Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“கொமிசன் பெற்ற அமைச்சர்” சூடானது வட மாகாண சபை

Featured Replies

“கொமி­சன் பெற்ற அமைச்­சர்” சூடா­னது வட மாகாண சபை

 
“கொமி­சன் பெற்ற அமைச்­சர்” சூடா­னது வட மாகாண சபை
 

ஆல­யங்­க­ளுக்கு நிதி வழங்­கி­ய­தில் ‘கொமி­சன்’ பெற்ற அமைச்­சர் யார்? என்ற வாதத்­தால் வடக்கு மாகாண சபை­யின் நேற்­றைய அமர்வு கொஞ்­சம் சூடா­னது. பின்­னர் கடந்த கால அமர்­வு­க­ளைப் போல் அல்­லாது அமை­தி­யாக உரிய நேரத்­துக்கு நடந்து முடிந்­தது. வடக்கு மாகா­ண­ச­பை­யின் 99ஆவது அமர்வு, சிறப்பு அமர்­வாக நேற்று நடை­பெற்­றது. அவைத் தலை­வர் அறி­விப்­பு­டன் சபை தொடங்­கி­யது.

வந்­திட்­டேன்னு சொல்லு

அமைச்­சுக்­கள் மீதான மீளாய்வு விவா­தத்­துக்கு கோரிக்கை விடுத்த எதிர்க்­க ட்­சித் தலை­வர் தவ­ரா­சாவோ, சிவா­ஜி­லிங்­கமோ சபை தொடங்­கும் போது அவைக்­குள் இருக்­க­வில்லை. எதிர்க் கட்­சித் தலை­வ­ரைக் காண­வில்லை என்று அவைத் தலை­வர் தேடிக் கொண்­டி­ருக்­கும்­போதே, சபைக்கு ஓடி வந்­தார் தவ­ராசா. வந்­திட்­டேன் என்று சொல்­லிக் கொண்டு நுழைந்­தார். விவா­தத்தை ஆரம்­பிக்­கு­மாறு அவைத் தலை­வர் பணிக்க, மூச்சு வாங்­கி­ய­படி பேச்­சைத் தொடங்­கி­னார். ஓடி வந்­தது களைக்­கின்­றது என்று தவ­ராசா கூற, ஓடி ஓடி உழைக்க வேண்­டும் என்­றார் அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம்.

வடக்கு மாகாண சபை­யின் ஆதி­மூ­லம் வரை­யில் கிள­றி­யெ­டுத்து ஒவ்­வொரு விட­ய­மா­கப் பிரித்து மேய்ந்­தார் எதிர்க்­கட்­சித் தலை­வர். பிர­சங்­கம் நடத்த எல்­லோ­ரும் அமை­தி­யா­கக் கேட்­டுக் கொண்­டி­ருப்­ப­து­போன்று எதிர்க்­கட்­சித் தலை­வர் அடுக்­க­டுக்­காக அடுக்­கிய குற்­றச்­சாட்­டுக் களைச் செவி­ம­டுத்­துக் கொண்­டி­ருந்­த­னர்.
சில தினங்­க­ளுக்கு முன்­னர், கல்­வி­யங்காட்­டுச் சந்­தை­யின் குறை­களை முத­ல­மைச்­சர் நேரில் சென்று பார்த்­தி­ருந்­தார். யாழ்ப்­பாண நக­ரின் சீத்­து­வக்­கேட்­டை­யும் போய் பார்க்­கு­மா­றும், வேண்­டு­மா­னால் தானும் வரு­கின்­றேன் என்­றும் தவ­ராசா கூறி­னார்.

தனது குற்­றச்­சாட்­டுப் பட்­டி­யல்­க­ளின் நடு­வில் முத­ல­மைச்­ச­ரைப் பார்த்து நீங்­கள் வடக்­கின் 12 லட்­சம் மக்­க­ளுக்­கும் முத­ல­மைச்­சர் என்­பதை நினை­வில் வைத்­துக் கொள்­ளுங்­கள் என்று சுட்­டிக்­காட்­டி­னார். வடக்கு மாகா­ணத்­தின் அமைச்­ச­ரவை யாழ்ப்­பா­ணத்­துக்­குள் சுருங்­கு­வதை மன­தில் வைத்து எதிர்க் கட்­சித் தலை­வர் இதை இழுத்­து­விட்­டி­ருக்க வேண்­டும் என்று பார்­வை­யா­ளர் கல­ரிக்­குள் பலர் கதைத்­துக் கொண்­ட­னர்.
அது­மட்­டு­மல்­லாது முத­ல­மைச்­சர் தான் பேசும் உரையை எழு­திக் கொண்டு வந்து வாசிப்­பதே வழ­மை­யா­கக் கொண்­ட­வர். அவ­ருக்கு உரை எழு­திக் கொடுப்­ப­வர்­கள் தவ­றாக எழு­திக் கொடுக்­கி­றார்­கள் என்­றும் முத­ல­மைச்­சரைச் சாடை­மா­டை­யாய்க் கடித்­தார்.

பிடுங்­கிய நிதி தூங்­கு­கின்­றது

ஆளு­நர் சந்­தி­ர­சிறி ஆளு­நர் நிதி­யத்­துக்கு மாகா­ண­ச­பை­யி­லி­ருந்து மாற்­றிய 14 கோடி ரூபா நிதி­யைத் திரும்­பிப் பெற்­றும், அந்த நிதி செலவு செய்­யப்­ப­டா­மல் வங்­கி­யில் இருக்­கின்­றது என்று அவைத் தலை­வர் விச­னத்­து­டன் சுட்­டிக்­காட்­டி­னார். எதிர்க்­கட்­சித் தலை­வர் தனது உரை­யின் போது அடிக்­கடி முத­ல­மைச்­ச­ரைப் பார்த்து, ஐயா நான் உங்­க­ளைக் குற்­றம் சொல்­ல­வில்லை. ஆனால் இப்­படி எல்­லாம் நடக்­கின்­றது என்­ப­தைத் தெரிந்து கொள்­ளுங்­கள் என்று, பிரம்­பால் அடித்து விட்டு மயில் இற­கால் தட­வி­னார் தவ­ராசா. வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சுப் பொறுப்­புக்­கள் அண்­மை­யில் மாற்­றப்­பட்­டது. இதனை வைத்து, “இப்ப எந்­தெந்த அமைச்­சர் எதற்கு எதற்­குப் பொறுப்­பாக இருக்­கின்­றார்­கள் என்­பது தெரி­ய­வில்லை” என்று, அமைச்­ச­ரவை மாற்­றக் குழப்­பத்தை மறை­மு­க­மா­கச் சுட்­டிக்­காட்­டி­னார் எதிர்க்­கட்­சித் தலை­வர் தவ­ராசா.

முன்­னைய விவ­சாய அமைச்­சர், சுற்­றுச் சூழ­லைக் கார­ணம் காட்டி த் திட்­டங்­களை மறுத்­தார் என்று கூறிய தவ­ராசா, சில திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த பேரம் பேசப்­பட்­டது என்று கேள்­விப்­பட்­டேன் என்று பட்­டும்­ப­டா­ம­லும் சொல்ல, எதிர்க்­கட்சி உறுப்­பி­னர் ஒரு­வர் அதற்கு முணு­மு­ணுத்­தார். இந்த விச­யத்­தில ஆழ­மாய் போகா­தை­யுங்கோ என்று சொல்­லிக் கொண்டு அடுத்த விட­யத்­துக்கு தாவி­னார். கணக்­கில இருந்­தால் தான் கணக்­காய்­வில் வரும் என்று அமைச்­சர்­க­ளுக்கு ஒரு போடும் போட்­டார் தவ­ராசா.

குரு­கு­ல­ரா­சாவை மீள­வும் நிய­மி­யுங்­கள்

கொக்­கு­வில் இந்­துக் கல்­லூ­ரிக்கு தற்­போது புதிய கல்வி அமைச்­ச­ரின் அறி­வு­றுத்­த­லுக்கு அமைய அதி­பர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். என்று அவ­ரது அமைச்சே தக­வல் வழங்­கி­யது என்று சுட்­டிக்­காட்­டிய தவ­ராசா, நிய­ம­னங்­க­ளில் அதி­கார துஷ்­பி­ர­யோ­கம் செய்­தார் என்­று­தான் குரு­கு­ல­ரா­சாவை பதவி நீக்­கி­னீர்­கள். அப்­ப­டி­யா­னால் புதிய கல்வி அமைச்­ச­ரும் அதே தவ­றைச் செய்­தி­ருக்­கி­றார். நட­வ­டிக்கை எடுங்­கள் என்ற தொனி­யில் புதுக் குண்டை புதிய கல்வி அமைச்­சர் மீது போட்­டார். தவ­ரா­சா­வின் குற்­றச்­சாட்­டுப் பத்­தி­ரம் முடி­வுக்கு வந்­த­தும் அவை தேநீர் இடை­வே­ளைக்கு நிறுத்­தப்­பட்­டது.

அனந்­திக்கு ஆறு­தல் பரிசு

தேநீர் இடை­வே­ளை­யின் பின்­னர் சபை கூடி­யது. எதிர்க்­கட்சி உறுப்­பி­னர் ஜெய­தி­லக சமர்ப்
பித்த சிறப்­பு­ரிமை தொடர்­பான விவ­கா­ரம் எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது. இத­னைத் தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் உரை­யைத் தொடங்­கி­னார். எதிர்க்­கட்­சித் தலை­வர் தவ­ரா­சா­வைப் போலன்றி, கொஞ்­சம் மெது­வா­கவே அடி போட்டு மாகா­ண­சபை செய்­யத் தவ­றி­யதை அடுக்­கிச் சென்­றார். வழ­மைக்கு மாறாக நிதா­ன­மாக, அமை­தி­யா­கப் பேசி­னார்.

ஆறு­தல் பரி­சாக அனந்­திக்கு அமைச்­சுப் பதவி கிடைத்­தி­ருக்­கின்­றது என்று சிவா­ஜி­லிங்­கம் கூற, சபை­யில் சிரிப்­பொலி எழுந்­தது. போட்­டி­போட்­டுத்­தான் அவ­ருக்கு அலு­வ­ல­கம் பெற்­றுக் கொடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என்­றும் கூறி­னார். அவர் தனது உரை­யில், சுகா­தார அமைச்­சர் ப.சத்­தி­ய­லிங்­கத்­தைப் பார்த்து, சிறு­வர் நன்­ன­டத்தை திணைக்­க­ளத்தை அனந்­தி­யி­டம் கொடுக்­க­லாம்­தானே என்று தனது யோச­னையை முன்­வைத்­தார்.

வல்­வெட்­டித்­து­றை­யில் அமை­ய­வி­ருந்த மிகப்­பெ­ரிய மருத்­து­வ­ம­னையை எமது மக்­கள் பிர­தி­நி­தி­களே அந்­தக் காலத்­தில் குழப்பி விட்­டார்­கள் என்று பழைய கதை­யை­யும் சபை­யில் கூறி­னார்.
எல்­லோ­ரும் குறை­கூறி உரை­யாற்றி வந்த நிலை­யில், ஆளும் கட்சி உறுப்­பி­னர் க.விந்­தன், அமைச்­சுக்­கள் செய்த பாராட்­டத்­தக்க விட­யங்­க­ளைப் பட்­டி­ய­லிட்­டார். இதன் பின்பு முன்­னாள் அமைச்­சர் ஐங்­க­ர­நே­சன் உரை­யாற்­றி­னார். அவ­ரது உரை கொஞ்­சம் கார­மா­கவே இருந்­தது. எதிர்க்­கட்­சித் தலை­வர் தவ­ரா­ச­வைக் குறி­வைத்தே அவ­ரது தாக்­கு­தல் அமைந்­தது. தவ­ராசா இங்கே கேட்ட கேள்­வி­கள் இதற்கு முன்­ன­ரும் இந்த அவை­யில் எழுப்­பிய கேள்­வி­கள் என்­றும் அதற்கு விக்­கி­ர­மா­தித்­தன் போன்று நாங்­க­ளும் பதில்­க­ளைச் சொல்­லிக் கொண்­டே­யி­ருக்­கின்­றோம் – என்­றார்.

அரசு மூடி மறைத்­துள்­ளது

பூந­க­ரி­யில் திறக்­கப்­பட்ட கலப்பு மின்­பி­றப்­புத் திட்­டம் கொழும்பு அர­சி­னு­டை­யது அல்ல. அது தனி­யார் நிறு­வ­னத்­தி­னு­டை­யது என்ற உண்­மையை அம்­ப­லப்­ப­டுத்­தி­னார் ஐங்­க­ர­நே­சன். சுற்­றுச் சூழ­லைக் கட்­டிப்­பி­டித்து இங்கு அபி­வி­ருத்திக்கு இடம் கொடுக்­கப்­ப­ட­வில்லை என்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரின் குற்­றச்­சாட்­டுக்கு, தெற்­கில் நிரா­க­ரித்த தொழிற்­சா­லை­களை இங்கு நிறு­வவே எதிர்ப்­புத் தெரி­விக்­கப்­பட்­டது என்று பதில் கூறி­னார் ஐங்­க­ர­நே­சன்.

தன்­னைப் போல பிற­ரை­யும் நேசி என்­று­தான் சொல்­லி­யி­ருக்­கின்­றார்­கள். தன்­னைப் போல பிற­ரை­யும் யோசி என்­பதை இப்­போ­து­தான் நான் அறிந்­தி­ருக்­கின்­றேன் என்று தவ­ராசா ­வுக்கு பதி­லடி கொடுத்­தார் ஐங்­க­ர­நே­சன். கணக்­குக்கு வரா­தது கணக்­காய்­வுக்கு வராது என்ற அவ­ரது குற்­றச்­சாட்­டையே இப்­ப­டித் திருப்­பி­ய­டித்­தார்.

ஆலய நிதி­யில் கொமி­சன்

கடந்த ஆட்­சிக் காலங்­க­ளில் கொழும்பு அர­சின் அமைச்­ச­ராக வடக்கு மாகா­ணத்­தைச் சார்ந்­த­வர் ஒரு­வர் இருந்­தார். ஆல­ய நிர்வாகிகளை அழைத்து அழைத்து நிதி வழங்­கி­னார். காசோலை வழங்­கும் போது அதற்­குப் பின்­னால் அதி­கா­ரி­க­ளும் போவார்­கள். காசோ­லையை மாற்றி கணி­ச­மான தொகையை அமைச்­ச­ருக்கு வாங்­கிக் கொண்­டு­தான் கோயி­லுக்கு கொடுத்­தி­ருக்­கி­றார்­கள் என்று குற்­றம் சுமத்­தி­னார் ஐங்­க­ர­நே­சன்.

எதிர்க்­கட்­சித் தலை­வர் தவ­ராசா, ஈ.பி.டி.பி. மாகா­ண­சபை உறுப்­பி­னர் தவ­நா­தன் காதில் ஏதோ ஓதி­னார். உடனே எழுந்­தார் தவ­நா­தன். ஒழுங்­குப் பிரச்­சி­னையை கிளப்­பு­கின்­றேன் என்­றார். அந்த அமைச்­சர் எந்­தக் காலப் பகு­தி­யில் இருந்­த­வர் என்று கேட்டு சர்ச்­சை­யைத் தொடக்­கி­னார். தொப்பி அள­வென்று போட்­டுக் கொண்­ட­தால் அந்­தக் கேள்­வி­யைக் கேட்­டி­ருக்­க­லாம் என்று கல­ரிக்­குள் பேசிக் கொண்­ட­னர்.

முன்­னாள் அமைச்­சர் ஐங்­க­ர­நே­சனோ காலத்­தைச் சொல்ல மாட்­டேன் என்று அடம்­பி­டித்­தார். இறு­தி­யில் அவைத் தலை­வ­ருக்கு முறைப்­பாடு வைக்­கும் அள­வுக்கு இந்த விட­யம் சென்­றது. அவைத் தலை­வரோ, கன­பேர் இப்­படி அமைச்­ச­ராக இருந்­த­வர்­கள் என்­ப­தைச் சொன்­னார். எதிர்க்­கட்­சித் தலை­வர் தவ­ராசா, ஐங்­க­ர­நே­சன் சொல்­வது உண்மை என்று அவ­ருக்கு ஒத்து ஊதி­னார். ஆனால் காலத்­தைச் சொல்ல வேண்­டும் என்­றார். கொஞ்­சம் நீடித்த இந்த விவா­தத்­தில் கடை­சி­யில், ஐங்­க­ர­நே­சன் ஒலி­வாங்­கியை ‘ஒன்’ செய்­யா­மல் காலத்­தைக் கூறி­னார்.

இதன் பின்­னர் கல்வி அமைச்­சர் சர்­வேஸ்­வ­ரன், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரின் குற்­றச்­சாட்­டுக் க­ளுக்­குப் பதில் வழங்­கி­னார். இதன்­போது இரு­வ­ருக்­கும் கொஞ்­சம் சூடா­கவே விவா­தம் நடந்­தது. எதிர்க்­கட்­சித் தலை­வர் ரொம்­பத் துள்­ளக் கூடாது என்று ஒரு குட்­டுப் போட்­டார். எதிர்க்­கட்­சித் தலை­வரோ, த ர்க்­கத்தை தர்க்­கத்­தால் எதிர்­கொள்­ளுங்­கள். வேறு கதை­கள் தேவை­யில்லை. நீங்­கள் வேறு கதை­கள் கதைத்­தால் நாங்­க­ளும் கதைப்­போம் என்று மண்­டை­யில் கை வைத்­துக் காட்­டி­னார். எதிர்க்­கட்­சித் தலை­வ­ரின் சைகை மொழி பல­ருக்­கும் புரிந்­தது. மோதல்­கள் குறை­வாக நடந்த சபை அமர்வு பி.ப. 2.10 மணிக்கு நிறை­வுக்கு வந்­தது.

http://uthayandaily.com/story/12953.html

காசை கொடுத்து பறிக்கும் கூட்டம் நாங்கள் அல்ல! தவராசாவை சாடுகின்றார் ஐங்கரநேசன்!!

காசை கொடுத்து பறிக்கும் கூட்டம் நாங்கள் அல்ல! தவராசாவை சாடுகின்றார் ஐங்கரநேசன்!!

 

எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தொடர்ந்தும் இந்த அவையில் ஒரே கேள்விகளையே முன்வைத்து வருகிறார். நாங்களும் விக்கிரமாதித்தன்போல திரும்பத் திரும்ப அதே பதிலையே சொல்லிக் கொண்டிருக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவருக்கு இவை விளங்கவில்லையோ அல்லது விளங்காததுபோல நடிக்கிறாரோ தெரியவில்லை. ஊடகங்களில் தொடர்ந்தும் இந்தச் செய்திகள் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே அவர் மீண்டும் மீண்டும் அதே பிழையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் என்று முன்னாள் விவசாய அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

வடக்கு மாகாணசபையின் கடந்த மூன்றரை வருட காலச் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வு அமர்வு விசேட அமர்வாக நேற்று வெள்ளிக்கிழமை (21.07.2017) கைதடியில் அமைந்துள்ள பேரவையில் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் பதிலளிக்கும்போதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து பதிலளிக்கையில்,

பளையில் அமைந்துள்ள காற்று மின்னாலையை கேள்வி கோரல் முறையில் நாங்கள் வழங்கி இருந்தால் மின் ஆலை நிறுவனங்களிடம் மாகாணசபை கூடுதலான நிதியைப் பெற்றிருக்கலாம் என்று கூறுகிறார். இவரது இந்தக் கேள்விக்குப் பல தடவை பதில் சொல்லிவிட்டோம். மின் உற்பத்தி நிலையங்களுக்கு மத்திய அரசே அனுமதி வழங்குகிறது. கேள்வி கோரலையும் அவர்களே செய்கிறார்கள். மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்ட அந்த மின் நிலையத்துக்கு மாகாணசபை எவ்வாறு கேள்வி கோரலைச் செய்ய முடியும்.

பளையில் இயங்கும் காற்று மின் ஆலை நிறுவனங்கள் மாகாணசபைக்கு நன்கொடையாகவே பணம் தருகிறார்கள். இந்தப் பணமும் விவசாய அமைச்சரின் வங்கிக் கணக்கிலோ, விவசாய அமைச்சின் வங்கிக் கணக்கிலோ வைப்பில் இடப்படுவதில்லை. பிரதம செயலாளரின் கணக்கிலேயே வைப்பில் இடப்படுகிறது. வருடாந்த பாதீட்டில் உள்ளடக்கப்பட்டு கணக்காய்வுகளுக்கும் உட்படுத்தப்படுகிறது. இதில் எதுவும் சந்தேகம் இருந்தால் எதிர்க்கட்சித் தலைவர் பிரதம செயலாளரிடம் அல்லது நிதியைக் கையாளும் பிரதிப் பிரதம செயலாளரிடமே கேட்க வேண்டும். ஏன் என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.

மாங்குளத்தில் கரும்புச் செய்கையில் முதலீடு செய்வதற்கு ஒரு நிறுவனம் வந்தபோது விவசாய அமைச்சர் மறுத்ததாகவும் அமைச்சர் ஏதோ 25 வரை கேட்டதாகவும் அவர்கள் 15 வரை தருவதாகவும் கூறியிருப்பதாகவும் யாரோ தனக்குச் சொன்னதாகவும் இது என்னவென்று தனக்கு விளங்கவில்லை என்றும் இப்போது புதிதாக எதிர்க்கட்சித் தலைவர் ஏதோ கூறுகின்றார்.

மாங்குளத்தில் கரும்புச் செய்கைக்கு மட்டுமல்ல மாதுளங்கன்று நடுவதற்குக்கூட எங்களிடம் கேட்டு இதுவரையில் எவரும் வரவில்லை. உங்களிடம் யாராவது அவ்வாறு சொல்லியிருந்தால் அவர்களை இந்த அவைக்கு முன்னால் அழைத்து வந்து சொல்லச் சொல்லுங்கள். எதிர்க்கட்சித் தலைவர்பற்றியும் எதேதோ எல்லாம் எங்களிடம் வந்து கூறுகிறார்கள். உறுதிப்படுத்தப்படாத எதையும் நாகரிகம் கருதி சபையில் நாங்கள் கேட்பதற்கு விரும்பவில்லை.

கணக்குக்கு வராத கணக்குப்பற்றியும் எதிர்க்கட்சித் தலைவர் ஏதோ கூறுகிறார். தன்னைப்போல பிறரையும் நேசி என்றுதான் கூறுவார்கள். சிலர் தம்மைப்போல பிறரையும் யோசிக்கிறார்கள்.

முன்னாள் மத்திய அமைச்சர் கோவில்களுக்கு காசோலையாக நன்கொடைகளை வழங்கிவிட்டு, அந்தக் காசோலையை மாற்றி அதில் இருந்து ஒரு தொகையை பெறுவதற்காகவே கூடவே ஒரு அதிகாரிiயும் அனுப்புவார். அதேமாதிரி நாங்களும் இருப்போம் என்று யோசிக்கிறார்கள்போலும். நான் மட்டுமல்ல, மாகாணசபையின் எந்த ஒரு அமைச்சரும் இவ்வாறான ஊழல், மோசடிகளில் ஈடுபட்டதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=74162

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.