Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுட்டுக் கொல்லப்பட்ட பல்கலை மாணவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

Featured Replies

சுட்டுக் கொல்லப்பட்ட பல்கலை மாணவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

சுட்டுக் கொல்லப்பட்ட பல்கலை மாணவர்களின் நினைவேந்தல் நிகழ்வு
0
SHARES
 

பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரினதும் நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த 20.10.2016 அன்று பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோரின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு யாழ். பல்கலையில் இன்று இடம்பெற்றது.

http://newuthayan.com/story/38613.html

காவல்துறையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் ஓராண்டு நினைவேந்தல் ..

jaff-uni1.jpg
 
யாழ்.காவல்துறையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பல்கலைகழக மாணவர்களின் ஓராண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்றைய தினம் மாணவர்களால் அனுஸ்டிக்கப்பட்டது.  யாழ்.பல்கலைகழக கைலாசபதி கலையரங்கில் இன்று காலை 10 மணியளவில் நினைவஞ்சலி நிகழ்வுகள் மாணவர்களின் ஏற்பாடில் நடைபெற்றது.
 
யாழ். பல்கலை கழக மாணவர்களான நடராஜா கஜன் மற்றும் விஜயகுமார் சுலக்சன் ஆகிய இரு மாணவர்களும் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை யாழ்.காவல்நிலையத்தை சேர்ந்த காவல்துறையினர் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இருவரும் படுகொலை செய்யபப்ட்டனர்.
 
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.காவல் நிலையத்தை சேர்ந்த ஐந்து காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு யாழ்.நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.
jaff-uni-1.jpgjaff-uni-4-1.jpgjaff-uni-5-1.jpgjaff-uni-6.jpg
jaff-uni2.jpg

http://globaltamilnews.net/archives/46094

  • தொடங்கியவர்

நீதி கிடைக்கும் என்பதில் துளியும் நம்பிக்கையில்லை – சுட்டுக்கொல்லப்பட்ட யாழ் பல்கலைகழக மாணவனின் தாய்:-

IMG_3604.jpg

கடந்த வருடம் இதேநாளில் ( ஒக்ரோபர் 20) சுட்டுக்கொல்லப்பட்ட மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு ஆனால் நீதி கிடைக்கும் என்பதில் துளியும் நம்பிக்கையில்லை என கொல்லப்பட்ட யாழ் பல்கலைகழக அரசறிவியல்துறை மாணவனான நடராசா கஜனின் தாய் நடராசா சறோஜினி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பாரதிபுரம் கிராமத்தில் வசிக்கும் நடராசா சறோஜினியின் நாளைய(21) தினம் தனது மகனின் ஓராண்டு நினைவு நிகழ்வை நடத்துவதற்கு தன்னால் முடிந்த ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த நிலையில் இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தாா்
அவா் மேலும் குறிப்பிடுகையில்

இன்று(20) தனது மகன் சுட்டுக்கொல்லப்பட்டு ஒராண்டு ஆனால் இந்த ஒரு ஆண்டுக்குள் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. மகன் இறந்த போது வந்தவர்கள் எமக்கு பல்வேறு உறுதிமொழிகளை வழங்கினார்கள். ஆனால் இன்று எல்லோரும் எங்களை மறந்து விட்டார்கள். எனது மகனை மிகவும் கஸ்ரத்திற்குள் மத்தியில் படிப்பித்தேன் ஒரு மகன் பல்கலைகழகத்தில் படிக்கிறான், பட்டத்தோடு வருவான் என்றிருந்தேனே தவிர பாடையில் வருவான் என நினைத்தும் பார்க்கவில்லை. எனக் குறிப்பிட்ட அவர்,

நடந்தது நடந்துவிட்டது இனி நீதி வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் அந்த எதிர்பார்ப்பிலும் இப்பொழுது நம்பிக்கையற்று போய்விட்டது. மகன் கொல்லப்பட்ட போது அரசியல்வாதிகள் பலர் வந்தார்கள் பல வாக்குறுதிகளை வழங்கினார்கள். வீடு கட்டி தரலாம், ஏனைய பிள்ளைகளுக்கு அரச வேலைவாய்ப்பு பெற்றுத்தரலாம், நட்டஈடு தரலாம் என்றெல்லாம் சொன்னார்கள். எங்களுக்கும் அதுவொரு சிறு ஆறுதலாக இருந்தது. ஆனால் எல்லாமே வெறும் வாக்குறுதிகள் என்பதை இந்த ஒரு வருடத்திற்குள் புரிந்துகொண்டேன். என்னோடு தற்போது இருக்கின்ற மூன்று பிள்ளைகளும் க.பொ.த.உயர்தரம் படித்தவர்கள் நிரந்தர வேலையின்றி உள்ளனர்.

மேலும் வீடு அமைத்து தரலாம் என்று சொன்னார்கள் அது நடக்காத போது தற்போது நான் கடுமையான முயற்சிகளுக்கு பின்னர் எல்லோருக்கும் வழங்கப்படுகின்ற வீட்டுத்திட்டத்தை பெற்றுள்ளேன். எட்டு இலட்சம் ரூபா வீட்டுத்திட்டம் அதனை முழுமையாக கட்டி முடிப்பதற்கு முடியாமல் பெரும் சிரமப்படுகின்றேன். எனத் தெரிவித்த அவர் நேற்றைய தினம்(19) கிராம அலுவலருடன் கச்சேரியிலிருந்து வந்தவர்கள் எங்களுக்கு 12 இலட்சம் ரூபாவில் வீடு அமைத்து தருவதாக சொல்லி சென்றுகின்றார்கள். எனவும் குறிப்பிட்டார்.

மகன் கொல்லப்பட்ட போது மாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் காணப்பட்ட கொதி நிலையை தணிப்பதற்காகவே எங்களுக்கு வாக்குறுதிகளை வழங்கினார்கள் என்றே நினைக்கிறேன். எங்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் சம்மந்தன் ஜயாவையும்,சேனாதிராஜா ஜயாவையும் அழைத்து வந்தார் அவர்களும் எங்களுக்கு நீதியை பெற்றுத் தருவதாகவும் நட்டஈட்டை பெற்றுத் தருவதாகவும் சொன்னார்கள். மீள்குடியேற்ற அமைச்சர் வீடு கட்டித்தரலாம் என்றார் ஏனைய பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரலாம் என்றார் ஆனால் இதுவரை எதுவும் நடைபெறவில்லை எனத் கவலையோடு தெரிவித்த சறோஜினி பிள்ளையும் போய் எல்லாமும் போய் கைவிடப்பட்டவர்களாக இருக்கிறோம் என்றார்.

IMG_3603.jpg

http://globaltamilnews.net/archives/46106

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.