Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசமைப்பு, வடக்கு அரசியல் சுமந்திரனின் பத்திரிகையாளர் சந்திப்பு – காணொலி

Featured Replies

அரசமைப்பு, வடக்கு அரசியல் சுமந்திரனின் பத்திரிகையாளர் சந்திப்பு – காணொலி

அரசமைப்பு, வடக்கு அரசியல் சுமந்திரனின் பத்திரிகையாளர் சந்திப்பு – காணொலி
 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று காலை பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார்.

இதன்போது புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பிலும், வடக்கு அரசியல் தொடர்பிலும் கருத்துக்களைக் கூறினார்.

பத்திரிகையாளர் சந்திப்பின் முழுமையான காணொலி இணைக்கப்பட்டுள்ளது.

 

http://uthayandaily.com/story/8805.html

  • தொடங்கியவர்

ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஒன்றுமே நடக்கவில்லை என கூற முடியாது – எம்.ஏ.சுமந்திரன்

sumanthiran2.jpg

புதிதாக அமைக்கப்படவுள்ள  உத்தேச அரசியல் யாப்பானது தமிழ் மக்களுடைய இனப் பிரச்சனைக்குரிய தீர்வாக அமையும் என  தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் அவரது இல்லத்தில்  இடம்பெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அரசின் கொள்கைத் திட்டத்தின் புதிய அரசியல் சாசனத்திற்கு தாம் ஆதரவு கொடுத்து இருப்பதாகவும் அவர் தெரிவிதுள்ளார்.  ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஒன்றுமே நடக்கவில்லை என கூற முடியாது எனவும்  பல விடயங்கள் நடைபெற்றுக்கொண்;டுதான் இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் காணிகள்  விடுவிக்கப்பட்டு வருவதுடன் கைதிகள் 3.2 சதவீதமானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் காணாமல் போனவர்களின் சட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவி;ததுள்ளார்.

தமிழ்மக்களின் முக்கிய பிரச்சனைகள் அரசியல் ரீதியாக தீர்க்கப்படவேண்டும் எனவும் அதற்காக நாட்டின் சட்டவாக்கம்,சமூக ஒப்பந்தங்கள் மாற்றி அமைக்கப்படவேண்டும் எனவும்  அதற்காகதான் தாம் ஆதரவளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இரு பிரதான கட்சிகளும் ஒன்று சேர்ந்து; தேசிய அரசாங்கத்தினையும் அமைத்துள்ளநிலையில்  அதனை குழப்ப முனைவது மிக முட்டாள் தனம் எனத் தெரிவித்த சுமந்திரன் நாம் எதனை  அடைய நினைக்கின்றோமோ அதற்கான  வழியினைதான் அமைத்து இருக்கின்றோமெனவும் தெரிவித்தார்

http://globaltamilnews.net/archives/31513

  • தொடங்கியவர்

முஸ்லீம் மக்களின் சம்மதம் கிடைக்கும் வரை வட கிழக்கு இணைப்பு சாத்தியம் இல்லை

 

முஸ்லீம் மக்களின் சம்மதம் கிடைக்கும் வரை வட கிழக்கு இணைப்பு சாத்தியம் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்... 

 

வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் மாகாணசபை அதிகாரப் பகிர்வின் அடிப்படை அலகு என்று அனைவராலும் இணங்கப்படுகின்றது. அது இடைக்கால அறிக்கையிலே வரும். அதோடு சேர்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கு சேர்ந்த ஒரு அலகாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றது என்றும் அவ் அறிக்கையில் எழுதப்பட்டுள்ளது.

தமிழ் தேசிக் கூட்டமைப்பின் நிலைப்பாடு வடக்கு கிழக்கு ஒரு அலகாக இருக்க வேண்டும் என்பது. இது இறுதியில் எப்படி அமையும் என்று இப்போது சொல்ல முடியாது. ஆனால் ஒவ்வொரு மாகாணமும் இணங்கினால் தான் அந்த மாகாணங்கள் இணையக்கூடிய சாத்தியம் இருக்கின்றது. எனவே இந்த இணைப்பு உடனடியாக சாத்தியம் இல்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு வடக்கு கிழக்கு இணைப்பு என்பது. என்னுடைய நிலைப்பாடும் அதுதான். ஆனால் தற்போது அந்த இணைப்பு சாத்தியம் இல்லை என்று கூறுவதற்கு காரணம் உண்டு.  மாகாணங்கள் இணங்கினால்தான் இணைப்பு  சாத்தியமாகும். தற்போது கிழக்கில் வாழுகின்ற முஸ்லிம் மக்கள் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

ஆனால் எப்போதும் இந்ந நிலைப்பாட்டில் தான் முஸ்லிம் மக்கள் இருப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்க தேவை இல்லை. அந்த நிலமை மாறும். முஸ்லிம்களும் சேர்ந்து வடக்கு கிழக்கு இணைப்பினை கோருகின்ற போது அவர்களுடன் எமது இணைப்பு புதுப்பிக்கப்படும்.

யுத்த காலத்தினால் இரு இணங்களுக்கும் இடையில் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த விரிசல் ஒரு இரவில் மறைந்துவிடாது. இணைப்பு வேண்டுமென்று சொல்லுகின்ற நாங்கள் அவர்களுடனான இணைப்புக்கான உறவினை புதுப்பித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

இதனை விடுத்து வடக்கு கிழக்கு இணைப்பினை ஒரு கோசமாக சொல்லிக் கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை. 13 ஆம் திருத்தம் பிரயோசனம் அற்றது. வடகிழக்கு இணைப்பு தேவை என்று கோசமாக சொல்லிக் கொண்டிருந்தால் அது நடமுறைக்கு வராது.

இருப்பினும் 13 ஆம் திருத்தத்தில் தான் வரலாற்றி முதல் முறையாக மாகாணங்கள் பகிரப்பட்டது. தற்காலிகமாக ஏனும் வடகிழக்கு இணைப்பு பற்றி சொல்லப்பட்டது.

http://www.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.