Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிக புத்திசாலித்தனமான கேள்வி

Featured Replies

தயா மாஸ்டருக்கு பாதுகாப்பு வழங்கிய அரசாங்கம் வெளிநாட்டு இராஜதந்திரிக்கு வழங்காதது ஏன்?

* ஐ.தே.க. எம்.பி. கயன்த கருணாதிலக கேள்வி

விடுதலைப் புலிகளின் "தயா மாஸ்டரை" கொழும்பு அப்பலோ வைத்தியசாலைக்கு கொண்டு வரும்போது பலத்த பாதுகாப்பை வழங்கிய அரசாங்கம், இந்நாட்டிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு உயர் பாதுகாப்பை வழங்காது மட்டக்களப்பிற்கு அழைத்துச் சென்றமை பிழையான செயலென குற்றம் சாட்டும் ஐ.தே.கட்சியின் எம்.பி.யும் ஊடகப் பேச்சாளருமான கயன்த கருணாதிலக இராஜதந்திரிகள் தாக்குதலுக்குள்ளான சம்பவத்திற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஐ.தே.கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே கயன்த கருணாதிலக எம்.பி.இதனைத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தை அரசாங்கம் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதென பிரசாரம் செய்து வருகிறது. இந்தச் சூழ்நிலையிலேயே வாகரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதியை வரவேற்ற குருக்கள் கொலை செய்யப்பட்டார். அத்தோடு மட்டக்களப்பு நகருக்கு விஜயத்தை மேற்கொண்ட இராஜதந்திரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருப்பதாக பிரசாரம் செய்யும் "மகிந்த ராஜபக்ஷ சகோதர கூட்டு நிறுவனம்" இத் தாக்குதல்கள் எவ்வாறு இடம்பெற்றன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

புலிகளின் தயா மாஸ்டரை கொழும்புக்கு கொண்டு வரும் போது உயர் பாதுகாப்பை வழங்கிய அரசாங்கத்தால் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு அவ்வாறான பாதுகாப்பை வழங்க முடியாமல் போனது ஏன்?

படையினர் தமது உயிரை பணயம் வைத்து நடத்தும் யுத்தத்தை அரசாங்கத்தின் இயலாமையையும் ஊழல் மோசடிகளையும் மறைத்துக் கொள்வதற்காக பயன்படுத்துவது மிகவும் கீழ்த்தரமான அரசியலாகும்.

முப்படையினரும் நாட்டுக்காக தமது சேவையை சிறந்த முறையில் முன்னெடுத்து வருகின்றனர். அவர்களது சேவையை ஐ.தே.கட்சி பாராட்டுகிறது. படையினரின் வெற்றிகளை பயன்படுத்தி தமது அரசியல் செல்வாக்கை உயர்த்த முயன்றவர்களுக்கு ஏற்பட்ட கதியை நாம் கண்டுள்ளோம்.

1992 இல் ஜனாதிபதி பிரேமதாஸ இராணுவ உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய கிழக்கு மாகாணத்தை அரச கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். ஜனாதிபதி பிரேமதாஸவின் மறைவின் பின்னர் ஜனாதிபதி டி.பி.விஜேதுங்கவின் அரசியல் தலைமைத்துவத்தை ரணில் விக்கிரமசிங்கவே வழங்கினார்.

ஐ.தே.கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே கிழக்கு மாகாணம் கைப்பற்றப்பட்டு உள்ளூராட்சி சபை தேர்தல்களும் நடத்தப்பட்டன.அத்தோடு புதிதாக 3 இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன. ஆனால் இது தொடர்பில் மார்தட்டிக் கொள்ளவில்லை அதனை அரசியலுக்கு பயன்படுத்தவில்லை.

ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க காலத்தில் யாழ்ப்பாணத்தை கைப்பற்றப் போய் கிழக்கை இழந்தனர்.

இன்று இடம்பெறுவதும் அன்றாடம் தமது அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்காக பதில் தாக்குதல் நடத்தப்படுவதேயாகும். அடுத்த தேர்தலை எதிர்பார்த்து செயற்படாது எதிர்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டுமென நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.

எமக்கு இந் நாடு மட்டுமே உள்ளது. பாதுகாப்புச் செயலாளரைப் போன்று எந்தவொரு நேரத்திலும் நாட்டிலிருந்து வெளியேறி அமெரிக்கா சென்று வாழ்வதற்கான பிரஜாவுரிமை மக்களுக்கு கிடையாதென்றும் கயன்த கருணாதிலக எம்.பி.தெரிவித்தார்.

http://www.thinakkural.com/news/2007/3/3/i...s_page22511.htm

இந்தக்கேள்வியில் என்ன புத்திசாலித்தனம் இருக்கிறது?தினக்குரலுக்கு கொஞ்சக் காலமாக புத்தி பேதலித்துவிட்டது!

அது சரி ஷெல் வந்து விழுகிறதுக்கு என்ன பாதுகாப்பை செய்யலாம் எண்டுறார்கள்....( அங்கை கூட்டிக்கொண்டு போகாமல் இருக்கிறதை தவிர) மேலாலை வந்து விழுகிற ஷெல்லை தாங்கிப்பிடிக்கிற வலைகிலை ஏதாவது கொண்டு போய் இருக்க வேணுமோ தெரிய இல்லை...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.