Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனைத்து இலங்கையர்களும் சுயமரியாதையுடன் வாழக்கூடிய தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் – கனடா

Featured Replies

அனைத்து இலங்கையர்களும் சுயமரியாதையுடன் வாழக்கூடிய தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் – கனடா

Shelley-Whiting.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அனைத்து இலங்கையர்களும் சுயமரியாதையுடன் வாழக்கூடிய தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைற்றிங் ( Shelley Whiting ) தெரிவித்துள்ளார்.

150ம் கனேடிய தின நிகழ்வுகளை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மத, இன, பால் நிலை அல்லது மொழி அடிப்படையில் இலங்கையில் எவரும் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கைக்கும் கனடாவிற்கும் இடையில் மிக நீண்ட கால உறவுகள் நீடித்து வருவதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/31469

  • தொடங்கியவர்

சமாதானம், பாதுகாப்பு, நல்லிணக்கம் தொடர்பான இலங்கையின் உறுதிப்பாட்டுக்கு கனடா வரவேற்பு

u8-c5d3b3e99c1b2d9aa5d8b1548a25aea5bca8e990.jpg

 

கன­டா­வா­னது இலங்­கையின் ஜன­நா­யகம் சட்ட மற்றும் அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்த முயற்­சி­க­ளுக்கு ஊக்­க­ம­ளிக்கும் அதே­வேளை நீண்ட கால அடிப்­ப­டை­யி­லான சமா­தானம், பாது­காப்பு, நல்­லி­ணக்கம் என்­பன தொடர்­பான முன்­னேற்­றத்தை எட்­டு­வ­தற்­கான அந்த அர­சாங்­கத்தின் உறு­திப்­பாட்­டுக்கு வர­வேற்­ப­ளிப்­ப­தாக கனே­டிய தினத்­தை­யொட்டி கொழும்­பி­லுள்ள கனே­டிய உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யத்தால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்கை மற்றும் மாலை­தீ­வுக்­கான கனே­டிய உயர்ஸ்­தா­னிகர் ஷெல்லி விற்­றிங்கால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அந்த அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது கனே­டிய தின­மா­னது கனே­டி­யர்­களைப் பொறுத்­த­வரை மகிழ்ச்­சி­க­ர­மான தரு­ண­மா­க­வுள்­ளது. நாம் இந்த வரு­டத்தில் கனடா கூட்­டாட்சி நாடாக உரு­வாக்கம் பெற்ற 150 ஆவது ஆண்டு தினத்தைக் கொண்­டா­டு­கிறோம்.

150 வரு­டங்­க­ளுக்கு முன்னர் சார்ள்ஸ்­டவுண் மற்றும் கியூபெக் கூட்­டங்­களின் போது கனே­டிய கூட்­டாட்­சியின் தந்­தை­யர்கள் இன்று சர்­வ­தேச ரீதியில் முன்­மா­தி­ரி­யொன்­றாக விளங்கும் முடி­வான ஜன­நா­ய­கத்தை சிருஷ்­டிக்கக் கூடிய தூர நோக்­கு­டைய திட்டம் தொடர்பில் பணி­யாற்­றினர். அதன்பின் உரு­வாக்­கப்­பட்ட எமது நாட்டின் வர­லாறு அதனை விடவும் பழை­மை­யா­ன­தாகும்.

இந்­நி­லையில் இந்த கனே­டிய தின வைப­வ­மா­னது எமது வர­லாறு மற்றும் பாரம்­ப­ரி­யத்­துடன் அந்­நாட்டின் மொழியில், கலா­சார, இன, மத பன்­மு­கத்­தன்­மையை கொண்­டா­டு­வ­தற்­கான ஒரு தரு­ண­மா­க­வுள்­ளது.

வெவ்­வேறு வாழ்க்கைப் பின்­ன­ணி­யையும் அனு­ப­வங்­க­ளையும் கொண்­ட­வர்கள் கன­டாவை உரு­வாக்க ஒன்­றி­ணைந்­துள்­ளனர். இன்று எமது இல்­ல­மா­க­வுள்ள இந்த நாடு சுபீட்­ச­மா­னதும் பல­மா­னதும் சுதந்­தி­ர­மா­ன­து­மா­க­வுள்­ள­தற்கு நாம் அவர்­க­ளுக்கு நன்றிக் கடன்­பட்­டுள்ளோம்.

கனே­டி­யர்கள் சகிப்­புத்­தன்­மை­யு­டைய அமை­தி­யான பன்­மு­கத்­தன்­மை­யிலும் மனித உரி­மை­களை பாது­காப்­ப­திலும் பால்­நிலை சமத்­து­வத்­திலும் சர்­வ­தே­ச­ ம­ய­மாக்­கத்­திலும் ஜன­நா­யக சமூ­கத்­திலும் உல­கெங்­கு­முள்ள தேவைப்­பாட்­டி­லுள்­ள­வர்­க­ளுக்கு உத­வு­வ­திலும் நம்­பிக்கை கொண்­டுள்­ளனர்.

கன­டா­வா­னது அந்­நாட்­டி­லான பன்­மு­கத்­தன்மை கார­ண­மாக செல்­வ­மிக்க கலா­சார, அர­சியல். பொரு­ளா­தார ரீதி­யான நாடாக உள்­ளது. கன­டாவைப் பொறுத்­த­வரை அந்­நாட்­டி­லான பன்­மு­கத்­தன்மை மிகவும் பல­மா­ன­தாக உள்­ளது. அது எமது மாபெரும் சொத்­துக்­களில் ஒன்­றா­கவும் எமது ஆக்­கத்­தி­ற­னுக்­கான மூலா­தா­ர­மா­கவும் உள்­ளது.

பல வருட கால கடின உழைப்பின் மூலமே கனடா இன்­றி­ருக்கும் நிலையை அடைந்­துள்­ளது. இது திடீ­ரென விபத்­தாக இடம்­பெற்ற ஒன்­றல்ல. மேற்­கொள்­ளப்­பட்ட தெரி­வுகள் மூலமே இது இடம்­பெற்­றுள்­ளது. பல தசாப்த காலத்­திற்கு முன்னர் கனடா பல்­க­லா­சாரக் கொள்­கை­யொன்­றையும் இரு உத்­தி­யோ­க­பூர்வ மொழி­க­ளையும் உள்­வாங்­கு­வ­தற்­கான தெரிவை மேற்­கொண்­டது.

அதே­ச­மயம் பிர­தமர் ரூடோ தனது அமைச்­ச­ர­வை­யிலும் கனே­டிய அர­சாங்­கத்­திலும் பால்­நிலை சமத்­து­வத்தை தெரி­வு ­செய்­துள்ளார். இந்­நி­லையில் கனே­டிய அர­சாங்கம் பால்­மாற்று சிகிச்சை செய்து கொண்ட கனே­டி­யர்­களை பாது­காக்க புதிய சட்­ட­மொன்றை அறி­மு­கப்­ப­டுத்­து­வதை தெரி­வு ­செய்­தது.

கன­டாவும் இலங்­கையும் நீண்ட கால பரஸ்­பர பங்­கா­ளித்­து­வத்­தையும் அடிப்­படை விழு­மி­யங்கள் தொடர்பில் பகி­ரப்­பட்ட உறு­திப்­பாட்­டையும் மக்­க­ளுக்­கி­டை­யி­லான ஆழ்ந்த பிணைப்­பு­க­ளையும் கொண்­டுள்­ளன.

அதே­ச­மயம் எமது இரு நாடு­களும் இரு மொழிகள் என்ற பகி­ரப்­பட்ட பண்­பையும் கொண்­டுள்­ளன. இந்­நி­லையில் கன­டா­வா­னது இலங்­கையின் உத்­தி­யோ­க­பூர்வ மொழிகள் இரண்­டையும் ஊக்­கு­விக்க அந்­நாட்­டுடன் இணைந்து பணி­யாற்றி வரு­கி­றது.

இலங்கை தொடர்­பான கனே­டிய அக்­க­றைகள் கருத்து வெளிப்­பாட்டுச் சுதந்­திரம், ஜன­நா­யகம், மனித உரி­மைகள் மற்றும் சட்­டத்தின் ஆட்சி போன்ற கொள்­கை­க­ளுக்­கான உறு­திப்­பா­டொன்றால் முடுக்­கி­ வி­டப்­பட்­ட­ன­வா­க­வுள்­ளன.

நீண்ட கால அடிப்­ப­டை­யி­லான சமா­தானம், பாது­காப்பு, நல்­லி­ணக்கம் என்­பன தொடர்­பான முன்­னேற்­றத்தை எட்­டு­வ­தற்­கான இலங்கை அர­சாங்­கத்தின் உறு­திப்­பாடு தொடர்பில் உரிய பெறு­பேற்றை எட்­டு­வ­தற்கு சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­ன­ரி­டையே ஆக்­க­பூர்­வ­மான இணைப்பு இருப்­பது அவ­சி­ய­மா­க­வுள்­ளது. இந்தத் தீர்­வுகள் அனைத்து இலங்­கை­யர்­களும் இன, மத, பால்­நிலை, மொழி பேத­மின்றி சமா­தானம், கௌரவம், பார­பட்­சங்­க­ளி­லி­ருந்து விடு­தலை பெற்று வாழ்­வதை சாத்­தி­ய­மாக்கும் என கனடா நம்­பு­கி­றது.

கனடா இலங்­கையின் நெருங்­கிய நீண்ட கால நட்பு நாடு என்ற வகையில் அனைத்­தையும் உள்­ள­டக்­கிய சமா­தா­ன­மான பல்­வ­கை­மை­யுள்ள நாட்டை உரு­வாக்­கு­வதில் தனது சொந்த அனு­ப­வங்­களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் அந்­நாட்­டுடன் இணைந்து பணி­யாற்ற உறு­திப்­பாட்­டுடன் உள்­ளது. இலங்­கை­யு­ட­னான எமது பரஸ்­பர உற­வுக்கு முக்­கிய தூண்­க­ளாக உள்­ள­வற்றில் இளை­ஞர்­க­ளு­ட­னான பிணைப்பு, கன­டாவின் புதிய பெண்­ணிய சர்­வ­தேச உதவிக் கொள்கை மற்றும் வர்த்­தகத் தொடர்­புகள் என்­பன உள்­ள­டங்­கு­கின்­றன. இளை­ஞர்கள் உண்­மை­யான பூகோள பிர­ஜை­களின் புதிய தலை­மு­றை­யொன்றை பிர­தி­நி­தித்­துவம் செய்­ப­வர்­க­ளாக உள்­ளனர்.

அதே­ச­மயம் கன­டாவும் இலங்­கையும் ஐக்­கிய நாடுகள் சபை, பொது­ந­ல­வாயம் மற்றும் ஏனைய பல்­தே­சிய நிறு­வ­கங்­களில் முக்­கிய பிரச்­சி­னைகள் குறித்­து­ தந்­தி­ரோ­பாய பங்­கா­ளர்­க­ளாக ஆக்­க­பூர்­வ­மான இணைப்பைக் கொண்­டி­ருப்­ப­தற்கு பகி­ரப்­பட்ட உறு­திப்­பாட்டை கொண்­டுள்­ளன.

இதற்கு மேல­தி­க­மாக கனடா இலங்­கை­யு­ட­னான பல வருட கால நட்­பு­றவின் போது அண்­மையில் இடம்­பெற்ற வெள்ள அனர்த்­தத்­திற்­கான நிவா­ரண முயற்­சி­க­ளி­லான பங்­க­ளிப்­புகள் உள்­ள­டங்­க­லாக அந்­நாட்டு மக்­க­ளுக்கு தேவைப்­பா­டுகள் ஏற்­படும் போது ஆத­ர­வ­ளித்து வந்­துள்­ளது.

அதே­ச­மயம் கனடா அக்­கறை கொண்­டுள்ள ஒன்­றாக கால­நிலை மாற்றம் உள்­ளது. அந்த வகையில் அபி­வி­ருத்­தி­ய­டைந்து வரும் நாடு­களில் கால­நிலை மாற்­றத்­துக்கு வழி­வகை செய்­யாத பொரு­ளா­தார வளர்ச்­சி­யொன்றை முன்னெடுக்க கனடா ஆதரவளித்து வருவதுடன் அனைத்து காலநிலை தொடர்பான நிகழ்ச்சி திட்டங்களும் பால்நிலை சமத்துவ நோக்கினூடாக வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுவதை உறுதிப்படுத்த பணியாற்றி வருகிறது.

கனடா இலங்கையுடனான தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த ஆர்வம் கொண்டுள்ளது. அது நம்மால் மேற்கொள்ளப்படும் இரு வழி வர்த்தக செயன்முறைகளில் எமது விழுமியங்களும் கோட்பாடுகளையும் ஊக்குவிக்க எமக்கு வாய்ப்பைத் தருவதாகவுள்ளது. தராதர பொருளாதார வாய்ப்புகளுடன் எப்போதும் தராதர கல்வி வருகிறது. அந்த வகையில் உலகத் தராதர கல்வியை வழங்குவதற்கான நிலையமாக உள்ளதையிட்டு கனடா பெருமையடைகிறது. கனடாவிலுள்ள ஆராய்ச்சி அபிவிருத்தி வாய்ப்புகள் காரணமாக அந்நாடு இலங்கையைச் சேர்ந்த சிலர் உட்பட உலகின் மிகவும் திறமையானவர்களை ஈர்த்துள்ளது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-01#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.