Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து பிரிந்தது: கடல் மட்டம் உயரும் அபாயம்

Featured Replies

அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து பிரிந்தது: கடல் மட்டம் உயரும் அபாயம்

 


அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து பிரிந்தது: கடல் மட்டம் உயரும் அபாயம்
 

அண்டார்டிகாவின் மேற்கில் இருந்து மிகப்பெரிய அளவிலான பனிப்பாறை உடைந்து தனியாகப் பிரிந்து சென்றுள்ளது.

இதுவரை பிரிந்து சென்ற மிகப்பெரிய பனிப்பாறைகளில் இதுவும் ஒன்றாகும்.

இதன் சுற்றளவு 5,800 சதுர கிலோமீட்டர்களாகும். எடை சுமார் ட்ரில்லியன் டன் வரை இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் அண்டார்டிகாவின் மேற்குப் பகுதியான ”லார்சன் C” என்ற பனி அடுக்கு 12 சதவீதம் அளவிற்கு குறைந்துவிட்டது.

இந்த பனிப்பாறையை ஜரோப்பிய செயற்கைக்கோள்களின் மூலமாக அறிவியலாளர்கள் கடந்த சில தினங்களாக தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

இதனிடையே, கடந்த 10 ஆம் திகதியிலிருந்து 12 ஆம் திகதிக்குள்ளாக இந்த பனிப்பாறை உடைந்து தனியாக பிரிந்து சென்றுள்ளது.

இது சமீபகாலங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய பனிப்பாறை வெடிப்பாகும்.

இந்த உடைந்த பகுதிக்கு ஏ 68 என்று அறிவியலாளர்கள் பெயரிட்டுள்ளதுடன், தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், வடக்கு திசை வழியாகப் பயணிக்கும் கப்பல்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1995 ஆம் ஆண்டிலும், 2002 ஆம் ஆண்டிலும் இதேபோல லார்சன் A மற்றும் B பனி அடுக்குகளிலிருந்து பனிப்பாறைகள் பிரிந்து சென்றன. இதனால் கடல் மட்டம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது. இப்போதும் அது போலவே கடல் மட்டம் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

http://newsfirst.lk/tamil/2017/07/அண்டார்டிகாவில்-மிகப்பெ/

  • தொடங்கியவர்

அண்டார்டிகா வரைபடத்தையே மாற்றிய லார்சன் சி பெருவெடிப்பு... உலக அழிவின் குறியீடா?

 
 
 

A68. தற்போது உலகமெங்கும் தலைப்புச் செய்தியாய் நகர்ந்து கொண்டிருக்கும், ஒரு பனிமலை நிகழ்விற்கு, இப்படித்தான் பெயர் வைக்க இருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பனிப்பாறை, பனி அடுக்கு, பனி மலை எனப் பல பெயர்களில்  அழைக்கப்படும் IceBerg மீண்டுமொரு முறை தலைப்புச் செய்திக்கு வந்திருக்கிறது. திங்களன்று லார்சன் சி பனி அடுக்கில் ( Ice Shelf ) இருந்து சுமார் 5800 சதுர கிலோமீட்டர் அளவிலான பனிப்பாறை (Ice berg ) ஒன்று உடைந்து மிதக்க ஆரம்பித்திருக்கிறது. 

லார்சன் சி(Image Credit WashingTon post)

2010-ம் ஆண்டு மெர்ட்ஸ் பனி மலையில் ( Glacier) இருந்து விழுந்த பனிப்பாறைகளைவிட, இருமடங்கிலான பனிப்பாறை லார்சன் சி பனி அடுக்கில் இருந்து விழுந்திருக்கிறது. மெர்ட்ஸ் பனி மலையில் இருந்து விழுந்த பனிப்பாறையில் மட்டும் உலகின் 33% மக்களுக்கு ஓர் ஆண்டுக்கான தேவையான நல்ல நீர் இருந்தது. ஆனால், மெர்ட்ஸ் பனி மலை நிகழ்வைப் போல், இந்த நிகழ்வில் பூமியின் சீதோஷ்ண நிலைக்கு எந்தவிதமான பாதிப்பில்லை என்று சொல்கிறார்கள் அறிவியல் நிபுணர்கள். ஆனால், இந்த மாதிரியான நிகழ்வுகள் தொடர்ந்தால், பூமியின் நீர் மட்டம் உயரும் என எச்சரிக்கையும் விடுக்கின்றனர். ட்ரில்லியன் டன் எடைகொண்ட A68ல் இருக்கும் நீரில், எவ்வளவு மனிதர்களுக்குப் பயன்படும் என கற்பனை செய்து பாருங்கள். 

அண்டார்டிகாவில் இருக்கும் மொத்த பனியும், தண்ணீராக மாறும் பட்சத்தில், பூமியின் நீர்மட்டம்  60 மீட்டர் வரை உயர வாய்ப்பு இருக்கிறது. - மார்டின் சீகெர்ட் Grantham Institute for Climate Change & Environment. 

பனி அடுக்குகளில் நிகழும் இந்த மாற்றங்கள் எப்போதுமே அச்சுறுத்தலுக்கு உரியதுதான். லார்சன் பனி அடுக்குகளில் இதற்கு முன்னரும் இது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன.

லார்சன் ஏ பனி அடுக்கு 1995ம் ஆண்டு நிலைகுலைந்துபோனது. அதன் தொடர்ச்சியாக 2002ம் ஆண்டு லார்சன் பி பகுதியின் பனி அடுக்குகளில் நிலை குலைந்தது. தற்போது, லார்சன் சி பகுதியில் மிகப்பெரிய மாற்றம் அரங்கேறி இருக்கிறது. அண்டார்டிகாவில் இருக்கும் நான்காவது மிகப்பெரிய பனி அடுக்கு எனப் பெயர் பெற்றிருந்த லார்சன் சி, தற்போது அதன் அளவில் சிறிதாகி இருக்கிறது.

 

பனிப்பாறையின் பாதை :

தண்ணீரில் மிதக்கும் இந்தப் பனி மலைகள் நகரும் பட்சத்தில், அவை அங்கு இருக்கும் தண்ணீரின் வெப்ப நிலையைப் பெரிய அளவில் மாற்றும். ஆனால், இந்த லார்சன் சி ஐஸ்பெர்க் பற்றி தொடர்ந்து கண்காணித்துவரும் அட்ரியன் லுக்மேன் வேறு விதமாக எண்ணுகிறார். அவரைப் பொறுத்தவரையில் இது இன்னும் சில ஆண்டுகளுக்கு ஒரு பகுதியாகவே கடலில் மிதக்க வாய்ப்புகள் அதிகம். சிறு துண்டுகளாக உடையும் பட்சத்தில், அவை அங்கு இருக்கும் வெப்பமான நீருடன் கலக்கலாம்.
 

" உலகின் பல பகுதிகளை விட அண்டார்டிக்  பகுதிகளில், வெப்ப நிலை அதிவேகத்தில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அண்டார்டிக் பகுதிகளில் இருக்கும் இந்தப் பனி அடுக்குகளில் நிகழும் இந்த மாற்றத்திற்கு, இந்த வெப்ப நிலை மாற்றமும் மிகப்பெரிய காரணம் வகிக்கிறது. ஆனால், லார்சன் சி பகுதியில் நிகழ்ந்த இந்த வெடிப்பு, பல ஆண்டுகளாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது இயற்கையாகவே நிகழ்ந்த ஒன்று தான். ஆனால், அதற்கு தற்போதைய மாறி வரும் கால நிலை உதவி இருக்கும் எனத் தீர்க்கமாக நம்புகிறேன் 

                        - அட்ரியன் லுக்மேன்

லார்சன் சி பனி அடுக்குகளில் நிகழ்ந்த இந்த வெடிப்பை,  மிடாஸ் குழுவும் அட்ரியன் லுக்மேனும் 2014ம் ஆண்டில் இருந்து கண்காணித்து வருகின்றனர்,  ஆகஸ்ட் 2016ன் படி, அந்த வெடிப்பு 22 கிமி நீளம் வளர்ந்து இருந்தது. 2002ல் லார்சன் பி பகுதியின் பனி அடுக்கு நிலை குலைந்ததைப்போல, இதுவும் நிலை குலையலாம் என முன்பே கணித்திருந்தனர் அறிஞர்கள். ஆனால், இந்த A68 வெடிப்பின் மாற்றத்தால், லார்சன் சி அடுக்கில் நிகழும் மாறுதல்கள் அதன் ஒட்டுமொத்த பனிப்பரப்பையும் நிலைகுலைய செய்யுமோ என அச்சம் தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

 

via GIPHY

மனிதர்களுக்கு அச்சுறுத்தலா :

இந்த நிகழ்வினால், மனிதர்களுக்கோ, பிற உயிரினங்களுக்கோ எந்தவிதமான காலநிலை மாற்றமோ, அச்சுறுத்தலோ இருக்கப்போவதில்லை. ஆனால், லார்சன் சி அடுக்குகளுக்கு, இந்த மிகப்பெரும் நிகழ்வு என்கிறார் லுக்மேன். 

லார்சன் சி தான் மிகப்பெரியதா?

5800 சதுர கிலோமீட்டர், (கிட்டத்தட்ட சென்னையைப் போல 12 மடங்கு) டிரில்லியன் டன் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டினாலும், A68 வெடிப்பு அண்டார்டிக் வரலாற்றின் மிகப்பெரிய வெடிப்பாகப் பதிவாகவில்லை. 2000ம் ஆண்டு ரோஸ் ஐஸ் பகுதியில், நிகழ்ந்த பெருவெடிப்பு, இன்றளவும் பெரியதாகக் கருதப்படுகிறது. அதே போல், லார்ச சி அடுக்கில் இருந்த வெளியேறிய A68 பகுதிகளை, பல்வேறு ஆய்வாளர்கள் சில ஆண்டுகளாகத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர், ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே, இந்த நிகழ்விற்காக காத்திருந்தனர் ஆய்வாளர்கள்.

நீர்மட்டத்தில் மாற்றம் 

லார்சன் சி பனி அடுக்குகளின் ஒரு பகுதியாக இந்த A68 இருந்தபோதே, அது மிதந்து கொண்டுதான் இருந்தது. அதனால், இது, கடல் நீர் மட்டத்தை எந்த அளவிற்கும் பாதிக்காது. 

நீங்க குடிக்கிற கூல் டிரிங்க்ஸ்ல மிதக்குற ஐஸ் க்யூப் கரைய ஆரம்பிச்சா, கூல் டிரிங்க்ஸ் அதிகமாயிடுமா என்ன 

-ஏன்னா ஹாக் , லீட்ஸ் பல்கலைக்கழகம். 

ஆனால், ஒரு மிகப்பெரிய பனிமலை, கடலுக்குள் நேரடியாக விழுவதற்கும், இதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

உலகம் என்றுமே, அண்டார்டிக்காவை தன்னுடைய ஒரு பகுதியாக எடுத்துக்கொண்டதில்லை. அந்தப் பனி பூமி, தனியே இயங்கி வருகிறது. 1.40 கோடி சதுர கிலோமீட்டர் இருக்கும் ஒரு கண்டத்தின் அதிகபட்ச மக்கள்தொகை 4000 பேர். அதிலும், குளிர்காலங்களில், அது ஆயிரத்தை விடவும் குறைவு. 

லார்சன் சி பகுதிகளில் நிகழ்ந்த இந்த வெடிப்புகள், நம்மை நேரடியாக எந்தவிதமான மாற்றத்திற்கும் உட்படுத்தப்போவதில்லை. ஆனால், அண்டார்டிகாவின், நிலப்பரப்பையும், சூழலியலையும், அது பெருமளவில் மாற்றி இருக்கிறது. குறைந்தபட்சம் அண்டார்டிக்காவின் வரைபடம் இனி மாறி இருக்கும். தசாவதார படத்தின் ஆரம்ப வரிகளில், பட்டாம்பூச்சியின் சிறகசைவு , கேயாஸ் தியரி என்றெல்லாம் வசனங்கள் வரும். டொனால்ட் டிரம்ப் பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதற்கும், A68 லார்சன் சி பனி அடுக்கில் இருந்து வெளியேறியதற்கும் இடையே, தீர நிச்சயமாய் ஒரு கேயாஸ் தியரி இருக்கும்.

http://www.vikatan.com/news/world/95446-does-the-rift-in-larsen-c-has-any-effect-on-global-warming.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.