Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைத்துலக சமூகத்திற்கு புலிகளின் செய்தி

Featured Replies

அனைத்துலக சமூகத்திற்கு புலிகளின் செய்தி

செவ்வாய் 06-03-2007 02:17 மணி தமிழீழம் [மயூரன்]

'சிறீலங்கா அரசு அனைத்துலக ஆதரவுடன் உருவான போர்நிறுத்த உடன்படிக்கையை அப்பட்டமாக மீறி தமிழர்தாயகம் மீது ஆக்கிரமிப்பை கட்டவிழ்த்து விட்டு தமிழர்களை அவலத்தில் தள்ளியுள்ள இந்நிலையில் சிறீலங்கா அரசை கண்டிக்க தவறியுள்ள அனைத்துலக சமூகம், தமிழர்களளின் தாயகம் மீதான சிறீலங்கா அரசின் ஆக்கிரமிப்பை முறியடிக்க விடுதலைப்புலிகள் சமரை தொடங்கும் போதும் கண்டிக்க கூடாது' இதுவே அனைத்துலக சமூகத்திற்கான எங்களின் செய்தி என்று தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் நோர்வே தூதுவரிடம் தெரிவித்துள்ளதாக விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்தின் இணையத்தள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pathivu

இராணுவ முன்னெடுப்பை தடுத்து நிறுத்துவதில் சர்வதேச சமூகம் தோல்வி கண்டால் மோசமான விளைவு- நோர்வே தூதுவரை சந்தித்த பின்னர் தமிழ்ச்செல்வன்

இலங்கை அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளை தடுத்துநிறுத்துவதில் சர்வதேச சமூகம் தோல்விகண்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கார் நேற்று திங்கட்கிழமை கிளிநொச்சிக்கு சென்று விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளருக்கு அளித்த பேட்டியில், மனிதப் பேரவலம் அதிகரித்துள்ளநிலையில் இராணுவ, பொருளாதார உதவிகளை இலங்கைக்கு வழங்குவதை நிறுத்தி அரசாங்கத்துக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவில்லையென்ற தமிழ் மக்களின் கவலையை நோர்வேத் தூதுவரிடம் சுட்டிக்காட்டியதாக தமிழ்ச்செல்வன் தெரிவித்திருக்கிறார்.

அவர் அளித்த பேட்டி வருமாறு;

கேள்வி: இன்றைய சந்திப்பு தொடர்பாக?

பதில்: தற்போதைய நிலைமைகள் தொடர்பாக இன்று கலந்துரையாடினோம். முக்கியமாக போர் நிறுத்த உடன்பாட்டை சீர்குலைத்து ஸ்ரீலங்காப் படை எமது தாயகத்தின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள வன்முறைகள், ஆக்கிரமிப்பு முயற்சிகள், படுகொலைகள், ஆட்கடத்தல்கள், குண்டு வீச்சுகள், மனித உரிமை மீறல்கள் பற்றி சந்திப்பில் விரிவாக விளக்கினோம். இவ்விடயத்தில் சர்வதேச சமூகம் வன்முறைகளை நிறுத்தி அமைதி முயற்சிகளை முன்னெடுக்கும் படி கோரிவரும் நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் யுத்த வெறிப் போக்கும், மனித படுகொலைகள் தொடர்பாகவும் சர்வதேச சமூகம் ஒரு மென்மையான போக்கை கடைப்பிடிக்கின்ற நிலைப்பாடு எதிர்காலத்தில் அமைதி முயற்சிகளை முன்னெடுக்கின்ற சாத்தியப்பாடுகளை சீர்குலைக்கும் என்ற ஆபத்தான சூழலையும் சந்திப்பில் சுட்டிக்காட்டினோம்.

சர்வதேச சமூகம் தற்போது கடைப்பிடித்து வரும் அணுகுமுறை ஸ்ரீலங்கா அரசாங்கத்தை ஒரு வழிக்குக் கொண்டு வரப்போவதில்லை. இது இலங்கைத் தீவை இரத்தக்களரி நிலைக்குத்தான் கொண்டு வரப்போகின்றது. யுத்த நிறுத்த உடன்பாட்டை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

அண்மையில் பல நாட்டுத் தூதுவர்கள் அடங்கிய குழுவை மட்டக்களப்புக்கு அழைத்து வந்தபோது ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பாக எமது கவலையையும் எமது நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தியிருந்தோம்.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தாலேயோ, ஸ்ரீலங்கா படைத்தரப்பினாலேயோ, திட்டமிட்டு செயற்படுத்தப்பட்ட நடவடிக்கையாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டினோம். எமது விசாரணைக் குழுவின் அறிக்கையின் படி ஸ்ரீலங்கா அரசாங்கம் திட்டமிட்ட ரீதியில் சர்வதேச தூதுவர்களை, இராஜதந்திரிகளை ஆபத்தான சூழ்நிலைக்குள் சிக்கவைத்து பேரழிவை ஏற்படுத்தி சர்வதேச மட்டத்தில் தமிழர்களுடைய போராட்ட முன்னெடுப்புகள் தொடர்பாகவும் விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் ஒரு திட்டமிட்ட ரீதியில் ஷ்ரீலங்கா படைத்தரப்பால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான விடயங்களை இன்றைய சந்திப்பில் ஆதாரங்களுடன் விளக்கினோம். தூதுவர்கள் மட்டக்களப்புக்கு பயணம் செய்வது தொடர்பான செய்தியை மனிதாபிமான அமைப்புகள் ஊடாகவோ, ஐ.நா. அமைப்புகள் ஊடாகவோ எமக்கு எந்த தகவல்களையும் தரவில்லை. தகவல்களை எமக்கு தெரியப்படுத்தாமல் தூதுவர்கள் வந்து இறங்கும் இடத்திலிருந்து தொடர்ச்சியாக காலையில் தாக்குதலை நடத்திவிட்டு பின்னர் தூதுவர்களை அவ்விடத்தில் வானூர்திகள் மூலம் தரையிறக்குவது என்பது பொருத்தமற்ற விடயம். தூதுவர்களை ஆபத்தான சூழலுக்குள் கொண்டு செல்வதாகும். அது ஒரு சதி நடவடிக்கை என்பதையும் சந்திப்பில் விளக்கினோம்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக எங்களுடைய தாயகப் பிரதேசங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை. மனிதாபிமான பணியாளர்கள், சர்வதேச இராஜதந்திரிகள், தூதுவர்கள், ஊடகவியலாளர்கள் எமது பகுதிக்கு வந்து செல்கின்றார்கள். பணியாற்றுகின்றார்கள். மட்டக்களப்பு சம்பவம் ஸ்ரீலங்கா படைத்தரப்பால் திட்டமிட்ட சதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை நோர்வே தூதுவர் ஆகிய தாங்கள் ஏனைய சர்வதேச தூதுவர்களுக்கு விளக்கும் படி வேண்டியிருக்கின்றோம்.

முக்கியமாக எமது தாயகப் பகுதிகளை கூடுதலாக ஆக்கிரமிக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் முயன்று கொண்டிருக்கின்றது. தென் தமிழீழத்தில் சம்பூர், வாகரை போன்ற பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டு தென் தமிழீழத்தில் பெரியளவில் படை நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கா அரசு ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.