Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை

Featured Replies

அரசியல் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை

 

 

அரசியல் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை
 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் மூலம் சிறந்த தீர்வு கிடைக்குமென எதிர்பார்ப்பதாக வட மாகாண சபை உறுப்பினர் எம். கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற இந்த சந்திப்பில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனாதிபதியை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே எம். கே சிவாஜிலிங்கம் இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த சனிக்கிழமை (14) ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்றிருந்த போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசியல்வாதிகள் மற்றும் கைதிகளின் உறவினர்களை ஜனாதிபதி தனது வாகனத்தில் இருந்து இறங்கி சந்தித்தார்.

பிரச்சினைகளைக் கலந்துரையாடித் தீர்க்க முடியும் என இதன் போது ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பின்புலத்திலேயே அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதேவேளை, மூன்று தமிழ் அரசியல் கைதிகள் இன்று 25 ஆவது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளும், கடந்த மாதம் 25 ஆம் திகதி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர்.

2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மதியரசன் சுலக்ஸன், கணேசன் தர்சன், இராசதுரை திருவருள் ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தமது வழக்கை அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

http://newsfirst.lk/tamil/2017/10/அரசியல்-கைதிகள்-தொடர்பில/

  • தொடங்கியவர்

தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றப்படுவதற்கான உறுதிமொழி ஜனாதிபதியால் வழங்கப்படவில்லை

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்ட குழுவினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, இன்று   சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

எனினும் அரசியல் கைதிகளின்  உறவினர்களின் கோரிக்கைகளை உடனடியாக  நிறைவேற்றப்படுவதற்கான   உறுதிமொழி எவையும் ஜனாதிபதியினால் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத் தரப்பில் ஜனாதிபதி, சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் சாகல ரத்நாயக்க, சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, பிரதி சட்டமா அதிபர், துணை சட்டமா அதிபர், பாதுகாப்புத் தரப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அரசியல் கைதிகளின் தரப்பில், உண்ணாவிரதமிருக்கும் மதியரசன் துலக்ஷனின் தாயாரும் மாமியாரும், கணேசன் தர்ஷனின் தாயாரும் சகோதரரும், இராசதுரை திருவருளின் மனைவி ஆகியோருடன் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், சிவன் அறக்கட்டளையின் நிறுவுனர் கணேஸ்வரன் வேலாயுதம், வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் தலைவர் கே. சதீஸ் ஆகிய  9 பேர் கலந்துகொண்டனர் என தெரிவிக்கப்படுகின்றது

http://globaltamilnews.net/archives/46011

 

தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில், நல்லதொரு தீர்வு கிடைக்கும் என, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

  • தொடங்கியவர்

அரசியல் கைதிகளின் சிக்கலுக்கு நல்லமுடிவு : சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினரிடம் ஜனாதிபதி உறுதி

 

 

அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்டு வரும் தமிழ் அர­சியல் கைதி­களின் விவ­கா­ரத்­திற்கு விரைவில் நல்­ல­தொரு முடி­வினை அறி­விப்பேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  உறு­தி­ய­ளித்­துள்ளார். ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வட­மா­காண சபை உறுப்­பினர் எம்.கே. சிவா­ஜி­லிங்கம் தலை­மையில்  அர­சியல் கைதி­களின் உற­வி­னர்கள்  சந்­தித்து  பேச்­சு­வார்த்தை நடத்­தினர்.  ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று பிற்­பகல் நடை­பெற்ற இந்த சந்­திப்­பி­லேயே  ஜனா­தி­பதி இவ்­வாறு   தெரி­வித்­துள்ளார். 

sivajilingam.jpg

இந்த சந்­திப்பில்  ஜனா­தி­ப­தி­யுடன் சிறைச்­சா­லைகள் அமைச்சர்  டி.எம். சுவா­மி­நாதன், சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்­னா­யக்க, பாது­காப்பு இரா­ஜாங்க ருவான் விஜ­ய­வர்­தன,  பதில் சட்­டமா அதிபர்,   வட­மா­காண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, ஆகியோர் கலந்து கொண்­டனர். அர­சியல் கைதி­களின் சார்பில் மாகா­ண­சபை உறுப்­பினர் எம்.கே.சிவா­ஜி­லிங்கம், வல்­வெட்­டித்­துறை நக­ர­ ச­பையின் முன்னாள் பிரதி மேயர் க.சதீஷ், ரெலோவின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கோவிந்தன் கரு­ணா­கரம்,  ரெலோ இயக்­கத்தின் கொள்கை பரப்புச் செய­லாளர்  கணேஸ் வேலா­யுதம்,  உண்­ணா­வி­ர­தத்தில் ஈடு­பட்­டு­வரும்  அர­சியல் கைதி­யான தர்­ஷனின் தாயார், திரு­வ­ருளின் மனைவி, மற்றும்  சுலக் ஷனின் தாயார்  ஆகி­யோரும்   கலந்­து­கொண்­டனர். 

சந்­திப்­பின்­போது  அர­சியல் கைதிகள் பொது மன்­னிப்­ப­ளித்து விடு­விக்­க­ வேண்­டி­யதன் அவ­சியம் குறித்தும்  அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் வழக்­குகள் மீண்டும் வவு­னியா மேல் நீதி­மன்­றத்­திற்கு மாற்­றப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்தும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. 

மாகா­ண­ சபை உறுப்­பினர் எம்.கே. சிவா­ஜி­லிங்கம்,  இங்கு கருத்துத் தெரி­விக்­கையில்  தமிழ் அர­சியல் கைதிகள்  நீண்­ட­கா­ல­மாக   தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். எனவே  இந்­த ­கை­தி­க­ளுக்கு பொது மன்­னிப்­ப­ளித்து விடு­விக்­க­வேண்டும். இந்­திய, இலங்கை ஒப்­பந்­தத்­தின்­போது முன்னாள் போரா­ளி­க­ளுக்கு பொது­மன்­னிப்பு வழங்­கப்­பட்­டது. இதே­போன்றே  ஜே.வி.பி. உறுப்­பி­னர்­க­ளுக்கும் பொது மன்­னிப்பு வழங்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்­டனர்.  இதே­போன்றே  தமிழ் அர­சியல் கைதி­களை  பொது­மன்­னிப்பு அளித்து விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். அத்­துடன் அநு­ரா­த­புரம்  சிறைச்­சா­லையில் உண்­ணா­வி­ரதம் இருந்து வரும் கைதி­களின் கோரிக்கை நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும். வவு­னியா மேல் நீதி­மன்­றத்தில் நடை­பெற்று வந்த அவர்­க­ளது வழக்­குகள் அநு­ரா­த­புரம் மேல் நீதி­மன்­றத்­திற்கு மாற்­றப்­பட்­டமை தவ­றான செயற்­பா­டாகும். எனவே இந்த விட­யத்தில் உட­ன­டி­யாக முடிவை எடுக்­க­வேண்டும் என்று  வலி­யு­றுத்­தி­யுள்ளார். இதன்­போது கருத்துத் தெரி­வித்த பதில் சட்­டமா அதிபர் மூன்று கைதி­க­ளுக்கு  எதி­ரான வழக்கில்  முன்னாள் புலிகள் இயக்க உறுப்­பி­னர்கள் மூவர் சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளனர். அவர்­க­ளுக்கு அச்­சு­றுத்தல்   நில­வு­வ­த­னா­லேயே  வழக்­கினை வவு­னியா மேல் நீதி­மன்­றத்­தி­லி­ருந்து அநு­ரா­த­புரம்  மேல் நீதி­மன்­றத்­திற்கு மாற்­றி­யுள்ளோம்.  சாட்­சி­க­ளுக்கு அச்­சு­றுத்தல் உள்­ள­மை­யினால்  வழக்­கினை மீளவும் வவு­னி­யா­விற்கு  மாற்ற முடி­யாது என்று  கூறி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து  கருத்துத் தெரி­வித்த ரெலோவின் கொள்கை பரப்பு செய­லாளர் கணேஸ் வேலா­யுதம்  இதற்கு  எதிர்ப்பு தெரி­வித்­த­துடன் நல்­லாட்சி அர­சாங்­கத்தில்  சாட்­சி­க­ளுக்கு  அச்­சு­றுத்தல் உள்­ள­தாக தெரி­வித்து  வழக்­கு­களை மாற்­று­வது  ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க நட­வ­டிக்­கை­யல்ல. தற்­போது புல­னாய்­வு­துறை சிறந்­த­வ­கையில் பணி­யாற்­று­கின்­றது.  சாட்­சி­க­ளுக்கு அச்­சு­றுத்தல் இருந்தால் அது குறித்து அவர்­களால் கண்­ட­றி­ய­மு­டியும். எனவே வழக்­கினை  வவு­னியா மேல் நீதி­மன்­றத்­திற்கு மாற்­ற­வேண்டும். கைதி­க­ளுக்கு பொது ­மன்­னிப்பு வழங்­க­வேண்டும் என்று  சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். வட­மா­காண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயும் தமிழ் அர­சியல் கைதி­களை  விடு­விக்­க­வேண்­டி­யதன் அவ­சியம்  குறித்து வலி­யு­றுத்­தி­யுள்ளார். நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது  புது­யு­கத்தை நோக்கி பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது.  இந்­த­நி­லையில்  சகல அர­சியல் கைதி­க­ளையும்   இன, மத பேத­மின்றி   விடு­விப்­பது  சிறந்­தது என்று அவர் கூறி­யுள்ளார். அமைச்சர் டி.எம். சுவா­மி­நா­தனும்  தமிழ் அர­சியல் கைதி­களின்  விடு­தலை குறித்து  சுட்­டிக்­காட்­டி­ய­துடன்  அது­ தொ­டர்­பாக   விளக்கம் அளித்­துள்ளார்.  உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்டு வரும் மூன்று அர­சியல் கைதி­க­ளி­னது தாய்­மாரும்  மனை­வியும் கண்ணீர் விட்டு அழுது தமது பிள்­ளை­களை , கண­வனை விடு­விக்­கு­மாறு ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை விடுத்­தனர். வழக்­கு­களை  உட­ன­டி­யாக வவு­னியா  மேல் நீதி­மன்­றத்­திற்கு மாற்றி தமது பிள்­ளை­களை காப்­பாற்­று­மாறு அவர்கள் ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை விடுத்­தனர். 

இங்கு  மீண்டும் கருத்து தெரி­வித்த மாகா­ண ­சபை உறுப்­பினர் எம்.கே. சிவா­ஜி­லிங்கம் வெலிக்­கடை சிறைச்­சா­லையில்  பாதாள உலக  மற்றும் போதை­வஸ்து  குற்­றச்­சாட்டின் பேரில்  தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள கைதி­க­ளுடன் அர­சியல் கைதி­களும் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ளனர். இந்த நிலைமை  உட­ன­டி­யாக மாற்­றப்­ப­ட­வேண்டும் என்று  வலி­யு­றுத்­தி­யுள்ளார். 

இவர்­க­ளது கருத்­துக்­களை   நன்கு  செவி­ம­டுத்த ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன   அர­சியல் கைதிகள் விவ­காரம் தொடர்­பிலும்   அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் உண்­ணா 

­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள கைதி 

கள் விவ­கா­ரத்­திலும் நல்­ல­தொரு முடி­வினை

அர­சாங்கம் எடுக்கும். நீதி அமைச்சர் தலதா

அத்­துக்­கோ­ரள  சட்­டமா அதிபர்  ஆகியோர் 

வெளி­நாடு சென்­றுள்­ள­மை­யினால் அவர் 

கள்  நாடு­தி­ரும்­பி­யதும் இவ்­வி­டயம் குறித்து 

கலந்­து­ரை­யாடி நல்­ல­தொரு முடிவு  அறிவிக் கப்படும் என்று உறுதியளித்துள்ளார். 

இதன்போது உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின்  விவகாரத் 

திற்கு   தற்காலிகமாகவேனும்  தீர்வு வழங் 

கினால் அவர்களது போராட்டத்தை நிறுத்த

முடியும்.  வவுனியா மேல் நீதிமன்றத்திலி ருந்து அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட  அவர்களது வழக்குகளை  தற்காலிகமாக  இடைநிறுத்துவதாக   அறிக்கை 

யொன்றினை வெளியிட்டால் கைதிகளின் உண்ணாவிரதப்  போராட்டத்தை முடிவுக் 

குக் கொண்டுவர முடியும் என்று மாகாண சபை உறுப்பினர்   சிவாஜிலிங்கம் இங்கு 

கருத்து கூறியுள்ளார். இவ்விடயம்   குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடு வதாக ஜனாதிபதி  தெரிவித்துள்ளார். 

http://www.virakesari.lk/article/26031

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.