Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மக்களின் இயல்புநிலையை பாதிக்கும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள்

Featured Replies

மக்­களின் இயல்­பு­நி­லையை பாதிக்கும் போராட்­டங்கள், ஆர்ப்­பாட்­டங்கள்

 

நாட்டில் வேலை­நி­றுத்தப் போராட்­டங்­களும் ஆர்ப்­பாட்­டங்­களும் தொடர்ந்த வண்ணம் இருப்­பதை காண­மு­டி­கின்­றது. குறிப்­பாக பல்­வேறு பிரச்­சி­னை­களை முன்­வைத்து வேலை­நி­றுத்தப் போராட்­டங்கள், சத்­தி­யாக்­கி­ரக போராட்­டங்கள், எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் என தொடர்ச்­சி­யாக மக்­களை சிர­மத்­திற்­குள்­ளாக்கும் விட­யங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. சைட்டம் விவ­கா­ரத்தை முன்­வைத்து அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் அவ்வப்போது வேலை­நி­றுத்தப் போராட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­வ­துடன் எதிர்­கா­லத்தில் தொடர்ச்­சி­யான வேலை­நி­றுத்தம் இடம்­பெறும் எனவும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. அத்­துடன் சைட்டம் விவ­கா­ரத்தை முன்­வைத்து பல்­கலைக்­கழக மாண­வர்கள் ஒன்­றி­யமும் தொடர்ச்­சி­யாக ஆர்ப்­பாட்­டங்­களை நடத்தி வரு­கின்­றது. மேலும் தபால் திணைக்­கள ஊழி­யர்கள் மூன்று நாள் வேலை­நி­றுத்தப் போராட்­டத்தை முன்­னெ­டுத்து நேற்று முன்­தினம் அதனை முடித்­துக்­கொண்­டனர்.

எனினும் தொடர்ந்தும் தமது பிரச்­சி­னை­க­ளுக்கு உறு­தி­யான தீர்வு கிடைக்­கா­விடின் தொடர் வேலை­நி­றுத்தப் போராட்­டத்தில் குதிப்­ப­தாக தபால் ஊழி­யர்கள் சங்கம் தெரி­வித்­தி­ருக்­கின்­றது. சைட்டம் தனியார் மருத்­துவக் கல்­லூரி விவ­கா­ரத்தில் அதற்கு எதிர்ப்பு தெரி­விக்கும் வகையில் பெற்­றோ­­லி­யத்­துறை தொழிற்­சங்­கங்­களும் போராட்­டங்­களில் குதிக்­க­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இவ்­வாறு பெற்­றோ­லி­யத்­துறை ஊழி­யர்கள் தொழிற்­சங்க நட­வடிக்கை­களில் ஈடு­பட்டால் அது போக்­கு­வ­ரத்­துத்துறை உள்­ளிட்ட சகல துறை­களும் ஸ்தம்­பி­த­ம­டையும் அபாயம் காணப்­ப­டு­கின்­றது.

அது­மட்­டு­மின்றி பல்­வேறு கார­ணங்­களை முன்­வைத்து மின்­சா­ரத்­துறை ஊழி­யர்­களும் சில தினங்­க­ளுக்கு முன்னர் ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­டி­ருந்­தனர். மேலும் சைட்டம் பிரச்­சி­னைக்கு தீர்வு காணு­மாறு வலி­யு­றுத்­தியும், கைது செய்­யப்­பட்ட மாண­வர்­களை விடு­விக்­கு­மாறு கோரியும் பல்­க­லைக்­க­ழக மருத்­துவ பீட மாண­வர்­களின் பெற்றோர் கொழும்பில் சத்­தி­யாக்­கி­ர­கப் ­போ­ராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். இவ்­வாறு எங்­கு­ பார்த்­தாலும் வேலை­நி­றுத்தப் போராட்­டங்­களும் சத்­தி­யாக்­கி­ரகப் போராட்­டங்­களும் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களும் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. அது­மட்­டு­மின்றி வைத்­தி­ய­த்துறை உள்­ளிட்ட நாட்டின் பல்­வேறு அர­சாங்க நிறு­வ­னங்­க­ளிலும் ஊழி­யர்கள் எதிர்­வரும் காலங்­களில் தொடர்ச்­சி­யான வேலை­நி­றுத்தப் போராட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தாக எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருப்­பதும் இங்கு கவ­னத்­தில் ­கொள்­ள­வேண்­டிய விட­யங்­க­ளாகும்.

அந்­த­வ­கையில் புதிய அர­சாங்கம் 2015 ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்­ததன் பின்னர் வேலை­நி­றுத்தப் போராட்­டங்­க­ளுக்கும் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கும் எவ்­வி­த­மான குறைவும் இல்­லாத நிலைமை காணப்­ப­டு­கின்­றது. எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­ப­டு­வதும், ஜன­நா­ய­க ­ரீ­தியில் அர­சாங்­கத்­திற்கு தமது எதிர்ப்பை வெளிக்­காட்­டு­வதும் மக்­க­ளுக்கு காணப்­ப­டு­கின்ற ஜன­நா­யக உரி­மை­யாகும். அதனை யாரும் மறுக்­கவோ, சவா­லுக்­குட்­ப­டுத்­தவோ முடி­யாது. இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்­பிலும் தொழிற்­சங்க செயற்­பா­டு­க­ளுக்­கான உரிமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆனால் வேலை­நிறுத்தப் போராட்­டங்கள் உள்­ளிட்ட இவ்­வாறான தொழிற்­சங்க நட­வ­டிக்­கைகள் என்ன நோக்­கத்­திற்­காக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன என்­பதும் அதனால் சாதா­ரண பொது­மக்­க­ளுக்கு எவ்­வா­றான சிர­மங்­களும் அசௌ­க­ரி­யங்­களும் ஏற்­ப­டு­கின்­றன என்­பதும் மிக விசே­ட­மாக கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வேண்­டிய விட­யங்­க­ளாகும். காரணம் தொழிற்­சங்க நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் தரப்­பினர் தமது உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­காக அர­சாங்­கத்­திற்கு அழுத்­தங்­களைப் பிர­யோ­கிப்­பதில் தவ­றில்லை. ஆனால் அதற்கு மாறாக சாதா­ரண பொது­மக்­க­ளையும் நோயா­ளர்­க­ளையும் அன்­றாட அரச சேவையை எதிர்­பார்த்து தமது கரு­மங்­க­ளை­ நி­றை­வேற்றிக் கொள்ள காத்­தி­ருக்கும் பொது­மக்­க­ளையும் சிர­மத்­திற்­குட்­ப­டுத்தி தொழிற்­சங்க நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் தரப்­பினர் தமது உரி­மை­களை வென்­றெ­டுப்­பது எந்­த­விதத்தில் நியாயம் என்­பது சாதா­ரண பொது­மக்­களால் எழுப்­பப்­படும் கேள்­வி­யாக உள்ளது.

காரணம் தொழிற்­சங்க செயற்­பா­டு­க­ளி­னாலும் எதிர்ப்பு போராட்­டங்­க­ளி­னாலும் பொது­மக்கள் அந்­த­ள­விற்கு பாதிப்­புக்­களை எதிர்­நோக்கி வரு­கின்­றனர். விசே­ட­மாக அர­சாங்க வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்தின் போராட்டம் கார­ண­மாக நோயா­ளர்கள் எதிர்­கொள்ளும் அசௌ­க­ரி­யங்கள் மிக அதி­க­மாகும். குறிப்­பாக வெளி­நோ­யாளர் பிரிவில் சிகிச்சை பெறு­வ­தற்­காக வருகை தரு­கின்ற மக்கள் பல அசௌ­க­ரி­யங்­களை எதிர்­கொள்­கின்­றனர். பெரும்­பாலும் வெளி­நோயாளர் பிரி­வுக்கு முதி­யோரே பெருமளவில் சிகிச்சை பெற வரு­வ­துண்டு. இந்­நி­லையில் இவ்­வாறு திடீ­ரென வேலை­நி­றுத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­ற­போது சிகிச்சை பெற வரு­கின்ற நோயா­ளர்கள் கடும் நெருக்­க­டி­களை எதிர்­கொள்­கின்­றனர்.

அது­மட்­டு­மின்றி சில தினங்­க­ளுக்கு முன்னர் முன்­னெ­டுக்­கப்­பட்ட தபால் ஊழி­யர்­களின் வேலை­நி­றுத்தம் கார­ண­மாக நாட்டின் தபால் சேவை முழு­மை­யாக ஸ்தம்­பி­த­ம­டைந்­தி­ருந்­தது. குறிப்­பாக கொழும்பு மத்­திய தபால் பரி­வர்த்­தனை நிலை­யத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான தபால் பொதிகள் தேங்­கிக்­கி­டந்­ததை காண­மு­டிந்­தது. அது­மட்­டு­மின்றி இலட்­சக்­க­ணக்­கான தபால்கள் விநி­யோ­கிக்­கப்­ப­டாமல் கிடந்­த­மை­யினால் பொது­மக்கள் கடும் சிக்­கல்­களை எதிர்­கொண்­டனர். மேலும் தபா­லு­றைகள், முத்­தி­ரை­களை பெற்­றுக்­கொள்­வதில் பொது­மக்கள் கடும் நெருக்­க­டி­களை எதிர்­கொண்­டனர். குறிப்­பாக அரச கரு­மங்­களை மேற்­கொள்­வ­தற்கு முயற்­சித்த பொது­மக்கள் பல சிர­மங்­களை எதிர்­கொண்­டனர். தபால் ஊழி­யர்­களின் வேலை­நி­றுத்தம் கார­ண­மாக 2018 ஆம் ஆண்­டுக்­காக முதலாம் தரத்­திற்கு மாண­வர்­களை சேர்த்­துக்­கொள்­வ­தற்­காக விண்­ணப்­பிப்­ப­தற்­கான கால எல்­லையும் நீடிக்­கப்­ப­ட­வேண்டி ஏற்­பட்­டது. அது­மட்­டு­மின்றி அடுத்த வரு­டத்­திற்­கான பல்­க­லைக்­க­ழக தெரி­வுக்­காக மாண­வர்கள் விண்­ணப்­பிப்­ப­தற்­கான கால எல்­லையும் நீடிக்­கப்­பட்­டது.

மேலும் போக்­கு­வ­ரத்து விதி­களை மீறி தண்­டப்­பணம் செலுத்­த­வேண்­டி­ய­வர்­களும் அவற்றை செலுத்­து­வ­தற்கு மேலும் ஒரு­வார­கால அவ­கா­சத்தைப் பெற்­றுக்­கொள்­ள­வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. இவ்­வாறு தபால் ஊழி­யர்­களின் வேலை நிறுத்தம் கார­ண­மாக நாட்டு மக்கள் எதிர்­கொண்ட அசௌ­க­ரி­யங்கள் மிக அதி­க­மாகும் அதே­வேளை தற்­போது பெற்­றோ­லி­யத்­துறை ஊழி­யர்­களும் வேலை­நி­றுத்தப் போராட்­டங்­களை முன்­னெ­டுக்கவுள்ளதாக சமிக்ஞை வெளி­யிட்­டுள்ள நிலையில் அவ்­வாறு பெற்­றோ­லியத் துறை ஊழி­யர்கள் வேலை­நி­றுத்­தத்தை முன்­னெ­டுத்தால் அது பாரிய நெருக்­க­டி­களை தோற்­று­விப்­ப­தாக அமைந்­து­விடும்.

போக்­கு­வ­ரத்து துறை பாதிக்­கப்­படின் நாட்டின் முழு அரச இயந்­தி­ரமும் நெருக்­க­டிக்­குள்­ளாகும் அபாயம் காணப்­ப­டு­கின்­றது. எனவே வேலை­நி­றுத்தப் போராட்­டங்­களை முன்­னெ­டுக்க முயற்­சிக்கும் தரப்­பினர் அதற்கு முன்னர் பல தட­வைகள் சிந்­தித்து தீர்­மானம் எடுக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாக காணப்­ப­டு­கின்­றது. இதே­வேளை தற்­போது முன்­னெ­டுக்­கப்­படும் ஆர்ப்­பாட்டம் மற்றும் போராட்­டங்­க­ளுக்கு கடந்த அர­சாங்க காலத்தில் உரு­வாக்­கப்­பட்ட பிரச்­சி­னை­களே காரணம் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இப்­போது ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெ­றும்­போது அதற்குக் கார­ண­மா­ன­வர்கள் மௌனம் சாதிக்­கின்­றனர். தனிப்­பட்ட ரீதியில் இதற்­கான கார­ண­கர்த்­தாக்கள் யார் என்­பதை நான் அறிவேன். சைட்டம் கல்­லூரி தொடர்­பாக போராட்­டங்கள் இடம்­பெ­று­கின்­றன. ஆனால் அந்தக் கல்­லூ­ரியை உரு­வாக்­கி­ய­வர்கள் யார் என்று உங்­க­ளுக்குத் தெரியும் என்றும் ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

எது எவ்­வா­றி­ருப்­பினும் இந்த வேலை­நி­றுத்தப் போராட்­டங்கள் தலை­ந­கரின் அன்­றாட இயல்­பு­நி­லையை பாதிக்கும் வகை­யி­லான எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் என்­ப­வற்­றினால் மக்கள் எதிர்­கொள்ளும் அசௌ­க­ரி­யங்கள் தொடர்பில் அனைத்துத் தரப்­பி­னரும் கவ­னத்தில் கொள்­ள­வேண்டும். இவ்­வாறு தொழிற்­சங்க நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முயற்­சிக்கும் தரப்­பி­ன­ருடன் அர­சாங்கம் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி பிரச்­சி­னை­களை சுமுக­மாக தீர்த்­து­வைக்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.

அது­மட்­டு­மின்றி தொழிற்­சங்க போராட்­டத்தில் ஈடு­படும் தரப்­பி­னரும் இந்த நட­வ­டிக்­கை­க­ளினால் பொது­மக்கள் எவ்­வா­றான அசௌ­க­ரி­யங்­களை எதிர்­கொள்­கின்­றனர் என்­பதை சிந்­திக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என தீர்மானங்களை எடுப்பதினால் நாட்டில் இயல்புநிலை பாதிக்கப்படுவதுடன் மக்களும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். இந்த நெருக்கடி நிலைமை குறித்து தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட எத்தனிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பெற்றோலியத்துறை ஊழியர்கள், தபால் ஊழியர்கள் சிந்திக்கவேண்டியது அவசியமாகும்.

அதேபோன்று இவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கவேண்டியது பதவியில் இருக்கும் அரசாங்கத்தின் கடமையாகும். இவ்வாறு அனைத்துத் தரப்பினரும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு செயற்படவேண்டியது கட்டாயமாகும். ஜனநாயக உரிமைகள் உள்ளன என்பதற்காக அவற்றை துஷ்பிரயோகம் செய்து மக்களை நெருக்கடிக்குள்ளாக்க எந்தவொரு தரப்பினரும் முன்வரக்கூடாது. அதேபோன்று தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் முன்வைக்கும் பிரச்சினைகளைப் பார்த்துக்கொண்டு அரசாங்கம் இழுத்தடிப்புடன் இருக்கக்கூடாது. எனவே அனைத்து தரப்பினரும் இந்த விடயங்களை கருத்தில் கொண்டு செயற்படவேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-01#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.