Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளைத் தடை செய்யுமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு அவுஸ்திரேலியா சாதகமான பதில்

Featured Replies

விடுதலைப் புலிகளை தடைசெய்யுமாறு இலங்கை அரசு விடுத்த கோரிக்கையை சாதகமாக பரிசீலிப்பதுடன் சட்டவிரோதமாக அந்நாட்டுக்குள் நுழையும் இலங்கையர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும் அவுஸ்திரேலியா உறுதியளித்துள்ளதாக அங்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று வியாழக்கிழமை `தினக்குரலுக்கு ' தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா சென்றுள்ள அமைச்சர் தலைமையிலான குழுவினர் நேற்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் டவுனரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இக்கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

புலிகளின் பயங்கரவாதச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் அவ்வமைப்பை உடனடியாக அவுஸ்திரேலியாவில் தடை செய்ய வேண்டுமென இலங்கை விடுத்த கோரிக்கையை அந்நாடு சாதகமாக பரிசீலிக்குமென அதன் வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்தார்.

தென்னிலங்கையில் 52 சதவீதமான தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில் புலிகள் வடக்கு, கிழக்குப் பகுதியில் வதியும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை ஆயுத முனையில் பணயக் கைதிகளாக வைத்திருப்பது குறித்தும் நாம் அவுஸ்திரேலியாவின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.

இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாண மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட முயற்சிகள் அதற்கு புலிகள் ஒத்துழைக்காது ஒரு தலைப்பட்சமாக பொதுமக்கள் மற்றும் படையினருக்கெதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமை பற்றியும் சுட்டிக்காட்டினோம்.

உலக நாடுகள் பலவும் புலிகளை தடை செய்துள்ள நிலையில், புலிகள் அவுஸ்திரேலியாவில் நிதி சேகரிப்பது அதன் மூலம் அவர்களின் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது குறித்தும் இவற்றுக்கு உடன் முற்றுப்புள்ளி வைப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினோம்.

புலிகளை தடை செய்வது குறித்த எமது கோரிக்கையை அவுஸ்திரேலியா சாதகமாக பரிசீலிக்குமென்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் அந்நாட்டில் வெளிவிவகார அமைச்சருடன் நடைபெற்றுள்ள கலந்துரையாடலையடுத்து ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்று கைது செய்யப்பட்டுள்ள 83 இலங்கையர்களையும் இலங்கைக்கு திருப்பியனுப்ப கோரிக்கை விடுத்தேன்.

தென்பகுதியை அண்டியுள்ள கதிர்காம கடற்கரையிலிருந்தே சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் இலங்கையர்கள் செல்வது பற்றியும் இவ்வாறானவர்களுக்கு புகலிடம் கொடுக்க அந்நாட்டிற்கு உரிமையில்லையென்றும் எம்மால் சுட்டிக் காட்டப்பட்டது.

இந்தியாவில் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் நிலையில் அங்கு செல்லாது ஏன் அவுஸ்திரேலியாவுக்கு தமிழ் மக்கள் செல்வது பற்றியும் இதன் பின்னணியில் புலிகளின் செயற்பாடுகள் காணப்படுவதுடன் சட்ட விரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு மக்களை புலிகள் அழைத்துச் செல்வதன் மூலம் அவர்கள் பெருந்தொகை பணத்தை சம்பாதிப்பது குறித்தும் அவுஸ்திரேலியாவின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.

இதற்கு பதிலளித்த அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர், சட்டவிரோதமாக இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கெதிராக" கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி வழங்கினார் என்றார்.

http://www.thinakkural.com/news/2007/3/2/i...s_page22483.htm

இனியாவது யோசிப்பார்களா படிச்ச மேதாவிகளாக தம்மை நினைக்கும் அவுஸ்திரேலிய டமிழர்

  • கருத்துக்கள உறவுகள்

'' இனியாவது யோசிப்பார்களா படிச்ச மேதாவிகளாக தம்மை நினைக்கும் அவுஸ்திரேலிய டமிழர் "

ஜயா ஈழவன் நாம் ஏன் யாருடனும் நொந்துகொள்வான்? என்னும் முயற்சி செய்வோம், எல்லோரும் இறங்குவோம் பிரச்சாரப்போராட்டத்தில் வெற்றி நிச்சயிக்கப்பட்டுவிட்டது. இதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் கொஞ்சம் பிந்தலாம் அல்லது முந்தலாம் அதுதான் நிஷம்.

ஜயா உங்களை ஒன்று கேட்கிறேன் நாங்கள் யாரை நம்பி எமது சுதந்திரப்போராட்டத்தை ஆரம்பித்தோம் இவங்களைப்பற்றி (வெளிநாடுகளை) கவலைப்படுவதிற்கு?

ஸ்ரீலங்கா அரசியல்வாதிகளை கொஞ்சம் கவனித்தீங்கள் என்றால் ஒரு உண்மை உங்களுக்கு புரியும்.

அதாவது இந்த மந்திரிமார் வெளிநாடுகளிற்கு ஏதாவது அலுவலாக போகவேனும் என்றால் இப்படியான சில முயற்சிகளிலை இறங்கத்தான் வேனும், அறிக்கைகளும் பரபரப்பாக விடத்தான் வேனும். அப்படியென்றால் தான் மகிந்த ஜயா கொஞ்சம் சந்தொஷப்படுவார், அடுத்தமுறை வெளிநாடுகளிற்கு போகிறபோது சந்தோஷகாக பயணமும் அனுப்பி வைப்பார்.

இறுதியாக என்னுமொரு விடயத்தையும் இங்கு நான் சொல்லித்தான் ஆகவேனும். கனடாவை நாம் உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டோமானால், அங்கே விடுதலைப்புலிகளை தடை செய்வதிற்கு அரசாங்கம் முயற்சியில் இறங்கியிருந்த வேளை அங்குள்ள தமிழ் மக்கள் எல்லாத்தரப்பினரும் இயன்றளவு விடுதலைப்புலிகளுக்கு சார்பாக பிரச்சாரத்தில் இறங்கியிருந்தார்கள். அங்கே என்னும் ஒரு முக்கிய விடயத்தையும் குறிப்பிட வேண்டும் அதாவது கனடிய அரசியலை நிர்ணயிக்கிற அளவிற்கு எங்க சமூகம் வளர்சியடைந்து வருவதையும் மறுக்க முடியாது. இவ்வளவு இருந்தும் நடந்தது என்ன? எங்களை தடை செய்தார்கள், அவங்களும் எங்களை தடைசெய்யவேனும் என்று நினைத்தால் தடைசெய்துதான் ஆவான்கள். அதுக்காக நாங்கள் எங்கள் பிரச்சாரப்போராட்டத்தில் தளரவே கூடாது. இதிலிருந்து ஒரு உண்மை தெரிகிறது அதாவது உலகத்திலுள்ள எந்த ஒரு நாட்டுக்குமோ எங்க மக்கள், மக்கள் மாதிரி தெரியுது இல்லை. எவ்வளவு ஆதாரத்துடன் ஸ்ரீலங்காவின் அட்டூழியங்களை இவங்களுக்கு நாம் தெளிவு படுத்தியிருந்தும் மீண்டும் மீண்டும் எங்களை அழிப்பதிற்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்துகொண்டுதான் இருக்கிறாங்கள்.

இதிலிருந்து நாம் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளவேனும். நாங்கள் நினைத்தால் இந்த தடைகள் ஒன்றும் எங்களை கட்டுப்படுத்த முடியாது என்பதை செயல்திட்டத்தில் காட்டவேனும்.

உதாரணமாக கனடாவிலை விடுதலைப்புலிகளுக்கு தடை இருக்கிறது என்பது சட்டத்தில் மட்டும் தான் என்பது உண்மை. அங்கு மாவீரர் நிகழ்வுகளோ அல்லது விடுதலை சம்பந்தப்பட்ட நிகழ்சிகள் எல்லாம் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது, அங்குள்ள மக்களும் அலை அலையாக சமூகமளித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள், நிதிப்பங்களிப்பும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதிலிருந்து நான் சொல்ல வருவது என்னவென்றால் நாங்கள் மனம் வைத்தால் மட்டும் தான் வெற்றி நிச்சயம் என்று கூறிக்கொண்டு தற்காலிகமாக விடைபெறுகிறேன்.

வெளி நாடுகளில் வாழும் தமிழர்களும் புலிகள் தடைச்சட்டங்களும் எதிர்காலத்தில் நமது உடன் நடவடிக்கைகளும், நிரந்தர நடவடிக்கைகளும் நம் இனத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.(ஏற்கனவே நான் எழுதும் விடையங்களை தொடங்கி நடத்திகொண்டு இருக்கலாம்). அடிக்குமேல் அடியடித்தால் அம்மியும் நகரும். தாரகமந்திரம்.

1. வெளி நாடுகளில் சராசரி 15வருடங்களுக்கு மேல் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள்

பெரும் பாலக குடியுரிமை பெற்று தாயகப்பற்றுடன் வாழ்வர்கள். இவர்களின் ஓட்டுரிமைசெல்வாக்கை பயன்படுத்தி அந்த நாட்டு அரசியல் வதிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி எமது இனப்பிரச்சனைகளை ஒளிப்படங்க்ளுடன் ஆதாரங்களுடன் புரியவைத்தல்.2. தமிழ் -ஆங்கில தமிழ்-டொச்சு, தமிழ்-பிரன் போன்ற நட்புரவு சங்கங்கங்களை எல்லா நாடுகளில் நகர,கிராம ரீதியில் வெளி நாட்டவர்களுக்கு தொடர்ச்சியாக புரிய வைத்தல். ( நமது கலாச்சாரங்கள், விருந்துவைத்தல்,சமூக சேவைகள் மூலம் அவர்களின் அன்பை பெற்று அவர்கள் மூலம் எமது பிரச்சனைகளை புரிய வைத்தல். இவை நெடுங்கால திட்டங்கள். நம்பிக்கை வைத்து செய்யுங்கள். வெற்றி

கிடைக்கும்.தொடரும்-------

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளி நாடுகளில் வாழும் தமிழர்களும் புலிகள் தடைச்சட்டங்களும் எதிர்காலத்தில் நமது உடன் நடவடிக்கைகளும், நிரந்தர நடவடிக்கைகளும் நம் இனத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.(ஏற்கனவே நான் எழுதும் விடையங்களை தொடங்கி நடத்திகொண்டு இருக்கலாம்). அடிக்குமேல் அடியடித்தால் அம்மியும் நகரும். தாரகமந்திரம்.

1. வெளி நாடுகளில் சராசரி 15வருடங்களுக்கு மேல் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள்

பெரும் பாலக குடியுரிமை பெற்று தாயகப்பற்றுடன் வாழ்வர்கள். இவர்களின் ஓட்டுரிமைசெல்வாக்கை பயன்படுத்தி அந்த நாட்டு அரசியல் வதிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி எமது இனப்பிரச்சனைகளை ஒளிப்படங்க்ளுடன் ஆதாரங்களுடன் புரியவைத்தல்.2. தமிழ் -ஆங்கில தமிழ்-டொச்சு, தமிழ்-பிரன் போன்ற நட்புரவு சங்கங்கங்களை எல்லா நாடுகளில் நகர,கிராம ரீதியில் வெளி நாட்டவர்களுக்கு தொடர்ச்சியாக புரிய வைத்தல். ( நமது கலாச்சாரங்கள், விருந்துவைத்தல்,சமூக சேவைகள் மூலம் அவர்களின் அன்பை பெற்று அவர்கள் மூலம் எமது பிரச்சனைகளை புரிய வைத்தல். இவை நெடுங்கால திட்டங்கள். நம்பிக்கை வைத்து செய்யுங்கள். வெற்றி

கிடைக்கும்.தொடரும்-------

உண்மைதான். நீங்கள் முன்வைத்துள்ள கருத்தை ஆதரிக்கின்றேன். தாயகத்திலிருந்து எமக்கு வருகின்ற தகவல்களும் அதைத்தான் முன்னிறுத்துகின்றன. எங்கள் பிரச்சனைகளை , ஈழத்தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் புலிகள் என்பதை, எம் மக்கள் படுகின்ற அவலங்களை, அவர்களின் உயிர்களூக்குப் பாதுகாப்பற்ற நிலைமையை சர்வதேசத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும். அவர்கள் செவி மடுக்கின்றார்களா இல்லையா என்பது இரண்டாம் பட்சம், புலம்பெயர் வாழ் நாம் செய்ய வேண்டிய தார்மீகக் கடமை இது. ! ஒன்று படுவோம் செயலாற்றுவோம்.

நன்றி.

  • தொடங்கியவர்

Valvai Mainthan

இங்கு வந்த 83 தமிழ் உறவுகளை திருப்பி அனுப்புவதுக்கு எதிராக செய்யப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தில் 50 பேர் கூட கலந்து கொள்ளவில்லை இந்த லட்சணத்தில் இங்கத்தய டமிழர் என்னத்தை கிழிக்கபோயினம் யேசுதாஸ் வந்தால் புத்து சேலை முதல் குருத்தாவரை யேசுதாஸோட இந்தியாவில் இறந்து இறக்கு மாட்டிக்கொன்டு பாடலை கேட்டு மெய்மறந்து தாம் கண்ணீர் விடுவம் ஆனால் நாட்டுக்காக ஒண்டும் செய்யமாட்டம் என்பதுதான் இங்கத்தைய டமிழரின் நிலை

KUGGOO&thamilthangai

இங்கவந்து அகதி அந்தஸ்து கோரும்போது தமது கேசில சேர்ப்பது புலி கடத்துது கொல்லுது காசு பறிக்குது எண்டு அதுக்கு பிறகு ஏக பிரதி நிதி எண்டு சொன்னால் எவன் நம்புவான். :angry: :rolleyes:

தடைசெய்தவர்களெல்லாம் கதைக்க வெளிக்கிடும் போது அவுஸ்ரேலியாவும்

தடைசெய்து விட்டுக் கதைக்க வருவார்கள்.

எதையும் தீர ஆராயமல் கதைப்பதில் தான் என்ன ஒரு இன்பம்..!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.