Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டு. மாவட்ட செயலாளரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம் இரு பிரதேச செயலாளர்களின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு

Featured Replies

மட்டு. மாவட்ட செய­லா­ளரை இட­மாற்றக் கோரி ஆர்ப்­பாட்டம்

p17-2dcadd26987d4ccd5be81bb36ae0e04b3d898195.jpg

 

இரு பிர­தேச செய­லா­ளர்­களின் இட­மாற்­றத்­துக்கு எதிர்ப்பு
(பட்­டி­ருப்பு நிருபர்)

மட்­டக்­க­ளப்பு மாவட்ட செய­லா­ளரை இட­மாற்­றக்­கோ­ரியும் இட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்ள இரண்டு பிர­தேச செய­லா­ளர்­களின் இட­மாற்­றங்­களை இரத்­துச்­செய்­யக்­கோ­ரியும் மட்­டக்­க­ளப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நேற்று திங்­கட்­கி­ழமை முற்­பகல் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

ஊழ­லுக்கு எதி­ரான மக்கள் பேர­ணியும் நியா­ய­மான அதி­கா­ரி­களின் இட­மாற்­றத்­தினை ரத்­துச்­செய்­வ­தற்­கு­மான வேண்­டுகோள் என்னும் தலைப்பில் இந்த கவன ஈர்ப்பு போராட்­ட­மமும் பேர­ணியும் நடை­பெற்­றது.

மட்­டக்­க­ளப்பில் ஊழல்­களில் ஈடு­ப­டு­வோரை மாவட்­டத்தில் இருந்­து­வெ­ளி­யேற்ற வேண்டும் என்­ப­துடன் அவர்­க­ளுக்­கான தகுந்த தண்­ட­னை­களும் வழங்­கப்­ப­ட­வேண்டும்.அதற்­காக அனை­வரும் இணைந்து போராட முன்­வ­ர­வேண்டும் என பொது அமைப்­பு­க­ளினால் விடுக்­கப்­பட்ட வேண்­டு­கோளின் அடிப்­ப­டையில் நேற்று காலை மட்­டக்­க­ளப்பு காந்தி புங்கா முன்­பாக இந்த கவன ஈர்ப்பு போராட்­ட­மமும் பேர­ணியும் நடாத்­தப்­பட்­டது.

இந்த போராட்­டத்தில் வாகரை மற்றும் செங்­க­லடி பிர­தேச மக்­களும் பொது அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள்,தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சீ.யோகேஸ்­வரன்,எஸ்.வியா­ழேந்­திரன்,ஞா.சிறி­நேசன் ஆகி­யோரும் கலந்­து­கொண்­டனர்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் சிறப்­பான முறையில் சேவை­யாற்­றி­வரும் இரண்டு பிர­தேச செய­லா­ளர்­களை இட­மாற்றம் செய்ய மேற்­கொண்­டு­வரும் நட­வ­டிக்­கை­கக்கு இதன்­போது கடு­மை­யான எதிர்ப்பு தெரி­வித்த ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மாவட்ட அர­சாங்க அதிபர் தொடர்பில் வெளி­வரும் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் உரி­ய­வர்கள் கவ­னத்தில் கொண்டு இட­மாற்­றப்­பட வேண்­டு­மெ­னவும் கோரிக்கை விடுத்­தனர்.

பிர­தேச செய­லா­ளர்கள் ஊழல் செய்­கின்­றார்கள் மோசடி செய்­கின்­றார்கள் என்று ஒரு மாவட்ட அர­சாங்க அதிபர் கூறு­கின்றார் என்றால் அது தொடர்பில் அவ­ரையே விசா­ரணை செய்­ய­வேண்டும் எனவும் மக்கள் தெரி­வித்­தனர்.

இதன்­போது மட்டு.அர­ச­அ­தி­பரின் சாதனை மது­போ­தையில் முத­லிடம்,வறு­மையில் முத­லிடம்,ஊழல்­செய்யும் அதி­கா­ரி­களின் அதி­கா­ரத்­தினை கட்­டுப்­ப­டுத்­து­வது யார்,நல்­லாட்சி அர­சாங்கம் ஊழ­லுக்கு சார்­பா­னதா,மட்­டக்­க­ளப்பு மக்கள் அர­சியல் அநா­தை­களா?,மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திற்கு வரும் வௌிநாட்டு பணம் எங்கே? போன்ற வாச­கங்கள் பொறிக்­கப்­பட்ட பதா­கை­களை ஆர்ப்­பாட்­டத்தில் கலந்­து­கொண்­ட­வர்கள் ஏந்­தி­யி­ருந்­தனர்.

இதன்­போது ஜனா­தி­ப­திக்கு வழங்­கு­வ­தற்­கான மக­ஜர்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது.

காந்தி புங்கா முன்­பாக ஆர்ப்­பாட்டம் நடை­பெற்­ற­துடன் ஆர்ப்­பாட்­டத்­தினை தொடர்ந்து மட்­டக்­க­ளப்பு மாவட்ட செய­லகம் வரையில் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் பிரதான வாயில் புட்டுகள் போட்டு புட்டப்பட்டதுடன் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் கலகமடக்கும் பொலிஸார் மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடாத்தும் வாகனமும் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்தன.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-11#page-1

 

 

 

பிர­தேச செய­லா­ளர்­களின் இட­மாற்­றத்­துக்கும் எனக்கும் தொடர்­­பெ­துவும் இல்லை

 

மட்டு.அர­சாங்க அதிபர் திரு­மதி சார்ள்ஸ் விளக்கம்
(காங்­கே­யனோடை நிருபர்)

மட்­டக்­க­ளப்பில் இடம் பெற்­றுள்ள பிர­தேச செய­லா­ளர்­களின் இட­மாற்­றத்­திற்கும் எனக்கும் எவ்­வித சம்­பந்­த­மு­மில்லை என மட்­டக்­க­ளப்பு மாவட்ட அர­சாங்க அதிபர் திரு­மதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரி­வித்தார்.

மட்­டக்­க­ளப்பு மாவட்ட செய­ல­கத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து கருத்து தொிவிக்­கையில்

இன்று மட்­டக்­க­ளப்பு நகரில் ஐம்­ப­துக்கும் உட்­பட்ட பொது மக்­க­ளோடு இணைந்­த­தாக நடா­த­தப்­பட்ட ஒரு ஆர்ப்­பார்ட்­டத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கலந்து கொண்டு பேசிய விட­யங்கள் தொடர்­பாக ஒரு தௌிவு படுத்­தலை ஏற்­ப­டுத்த வேண்­டிய தேவை இந்த மாவட்­டத்தின் அர­சாங்க அதி­ப­ரா­கிய எனக்கும் என்­னோடு சோ்ந்த அதி­கா­ரி­க­ளுக்கும் இருக்­கின்­றது.

அர­சாங்க அதி­ப­ரென்­பது அமைச்­ச­ர­வை­யினால் நிய­மனம் செய்­யப்­ப­டு­கின்ற அரச கட­மை­களை ஆற்­று­வ­தற்­காக நிய­மிக்­கப்­ப­டு­கின்ற ஒரு பத­வி­யாகும்.

எனவே அரசு எனக்கு கைய­ளித்த கட­மை­களை மட்டும் செய்­வ­தற்கு வரை­ய­றுக்­கப்­பட்ட எனது அதி­கார வரம்­புக்குள் மட்­டும்தான் என்னால் செயற்­ப­ட­மு­டியும்.

வாகரை மற்றும் செங்­க­லடி பிர­தேச செய­லா­ளர்­களின் இட­மாற்­றத்­திற்கும் எனக்கும் எவ்­வித சம்­பந்­த­மு­மில்லை என்­பதை பிர­தேச செய­லா­ளர்­க­ளுக்கு இட­மாற்றம் வந்த நாளில் இருந்து நான் தொிவித்து வரு­கின்றேன்.

இது தொடர்­பாக அரச அதி­ப­ரான என்­னோடு உரிய பிர­தேச செய­லா­ளர்­களும் கலந்­து­ரை­யா­ட­வில்லை. இது நிரு­வாக நட­வ­டிக்­கையை அர­சியல் மயப்­ப­டுத்­து­கின்ற செயல்­பா­டாக உள்­ளது.

மட்­டக்­க­ளப்பு மாவட்ட அர­சாங்க அதி­பரும் அவ­ருடன் சோ்ந்த குழு­வி­னரும் ஊழல் வாதிகள் என இன்று அந்த ஆர்ப்­பாட்­டத்தில் அவர்கள் குறிப்­பிட்­டுள்­ள­துடன் அவர்­களின் பேச்­சுக்­க­ளிலும் கூறி­யுள்­ளார்கள்.

2010ஆம் ஆண்டு 2011ஆம் ஆண்டு இடம் பெற்ற வௌ்ள நிவா­ர­ணத்தில் ஊழல் நடந்­த­தாக அவர்கள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளனர்.

2010 மற்றும் 2011ஆம் ஆண்­டு­களில் இந்த மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் யார் மாவட்ட அர­சாங்க அதி­ப­ராக இருந்­தாரோ அவ­ரிடம் கேட்­கப்­பட வேண்­டிய கேள்­வி­க­ளுக்கு நான் பதில் சொல்ல தயா­ரில்லை.

இந்த மாவட்­டத்தின் நிரு­வாக நட­வ­டிக்­கைகள் அனைத்தும் பிர­தேச அபி­வி­ருத்­திக்­குழு கூட்­டங்­க­ளிலும் மாவட்ட அபி­வி­ருத்­திக்­குழு கூட்­டங்­க­ளிலும் கலந்து கொள்­கின்ற அனை­வ­ரி­னாலும் அனு­ம­திக்­கப்­பட்டு ஒவ்­வொரு மாதமும் நடை­பெ­று­கின்ற கூட்­டங்­களில் அவற்­றினை மீளாய்வு செய்­யப்­பட்டு அவற்றின் செயற்­பா­டுகள் சீர்­தூக்­கிப்­பார்க்­கப்­பட்டு மீண்டும் அனு­ம­திக்­கப்­பட்டு மீண்டும் அவை சீர்­தூக்­கிப்­பார்க்­கப்­பட்டு வரு­கின்ற ஒரு நடை­மு­றை­யாகும்.

இந்த ஊழல் குற்­றச்­சாட்­டு்க்­களை அந்த நேரங்­களில் சுட்­டிக்­காட்­டாமல் மட்­டக்­க­ளப்பு நகரில் கூடி சுட்­டிக்­காட்­டி­யி­ருப்­பது எங்­க­ளுக்கு மன உளைச்­சலை தரு­கின்ற ஒரு விட­ய­மாக இருக்­கின்­றது.

இந்த மாவட்­டத்தின் அபி­வி­ருத்­திக்கு வரு­கின்ற அத்­தனை நிதி­யொ­துக்­கீ­டு­களும் அத­னு­டைய செயற்­பா­டு­களும் பிர­தேச செய­ல­கங்­க­ளினால் தான் மேற் கொள்­ளப்­ப­டு­கின்­றன.

எனவே மாவட்ட செய­ல­கத்­தினால் இந்த செயற்­பா­டுகள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை. அதற்­கான நிதி­யொ­துக்­கீ­டுகள் நேர­டி­யாக பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கு விடு­விக்­கப்­பட்டு பிர­தேச செய­ல­கங்­க­ளினால் மட்­டுமே அவைகள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

காணி அதி­காரம் 13வது திருத்த சட்­ட­மூ­லத்­திலே பிர­தேச செய­லா­ளர்­க­ளுக்கும் மாகாண சபைக்கும் கைய­ளிக்­கப்­பட்ட அதி­கா­ர­மாகும். இதில் அர­சாங்க அதி­ப­ருக்கு எந்த வித­மான அதி­கா­ரமும் இல்லை என்­பதை நான் பல தடவை கூறி­யி­ருக்­கின்றேன்.

இங்கு மாவட்ட திட்­ட­மிடல் பணிப்­பாளர் மற்றும் மாட்ட அனர்த்த முகா­மைத்­துவ அதி­காரி மற்றும் கணக்­காளர் மற்றும் உள்­ளக கணக்­காய்­வாளர் ஆகியோர் உட்­பட மாவட்ட செய­லக அதி­கா­ரிகள் இருக்­கின்­றார்கள் ஊழல் ஊழல் குற்­றச்­சாட்­டுக்­களை கூறு­ப­வர்­களும் அது நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது என்று சொல்­கின்­ற­வர்­களும் தாங்கள் கூறு­கின்ற குற்றச் சாட்­டுக்­களை உரி­ய­வ­கையில் சமர்ப்­பித்து அதில் என்ன நடந்­துள்­ளது என்­பதை பொது மக்­க­ளுக்கு தௌிவு படுத்த வேண்­டிய தேவை இருக்கின்றது.

ஊடகங்களில் மாத்திரம் வருகின்ற செய்திகளை வைத்துக் கொண்டு தனிமனித சுதந்திரத்தினையும் கௌரவத்தையும் அழிப்பதற்கான செயற்பாடுகளில் யாரும் ஈடுபடவது இந்த சமூகத்திற்கு நல்லதல்ல என நினைக்கின்றேன் என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் மற்றும் மாட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஏ.இன்பராஜன், கணக்காளர் நேசராசா, உள்ளக கணக்காய்வாளர் ஆகியோர் உட்பட மாவட்ட செயலக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-11#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.