Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வினைத்திறனான செயற்பாட்டுக்கு அடித்தளமிடப்படும்

Featured Replies

வினைத்திறனான செயற்பாட்டுக்கு அடித்தளமிடப்படும்

 

நேர்காணல்: ஆர்.ராம்

 

மூன்று மாத காலப்பகுதியில் என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள அமைச்சின் திணைக்களங்கள், நிறுவனங்களின் வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுப் பதற்கான அடித்தளத்தை இடுவதே பிரதான நோக்கமென வடமாகாணசபையில் புதிதாக அமைச்சுப்பதவியினை பொறுப்பேற்றுள்ள அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

புதிதாக அமைச்சுப்பதவியை பொறுப்பேற்ற பின்னர் கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு,  

கேள்வி: அனந்தி சசிதரன் வடமாகாண மகளிர் விவகா ரம்,சமூக சேவை, புனர் வாழ்வு, கூட்டுறவு அபிவிருத்தி, உணவுவழங்கல் விநியோகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் என்ற பதவிக்கு தெரிவு செய்யப்பட்டமைக்கான காரணம் என்னவாக இருக்கலாம் என நினைக்கின்றீர்கள்?

பதில்:- எனக்காக மட்டும் போராடிய நான். என்னைப்போன்ற அனைத்து பெண்களுக்காகவும் அவர்களுடன் இணைந்து குரல்கொடுக்க ஆரப்பித்தேன். இறுதி யுத்தத்தின் நேரடிச்சாட்சியமாகவிருக்கும் நான் ஐ.நா.சபை வரையில் சென்றேன். நீதி வேண்டும் என்பதை உயிரை துச்சமென மதித்து உரத்துக் கூறினேன். அதில் இறுக்கமாகவும் இருந்தேன்.

அவ்வாறானதொரு கட்டத்தில் தான் என்னை வடமாகாண அரசியலுக்குள் பிரவேசிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு வாய்ப்பு வழங்கப் பட்டது. பாதிக்கப்பட்ட ஒட்டு மொத்த மக்களின் ஏக்கங்களையும், எதிர்பார்ப்புக்களையும் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் நான் நிச்சயமாக எடுத்துரைப்பேன் என்ற பாரிய நம்பிக்கையின் நிமித்தமே இரண்டாவது அதிகூடிய வாக்குகளை வழங்கி மக்கள் தமது ஆணையை அளித்திருந்தார்கள்.

இருந்தபோதிலும் வடமாகாண சபை அங்குரார்ப்பணமான போது அமைச்சுப்பதவிகள் தொடர்பில் சில முன்னுக்குப்பின் முரணான ஒருசில முரண்பாடுகள் காணப்பட்டன. அப்போது கூட எனது பெயர் பரிசீலிக்கப்பட்டதாக சில தரப்புக்கள் குறிப்பிட்டன. பெண் பிரதிநிதித்துவம் என்ற அடிப்படையும் எனக்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளின் அடிப்படையிலும் அவ்வாறான முயற்சிகள் இருந்தபோதும் பங்காளிக்கட்சிகளையும் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கப்படவேண்டும் என்ற இரு காரணங்களுக்காக பின்னர் அந்த முயற்சிகள் கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.

எனினும் அச்சந்தர்ப்பத்தில் என்னுடன் யாரும் அமைச்சு பதவிகள் குறித்து பேசவில்லை. நானும் அதனை பொருட்டாக கருதவும் இல்லை. மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்றும் வகையில் ஒரு மக்கள் பிரதிநிதியாக என்றும் மனச்சாட்சிக்கு விரோதமில்லாத மக்களின் குரலாக இருக்க வேண்டும் என்பதையே விரும்பினேன். அதன் படியே தொடர்ச்சியாக செயற்பட ஆரம்பித்தேன்.

இவ்வாறான நிலையில் அண்மையில் இரண்டு அமைச்சர்கள் விசாரணைக்குழுவால் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தமது பதவிகளை இராஜினாமாச் செய்திருந்தனர். அதன் பின்னர் அவர்களின் பதவிகள் முதலமைச்சர் வசமிருந்தன. இந்நிலையில் கடந்த புதன்கிழமை எம்மை அழைத்த முதலமைச்சர் இவ்வாறு அமைச்சுப்பதவியை வழங்குவதாக குறிப்பிட்டார். தற்போது நெருக்கடியான காலம் தற்காலிகமாக இதனை ஏற்றுக்கொண்டு நியாயமாக செயற்படுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

தற்காலிகமானதா இல்லை நீண்டகாலத்திற்குரியதா என்பதை நான் பொருட்படுத்தவே இல்லை. வடமாகாண முதலமைச்சர் அழைத்து இவ்வாறானதொரு பொறுப்பை ஏற்றுமாறு கேட்கிறார். அதற்கு மரியாதை செய்ய வேண்டியது ஆளும் கட்சியின் உறுப்பினர் ஒருவர் என்ற அடிப்படையில் எனது கடமை.

அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும் கிடைக்கும் ஒரு அங்கீகாரமா கவே பார்க்கின்றேன்.நிச்சயமாக நேர்மையாகவும், உண்மையானதாகவுமே எனது செயற்பாடுகள் அமையும் என்று திடசங்கற்பத்துடன் உள்ளேன்.

கேள்வி:- இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப் பினர்கள் முதலமைச் சருக்கு எதிராக நம்பிக்கை யில்லாப்பிரேரணை கொண்டு வந்தபோது நீங்கள் முதலமைச்சருக்கு ஆதரவாக இருந்தீர்கள் அதற்கு காரணம் என்ன? அமைச்சுப்பதவிக்கும் அந்நிலைப்பாட்டிற்கும் தொடர்புண்டா?  

பதில்:- முதலில் நான்கு அமைச்சர்கள் மீதும் காணப்பட்ட குறைபாடுகள், அதேபோன்று குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நானே முதலமைச்சரிடத்தில் முறைப்பாடுகளைச் செய்திருந்தேன். அதேநேரம் அவர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் குறித்து சாட்சிகளையும் வழங்கியிருக்கின்றேன். தற்போதும் கூட ஏனைய அமைச்சர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கும் போதும் சாட்சிகளை வழங்குவேன்.

என்னைப் பொறுத்தவரையில் நீதியற்ற செயற்பாடுகளுக்கு எதிராகவும் எனக்கு கிடைத்த ஆதாரங்களின் பிரகாரமும், உண்மையாகவும் நேர்மையாகவும் சாட்சியங்களை வழங்கினேன். எனக்கு யாரிடத்திலும் தனிப்பட்ட கோபதாபங்கள் இல்லை. மக்களின் பக்கத்திலிருந்து சிந்தித்தேன். கட்சி, அரசியல் எதிர்காலம் என்பதையெல்லாம் தூக்கி வைத்து விட்டு சாதாரண பொதுமகளாக மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டு சிந்தித்தேன். செயற்பட்டேன்.

அதன் காரணத்தினாலேயே முதலமைச்சருக்கு ஆதரவளித்தேன். நானும் என்னைப்போன்று ஏனைய உறுப்பினர்களும் அளித்த முறைப்பாடுகள் சாட்சியங்களுக்கு அமையவே அவர் நடவடிக்கை எடுத்தார். அந்த நடவடிக்கையை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று முறைப்பாடு செய்த நாமே எவ்வாறு கோருவது? அது என்ன யதார்த்தம்? ஆனால் சில உறுப்பினர்கள், அவ்வாறு முன்னுக்கு பின் முரணாக செயற்பட்டமையினாலேயே இத்தகைய நெருக்கடிகள் வடமாகாண சபையில் எழுந்திருந்தன என்பது தான் உண்மை.

ஆகவே அனந்தி சசிதரன் தமிழரசுக்கட்சிக்கு எதிராக செயற்பட்டு முதலமைச்சருக்கு ஆதரவாக நின்றார்.அதனால் தான் அமைச்சுப்பதவி கிடைத்தது என்றெல்லாம் கூறுகின்றார்கள். இவர்கள் அனைவரும் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே கூறுகின்றார்கள். பிரசாரம் செய்கின்றார்கள்.

கேள்வி:- உங்களுக்கு வழங் கப்பட்ட அமைச்சு பதவியானது தற்காலிகமானது மூன்று மாதங்  களே நீடிக்கும் எனவும் முதல மைச்சர் குறிப்பிட்டிருக்கின்றார். மூன்று மாத காலப்பகுதிக்குள் வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியுமென்று கருதுகின்றீர்களா? 

பதில்:- நான் மூன்று மாத காலத்திற்குள் அனைத்தையும் செய்து முடிப்பேன் என்று பொய்யான வாக்குறுதியை வழங்குவதற்கு தயாரில்லை. உண்மையிலேயே மூன்று மாத காலப்பகுதி என்பது விடயப்பரப்பை ஆராய்வதற்கும், கடந்த கால செயற்பாடுகள் பற்றிய மதிப்பீடுகளை செய்து எதிர்கால முன்னெடுப்புக்கள் குறித்த திட்டமிலுக்குமே போதுமானதாக இருக்குமோ என்று நான் கருதவில்லை.

இவற்றுக்கெல்லாம் மேலாக புனர்வாழ்வு, மகளிர் விவகாரம் ஆகியவற்றுக்கு எவ்வளவு நிதி இருக்கின்றது என்ற கேள்வியும் இருக்கின்றது. எது எவ்வாறாயினும், அடுத்த மூன்று மாத காலப்பகுதியில் நிச்சயமாக இந்த அமைச்சின் கட்டமைப்புக்கள், எதிர்கால செயற்பாட்டிற்கான ஒரு திட்டமிடல் என்பனவற்றினை செய்து முடிப்பதற்கு எதிர்பார்த்துள்ளேன். எனது அமைச்சின் கட்டமைப்புக்கள் அனைத்தும் முழுமையான வினைத்திறனான செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கான அடித்தளத்தினை சரியாக மேற்கொள்வேன்.

அதனைவிடவும் உடனடித் தேவைகள் உள்ள பெண்களுக் கான உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்குரிய நடவடிக்கைகளை நிச்சயமாக முன்னெடுப்பேன். இதற்கு மத்திய அரசாங்கத்தில் காணப்படும் தடைகள் குறித்தும் கவனம் செலுத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பேன். மூன்றுமாதத்தில் முடிந்தவரையிலான முழு முயற்சிகளும் எடுத்து அர்ப்பணிப்பான செயற்பாடுகள் தொடரும். 

கேள்வி:- இலங்கை தமிழரசுக்கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டவர் ஒருவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருக்கின்றது என்றதொரு விமர்சனம் உங்கள் கட்சியைச் சார்ந்தவர்களாலேயே முன்வைக்கப்படுகின்றதே?

பதில்:- இதனை நான் அறிவேன். நான் ஐ.நா.வுக்குச் சென்று இறுதி யுத்தத்தின் போது இனப்படுகொலை இடம்பெற்றது என்று கூறியது தவறா? இராணுவத்திடம் சரணடைந்த எனது கணவர் உட்பட ஏனையவர்கள் எங்கே என்று கேட்டது தவறா? சர்வதேச விசாரணை வலியுறுத்தியது தவறா? கடந்த ஆட்சியாளர்களிடத்திலும் தற்போதைய ஆட்சியாளர்களி டத்திலும் நீதி கேட்பது, நியாயம் கேட்பது, எமது மக்களுக்கான உரிமைகளை கேட்பது எல்லாம் தவறா?

சில காரணங்களை கூறினார்கள். என்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென தீர்மானித்தார்கள். அதன் பிரகாரம் இலங்கை தமிழரசுக்கட்சியின் மகளிர் அணிச்செயலாளர் என்ற பதவியிலிருந்து நீக்கினார்கள். ஆனால் இன்றும் நான் கட்சியின் உறுப்பினராகவே இருக்கின்றேன். கட்சியின் சில உறுப்பினர்கள் எனது செயற்பாடுகளை விமர்சிக்கின்றார்கள். அதற்கான காரணத்தினை அவர்கள் தான் முன்வைக்கவேண்டும்.

தமிழர் அரசியலில் பெண் பிரதிநிதித்துவம் மிக குறைவு அவ்வாறு ஒருவர் தெரிவு செய்யப்பட்டாலும் உண்மையாக, நேர்மையாக செயற்படாது சிலரின் கைப்பொம்மைகளாக இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றார்கள். அது முடியாது போனதும் விமர்சனங்களை முன்வைத்து ஓரங்கட்டப் பார்க்கின்றார்கள். இதுதான் உண்மை. அரசியல் நாகரிகம் கருதி நான் சில விடயங்களை விரிவாக கூற விரும்பவில்லை.

கேள்வி:- கணவரைத் தேடும்பணி, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிப் பயணம், தற்போது அமைச்சுப்பதவி சுமைகள் அதிகரித்திருக்கின்றன இலக்கை அடைவீர்களா?

பதில்:- இதில் எல்லாம் வெற்றி பெற்று சாதித்துக்காட்டுவேன் என்று வெறும் வாய்ப்பேச்சுக்காக கூறிவிட முடியாது. நாம் தற்போது இக்கட்டான கட்டத்தில் இருக்கின்றோம். மத்திய அரசாங்கம், சர்வதேச அரசியல் சூழல் எல்லாம் வேறொரு திசையில் பயணிக்கின்றன. ஆகவே மிகவும் சாணக்கியமாக செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதனடிப்படையில் எமது மக்களுக்கான நீதிக்கானதும் உரிமைகளுக்கானதுமான போராட்டம் தொடரும். அதிலிருந்து எள்ளளவும் மாறமாட்டேன்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-01#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.