற்றிருந்த ஒரு நாள் தொடரினை 1-1 என சமநிலைப்படுத்தியிருந்தது. அதனை வைத்து பார்க்கும்போது, ஜிம்பாப்வே அணியினையும் குறைவாக மதிப்பிட்டு விட முடியாது.

2016ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, இதுவரை 18 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஜிம்பாப்வே அணியானது அதில் 6 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி

இலங்கை அணியினைப் பொறுத்தவரை, சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறியதிலிருந்து அணியில் பல மாற்றங்கள் நடந்துள்ளன. வீரர்கள் அனைவரும் உடற்தகுதி பரிசோதனைகளிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்கிற விளையாட்டு அமைச்சரின் நிபந்தனையில், அனைத்து வீரர்களும் பரிசோதனைகளிற்கு உட்படுத்தப்படுகின்றனர். அதோடு, 2019ஆம் ஆண்டு உலக கிண்ணம் வரை இலங்கையைப் பயிற்றுவிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர், கிரஹம் போர்ட் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

Kusal mendisஇவை ஒரு புறம் இருக்க, அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையில் இத்தொடரிற்காக களமிறங்கும் இலங்கை அணியில், இறுதியாக இலங்கை- ஜிம்பாப்வே அணிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற முக்கோண ஒரு நாள் தொடரில் சிறப்பாக செயற்பட்டிருந்த துடுப்பாட்ட வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

இதில் குசல் மெண்டிஸ், ஜிம்பாப்வே அணிக்கெதிராக 55.66 என்னும் சிறந்த ஓட்ட சராசரியினைக் கொண்டிருக்கின்றார். அதோடு, குறித்த தொடரில் இலங்கை சார்பாக அதிக ஓட்டங்களினை (179) குவித்த நிரோஷன் திக்வெல்ல உம் அணியில் இருப்பது இலங்கை அணியினை பலப்படுத்தும் விடயமாக காணப்படுகின்றது.

NIroshanஇவர்களோடு சேர்த்து அணித் தலைவர் மெத்திவ்ஸ், உபுல் தரங்க, அறிமுக வீரர் வனிது ஹஸரங்க மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் அணிக்கு துடுப்பாட்டத்தில் மேலும் பலம் சேர்க்க எதிர்பார்க்கப்பட்டுள்ளனர்.

தினேஷ் சந்திமால், தனன்ஞய டி சில்வா, குசல் ஜனித் பெரேரா (காயம்), சாமர கபுகெதர மற்றும் சீக்குகே பிரசன்ன (காயம்) ஆகியோர் இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகளிற்குமான குழாத்தில் இணைக்கப்படவில்லை.

பந்து வீச்சினைப் பொறுத்தமட்டில், 17 வருடங்களின் பின்னர் ஒரு நாள் போட்டியொன்று நடக்கப்போகும் காலி மைதானத்தின் நிலைமைகளினை கருதி அகில தனன்ஞய மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் நீண்ட காலத்தின் பி்ன்னர் அணியில் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.  

அதோடு, லசித் மாலிங்க அணியில இருப்பது இலங்கை அணியின் பந்து வீச்சிற்கு கிடைத்த வரப்பிரசாதங்களில் ஒன்றாகும். மாலிங்க, ஜிம்பாப்வே அணிக்கெதிராக இதுவரை இரண்டு ஒரு நாள் போட்டிகளில் மாத்திரமே விளையாடி இருப்பினும், அவரது அனுபவம் அணிக்கு எப்போதும் கைக்கொடுக்கும் விடயமாக இருக்கின்றது.

மேலும், இறுதியாக ஜிம்பாப்வேயில் இடம்பெற்ற முக்கோணத் தொடரில் இலங்கை சார்பாக அதிக விக்கெட்டுகளை (8) சாய்த்த வீரர்களில் ஒருவரான அசேல குணரத்னவும் சம்பியன்ஸ் கிண்ணத்தில் சிறப்பாக செயற்பட்ட நுவான் பிரதீப்பும் அணியில் உள்ளமை இலங்கையின் பந்து வீச்சு இத்தொடரில் சிறப்பாக அமையும் என்பதனை உறுதி செய்கின்றது.

எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி

தனுஷ்க குணத்திலக்க, நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டிஸ், வனிது ஹஸரங்க, உபுல் தரங்க,  அஞ்செலோ மெதிவ்ஸ் (அணித் தலைவர்), அசேல குணரத்ன, துஷ்மந்த சமீர, லஹிரு மதுசங்க, லசித் மாலிங்க, நுவான் பிரதீப்

ஜிம்பாப்வே அணி

சுழல் வீரர் கிரேம் கிறீமர் தலைமையில் களமிறங்கும் ஜிம்பாப்வே அணியானது புதிய வீரர்கள் பலருடன் சவால் மிக்க இலங்கை அணியினை எதிர்கொள்கின்றது.

அவ்வணியின் துடுப்பாட்டத்துறையின் பங்களிப்பு இளம் வீரர்களோடு சேர்த்து, அனுபவமிக்க வீரர்களில் ஒருவரான ஹமில்டன் மசகட்சாவிடம் தங்கியிருக்கின்றது. இலங்கை அணிக்கெதிராக இரண்டு அரைச் சதங்களை பெற்றிருக்கும் வலது கை துடுப்பாட்ட வீரரான அவர் ஜிம்பாப்வே தரப்பின் துடுப்பாட்டத்தில் முக்கிய பங்கினை இத்தொடரில் வகிப்பார் என நம்பப்படுகின்றது.

@AFP @AFP

அதே போன்று, அணியின் மத்திய வரிசை துடுப்பாட்டத்தினை சகல துறை வீரரான சிக்கந்தர் ரஷா முன்னெடுக்கவுள்ளார். பாகிஸ்தான் வம்சாவளியினை சேர்ந்த வீரர்களில் ஒருவரான ரஷா, இறுதியாக விளையாடிய ஒரு நாள் போட்டியில், 2 விக்கெட்டுக்களுடன் சேர்த்து 58 ஓட்டங்களினையும் விளாசி அணிக்கு வெற்றியினை பெற பங்களிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

@AFP @AFP

மேலும், கிரைக் இர்வின் மற்றும் சீன் வில்லியம்ஸ் ஆகியோரும் அணியின் துடுப்பாட்டத்தினை முன்னெடுக்கக் கூடிய சிறந்த வீரர்களாக காணப்படுகின்றனர்.

அணியின் பந்து வீச்சினைப் பொறுத்தவரையில், கிரேம் கிறீமருடன் சேர்த்து சகல துறை வீரர்களான சீன் வில்லியம்ஸ், மால்கோம் வால்லர் மற்றும் சிக்கந்தர் ரஷா ஆகியோர் அணிக்கு பலம் சேர்க்கக் கூடியவர்களாக காணப்படுகின்றனர்.  

மேலும், தரிசாய் முசகண்கடா மற்றும் கிரிஸ் பொபு ஆகிய வீரர்கள் வேகப்பந்து வீச்சு துறையினை முன்னெடுத்து அணிக்கு சிறப்பாக செயற்பட எதிர்பார்க்கப்பட்டுள்ளனர்.

எதிர்பார்க்கப்படும் ஜிம்பாப்வே அணி

கிரேம் கிறீமர் (அணித் தலைவர்), ஹமில்டன் மசகட்சா, கிரேக் இர்வின், சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ரஷா, பீட்டர் மூர், மால்கோம் வால்லர், கிரிஸ் பொபு, றிச்சர்ட் கராவா,  தரிசாய் முசகண்கடா, தென்டாய் சட்டாரா

இறுதியாக

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி காணப்படும் ஒரு நாள் தரவரிசைப் பட்டியலானது, அடுத்த உலகக் கிண்ணத்திற்கு தகுதியான அணிகளை நேரடியாகத் தெரிவு செய்வதற்குரிய இறுதிப் பட்டியலாக இருக்கும். குறித்த நாளில் ஒரு நாள் தரவரிசையில் இங்கிலாந்து அணியுடன் சேர்த்து முதல் 7 இடங்களைப் பெற்றிருக்கும் அணிகளே (மொத்தம் 8 அணிகள்) அடுத்த உலகக் கிண்ணத்திற்கு நேரடியாகத் தெரிவாகும்.

இந்நிலையில் தற்பொழுது ஒரு நாள் தரவரிசையில், 8ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டிருக்கும் இலங்கை அணிக்கு தரவரிசையில் முன்னிலை அடைவதற்கு இத்தொடர் ஒரு வாய்ப்பாக அமைகின்றது.

எனவே, இலங்கை அணி தரவரிசையில் மேலும் பின்தள்ளப்படாமல் இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே, அண்மைக் காலங்களில் அணியில் விடப்பட்ட தவறுகளை சரி செய்து, வீரர்கள் முழு முயற்சியுடன் ஜிம்பாப்வேயை எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

http://www.thepapare.com/

  • தொடங்கியவர்

நாணயச் சுழற்சியில் இலங்கை வெற்றி ; துடுப்பெடுத்தாட முடிவு

Published by Priyatharshan on 2017-06-30 09:38:36

 

சிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

sri-lanka-vs-zimbabwe.jpg

இலங்கை மற்றும் சிம்­பாப்வே அணிகள் மோதும் ஒருநாள் தொடர் இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

 

இலங்­கைக்கு சுற்றுப்பயணம் மேற்­கொண்­டுள்ள சிம்­பாப்வே அணி ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொட­ரிலும் ஒரே ஒரு டெஸ்ட் போட்­டி­யிலும் விளை­யா­டு­கின்­றது. 

 

இவ்­விரு அணி­களும் மோதும் ஒருநாள் தொடரின் முத­லி­ரண்டு போட்­டிகள் காலி மைதா­னத்தில் நடை­பெ­று­கின்­றன. மீத­முள்ள மூன்று போட்­டி­களும் ஹம்­பாந்­தோட்டை மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளன. 

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான ஒருநாள் தொடரின் முத­லா­வது போட்டி இன்று காலி மைதா­னத்தில் ஆரம்பமாகவுள்ளது.

 

இதேவேளை, இவ்­விரு அணி களும் மோதும் ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொழும்பு ஆர்.பிரே­ம­தாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் ஜூலை மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

http://www.virakesari.lk/article/21351

  • தொடங்கியவர்

சிம்பாப்வேக்கு 317 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

Published by Priyatharshan on 2017-06-30 14:18:16

 

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 317 ஓட்டங்களை சிம்பாப்வே அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

sri-lanka-Zimbabwe.jpg

இலங்கை மற்றும் சிம்­பாப்வே அணிகள் மோதும் ஒருநாள் தொடர் இன்று காலியில் ஆரம்பமாகியது.

 

சிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில்  5 விக்கெட்டுகளை இழந்து 316 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

 

இப் போட்டியில் இலங்கை அணிசார்பாக துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் 86 ஓட்டங்களையும் உபுல் தரங்க ஆட்டமிழக்காது 79 ஓட்டங்களையும் குணதிலக்க 60 ஓட்டங்களையும் அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் சிம்பாப்வே அணி சார்பாக சத்தர 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

இலங்­கைக்கு சுற்றுப்பயணம் மேற்­கொண்­டுள்ள சிம்­பாப்வே அணி ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொட­ரிலும் ஒரே ஒரு டெஸ்ட் போட்­டி­யிலும் விளை­யா­டு­கின்­றமை குறிப்பிடத்தக்கது.

 

Tags

http://www.virakesari.lk/article/21366

  • தொடங்கியவர்

இலங்கையைப் பந்தாடியது சிம்பாப்வே ; 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி

Published by Priyatharshan on 2017-06-30 18:10:09

 

இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளால் அபாரவெற்றிபெற்றுள்ளது.

 

இலங்கை மற்றும் சிம்­பாப்வே அணிகள் மோதும் ஒருநாள் தொடர் இன்று காலியில் ஆரம்பமாகியது. இதன் முதல் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி முதலில்  துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 317 ஓட்டங்களை சிம்பாப்வே அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

 

இலங்கை அணிசார்பாக துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் 86 ஓட்டங்களையும் உபுல் தரங்க ஆட்டமிழக்காது 79 ஓட்டங்களையும் குணதிலக்க 60 ஓட்டங்களையும் அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

fsfasfasfsfasfasf.jpg

பந்து வீச்சில் சிம்பாப்வே அணி சார்பாக சத்தர 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் 317 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிம்பாப்வே அணி இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களின் பந்துகளை மிகவும் எளியமையாக எதிர்கொண்டு வெற்றி இலக்கை அடைந்தது.

மிகவும் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 47.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 322 ஓட்டங்களைப்பெற்று 6 விக்கெட்டுகளால் அபாரவெற்றிபெற்றது.

சொந்த மண்ணில் தோற்ற இலங்கை அணிக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.

சிம்பாப்வே அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அசத்திய மிர் 112 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்நிலையில் இலங்­கைக்கு சுற்றுப்பயணம் மேற்­கொண்­டுள்ள சிம்­பாப்வே அணி ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொட­ரிலும் ஒரே ஒரு டெஸ்ட் போட்­டி­யிலும் விளை­யா­டு­கின்­றது.

http://www.virakesari.lk/article/21377

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.