Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எனது இடத்தை வரலாறு தீர்மானிக்கும் : சபையில் ரவி

Featured Replies

எனது இடத்தை வரலாறு தீர்மானிக்கும் : சபையில் ரவி

 

 

ravi_karunanayake.jpg

பண்­பாடு மற்றும் ஜன­நா­யகம் மிக்க ஆட்­சிக்கும் முழு நாட்­டுக்கும் முன்னுதார­ண­மாக விளங்கும் வகையில் அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்து வில­கு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ளேன் எனக் குறிப்­பிட்ட வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க, நம்­பிக் 

கையில்லாப் பிரே­ர­ணைக்கு பயந்து பதவி துறக்கவில்லை. எனது இடத்­தினை வர­லாறு தீர்­மா­னிக்கும் எனவும் சுட்டிக்காட்­டினார்.

அதி­கார மோகம் கொண்ட சதி­கா­ரர்கள் ஐக்­கிய தேசியக் கட்­சியை சீர்­கு­லைக்க முயற்­சிக்­கின்­றனர்.  நல்­லாட்சி அர­சாங்­கத்தைக் கவிழ்ப்­ப­தற்கு திட்­ட­மி­டு­கின்­றனர் எனச் சுட்­டிக்­காட்­டிய

 ரவி­க­ரு­ணா­நா­யக்க எம்.பி., ஏகா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஆட்­சி­யி­லி­ருந்து மீட்ட நாட்டை மீண்டும் சீர­ழிப்­ப­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது எனவும் குறிப்­பிட்டார்.  

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை விசேட அறி­விப்­பொன்றை முன்­வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க மேற்­கண்­ட­வாறு  தெரி­வித்தார்.

 இங்கு தொடர்ந்தும் அவர் உரை­யாற்­று­கையில், 

என்னை மையப்­ப­டுத்தி அண்­மைய நாட்­களில் ஊட­கங்­க­ளிலும், சமூக ஊட­கங்­க­ளிலும் கொழும்பு 3 இல் மொனார்க் வீட்டுத் தொகு­தியில் வீடொன்றில் வசிக்கச் சென்­றமை தொடர்பில் பிரச்­சினை எழுப்­பப்­பட்­டி­ருந்­தது. பத்­த­ர­முல்­லையில் உள்ள எனது வீட்டில் புன­ர­மைப்­புக்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வதால் வேறு வீடொன்றைத் தேடி­வந்தோம். நயில் விஜ­ய­சூ­ரி­யவின் மனை­வியும் எனது மனை­வியும் நண்­பிகள்

அவர்­க­ளுக்கு சொந்­த­மான வீட்டில் குத்­த­கைக்குச் செல்ல விரும்­பினோம். எனினும், அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு அவர் தனது வீட்டை குத்­த­கைக்கு கொடுக்க விரும்­பா­ததால், அர்­ஜூனா அலோ­சிஷின் நிறு­வ­னத்­துக்கு குறித்த வீட்டை குத்­த­கைக்கு வழங்­கவும், பின்னர் அந்த வீட்டை விற்­பனை செய்ய உரி­மை­யாளர் விரும்­பி­யதால் வீட்டைக் கொள்­வ­னவு செய்தோம். இதற்­காக செலான் வங்­கியில் கடன்­பெ­றப்­பட்­டி­ருந்­தது. இதற்­கான கடன் தனிப்­பட்ட நிறு­வ­னத்தின் தலை­வரால் செலுத்­தப்­பட்­டுள்­ளது. இது பற்­றிய தக­வல்­களை ஒழிக்­க­வேண்­டிய தேவை இல்லை.

மறைந்த அர­சியல் தலைவர் லலித் அத்­துலத் முத­லியின் ஊடா­கவே நான் அர­சி­ய­லுக்குள் நுழைந்தேன். அவர் அர­சி­யலின் ஊடாக பண­மீட்­ட­வில்லை. இருந்­த­போதும் அவர் மீதும் கப்­பலை விழுங்­கிய லலித் என்ற குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தனர். 

காலப்­போக்கில் குற்­றச்­சாட்­டுக்கள் அடிப்­படை அற்­றவை என்­பது நிரூ­ப­ண­மா­கின. அவ­ருடன் ஏற்­பட்ட நெருக்­கத்­தினால் நான் அர­சி­ய­லுக்கு வரும்­போது வர்த்­த­க­ரா­க­வி­ருந்தேன். நான் அர­சி­ய­லுக்குள் வந்­ததன் மூலம் எனது தனிப்­பட்ட சொத்­துக்­களை இழந்­து­கொண்­டேனே தவிர சொத்­துக்­களை சேர்க்­க­வில்லை. சட்­ட­வி­ரோ­த­மாக வீடொன்றைப் பெற்­றுக்­கொள்­ள­வேண்­டிய தேவை எனக்கு இல்லை. 

எம்.பிக்கள் பலர் என்­னு­டைய பந்­த­ர­முல்லை வீட்­டுக்கு வந்­துள்­ளார்கள். பல்­வேறு கலந்­து­ரை­யா­டல்கள், கட்சி மாற்­றங்­க­ளுக்­காக அவ்­வீட்­டுக்கு வந்­த­துடன், எனது சொத்துப் பற்றி அவர்­க­ளுக்கு நன்கு தெரியும். சட்­ட­வி­ரோ­த­மாக சொத்­துக்­களைச் சேர்க்­க­வில்லை என்­பதும் அவர்­க­ளுக்கு தெரியும். தனிப்­பட்ட தேவை­க­ளுக்­காக அர­சியல் அதி­கா­ரத்தை நான் பயன்­ப­டுத்­த­வில்லை. 

முன்னாள் அமைச்சர் ஒரு­வரோ அல்­லது அமைச்சர் ஒரு­வரை உரசிச் சென்­ற­வரோ ஆணைக்­கு­ழுக்­க­ளுக்கு விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­ப­ட­வில்லை. கடந்த காலங்­களில் அமைச்­சர்கள், பிர­த­மர்கள் நடந்­து­கொண்ட விதம் பற்றி எமக்குத் தெரியும். ஜனா­தி­ப­திகள் அர­சர்கள் போன்று நடந்­து­கொண்­டி­ருந்­த­துடன், அவர்கள் தற்­பொ­ழுது சட்டம் என்ற போர்­வையில் ஒழிந்­தி­ருக்­கின்­றனர்.

நாம் அப்­ப­டி­யில்லை. சட்­டத்தை மதித்து திறை­சேரி முறி குறித்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு முன்­னி­லையில் சென்று சாட்­சி­ய­ளித்து புதிய அர­சியல் கலா­சா­ர­மொன்றை நாட்­டுக்குக் காண்­பித்­துள்ளோம். என்­னிடம் குறுக்கு விசா­ரணை நடத்­திய மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல் ஆவே­ச­மாக எழுப்­பிய கேள்­விகள் ஆணை­யா­ளர்­களால் பல தட­வைகள் எச்­ச­ரிக்க்­ப­பட்­டன. அவ­ரு­டைய நிபு­ணத்­துவம் பற்­றிய சந்­தே­கங்­க­ளுக்கும் அப்பால் அவர் பத­வி­யு­யர்­வுக்­கா­கவா அல்­லது வேறு கார­ணங்­க­ளுக்­கா­கவா அவ்­வாறு ஆவே­ச­மாக நடந்­து­கொண்டார் என்­பது தெரி­யாமல் உள்­ளது. எது­வாக இருந்­தாலும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தினால் அமைச்சர் ஒரு­வரை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­து­வ­தற்­கான சூழல் ஏற்­பட்­டுள்­ளது. 

அமைச்சர் ஒரு­வ­ருக்கு எதி­ரான கோப்பைக் கூட திறந்­து­பார்ப்­ப­தற்கு சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துக்கு முன்னர் சுதந்­திரம் இருக்­க­வில்லை. 48 மணித்­தி­யா­லங்கள் என்ற குறு­கிய காலத்தில் 8 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான பக்­கங்­களைக் கொண்ட அறிக்­கையை சட்­டமா அதிபர் திணைக்­களம் ஆராய்ந்­துள்­ளமை மகிழ்ச்­சி­ய­ளிக்­கி­றது. 

நாட்­டுக்கு கிடைக்­க­வேண்­டிய வரு­மானம் மற்றும் கடன்கள் பற்­றியும் சட்­டமா அதிபர் திணைக்­களம் விசா­ர­ணை­களை நடத்­த­வேண்டும். நிதி­மோ­சடி பிரிவில் உள்ள 87 முறைப்­பா­டுகள் பற்­றிய விசா­ர­ணை­க­ளையும் இந்­த­ளவு வேகத்­துடன் அத்­தி­ணைக்­களம் முன்­னெ­டுக்க வேண்டும்.

ஐக்­கிய தேசியக் கட்­சிக்­காக 32 வரு­டங்­க­ளாக அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்­டுள்ளேன். இதனால் உயிர் அச்­சு­றுத்­தல்கள் ஏற்­பட்­ட­துடன், போலி குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து வழக்­குகள் தொட­ரப்­பட்­டன. 10 வரு­டங்­க­ளாக வழக்கு விசா­ர­ணைகள் நடை­பெற்று இறு­தியில் நான் எந்த குற்­றமும் இழைக்­க­வில்­லை­யென அவ்­வ­ழக்­கு­க­ளி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்டேன்.

எதிர்க்­கட்­சியில் இருந்த எம்மை பழி­வாங்கும் நோக்கில் இவ்­வா­றான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. தற்­பொ­ழுது எமது நற்­பெ­ய­ருக்கு களங்கம் ஏற்­ப­டுத்­து­கின்­றனர். எனது குடும்­பத்­தி­ன­ருக்கும் அச்­ச­மூட்­டு­கின்­றனர். 

மஹிந்த ராஜ­பக்ஷ ஆட்­சியை மாற்­று­வ­தற்கு சலரும் ஒன்­றி­ணைய வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் நாம் இருந்தோம். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது வேட்­பா­ள­ராக பிரே­ரிக்­கப்­பட்­ட­போது அன்னப் பறவை சின்­னத்தைப் பெற்றுக் கொடுத்­தது நானே­யாகும். நாட்டின் எதிர்­கா­லத்­துக்­கா­கவே அதனைச் செய்தேன். 

மக்­க­ளுக்கு சேவை­யாற்­று­வ­தற்கே எனது அமைச்சுப் பத­வி­களைப் பயன்­ப­டுத்­தி­யுள்ளேன். 20 வரு­டங்­க­ளாக அநீதி இழைக்­கப்­பட்ட எதிர்க் கட்சி ஆத­ர­வா­ளர்­க­ளுக்கும் மக்­க­ளுக்கும் சேவை­யாற்­று­வ­தற்­காக 24 மணித்­தி­யா­லங்­களும் எனது தொலை­பே­சிகள் செயற்­பட்­டன. 

தனிப்­பட்ட இலா­பங்­க­ளுக்கோ அல்­லது வரப்­பி­ர­சா­தங்­க­ளுக்­கா­கவே அமைச்சு அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்­த­வில்லை. பத­விகள், பொறுப்­புக்கள் என்­பன தற்­கா­லி­க­மா­னவை. எமது உண்மைத் தன்­மையே அவ­சி­ய­மாகும். எனினும், சிலர் பத­விகள் நிரந்­த­ர­மாக இருக்­கப்­போ­வ­தாக நினைத்து வரு­கின்­றனர். இத­னா­லேயே அதி­காரம் போன பின்­னரும் சிலர் கன­வு­களை வளர்த்து வரு­கின்­றனர். 

எனக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுகள் எதுவும் அடிப்­ப­டை­யற்­றவை. இவற்­றுடன் நான் தொடர்­பு­ப­ட­வில்லை. இருந்­த­போதும் கடந்த 10 நாட்­களில் ஊட­கங்­களும், சிலரும் என்னை குற்­ற­வா­ளி­யாக்­கி­விட்­டனர். வர­லாற்றில் ஒரு­போதும் இல்­லா­த­மா­திரி ஊட­கங்கள் செயற்­பட்­டுள்­ளன. என்னை சிலையில் அறைய வேண்டும் எனக் காண்­பித்­துள்­ளனர். இதனால் நான் சலிப்­ப­டைய மாட்டேன். இவற்­றுக்கு முகங்­கொ­டுக்கும் பலம் எனக்கு உள்­ளது.

இந்த விவ­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி நல்­லாட்சி அர­சாங்­கத்தை குலைப்­ப­தற்­கான சதி முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக அறி­யக்­கி­டைத்­துள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகியோர் முன்­னெ­டுத்துச் செல்லும் ஜன­நா­யக செயற்­பாட்டை வீழ்ச்­சி­யுறச் செய்யும் சதிகள் இடம்­பெ­று­வ­தாக உண­ர­மு­டி­கி­றது. 

மக்­களால் நிர­க­ரிக்­கப்­பட்­ட­வர்கள், ஊழல் மோச­டிகள் மற்றும் குற்­றச்­செ­யல்­களில் தொடர்­பு­டை­ய­வர்கள் இந்த சதியில் பின்­ன­ணியில் இருக்­கின்­றனர். தமது பிழை­க­ளுக்குக் கிடைக்கும் தண்­ட­னை­க­ளி­லி­ருந்து தப்பிக் கொள்­வ­தற்­காக இவ்­வா­றான சதி­களில் ஈடு­பட்­டுள்­ளார்கள். 

அதி­கார மோகம் கொண்ட சதி­கா­ரர்­க­ளுக்கு ஐக்­கிய தேசியக் கட்­சியை சீர்­கு­லைக்க இட­ம­ளிக்­க­மாட்டோம். இவர்­க­ளுக்கு நல்­லாட்சி அர­சாங்­கத்தைக் கவிழ்ப்­ப­தற்கும் இட­ம­ளிக்­க­மாட்டோம். ஏகா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஆட்­சி­யி­லி­ருந்து மீட்ட நாட்டை மீண்டும் சீர­ழிப்­ப­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது. 

முழு நாட்­டுக்கும் முன்­னு­தா­ர­ண­மாக விளங்கும் வகையில் அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்து வில­கு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ளேன். எமது கட்­சியின் பிர­பல அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு இது­போன்ற குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. ஜேர்.ஜோன்.கொத்­த­லா­வல, டட்லி சேன­நா­யக்க, லலித் அத்­து­லத்­மு­தலி, காமினி திசா­நா­யக்க, ஜே.ஆர்.ஜய­வர்த்­தன, பிரே­ம­தாச போன்­ற­வர்­க­ளுக்கு எதி­ராக குற்றச்சாட்டுகள் இருந்தபோதும் அவை ஆதாரமற்றவை என்பது காலப்போக்கில் நிரூபனமாகியிருந்தன. 

ஊழல் மோசடியிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கும், எமது கட்சி ஆதரவாளர்களைப் பாதுகாப்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவது என்ற தீர்மானத்தை நான் கவலையிலோ அல்லது அதிர்ச்சுயுடனோ எடுக்கவில்லை. 

பெருமையுடன் எடுக்கின்றேன். பாராளுமன்றத்தின் கௌவரத்தை பாதுகாப்பதற்கே எனது அமைச்சுப் பதவியை அர்ப்பணிக்கின்றேன். எமது கட்சிக்கு ஆதரவாகவிருக்கின்ற அமைச்சர்கள் மற்றும் பின்வரிசை உறுப்பினர்களுக்காக எனது பதவியை அர்ப்பணிக்கின்றேன். 

எனக்கான இடத்தை வரலாறு தீர்மானிக்கும். அச்சத்தாலோ அல்லது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குப் பயந்தோ பதவி விலகவில்லை. புதியதொரு அரசியல் கலாசாரத்துக்கு முன்னுதாரணமாக திகழும் வகையிலேயே பெருமையுடன் பதவி துறக்கின்றேன். பண்பாடு மற்றும் ஜனநாயகம் மிக்க ஆட்சிக்காகவும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணைந்து கொண்டுசெல்லும் நல்லாட்சிக்காவும் அமைச்சுப் பதவியை அர்ப்பணிப்புச் செய்கிறேன் என்றார். 

http://www.virakesari.lk/article/23011

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.