Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு ஆயுதமா?

Featured Replies

இலங்கைக்கு ஆயுதமா?: ஜெ

Monday, 26 February , 2007, 19:44

சென்னை

"இலங்கைக்குக் கடத்துவதற்காக மதுரைக்கும் கடலோரப் பகுதிகளுக்கும் பயங்கரமான ஆயுதங்களும் வெடி பொருட்களும் வந்து சேருகின்றன என்றால், தமிழகத்தின் சுமார் 600 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து எப்படி இந்தப் பொருட்கள் மேற்படி விநியோக இடங்களை வந்து சேருகின்றன என்பதற்குக் கருணாநிதி என்ன விளக்கம் தர இருக்கிறார்? உளவுப் பிரிவு என்றும் 'க்ஞ் பிராஞ்ச் என்றும் கடலோரப் பாதுகாப்புப் பிரிவு என்றும் பல பிரிவுகள் காவல் துறையில் இவை பற்றியெல்லாம் கண்டுபிடிப்பதற்காக இயங்கிக்கொண்டிருக்கின்றன. அவை எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கின்றன?" என்று அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் உள்ள தமிழர் பிரச்சினை என்பது கடந்த 40 ஆண்டுக் காலமாகவே, லால்பகதூர் சாஸ்திரி, சிறிமாவோ பண்டாரநாயகே ஒப்பந்தத்திற்கு முன்பே இருந்து வருகின்ற ஒரு பிரச்சினை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழர்கள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள் என்பதும், தமிழ் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இலங்கை பல ஆண்டுக் காலமாக இருந்து வந்தது என்பதும் சரித்திரம் கூறும் உண்மை.

இலங்கையில் தலைமுறை தலைமுறையாக இருக்கின்ற தமிழர்களுக்கு எல்லா வகையான சம உரிமைகளையும் இலங்கை அரசு தந்தே தீர வேண்டும். சிங்கள மொழி பேசுகின்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ, பவுத்த மதத்தைப் பின்பற்றுகிறவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ, அதே உரிமை தமிழர்களுக்கும் அங்கு உண்டு என்பதை இலங்கை அரசு மறந்துவிடக் கூடாது.

லால்பகதூர் சாஸ்திரி- சிறிமாவோ பண்டாரநாயகே ஒப்பந்தம் ஏற்பட்ட போது தமிழர்களுக்குப் பாதகமான பல விஷயங்கள் அதில் சேர்க்கப்பட்டு ஆண்டாண்டுக் காலமாக இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு தமிழகம் நோக்கி அகதிகளாக வந்தார்கள். அப்போது ஆரம்பித்த இலங்கைப் பிரச்சினை சிங்கள இனமொழியர்ளால் தூபம் போடப்பட்டு, அது இப்போது பெரிய அளவில் கடந்த 24 ஆண்டுகளாக இருந்து வருகிறது.

இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பொறுத்த வரையில் இந்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு அந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க. உறுதியாக இருக்கிறது. அதே நேரத்தில் தீவிரவாத மற்றும் பயங்கரவாத இயக்கங்களை எதிர்ப்பதிலும் உறுதியாக உள்ளது. நமது தமிழ்மொழி பேசும் மக்கள், நமது இனத்தைத் சேர்ந்தவர்கள் என்ற அளவில் விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவு தரப்பட வேண்டும் என்ற கருத்து ஒரு சிலரிடம் தமிழகத்தில் இருந்தாலும், அது இறுதியில் தமிழகத்தில் தீவிரவாத, பயங்கரவாத கலாச்சாரத்தைக் கொண்டு வந்துவிடும் என்ற காரணத்தினால் அதனை அ.தி.மு.க. ஏற்றுக்கொள்ளவில்லை.

கடந்த 14ஆம் தேதி இந்திய கடலோரக் காவல் படை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஏ.கே. 56 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், தற்கொலைப் படைத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படும் மனித வெடிகுண்டு பெல்ட்டுகள், வெடிமருந்துப் பொருட்கள் ஆகியவற்றையும், மண்டபம் பகுதியில் இலங்கைக்கு ஆயுதங்கள் கடத்திச் செல்வதற்காக வந்த படகு ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். 15ஆம் தேதி அன்று 4000 கிலோ வெடி பொருட்கள் கொண்ட ஒரு படகை தனுஷ்கோடி அருகே இந்தியக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். தூத்துக்குடியில் வெடி பொருட்களைக் கொள்முதல் செய்துவிட்டு இலங்கை திரும்பும் போது அந்தப் படகு பிடிப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

16ஆம் தேதி அன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக, தூத்துக்குடி, கடலூர் ஆகிய பகுதிகளை மையமாகப் பயன்படுத்தி தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து சேகரிக்கப்படும் வெடிபொருட்கள், ஆயுதங்கள் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவை சிறுசிறு மூட்டைகளாகக் கட்டப்பட்டு தூத்துக்குடி, ராமேஸ்வரம், தங்கச்சிமடம், கோடியக்கரை ஆகிய பகுதிகளுக்கு சாலை வழியாகக் கொண்டு செல்லப்பட்டு, பிறகு படகுகள் மூலம் இலங்கைக்குக் கடத்திச் செல்லப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. பணிகளுக்குத் தமிழகத்தில் பல ஏஜெண்டுகள் இருப்பதும், தெளிவாகத் தெரிய வந்துள்ளது.

ராமேஸ்வரத்தை ஒட்டி இலங்கைக்கு நடுவே இந்தியாவைச் சேர்ந்த ஆளில்லாத தீவுகள் நிறைய உள்ளன. இவை ஏற்கெனவே தீவிரவாதிகளின், பயங்கரவாதிகளின் தளங்களாக, ஆயுதங்களைப் பதுக்கி வைக்கும் கிடங்குகளாக மாறிவிட்டன என்பது புதிதாக வந்துள்ள செய்தி. தமிழகத்தின் செக் போஸ்ட்களில் காவல் துறையினர் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. மதுரைக்கும், கடலோரப் பகுதிகளுக்கும் பயங்கரமான ஆயுதங்களும் வெடி பொருட்களும் வந்து சேருகின்றன என்றால், தமிழகத்தின் சுமார் 600 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து எப்படி இந்தப் பொருட்கள் மேற்படி விநியோக இடங்களை வந்து சேருகின்றன என்பதற்கு கருணாநிதி என்ன விளக்கம் தர இருக்கிறார்?

இந்தியக் கடலோர கடற்படையினரால் கடலில் தடுத்து நிறுத்தப்படும் வரை, தமிழக காவல்துறை தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் என்ன செய்துகொண்டு இருந்தது? உளவுப்பிரிவு என்றும் 'க்ஞ் பிராஞ்ச் என்றும் கடலோரப் பாதுகாப்புப் பிரிவு என்றும் பல பிரிவுகள் காவல்துறையில் இவை பற்றியெல்லாம் கண்டுபிடிப்பதற்காக இயங்கிக்கொண்டிருக்கின்றன.

அவை எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கின்றன? அதற்கு உரிய முனைப்பான அதிகாரிகளை நியமித்து அவர்களுக்கு உரிய மரியாதையும் அது சம்பந்தப்பட்ட உத்தரவுகளையும் அவர்களுக்குத் தந்தால் தானே அவர்கள் செயல்படுவார்கள்? தமிழக மக்கள் எப்படி இதனை ஏற்றுக்கொள்ள முடியும்?

மத்திய அரசும் இத்தகைய நடவடிக்கைகள் இந்திய தேசத்தின் பாதுகாப்பிற்கே ஊறு விளைவிக்கும் என்பதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. மத்திய அரசுதான் இதில் தலையிட்டு நாட்டைப் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

http://tamil.sify.com/fullstory.php?id=14397757&page=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.