Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூட்டமைப்பை விமர்சிக்க சுரேஷுக்குத் தகுதியுண்டா?

Featured Replies

கூட்டமைப்பை விமர்சிக்க சுரேஷுக்குத் தகுதியுண்டா?

சாடுகிறார் சரவணபவன் எம்.பி.

 
கூட்டமைப்பை விமர்சிக்க சுரேஷுக்குத் தகுதியுண்டா?
 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் அதன் தலைமைகளை விமர்சிப்பது ஏற்புடையதல்ல. அவ்வாறு விமர்சிக்க அவருக்குத் தகுதியிருக்கிறதா? தலைமைத்துவப் பண்பு இல்லாதவர்கள் எல்லாம் தலைவராக விரும்புகின்றனர்.

அதுதான் வேடிக்கையாக இருக்கிறது. இவற்றுக்குக் காலம் பதில் சொல்லும்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

மறைந்த தமிழ்த் தலைவர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான வி.தர்மலிங்கம் மு.ஆலாலசுந்தரம் ஆகியோரின் 32 ஆவது நினைவு தினம் நேற்று தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:

புதிய அரசமைபில் என்ன இருக்கின்றது என்று ஒன்றுமே தெரியாமல் விசமத்தனமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

அரசமைப்பில் சமஸ்டி என்ற சொல் இல்லை என்பதற்காக அதிகாரங்கள் பகிரப்படவில்லை என்றில்லை. சமஸ்டியை வேறு வடிவில் அரசியலமைப்புக் கொண்டிருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். சமஸ்டி என்ற சொல் இல்லாவிட்டாலும் அதிகாரங்கள் பரவலாக்கம் செய்யப்படும் என்றே கூறப்பட்டு வருகின்றமையை அனைவரும் அறிவார்கள்.

ஆகவே அரசமைப்பில் என்ன விடயங்கள் இருக்கின்றன என்பதை முழுமையாக அறியும்வரை பொறுமையாக இருக்க வேண்டும். அரசமைப்பு அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட்ட பின்னரே நிறைவேற்றப்படவுள்ளது. அப்போது எவரும் அதனை விமர்சிக்கலாம்.

அரசமைப்பில் என்ன அம்சங்கள் இருக்கின்றன என்றே தெரியாத சிலர் எதிர்வரும் 5 ஆம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் கருத்தாடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். அதற்கு எமக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அங்கு ஒரு தரப்பு கூட்டமைப்பை வசைபாடும். மற்றைய தரப்பு கூட்டமைப்பின் செயற்பாட்டை ஆதரித்துக் கருத்தை முன்வைக்கும். உருப்படியாக எதுவும் நடைபெற◌ாது. ஆனால் மக்கள் தெளிவாக உள்ளனர் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எமது இனத்தின் விடுதலைக்காக ஆரம்பகாலத்தில் சாத்வீக போராட்டத்தை எமது மூத்த தலைவர்கள் முன்னெடுத்தனர். அதன் பின்னர் ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தற்போது இராஜதந்திரப் போராட்டம் இடம்பெறுகிறது. இந்த இராஜதந்திரப் போராட்டத்தால் தென்னிலங்கையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அரசமைப்புத் தொடர்பில் பன்னாடுகள் கவனஞ்செலுத்தி வருகின்றன. இந்தநிலையில் நாம் பன்னாடுகளை எதிர்த்தால் எந்தக் காலத்திலும் எமக்கு விடிவு காலம் பிறக்காது.

தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் வசைபாடுபவர்கள் பன்னாடுகளின் அங்கீகாரத்தைப் பெறாது, தாங்கள் கூறி வருவதை யாருடைய தயவில் அடையப் போகின்றார்கள்?

நாம் எதற்காகப் போராடினோமோ அது எமக்கு வேறு வடிவில் வரும்போது நாம் பொறுமையாக இருப்பது அவசியம்.

நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனும் உரையாற்றினார்.

வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் உறுப்பினர்கள் எனப் பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

http://newuthayan.com/story/25221.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.