Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமானப் பயணமும் புவி வெப்பமடைதலும்

Featured Replies

விமானப் பயணமும் புவி வெப்பமடைதலும்

p1-e50cf7d5dcefcc3a43cdb374380f11323c1be4ac.jpg

 

உலகளாவிய ரீதியில் புவி வெப்பமடைதலால் பல்வேறுபட்ட பிரச்சினைகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம். அந்தவகையில், கடந்த சில தசாப்தங்களில் புவி வெப்பமடைவதால் விமானப்பயணங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மிகவும் வெப்பான காலப்பகுதிகளில், முழுமையான எரிபொருள் நிரப்பப்பட்ட விமானங்களில் 10வீதம் தொடக்கம் 30 வீதமான விமானங்கள், எரிபொருள், பொருட்கள் குறித்த எண்ணிக்கையான பயணிகளை அப்புறப்படுத்திவிட்டே பயணத்தை ஆரம்பிக்க வேண்டியிருக்கின்றது. இல்லாவிடின் அந்த வெப்பமான காலநிலை தணியும் வரை விமானங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

ஆகவே, இந்த ஆய்வின் மூலம் இவ்வாறு விமானங்களில் நிரப்பப்படவேண்டிய எரிபொருளின் அளவு, சரக்குகள், பயணிகள் எண்ணிக்கைக்கு வரையறையினை புதிதாக செய்வது தேவையில்லாத செலவை ஏற்படுத்துவதும் புவி வெப்பமடைதல் விமானத்துறை சார்ந்த விடயங்களில் தாக்கம் செலுத்தும் என்பதும் இவ் ஆய்வின் மூலம் தெரியவருவதாக பிரபல எழுத்தாளரும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில், முதுமாணி மாணவருமான எத்தன் கொபெல் தெரிவித்துள்ளார்.

வளியில் காணப்படும் வெப்பம், வளியின் அடர்த்தியில் தாக்கம் செலுத்தி காற்றின் அடர்த்தியை குறைக்கின்றது. ஆகவே, விமானம் புறப்படுவதற்கு ஓடு பாதையில் தேவையான வேகத்தில் சென்றாலும் அந்த விமானத்தை மேலெழுப்புவதற்கு, விமான இறகுக்கு தேவைப்படும் சக்தி குறைகின்றது. இதில் விமானத்தின் மொடல், ஒரு பாதையின் நீளம், உள்ளிட்ட பல காரணிகள் தங்கியுள்ளன. ஆகவே வெப்பமான காற்று அதிகம் காணப்படும் போது, விமானங்கள் பாதுகாப்பாக மெலெழும்பி பறக்க முடியாமற்போகின்றது. இதனால் விமானத்திலுள்ள பாரம் குறைக்கப்படவேண்டும் அல்லது தாமதமாக புறப்பட வேண்டும் அல்லது விமானப்பயணம் இரத்துச் செய்யப்பட வேண்டும். 1980 களிலிருந்து புவியின் வெப்பம் கிட்டத்தட்ட ஒரு டிகிரி சென்டிகிரேட் அதாவது (1.8 பரனைட்) ஆல் அதிகரித்துள்ளது. ஆகவே, இது ஒருவித தாக்கத்தை பல துறைகளில் பதிவு செய்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் மாத்திரம் அமெரிக்கன் எயார்லைன்ஸ், பீனிக்ஸ், அரிசோனா போன்ற இடங்களுக்கு செல்லவேண்டிய விமானங்கள் தவிர 40 விமானப் பயணங்களை இரத்துச் செய்ய வேண்டியிருந்தது . உலகளாவிய ரீதியில் வெப்பமயமானது 2100 ஆம் ஆண்டுகளில் 3 டிகிரி சென்டிகிரேட் (5.4 டிகிரி பரன்ஹைட்) ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆகவே, இதனால் வெப்ப அலைகளின் வீரியம் அதிகமாகக் காணப்படுவதுடன் இது பல்வேறு துறைசார் பிரச்சினைகளையும் எழுப்பக்கூடும். உலகளாவிய ரீதியில் விமான நிலையங்களில் 2080 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் வெப்பமானது 4 – 8 டிகிரி சென்டிகிரேட்டாக (7.2 தொடக்கம் 14.5 பரன்ஹைட்) அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, ஆய்வுகளின் மூலம் உறுதியாகியுள்ளது. ஆகவே, இது எதிர்காலத்தில் மேலும் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.

இது குறித்துப் பிரபல ஆய்வாளர் ரெட்லி ஹோர்ட்டன் கருத்துத் தெரிவிக்கையில், “உலகளாவிய செயற்பாடுகளுடன் விமான வழிப்பயணங்கள் பின்னிப்பிணைந்துள்ளன. பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளுடன் விமானத்துறை தொடர்புகொண்டுள்ளது. பல ஆய்வுகள் விமானத்துறை எவ்வாறு பூகோள வெப்பமயமாதலுக்கு பங்களிப்புச் செய்கின்றது என்பதையே எடுத்துக்காட்டுகின்றன. ஏனென்றால் விமானங்கள் 2 % வீதம் பச்சை வீட்டு வாயுவை வெளியிடுகின்றன. ஆனால், குறிப்பிட்ட சில ஆய்வுகளே வெப்பமயமாதலால் வான்வழிப்பயணங்கள் எவ்வாறான சவால்களுக்கு முகங்கொடுக்கின்றன என்பதை விளக்குகின்றன . அதுமட்டுமன்றி, எதிர்காற்று விமானப் பயணத்தின் நேரத்தை விரயமாக்குகின்றது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. மேலும், அதிகரிக்கும் கடல் மட்டம் விமான நிலையங்களை சதுப்பு நிலையங்களாக மாற்றும் அபாயத்தைக்கூட ஏற்படுத்தியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கணிப்பின் பிரகாரம் Boeing 737 – 800 என்ற விமானம் பீனிக்ஸ், டென்வர் ஆகியவற்றின் விமான நிலையங்களிலும், நியூயோர்க்கின் லாகார்டியா மற்றும் வொஷிங்டனின் ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் 4 தடவைகள் பிரயாண புறப்படுதலில் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் எனத் தெரிவித்தது. இத்தகவல் ஐக்கிய அமெரிக்காவில் சுறுசுறுப்பாக இயங்கும் 15 விமான நிலையங்கள் மற்றும் ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆகிய விமான நிலையங்களில் பதற்றத்தை ஏற்படுத்தி விட்டன.

ஆகவே, மிகவும் வெப்பமான காலப்பகுதிகளில், விமானத்தில் காணப்படவேண்டிய எரிபொருள், பயணிகள், பொதிகளின் நிறைகளில் 4 சதவீதத்தை குறைக்க வேண்டும் என மதிப்பிடப்பட்டு வருகின்றது.

ஆனால் விமானிகள் பயணத்தை பொறுத்தவரை கிட்டத்தட்ட 160 ஆசனங்கள் கொண்ட விமானத்தில் 4சதவீத பயணிகள் என்பது 12 அல்லது 13 பயணிகளாகும். ஆனால் இது பாரிய செலவை ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கின்றது.

ஆனால், சரக்கு விமானங்கள் இதனால் அதிகம் சிரமத்தை எதிர்கொள்கின்றன. குறிப்பாக, லாகார்டியன்ஸ் விமான நிலையத்தில் காணப்படும் அதிக வெப்பம் மற்றும் குறுகிய ஒரு பாதை போன்ற காரணங்களால், மிகவும் சூடான காலப்பகுதி நிலவும் நாட்களில் Boeing 737 – 800 விமானங்கள் தாம் வழமையாக ஏற்றும் பொதிகளில் வெறும் பாதி நிறையை ஏற்றிக்கொண்டே பயணிக்க வேண்டி இருக்கின்றது. அதேபோன்று டுபாய், சவூதி அரேபி யாவின் விமான நிலையங்களில் ஓடு பாதை நீளமாக காணப்பட்டாலும் வளியின் வெப்பமும் அதிகமாகவே காணப்படுகின்றது. ஆகவே இந்த அதிக வெப்பநிலையை தாக்குபிடித்து மேலெழும் விமானங்களை புதிய தொழில்நுட்பங்கள், பகுதிகள் மூலம் தயாரிக்கவேண்டுமென்றாலும் அதற்கு ஏற்படும் செலவு அதிகம். அத்துடன் விமான நிலையத்தின் ஓடு பாதையை நீளமாக்கி இதற்கு தீர்வுகாணவேண்டுமானால், அது நகர்புறங்களில் காணப்படும் விமானநிலையங்களுக்கு சாத்தியமாகாது.

ஆகவே எப்படியும் இந்த சவாலை ஈடுசெய்வதற்கு ஏற்படும் செலவு அதிகமே!

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/maharantham/2017-10-08#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.