Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புரிந்துனர்வு ஒப்பந்ததை இரத்துச் செய்யக் கோரி தாக்குதல் செய்த மனு மேல் நீதி மன்றத்தால் நிராகரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புரிந்துனர்வு ஒப்பந்ததை இரத்துச் செய்யக் கோரி தாக்குதல் செய்த மனு மேல் நீதி மன்றத்தால் நிராகரிப்பு

சிறீலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யக் கோரி ஜாதிக ஹெல உறுமயஇ மக்கள் விடுதலை முன்னனி உட்பட மூன்று கட்சிகள் தாக்கல் செய்த மனுவை மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது .

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பலர் பிரிதி வாதிகளாக இம் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இரு தரப்பும் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசியலமைப்புக்கு முரணானது ஒன்றென இம்மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தம

வேல வெட்டியில்லாத வீணாப் போனவங்க

சுனாமி அனர்த்தத்தின்போது செய்யப்பட்ட ஒப்பந்தம்போல் அல்ல இது. இந்த ஒப்பந்தத்தால் தமிழருக்கு எந்த லாபமும் இல்லை. எனவே இதை இரத்துச் செய்து சர்வதேசத்தின் வெறுப்பைப் பெற்றுக் கொள்ளுள சிங்களவர் முற்பட மாட்டார்கள்.

வடக்கு கிழக்கை பிரிப்பதற்க்கு போடப்பட்ட மணுவை ஏற்று வடக்கையும் கிழக்கையும் பிரித்தவங்கள் இப்போது சமாதான ஒப்பந்தத்தை மட்டும் ஏன் நீதி மன்றம் ஏற்க மறுத்தது??????????????????????

காரணம் வடக்கு கிழக்கின் இணைப்பில் தமிழர்க்கு நன்மை இருக்கு என்று நினைத்ததாள்!!!!!!!!!!!! ஆனால் சமாதான ஒப்பந்தத்தில் தமிழர்க்கு ஒருவிதமான நன்மையும் கிடையாது தீமைதான் கடசி மிஞ்சினது அதனால் சமாதான ஒப்பந்தத்தை வைத்தே புலிகளையும் தமிழர்களையும் ஓரம் கட்டலாம் என்ற கபடக் குணத்தில் தான்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தமிழர் தரப்பு பலமாக இருப்பதாக அவர்கள் எண்ணும் வரை உடன்படிக்கை கிழிக்கப்படாது. உடன்படிக்கையை பெயரளவில் வைத்துக் கொண்டு தமிழர்தரப்பை எல்லா வழிகளிலும் பலவீனப்படுத்துவது தான் சிங்கள தரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேசச் சக்திகள் திட்டம் ஆரம்பத்தில் இருந்தே.

ரணில் மிகவும் தூரநோக்கு சிந்தனையோடு அமைதியாக கட்சி அரசியல், சுயலாபங்களிற்கு அப்பால் சிறீலங்காவின் ஒருமைப்பாட்டிற்காக பொளத்த பேரினவாதத்திற்காக மிகவும் சாதுரியமாக நடக்கக் கூடியவர்;. மகிந்தவிற்கும் இலக்கு விளங்கியிருக்கு ஆனால் போகும் வழியில் கொஞ்சம் அட்டகாசம் பண்ணி ஆரவாரம் பண்ணி வேறு காரியங்களை சாதித்துக் கொண்டு போகலாம் என்று நம்புகிறார் விரும்புகிறார்.

அந்த வகையில் ரணில் வந்து பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகளிற்கும் மிகவும் வசதியானவர் பொருத்தமானவர். எது முக்கியமோ அவற்றில் மாத்திரம் முழுக் கவனத்தையும் கொண்டு இயங்குபவர். மகிந்த சங்கடமானவர் ஆனால் முற்றிலும் பயனற்றவர் அல்ல என்று நிரூபித்துக் கொண்டு வாறார். மகிந்த காடைத்தனமாகவும் சர்வதேச நுணுக்கங்களை உள்வாங்காது அவ்வப் போது நடந்து கொண்டாலும் பிழைகளை திருத்திக் கொள்ளும் தன்மை தெரிகிறது. கிட்ட முட்ட பிரேமதாசா மாதிரி வேகமாக வழர்ந்து வந்து கொண்டிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

போர் நிறுத்த உடன்பாடு சட்டப்படியானது: மேன்முறையீட்டு நீதிமன்றம்

[செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2007, 19:26 ஈழம்] [க.திருக்குமார்]

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாடு சட்டபூர்வமானது எனவும், அது சிறிலங்காவின் அரசியல் யாப்பை மீறவில்லை எனவும் சிறிலங்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் செய்து கொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டின் மீது இடைக்கால தடையை கொண்டுவர வேண்டும் என இரு சிங்கள தேசியக் கட்சிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிபதி எஸ்.சிறீஸ்கந்தராஜா நிராகரித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்தில் கூட்டுவைத்துள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), ஜாதிக கெல உறுமய போன்ற கட்சிகளே இந்த மனுவை தாக்கல் செய்திருந்தன.

சிறிலங்கா அரசாங்கம், விடுதலைப் புலிகளுடன் ஒரு உடன்பாட்டுக்கு வர முடியாது என்ற வாதத்தையும் சிறீஸ்கந்தராஜா நிராகரித்துள்ளார்.

ஆனால் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவினால் செய்து கொள்ளப்பட்ட ஆழிப்பேரலை பேரனர்த்த புனரமைப்பு கட்டுமானப் பணிகளுக்கான பொதுக்கட்டமைப்பை உயர் நீதிமன்றம் தடைசெய்திருந்தது.

எனினும் விடுதலைப் புலிகளுடன் உடன்பாடுகள் ஏற்படுத்தப்படுவது சட்டபூர்வமற்றது என உயர் நீதிமன்றம் குறிப்பிடவில்லை. ஆகவே போர் நிறுத்த உடன்பாடு சட்டபூர்வமானது எனவும் சிறீஸ்கந்தராஜா தெரிவித்தார்.

போர் நிறுத்த உடன்பாடு போன்ற அரசாங்கத்தின் கொள்கைகளில் தலையிடும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

பிபிசியின் றொனால்ட் பூர்க்கிற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் போர்நிறுத்த உடன்பாடு ஒரு தவறான நடவடிக்கை என அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முன்னர் தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீதியாளர் சிறீஸ்கந்தராஜா அவர்களே, நீங்கள் ஓய்வில் செல்லும் நாளை பிரதம நீதியரசர் எண்ணத் தொடங்கியிருப்பார். போவதற்கு முன் மேலும் நீதியான தீர்ப்புக்களை வழங்கிவிட்டு ஓய்வெடுப்பீர்கள் என நம்புகிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.