Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்டி மன்னன் ஸ்ரீராஜசிங்கன் போன்று ஜனாதிபதி ராஜபக்‌ஷ செயற்படுவதாக விமல் வீரவன்ச கடும் குற்றச்சாட்டு

Featured Replies

-முத்துசாமிகளுக்கு இடமளிக்க முடியாது என்கிறார்

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் 1815 இல் கண்டி இராச்சியத்தை காட்டிக் கொடுத்த போது தனது எதிராளிகள் அனைவருடனும் மோதல்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். அதேபோல், இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் தனது எதிராளிகள் அனைவருடனும் மோதல்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இந்த நிலைமை நாட்டை பிரிக்க முயலும் சர்வதேச பிரிவினைவாத சக்திகளுக்கு சாதகமாக அமைந்து விட்டதென்கிறார் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற "அன்று கண்டி இராச்சியம் இன்று தாய் நாடு" என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய போதே விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்தார்.

கண்டி இராச்சியம் 1815 இல் காட்டிக் கொடுக்கப்பட்டபோது நாயக்கர் வம்ச அரசரே ஆட்சியதிகாரத்தில் இருந்தார். ஆனால், இன்று நாட்டின் ஆட்சியதிகாரத்தை ஏஞ்ஜலோ செக்ஜன் கலாசாரத்தை தனதாக்கிக் கொண்ட மெதமுலன மகிந்த ராஜபக்ஷவே ஆட்சி செய்கின்றார். எனவே, இவரையும் சர்வதேச பிரிவினைவாதச் சக்திகள் தம்வசம் இழுத்துக் கொள்வதென்பது அவ்வளவு பெரிய விடயமல்ல.

எதிரிகள் அனைவருடனும் ஒரே நேரத்தில் ஜனாதிபதி மோதல்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளதால் வெளிநாட்டு பிரிவினைவாத சக்திகளின் கை ஓங்கியுள்ளது. அது ஜனாதிபதியின் கையிலுள்ள அதிகாரத்தை பிரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

அன்று கடற்கரைப் பிரதேசங்களை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் இன்று நிலப் பிரதேசங்களுக்குள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதன் மூலம் பிரிவினைவாதத்திற்கான முனைப்புகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நவீன யுகத்தின் பிரிவினை வாதிகள் பல்வேறு நாட்டு சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு அந்த நாடுகளின் வளங்களை சூறையாட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யுத்த நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை தயாரித்தவர்கள் நோர்வேக்காரர்கள். இன்று அதற்கு 5 வருடம் பூர்த்தியான பின் தமக்கு தனியான இராணுவம், நீதிமன்றங்கள், சிவில் நிர்வாகம், மக்கள் இருக்கின்றனரென விடுதலைப் புலிகள் உத்தியோபூர்வ அறிக்கைகளை வெளியிடுகின்றனர். ஆனால், நோர்வே இவற்றை நிராகரிக்காது மௌனமாகவுள்ளது.

மட்டக்களப்பில் தாக்குதலை மேற்கொண்டவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் பட வேண்டுமென்கிறார்கள். இரண்டு தரப்பும் இணைந்து தாக்குதலை நடத்தியது போலுள்ளது இக் கருத்து. இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது தமது ஆக்கிரமிப்பிற்கு நியாயம் கற்பிப்பதற்கே ஆகும்.

வரலாற்றுக் காலங்களைப் போல் இன்றும் எமது நாட்டுப் பிரச்சினைக்குள் தலையை நுழைத்துக் கொள்வதற்காக மனித உரிமை மீறல்களை கையிலெடுத்துள்ளனர். எமது மீறல்கள் தொடர்பாக ஆராய முனையும் ஐ.நா. சபை அண்மைக்காலமாக பாரிய மீறல்களை மேற்கொண்டு வருகிறது.

ஈராக்கை ஆக்கிரமிப்பதற்காக அமெரிக்கா பயன்படுத்தியது ஆயுதமென்ற வசனத்தையே ஆகும். எம்மீது அவ்வாறான குற்றச்சாட்டை சுமத்த முடியாததால் மக்கள் கொலைகள் அதிகரிப்பு என்ற வசனத்தை பயன்படுத்தி கொண்டுள்ளனர்.

அன்று மன்னன் ராஜசிங்கனுக்கு தனது எதிரிகள் யார், நண்பர்கள் யாரென்பதை தீர்மானித்துக் கொள்ள முடியவில்லை. இன்றும் அதே நிலைமை உருவாகியுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு தான் மொல்லிகொடவாக மாறுவதா அல்லது எஹெல்லபொலவாக மாறுவதா என்ற இரண்டிலொன்றை தெரிவு செய்யும் காலம் வந்துவிட்டது. இந்த நிலையில் வட பகுதியிலிருந்து தென் பகுதிவரை கொலைகள் இடம்பெறுகிறதெனக் கூறுகின்றார்.

தற்போதைய நிலைக்கேற்ப தன்னை தயார்படுத்திக் கொள்ளாத நவீன ராஜசிங்கன் இருட்டில் தடுமாறுகிறார். இது எதிர் சக்திகளுக்கு முன்னேறுவதற்கு வழிவகுத்துள்ளது.

எமது நாட்டின் எதிர்காலத்தை முத்துசாமிகள் தீர்மானிக்க இடமளிக்க முடியாது. அவ்வாறு இடம் பெறுமானால், அதைவிட முட்டாள் தனம் கிடையாதென்றும் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்

http://www.thinakkural.com/news/2007/3/6/i...s_page22726.htm

இதை கேட்டு அழுவதா சிரிப்பதா தமிழ் மன்னனான ராஜசிங்கனை காட்டி கொடுத்தது சிங்கள பிரதானிகள்.முழு நாட்டையும் ஆங்கிலேயரிடம் சொந்த நலனுக்காய் அடகு வைத்தது சிங்கல பிரதானிகள்.எல்லாம் நடக்கட்டும் நாள் போக போக தெரியும் யார் எல்லாளன் யார் பொட்டைகைமுணு சொரி சொறி துட்டகைமுணு என

துட்டகைமுனு இனி சிங்களவருக்கு கெட்டகைமுனு ஆகப் போகிறாரா ?

வீரவன்ச துட்டகெமுனுவாகப் பார்க்கிறார். ஆனாலொன்று இவர்கள் யாரானால்தானென்ன?

இப்போது எல்லாளன் இல்லையே. தம்பி கரிகாலன் அல்லவோ ஆட்சியிலுள்ளான்.

வீரவன்ச துட்டகெமுனுவாகப் பார்க்கிறார். ஆனாலொன்று இவர்கள் யாரானால்தானென்ன?

இப்போது எல்லாளன் இல்லையே. தம்பி கரிகாலன் அல்லவோ ஆட்சியிலுள்ளான்.

எல்லாலனிடம் 44 சிறைப் பட்டுகொண்டு இருந்ததை மறந்துவிட்டார்களாக்கும் :angry: :angry: :angry: இந்த கேவலம் கெட்டவர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.