Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய உலக சாதனையை நிலைநாட்டிய திக்வெல்ல மற்றும் குணத்திலக்க

Featured Replies

புதிய உலக சாதனையை நிலைநாட்டிய திக்வெல்ல மற்றும் குணத்திலக்க
19942600_1601910873215805_55989693763130

புதிய உலக சாதனையை நிலைநாட்டிய திக்வெல்ல மற்றும் குணத்திலக்க

elite-davis-cup-2017-728.jpg

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒரு நாள் போட்டியில், தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக 200 ஓட்டங்களுக்கு மேலாக இணைப்பாட்டத்தினைப் பெற்ற இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஜிம்பாப்வே அணியுடன் இலங்கை அணியானது, ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் தற்போது விளையாடி வருகின்றது.  

இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளும் ஏற்கனவ்வே நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கை அணியானது தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கின்றது.

 

இரண்டு நாட்களுக்கு முன்னர் (6ஆம் திகதி) நடைபெற்ற இத்தொடரின் மூன்றாவது போட்டியில் ஆரம்ப வீரர்களாக களமிறங்கியிருந்த நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஜோடியினர் முதல் விக்கெட்டிற்காக இணைப்பாட்டமாக 229 ஓட்டங்களினைப் பகிர்ந்தனர். இவர்களின் சிறப்பாட்டத்தினால் அப்போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

அந்தப் போட்டியில் இவ்விரு வீரர்களும் சர்வதேச போட்டிகளில் தமது கன்னிச் சதங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அதனையடுத்து, இன்று (8) ஆரம்பமாகியிருந்த போட்டியில் நாணய சுழற்சி முடிவுகளிற்கு அமைவாக முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்த இலங்கை அணியானது, கடந்த போட்டி போன்று நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகியோருடன் தமது துடுப்பாட்டத்தினை தொடங்கியிருந்தது.

ஆரம்பம் முதலே ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்ட இலங்கையின் ஆரம்ப வீரர்கள் இருவரும் நிதானமாகத் துடுப்பெடுத்தாடி மால்கோம் வால்லர் வீசிய போட்டியின் 34 ஆவது ஓவரில் 200 ஓட்டங்களினை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டனர். இதனால், ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டு தடவை அடுத்தடுத்து 200 ஓட்டங்களை ஆரம்ப இணைப்பாட்டமாகக் கடந்த வீரர்கள் என்னும் புதிய உலக சாதனையை இந்த வீரர்கள் பதிவு செய்தனர்.

அதோடு, ஒரு நாள் போட்டி வரலாற்றிலும் இதுவே எந்தவொரு விக்கெட்டிற்குமாகப் பெறப்பட்ட தொடர்ச்சியான இரண்டாவது 200 ஓட்டங்களுக்கு மேலான இணைப்பாட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்விணைப்பாட்டத்திற்காக, நிரோஷன் திக்வெல்ல 105 பந்துகளில் 104 ஓட்டங்களினையும், தனுஷ்க குணத்திலக்க 97 பந்துகளில் 86 ஓட்டங்களினையும் பெற்று பங்களிப்புச் செய்திருந்தனர்.  

ஏற்கனவே, இவர்கள் இன்றைய போட்டியில் 100 ஓட்ட இணைப்பாட்டத்தைப் பெற்றமையின் மூலம், தொடர்ச்சியாக இரு முறை 100 ஓட்ட இணைப்பாட்டத்தைப் பெற்ற இலங்கையின் நான்காவது துடுப்பாட்ட ஜோடியாகவும் தம்மைப் பதிவு செய்துகொண்டனர்.

http://www.thepapare.com

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.