Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசில் போடு: இரண்டாவது இன்னிங்ஸ்க்கு தயாராகும் சென்னை சூப்பர் கிங்ஸ்

Featured Replies

விசில் போடு: இரண்டாவது இன்னிங்ஸ்க்கு தயாராகும் சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீது விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் தடை இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்சை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடங்குவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
விசில் போடு: இரண்டாவது இன்னிங்ஸ்க்கு தயாராகும் சென்னை சூப்பர் கிங்ஸ்
 
புதுடெல்லி:

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  அதிலும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அட்டகாச ஆட்டத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் சொக்கித்தான் போனார்கள். கேப்டன் தோனி தவிர சுரேஷ்ரெய்னா, டுவைன்பிராவோ, அஸ்வின், மெக்குல்லம், ஸ்மித், ஜடேஜா என்று பல ஆல்ரவுண்டர்களுடன் வலுவான அணியாக வலம் வந்தது.

ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி, இரண்டு முறை ஐ.பி.எல் சாம்பியன், இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் சாம்பியன், நான்கு முறை ஐ.பி.எல் ரன்னர்ஸ்-அப், இரண்டு முறை அரையிறுதிப் போட்டிக்கு தகுதி என்று ஆதிக்கம் செய்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தான் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ்தான்.

இதற்கிடையே, கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சூதாட்டப் புகார் எழுந்தது. எனவே, அந்த இரண்டு அணிகளும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டன. அந்த தடை இன்றுடன் முடிவடைகிறது.

201707140946423253_csk-4._L_styvpf.gif

சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். தொடரின் முடிவில், அடுத்த சீசனில் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கும் என்று சென்னை அணியின் நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர். டிரம்ஸ் சிவமணியின் கச்சேரி சேப்பாக்கம் மைதானத்தில் மீண்டும் களைகட்ட போவது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில், "விசில் போடு... சி.எஸ்.கே. ரிட்டர்ன்ஸ்... " என டுவிட்ட்ரில் பதிவிட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதான தடை இன்று நீங்குவதால், உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்குவது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என்றால் மிகையில்லை.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/07/14094636/1096254/out-of-2-year-ban-csk-eyes-old-boys-for-its-2nd-innings.vpf

  • தொடங்கியவர்

மீண்டும் விசில் போடு: தடைக்காலம் முடிந்தது! சிஎஸ்கே-வின் புதிய திட்டங்கள்!

 

 
csk1

 

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியின் தடைக்காலம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இதையடுத்து ஐபிஎல் போட்டியில் மீண்டும் களமிறங்கவுள்ளது சிஎஸ்கே.

2013-ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 20-20 கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதுதொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி முத்கல் குழு, தனது அறிக்கையை கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா மற்றும் அவர்கள் சார்ந்த அணிகள் குற்றவாளிகள் என்று முத்கல் குழு கூறியிருந்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை விதிப்பது குறித்து முடிவெடுக்க ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. 6 மாத கால விசாரணைக்குப் பிறகு தனது தீர்ப்பை லோதா குழு 2015ம் வருடம் ஜூலை 14-ஆம் தேதி அளித்தது. அந்தத் தீர்ப்பில், விதிகளை மதிக்காமல் அணியின் தலைமை நிர்வாகிகளுக்கு (குருநாத், ராஜ் குந்த்ரா) உடந்தையாகச் செயல்பட்டதற்காக, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள், ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாகவும், அணிகளின் நிர்வாகிகள் குருநாத் மெய்யப்பன், குந்த்ரா ஆகியோருக்கு கிரிக்கெட் செயல்பாடுகளில் பங்கேற்பதற்கு வாழ்நாள் தடை விதிப்பதாகவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளின் தடைக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் இரு அணிகளும் மீண்டும் ஐபிஎல் போட்டியில் களமிறங்கவுள்ளன. 

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய என். சீனிவாசன், ஐபிஎல் போட்டியில் தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்கும் என்று கூறினார். அவர் மேலும் பேசியதாவது: நீங்கள் சிஎஸ்கே ரசிகராக இருந்தால் தோனி 2018 ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் களமிறங்குவதைக் காண விரும்புவீர்கள். மஞ்சள் உடையில் அவரை ஆடுகளத்தில் காணவும் விரும்புவீர்கள். எல்லாவிதத்திலும் இவை நடக்க வாய்ப்புகள் உள்ளன. ஒரு பெரிய பட்டாளத்துடன் அடுத்த வருடம் மீண்டும் களத்தில் இறங்குவோம். 

ஐபிஎல் போட்டியில் இடம்பெறாததால் சிஎஸ்கேவின் மதிப்பு குறையவில்லை. தோனியினால்தான் சிஎஸ்கே இவ்வளவு தூரம் வெற்றி கண்டுள்ளது. 2008-ல் நாங்கள் எடுத்த முக்கிய முடிவு, தோனியை அணியில் சேர்ப்பது. 2007-ல் அவர் உலகக்கோப்பை வென்றார். தோனியின் திறமை, தலைமைப்பண்பினால் சிஎஸ்கே பேரும் புகழும் அடைந்தது. சென்னையை அவர் மிகவும் விரும்பினார். ரசிகர்களும் அவர்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார்கள். நியாயமற்ற முறையில் சிஎஸ்கேவுக்குத் தடை விதிக்கப்பட்டது. யாரும் யாரையும் குற்றலாம். ஆனால் சிஎஸ்கே வீரர் ஒருவர் கூட எந்தத் தவறிலும் ஈடுபடவில்லை. அவர்கள் அணிக்காக விளையாடினார்கள். அவ்வளவுதான். பொறாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மிகவும் கடினமான உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று பேசினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடட் நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குநர்களில் ஒருவரான ஜார்ஜ் ஜான் ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது: இது புதிய தொடக்கம். சமூகவலைத்தளத்தில் இதுகுறித்து நிறைய தகவல்களைப் பதிவு செய்துவருகிறோம். இரண்டு வருடங்களா ஐபிஎல்-லில் இல்லாததால் சிஎஸ்கே என்கிற பிராண்டுக்கு எவ்வித இழப்பும் ஏற்படவில்லை. விளம்பரம் தொடர்பாக நிறுவனங்களிடமிருந்து இப்போதும் நிறைய தகவல்கள் கோரப்படுகின்றன. விளம்பரதாரர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவு இப்போதும் உள்ளது. அணி வீரர்களைத் தக்கவைக்க அனுமதித்தால் தோனியை நிச்சயம் தக்கவைத்துக் கொள்வோம். 2015-ல் அணியில் பணியாற்றிய அனைத்து பயிற்சியாளர்களையும் மீண்டும் அழைக்கவுள்ளோம். சிஎஸ்கே என்றால் நம்பகத்தன்மைதான் என்று அவர் பேட்டியளித்துள்ளார். 

http://www.dinamani.com/sports/sports-news/2017/jul/14/ban-over-chennai-super-kings-eye-ms-dhoni-again-2737286.html

  • தொடங்கியவர்

நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான்: சூசகமாக வெளிப்படுத்தும் டோனி

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாட இருக்கிறேன் என்பதை மஞ்சள் கலர் ஜெர்சி அணிந்து சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார் டோனி.

 
நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான்: சூசகமாக வெளிப்படுத்தும் டோனி
 
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. டெஸ்ட், 50 ஓவர், டி20, ஐ.பி.எல். என அனைத்து வகை கிரிக்கெட்டிலும் கேப்டனாக பணிபுரிந்து சாதனைப் புரிந்துள்ளார்.

பிசிசிஐ-யால் நடத்தப்பட்டு வரும் ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி இடம் பிடித்திருந்தது. அந்த அணியில் கேப்டனாக டோனி தொடர்ந்து செயல்பட்டு வந்தார். மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதால் 2016 மற்றும் 2017 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடாத வகையில், அந்த அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

ஐ.பி.எல். தொடரில் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தடை நேற்றோடு முடிவுக்கு வந்தது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. விளையாடுவதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.

மீண்டும் சி.எஸ்.கே. அணியில் டோனி, ரெய்னா, அஸ்வின், ஜடேஜா, பிராவோ போன்ற ஜாம்பவான்கள் இடம்பெறுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் நான் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகத்தான் விளையாட இருக்கிறேன் என்பதை டோனி இன்ஸ்டாகிராமில் ஒரு படத்தை வெளியிட்டு சூசகமாக தெரிவித்துள்ளார்.

201707151609070845_dhoni002-ssss._L_styv

அந்த படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சி நிறமான மஞ்சள் நிறத்தில் டோனி ஜெர்சி அணிந்துள்ளார். அதில் 7 என்ற நம்பருக்கு கீழ் ‘THALA (தலைவர்)’ எழுதப்பட்டுள்ளது. ‘எங்கள் தல டோனிக்கு பெரிய விசில் அடிங்க’ என்ற சென்னை அணிக்கு தீம் மியூசிக் உள்ளது. இதனால் மீண்டும் கேப்டனாக களம் இறங்க இருக்கிறார் என்பதை வெளிக்காட்டும் வகையில் இந்த சம்பவம் அமைந்துள்ளது.

இதனால் டோனி சி.எஸ்.கே. அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/15160904/1096527/MS-Dhoni-celebrates-return-of-Chennai-Super-Kings.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.