Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எதிர்ப்புக்களை எதிர்கொள்கிறார் வடக்கு முதலமைச்சர்

Featured Replies

எதிர்ப்புக்களை எதிர்கொள்கிறார் வடக்கு முதலமைச்சர்

 
 
எதிர்ப்புக்களை எதிர்கொள்கிறார்  வடக்கு முதலமைச்சர்

முன்­னாள் போரா­ளி­கள் தொடர்­பாக வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி. விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்த கருத்­துக்­குப் பல்­வேறு தரப்­புக்­க­ளி­ட­மி­ருந்­தும் எதிர்ப்­புக் கிளம்­பி­யுள்­ளது. கூட்­ட­மைப்­பின் ஒரு பங்­கா­ளிக் கட்­சி­யான ரெலோ அமைப்­பின் சார்­பில் இதற்கு உட­ன­டி­யா­கவே கண்­ட­னம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த அமைப்­பின் செய­லா­ள­ரான ந.சிறி­காந்தா இது தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு அனுப்பி வைத்­துள்ள செய்­திக்­கு­றிப்­பில், தமிழ் மக்­க­ளின் பேரா­த­ர­வு­டன் பத­விக்கு வந்த சி.வி.விக்­னேஸ்­வ­ரன், போரா­ளி­க­ளுக்கு எதி­ராக இவ்­வா­றான கரு­த்­துக்­க­ளைத் தெரி­வித்­துள்­ளமை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தது எனத் தெரி­வித்­துள்­ளார். போர்ப்­ப­யிற்சி பெற்­ற­வர்­கள் வடக்­கில் குற்­றச் செயல்­க­ளில் ஈடு­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புள்­ளது என வடக்கு முத­ல­மைச்­சர் கூறி­யி­ருந்மை இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.

முன்­னாள் போரா­ளி­கள் குறித்து
முத­ல­மைச்­ச­ரது
பொறுப்­பற்ற கருத்து

வடக்கு முத­ல­மைச்­ச­ரின் இந்­தப் பொறுப்­பற்ற, தான்­தோன்­றித்­த­ன­மான கருத்­துக்­களை எவ­ருமே ஏற்­றுக்­கொள்­ள­மாட்­டார்­கள். போர் இடம்­பெற்­ற­போது கொழும்­பில் பாது­காப்­பு­டன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்­த­வர் சி.வி. விக்­னேஸ் வரன்.

போரின் கொடு­மை­யை­யும், மக்­கள் அனு­ப­வித்த அவ­லங்­க­ளை­யும் அறிந்­தி­ராத அவர் போன்­ற­வர்­கள், எது­வித சிர­ம­மும் இல்­லாது பத­விச் சுகத்தை அனு­ப­வித்­துக் கொண்டு, வாய்க்கு வந்­ததை எல்­லாம் கூறு­வது நியா­ய­மும் அல்ல; தர்­ம­மும் அல்ல. முன்­னாள் போரா­ளி­கள் தமது இனத்­துக்­கா­கவே போரா­டி­ய­வர்­கள். தமது குடும்­பம், சுக­துக்­கங் கள் சக­ல­தை­யும் துறந்து கள­மா­டி­ய­வர்­கள்.

இவர்­க­ளில் பல ஆயி­ரக் கணக்­கா­ன­வர்­கள் தமது இன்­னு­யிர்­க­ளைத் தியா­கம் செய்­தி­ருக்­கின்­ற­னர். ஏரா­ள­மா­ன­வர்­கள் அங்­கங்­களை இழந்­துள்­ள­னர். பலர் தமது ஒட்­டு­மொத்­தக் குடும்­பங்­க­ளை­யும் இழந்­துள்­ள­னர். இறு­திப் போரின் பின்­னர், புனர்­வாழ்வு நட­வ­டிக்­கைக்­குள் உள்­வாங்­கப்­பட்ட இவர்­க­ளில் ஒரு தரப்­பி­னர் தமது குடும்­பங்­க­ளு­டன் இணைந்து வாழ்­கின்­ற­னர்.

பொரு­ளா­தார ரீதி­யில் பெரும் பின்­ன­டை­வைச் சந்­தித்து வரும் இவர்­கள், அதைச் சீர் செய்­வ­தற்­கா­கப் போராடி வரு­கின்­ற­னர். இந்த நிலை­யில் வடக்கு முத­ல­மைச்­சர் இவர்­கள் தொடர்­பா­கத் தெரி­வித்த கருத்து இவர்­களை மன­த­ள­வில் பெரி­தும் பாதித்து விட்­டது.

இளை­ஞர்­க­ளின் ஆயு­தப் போராட்­டம் கார­ண­மா­கவே, 1987 ஆம் ஆண்டு இந்­திய-இலங்கை ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. இதன் மூல­மா­கவே அர­ச­மைப்­பில் 13 ஆவது திருத்­தம் மேற்­கொள்­ளப்­பட்­டது. இதன் பய­னாக உரு­வா­கி­யது தான் மாகாண சபை­கள். ஆரம்­பத்­தில் வடக்­கும், கிழக்­கும் இணைந்த வகை­யில் மாகா­ண­சபை ஒன்று உரு­வாக்­கப்­பட்­டது.

ஆனால் இதைக்­கூட இன­வா­தி­கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. இத­னால் வடக்­கும் கிழக்­கும் துண்­டா­டப்­பட்­டன. கிழக்­கில் மாகா­ண­ச­பைக்­கான தேர்­தல் தனி­யாக இடம்­பெற்­றது. ஆனால் வடக்­கில் இடம்­பெ­ற­வில்லை. பல்­வேறு தரப்­பி­ன­ரின் அழுத்­தங்­க­ளைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு செப்­ரம்­பர் மாதம் வடக்கு மாகா­ண­ச­பைக்­கான தேர்­தல் இடம்­பெற்­றது.

தேர்­தல் இடம்­பெ­றும்­வரை கொழும்­பு­வா­சி­யாக வாழ்ந்த சி.வி.விக்­னேஸ்­வ­ரன் வடக்கை எட்­டிப்­பார்த்­தார். தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டங்­க­ளில் கலந்து கொண்­டார். மாகா­ண­ச­பை­யில் தமக்கு மூன்­றில் இரண்டு பங்கு ஆத­ரவு கிடைத்­தால் வடக்கு ஆளு­நரை உட­ன­டி­யா­கவே அகற்றி விடு­வ­தா­கச் சூளு­ரைத்­தார். மக்­க­ளும் அவ­ரது பேச்­சில் மயங்­கி­னார்­கள்.

இவர்­தான் முத­ல­மைச்­சர் பத­விக்கு மிகப் பொருத்­த­மா­ன­வர் எனத் தீர்­மா­னித்து அமோக ஆத­ர­வை­யும் வழங்­கி­னர். ஆனால் இவர் முத­ல­மைச்­ச­ரின் கதி­ரை­யில் அமர்ந்­த­தைத் தவிர, வழங்­கிய வாக்­கு­று­தி­க­ளில் எதை­யுமே நிறை­வேற்­ற­வில்லை. பின்­னர் மாகா­ண­ ச­பை­யி­லும், அதற்கு அப்­பா­லும் இடம்­பெற்ற விட­யங்­கள் அனை­வ­ரும் அறிந்­த­து­தான்.

தமிழ் மக்­க­ளது ஆத­ரவு தற்­போ­தும்
தமக்­குண்டு என்ற முத­ல­மைச்­ச­ரது
தப்­புக்­க­ணக்கு

நான் எவ­ருக்­குமே அஞ்­ச­மாட்­டேன், மக்­க­ளின் பலம் எனக்­குத்­தான் உள்­ளது. என்­றெல்­லாம் கர்ச்­சித்­த­வர்­தான் இவர். கூட்­ட­மைப்­பின் தலை­மை­யைக்கூட ஒரு பொருட்­டாக இவர் கரு­த­வில்லை. மாற்­றுத் தலைமை என்ற கன­வில் இவர் மூழ்­கி­யி­ருந்­தார் ஆனால் தற்­போது அந்­தக் கன­வும் கலைந்­து­விட்­டது.

கூட்­ட­மைப்­புக்கு நான் விரோ­தி­யல்ல; கூட்­ட­மைப்­பி­லேயே நான் உள்­ளேன், என்­றெல்­லாம் சுருதி கலைந்து இவ­ரது குரல் ஒலிக்­கத் தொடங்­கி­விட்­டது. மக்­கள் இவ­ரது உண்­மைத் தன்­மையை மெல்ல மெல்ல உணர்ந்து கொண்டுள்­ள­னர். கூட்­ட­மைப்­புக்கு விரோ­த­மா­ன­வர்­க­ளி­டம் இவர் கொண்­டுள்ள உற­வை­யும் புரிந்து கொண்­டுள்­ள­னர். இவ­ரது பிரித்­தா­ளும் தந்­தி­ர­மும் தற்­போது அம்­ப­லத்­துக்கு வந்­துள்­ளது.

மக்­க­ளுக்­குப் பதில் கூறவேண்டிய
கடப்பாடு முதலமைச்சருக்கு உண்டு

மாகாண அமைச்­சுக்­கள் மீது விசா­ரணை இடம்­பெ­று­மா­னால், அதில் முத­ல­மைச்­ச­ரின் வச­முள்ள அமைச்­சுக்­க­ளும் உள்­ள­டக்­கப்­ப­டு­தல் வேண்­டும். ஆனால் முத­ல­மைச்­சர் இதற்கு இணங்கத் தயாரில்லை. இதற்­கான கார­ணம் என்ன? மக்­க­ளால் முத­ல­மைச்­ச­ரின் கதி­ரை­யில் அமர்த்தி வைக்­கப்­பட்ட சி.வி. விக்­னேஸ்­வ­ரன் தமது எண்­ணம் போன்று எதை­யுமே செய்­து­விட முடி­யாது.

மக்­க­ளுக்­குப் பதில் சொல்­லித்­தான் ஆக வேண்­டும். ஆனால் முத­ல­மைச்­சரோ மாகாண சபை­யில் தாமே எல்­லா­மும் என்­பது போன்று அதி­கா­ரத் திமி­ரு­டன் நடந்து கொள்­கி­றார். இதை எந்த வகை­யி­லும் ஏற்­றுக் கொள்­ள­மு­டி­யாது.
தற்­போது போரா­ளி­கள் தொடர்­பாக அவர் தெரி­வித்­துள்ள கருத்­துக்­கள் மிக­வும் பார­தூ­ர­மா­னவை.

தமிழ் மக்­க­ளின் உணர்­வு­க­ளுக்கு எதி­ரா­னவை. குறிப்­பாக முன்­னாள் போரா­ளி­க­ளின் எதிர்­கா­லத்­தைப் பாதிக்­கக் கூடி­யவை. ரெலோ அமைப்­பின் செய­லா­ளர் சிறி­காந்தா கூறி­யது போன்று, சாமா­னி­யர் ஒரு­வர் இத்தகைய கருத்­தைக் கூறி­யி­ ருந்­தால், பொறுத்­துக் கொள்ள முடி­யும். ஆனால், பொறுப்­புள்ள பத­வி­யில் அமர்ந்­துள்ள சி.வி.விக்­னேஸ் வரன் கூறி­யதை ஏற்­றுக் கொள்­ளவே முடி­யாது.

இது குளத்­தைக் கலக்கி மீன்­க­ளைக் பலி கொடுக்கும் செய­லுக்கு ஒப்­பா­னது. முன்­னாள் போரா­ளி­க­ளின் வாழ்க்­கை­யு­டன் விளை­யா­டு­ வ­தற்கு எவ­ருக்­குமே அரு­கதை கிடை­யாது. ஏனென்­றால் அனு­ப­விக்க வேண்­டிய துன்­பங்­க­ளை­யெல்­லாம் அனு­ப­வித்­த­வர்­கள் அவர்­கள்.

மேலும் பொலிஸ்மா அதி­ப­ரின் கூற்­றுக்கு வலுச் சேர்க்­கும் வகை­யில் வடக்கு முத­ல­மைச்­சர் கருத்து வெளி­யிட்­டதை எந்த வகை­யி­லும் நியா­யப்­ப­டுத்த முடி­யாது . சி.வி.விக்­னேஸ்­வ­ரன் இனி­யா­வது பொறுப்­பு­டன் செயற்­ப­டு­வ­தற்கு முன்­வர வேண்­டும். கடந்த காலத் தவ­று­களை அவர் மீண்­டும் விடுவா ராயின், தமிழ் மக்­கள் அவரை மன்­னிக்­கவே மாட்­டார்­கள்.

http://newuthayan.com/story/19738.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.