Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவுடன் அரசாங்கத்துக்கு அகங்கார மோதல் கிடையாது

Featured Replies

ஐ.நாவுடன் அரசாங்கத்துக்கு அகங்கார மோதல் கிடையாது
 

image_171aaf8e5b.jpgஆர்.நிர்ஷன்

ஐ.நாவுடன் முரண்படும் நோக்கம் கிடையாது என்றும், ஐ.நாவுடனான செயற்பாடுகள் இராஜதந்திர முறையிலேயே முன்னெடுக்கப்படுமெனவும் நல்லாட்சி அரசாங்கம், நேற்று (19) திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 

ஐ.நாவுடன், பிரச்சினைகளை ஏற்படுத்தினால், என்ன நடக்குமென, கடந்த ஆட்சிக்காலத்தில் நாம் கண்டுகொண்டோம் என்று சுட்டிக்காட்டிய அரசாங்கம், எமது நிலை தொடர்பில் சுயமதிப்பீடு அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளது.  

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (19) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, அமைச்சரும், அமைச்சரவை இணைப்பேச்சாளர்களில் ஒருவருமான ராஜித்த சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

“இலங்கைக்கு விஜயம் கொண்ட மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புத் தொடர்பான ஐ.நாவின் விசேட பிரதிநிதி பென் எமர்ஸன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்ததையிட்டு, அரசாங்கத்துக்கு பிரச்சினையேதுமில்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

“தடுப்பிலுள்ளவர்களை சந்திப்பதற்கு எமர்ஸனுக்கு, அனுமதி கிடைத்த வழிமுறையாதென, அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன வினவினார்” என்றும் கூறினார்.  

“வெளிநாட்டமைச்சு தான் இவ்வாறான அனுமதியை, வழமையாக வழங்குமென்றும், எமர்ஸனுக்கும் அவ்வாறுதான் அனுமதியளிக்கப்பட்டது என்றும் ஜனாதிபதிக்கு தெளிவுப்படுத்தப்பட்டது” என்றும் அமைச்சர் ராஜித்த தெரிவித்தார்.  

அதனைகேட்டுவிட்டு பதிலளித்த ஜனாதிபதி, இவ்வாறான விடயங்கள் தொடர்பில் இனிமேல், பாதுகாப்பு அமைச்சுக்கும் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.  

“கடந்த அரசாங்கமானது, ஐ.நாவுடன் மோதல் போக்கையே கடைப்பித்தது. அதனால்தான், அவ்வரசாங்கம் சர்வதேச சமுகத்தினால், ஓரங்கட்டப்பட்டது. அதே கொள்கையை இந்த அரசாங்கம் பின்பற்றாது” என்றும் ராஜித சேனாரத்ன பதிலளித்தார்.  

அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, பதிலளிக்கையில்,  

கேள்வி: ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி, இலங்கை தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அவருக்கும் நீதியமைச்சருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும் அறிகிறோம். இது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? 

பதில்: எமது நிலை தொடர்பில் சுயமதிப்பீடு அவசியம். இது சிறிய நாடு. நாம் மோதத் தயாராகுவது ஐக்கிய நாடுகள் சபையுடன். அதில் நாமும் அங்கம் வகிக்கிறோம். 

நாம் அங்கம் வகிக்கும் அமைப்புக்கு எதிராக எம்மால் செயற்பட முடியாது. அவர்கள் ஏதாவது கோரும் பட்சத்தில் நாம் விளக்கமளிக்க வேண்டும். ஐ.நா. பிரதிநிதிகள் எமக்கு எதிரான அறிக்கைகளைத்தான் கொண்டு வருகிறார்கள் என்பது சரியானது. ஆயினும் அவற்றுக்குப் பதிலளிக்க வேண்டிய கடமைப்பாடு எமக்கு உண்டு. இது உலக நாடுகள் அனைத்துக்கும் பொருந்தும். 

நாடு என்ற வகையில் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைப்பதில் மந்த கதி உண்டு என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். இன்னும் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எட்டப்படவில்லை. தமிழ் மக்களின் காணி தொடர்பிலான பிரச்சினைகளுக்கு இறுதி முடிவுகள் இல்லை. காணாமல் போனோர் தொடர்பிலான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் இல்லை. இவ்வாறான பிரச்சினைகளை தீர்க்காமல் எமது செயற்றிட்டங்கள் வெற்றியளித்துள்ளதாக எமக்குக் கூற முடியாது. 

கேள்வி: இலங்கை பொலிஸாரின் துன்புறுத்தல்கள் குறித்து எமர்ஸனின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அத்துடன் வழக்கு விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் பற்றியும் கூறப்பட்டிருக்கிறது. 70 சிறைக்கைதிகள் 5 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இதற்குரிய தீர்வுகள் என்ன? 

பதில்: அந்த 70 பேரும் தமிழ் அரசியல் கைதிகள். இது தொடர்பில் அமைச்சரவையிலும் கலந்துரையாடியிருக்கிறோம். உரியவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவும் ஏனையவர்களை விடுவிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்படுகிறது என்றார்.  

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ஐ-நாவுடன்-அரசாங்கத்துக்கு-அகங்கார-மோதல்-கிடையாது/150-200977

  • தொடங்கியவர்

ஐ.நா.வுடன் சண்­டை­யிட முடி­யாது

02-5d69553e8d6be6f0bf72b47c16d879e60542cd1e.jpg

 

இணை அமைச்சரவையின் பேச்சாளர் ஏற்றுக்கொள்கின்றார்
(ரொபட் அன்­டனி)

மறுநாள் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு உயர் கல்வி கற்க செல்­ல­வி­ருந்த நிலை­யி­லேயே தெஹி­வ­ளையில் வைத்து அப்­பா­வி­க­ளான ஐந்து இளை­ஞர்­களும் கப்­பத்­துக்­கா­கவே கடத்­தப்­பட்­டனர் என்று இணை அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.   

அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்

கடற்­படை அதி­காரி தஸ­நா­யக்­கவை பாது­காப்புத் தரப்­பினர் அனைத்து வித­மான விசா­ர­ணை­க­ளையும் மேற்­கொண்­டு­விட்டே கைது­செய்­துள்­ளனர். இது­தொ­டர்பில் தொடர்ந்து நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

ஒரு விட­யத்தை நன்­றாக புரிந்­து­கொள்­ள­வேண்டும். 2008 ஆம் ஆண்டு தெஹி­வ­ளையில் ஐந்து மாண­வர்கள் கடத்­தப்­பட்ட வழக்­கி­லேயே இந்த கைது இடம்­பெற்­றுள்­ளது. இந்த ஐந்து மாண­வர்­களும் 19 வயது நிரம்­பிய மிகவும் திற­மை­யான இளை­ஞர்கள், இவர்கள் கடத்­தப்­பட்ட தினத்­திற்கு மறுநாள் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு உயர்­கல்வி கற்­ப­தற்­காக செல்ல விருந்­தனர்.

எனவே அன்­றைய தினம் தமது உற­வி­னர்கள் அனை­வ­ருக்கும் சென்று தாம் ஆசி செல்­வது குறித்து கூறி­விட்டு வந்­துள்­ளனர். பின்னர் அன்று இரவு அவர்கள் ஒரு களி­யாட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். அப்­போ­துதான் இந்த மாண­வர்கள் ஐவரும் கடத்­தப்­பட்­டுள்­ளனர். கப்பப் பணத்­திற்­காக இவ்­வாறு கடத்­தப்­பட்­டுள்­ளனர்.

கப்பம் வழங்­கப்­ப­டு­வது தாம­த­மா­னதன் கார­ண­மா­கவே இவர்கள் காணாமல் ஆக்­கப்­பட்­டுள்­ளனர். முதலில் திரு­கோ­ண­ம­லையில் பதுங்­கு­கு­ழியில் இவர்கள் வைக்­கப்­பட்­டுள்­ளனர். அப்­போது அங்கு காவலில் இருந்த கடற்­படை வீரர்கள் இரக்கம் கொண்டு தமது தொலை­பே­சி­களை இந்த மாண­வர்­க­ளுக்கு வழங்கி பெற்­றோ­ருடன் உரை­யா­டு­மாறு கூறி­யுள்­ளனர்.

அவர்கள் அப்­போது அந்த தொலை­பே­சிகள் ஊடாக பெற்­றோ­ருடன் உரை­யாற்­றி­ய­துடன் தாம் இருக்கும் இடத்தை படம் பிடித்து தொலை­பேசி ஊடாக பெற்­றோ­ருக்கு அனுப்­பி­யி­ருந்­தனர். அப்­போது எனது மகன் மருத்­து­வ­பீ­டத்தில் கல்வி கற்­றுக்­கொண்­டி­ருந்தார்.

  எனது காதுக்கு இந்த விடயம் வந்­ததும் எனது மக­னுக்கு இவ்­வாறு நடந்­தி­ருந்தால் எப்­ப­டி­யி­ருக்கும் என்று சிந்­தித்­துப்­பார்த்தேன். உட­ன­டி­யாக அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை சந்­தித்து இவ்­வா­றான சம்­ப­வங்­களை அனு­ம­திக்க முடி­யாது என்றும் இதற்கு உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்­டு­மென்றும் கேட்­டுக்­கொண்டேன்.

அவர் உட­ன­டி­யாக ஒரு காணா­மல்­போனோர் தொடர்­பான இணைப்பு அலு­வ­ல­கத்தை உரு­வாக்கு அதற்கு என்னை தலை­வ­ராக நிய­மித்தார். இதில் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ராதா­கி­ருஷ்­ணனும், தற்­போ­தைய எம்.பி.யான டலஸ் அழ­க­பெ­ரும உள்­ளிட்ட பலரும் இடம்­பெற்­றி­ருந்­தனர். இந்­நி­லையில் காணா­மல்­போ­ன­வர்கள் தொடர்­பான ஐம்­ப­துக்கும் மேற்­பட்ட முறைப்­பா­டுகள் எமக்கு கிடைத்­தன.

அவர்­களின் பெற்­றோரை கொழும்­பிற்கு அழைத்து வரு­வ­தற்கு ஏற்­பாடு செய்தோம். அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை சந்­திப்­ப­தற்கும் நட­வ­டிக்கை எடுத்தோம். அதற்­கான தினம் ஒதுக்­கப்­பட்­ட­வுடன் நான் மஹிந்த ராஜ­ப­க்ஷவை சந்­தித்து ஒரு விட­யத்தை கூறினேன். அதா­வது உங்­களை சந்­திக்­க­வுள்ள இந்த காணா­மல்­போ­ன­வர்­களின் உற­வி­னர்கள் கதறி அழு­வார்கள் உங்­க­ளுக்கு சாபம் போடு­வார்கள். எனினும் நீங்கள் பொறு­மை­யுடன் அவர்கள் கூறு­வதை செவி­ம­டுக்­க­வேண்டும் என்று கேட்­டுக்­கொண்டேன்.

தொடர்ந்து சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­து­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­தினோம். அதன் பின்னர் கிழக்­கி­லி­ருந்து இவ்­வா­றான கப்பம் பெறும் சம்­ப­வங்கள் குறை­வ­டைந்­தன. தொடர்ந்து சிவா­ஜி­லிங்கம் யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து என்­னுடன் தொடர்பை ஏற்­ப­டுத்தி யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெறும் கப்பம் பெறும் சம்­ப­வங்­க­ளையும் குறைத்துத் தரு­மாறு கேட்­டுக்­கொண்டார்.

ஆனால் அப்­போது யாழ்ப்­பா­ணத்தில் யுத்தம் நடந்­ததால் அது கடி­ன­மான காரியம் என்று கூறினேன். உதா­ர­ண­மாக என்னை சுட்டுக்கொன்றுவிட்டு புலிகள் தான் சுட்டனர் என்று கூறினால் என்ன செய்வது என்று கேட்டேன். இவ்வாறு நாங்கள் இந்த விடயத்தில் அன்று பாரிய வகையில் தலையிட்டோம். சுரேஷ் பிரேமச்சந்திரனும் என்னிடம் பல ஆவணங்களை இதுதொடர்பில் தந்திருக்கின்றார். அதிகமான சம்பவங்களில் இராணவத்திலிருந்து தப்பிச்சென்றவர்களே ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால் கடமையில் இருக்கும் இராணுவத்துடன் இணைந்துதான் இவற்றை மேற்கொண்டுள்ளனர். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-20#page-1

  • கருத்துக்கள உறவுகள்

என்றாலும் கதிர்காமர் அளவுக்கு ஐநாவோடு சிங்களவனுக்காக சண்டை போட சிங்களவனாலும் முடியாது. ஆனால் தமிழனால் முடியும். அதேவேளை.. தமிழனுக்கு எதிராக தமிழனால் தான் சரியாகச் செயற்படவும் முடியும். பண்டாரவன்னியனும் தமிழன்.. காக்கவன்னியனும் தமிழன். பிரபாகரனும் தமிழன்.. கருணா என்கிற முரளிதரனும் தமிழன். 

சூரியக் கதிர் யாழ்ப்பாணத்துக்கான சிங்கள ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் போது..  இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான தமிழ் மக்களுக்காக.. ஐநாவால்..  உலக அரங்கிடம் மனிதாபிமான உதவி கோரப்பட்ட வேளை.. ஐநா நுளம்புக்கு மருந்தடிக்கிற வேலையோடு மட்டும் சொறீலங்காவில் இருந்திடனும் என்று காட்டமான அறிக்கை தந்தவர் கதிர்காமர்.

இப்பவும் சுமந்திரனை விட்டால்.. உந்த வேலையை நல்லாச் செய்வாரே. :rolleyes:tw_angry:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.