Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கத் தூதரக தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து விசாரணை நடத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவு

Featured Replies

அமெரிக்கத் தூதரக தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து விசாரணை நடத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவு

 

Embassy-of-US.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அமெரிக்கத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்;டுள்ளதாக வெளியான அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் பாராளுமன்றில் இது குறித்து தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ். தீவிரவாதிகள் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

தாக்குதல் அச்சுறுத்தல் குறித்த விபரங்கள் காணப்படுவதாக வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளதாகவும் எனினும் அமெரிக்கத் தூதரகத்திடம் அவ்வாறான எவ்வித தகவல்களும் கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

https://globaltamilnews.net/archives/31879

  • தொடங்கியவர்
விசேட தகவலைப் பெற்று நடவடிக்கை எடுக்கப் பணிப்பு
 

image_b097694d6f.jpg“கொழும்பு-03, கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளதா என்பது தொடர்பில் எங்களுக்குத் தெரியாது. எனினும், இந்தச் செய்தி தொடர்பில், சம்பந்தப்பட்ட ஊடகத்திடம் விசேட தகவல் இருந்தால், அதனைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிக்கப்பட்டுள்ளது” என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்று (05) இடம்பெற்ற, பிரதமரிடம் கேளுங்கள் நேரத்தின் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான முஜிபுர் ரஹ்மான் இடையீட்டுக் கேள்வியொன்றை எழுப்பினார்.  

அக்கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மேற்கண்டவாறு பதிலளித்தார்.  இடையீட்டு கேள்வியை எழுப்பிய அவர், “கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயுதக்குழு திட்டமிட்டுள்ளது என்று தகவல் வெளியாகியிருந்த நிலையில், அந்தத் தகவலை அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளது. இது புனையப்பட்ட செய்தியா? இது தொடர்பில் விசாரணை நடத்தப்படுமா?” என்றும் இதன்போது கேள்வி எழுப்பினார்.  

அக்கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “உண்மையில் இந்த விவகாரம் தொடர்பில் செய்தி வெளியாகியிருந்தது, அமெரிக்கத் தூதரகமும் அதை நிராகரித்திருந்தது. எனினும், அவர்களிடம் (சம்பந்தப்பட்ட ஊடகத்திடம்) விசேட தகவல் இருக்கிறதா என்று எமக்குத் தெரியாது. ஆகவே, அவர்களிடம் விசேட தகவல் இருந்தால் அதை பெற்று உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்குப் பணித்துள்ளேன்” என்றார்.    

http://www.tamilmirror.lk/செய்திகள்/விசேட-தகவலைப்-பெற்று-நடவடிக்கை-எடுக்கப்-பணிப்பு/175-200030

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.