Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சோமாலியாவில் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் 230 பேர் பலி

Featured Replies

சோமாலியாவில் லொறி குண்டுத் தாக்குதல்; முப்பது பேர் பலி!

 

 

சோமாலியா தலைநகர் மொகாதிஷுவில் சற்று முன் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் சுமார் முப்பது பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14_Mogashishu1.jpg

ஹோட்டல் ஒன்றின் முற்புறம், முழுவதும் வெடிகுண்டுகளால் நிரப்பப்பட்ட லொறியொன்று வெடிக்கச் செய்யப்பட்டே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்டது முதல் சிறிது நேரத்துக்கு அப்பகுதியில் இருந்த வாகனங்கள், கட்டடங்கள் என்பனவற்றில் தீ பரவியதாகவும், கடும் முயற்சியின் பின் அவை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, மதீனாவில் நடத்தப்பட்ட மற்றொரு குண்டுத் தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர்.

இத்தாக்குதல்கள் யாரால் நடத்தப்பட்டது என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. எனினும், இங்கு அல் கைதா மற்றும் அல் ஷாபாப் ஆகிய இரண்டு இயக்கங்களின் ஆதிக்கமே அதிகமாக இருப்பதால், இவ்விரு இயக்கங்களில் ஒன்று இத்தாக்குதல்களை அரங்கேற்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

http://www.virakesari.lk/article/25820

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சோமாலியாவில் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் 230 பேர் பலி

 


சோமாலியாவில் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் 230 பேர் பலி
 

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகதிசுவில் லொரி ஒன்றில் கொண்டு வந்த வெடிகுண்டுகளை பயங்கரவாதிகள் வெடிக்க செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பொதுமக்களில் 230 பேர் பலியாகியுள்ளதுடன் அதிகளவானொர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டின் முக்கிய அமைச்சகங்கள் அமைந்துள்ள பரபரப்பு நிறைந்த சாலைகளை இலக்காக கொண்டு நேற்று இந்த தாக்குதல் நடந்தப்பட்டுள்ளது.

எனினும் பெருமளவில் பொதுமக்களே பலியாகியுள்ளனர், காயமடைந்து மருத்துவமனைகளில் பலர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் அப்துல்லாஹி முகமது 3 நாட்கள் இரங்கல் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு சோமாலியா மக்கள் முன்வந்து இரத்தம் வழங்க வேண்டும் என்றும் அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 10 வருடங்களில் இதுபோன்ற தாக்குதல் எதனையும் நாங்கள் அறிந்ததில்லை என ஆமின் ஆம்புலன்ஸ் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

தேசிய பேரிடர் என சோமாலியா அரசு அறிவித்துள்ளதுடன் இந்த சம்பவத்திற்கு அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்-ஷபாப் அமைப்பு நடத்தியிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுவதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அந்த அமைப்பு இதுபற்றி எந்த கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.

98321563_5050920d-db3e-4f9b-a475-c3a53333ece9

download-3

http://newsfirst.lk/tamil/2017/10/சோமாலியாவில்-இடம்பெற்ற/

  • தொடங்கியவர்

சோமாலியாவில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 300 ஆக உயர்வு

17CHAPLSOMALIA

சோமாலிய தலைநகர் மொகாதிஷுவில் ஓட்டல் அருகில் வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறியதில் கட்டிடங்கள் நொறுங்கின. இதில் 300 பேர் பலியாயினர். இடிபாடுகளில் தொடர்ந்து மீட்புப் பணி நடக்கிறது.   -  படம்: ஏஎப்பி

சோமாலிய தலைநகர் மொகாதிஷுவில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது.

சோமாலிய தலைநகர் மொகாதிஷுவில் சபாரி ஓட்டல் உள்ளது. இங்கு கடந்த சனிக்கிழமை சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின. 2 லாரிகளில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் அருகில் இருந்த கட்டிடங்கள், கார்கள் பலத்த சேத மடைந்தன.

தகவல் அறிந்து மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்தனர். இந்நிலையில் வெடிகுண்டு தாக்குதலில் பலியானார் எண்ணிக்கை நேற்று 300 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 300-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. எனவே, பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் துணை அமைப்பான அல் ஷபாப் தீவிரவாத அமைப்புதான் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், இந்த தாக்குலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்க வில்லை.

கடந்த 2007-ம் ஆண்டு முதல் சோமாலிய அரசுக்கு எதிராக தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். எனினும், சோமாலிய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் நடந்த முதல் தாக்குதல் இதுதான் என்று தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அப்திரகுமான் ஒமர் கூறினார்.

இந்தத் தாக்குதலுக்கு சோமாலிய அதிபர் முகமது அப்துல்லாஹி பர்மஜோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

இந்த நேரத்தில் நாம் அனைவரும் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைவோம். ஒன்றிணைந்து பிரார்த்திப்போம். தீவிரவாதம் வெற்றி பெற கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்கள் உதவி செய்யுங்கள். ரத்த தானம் செய்யுங்கள். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலாக இருங்கள்.

தாக்குதலில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கிறேன். தேசிய கொடி 3 நாட்கள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.

இவ்வாறு அதிபர் முகமது அப்துல்லாஹி கூறியுள்ளார்.

http://tamil.thehindu.com/world/article19875384.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.