Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படைப் பிரிவுகள் பல இருந்தும் ஒரு அரசியல் கொலையைத் தானும் துப்புத்துலக்க முடியாத நிலைமையில் அரசாங்கம்

Featured Replies

படைப் பிரிவுகள் பல இருந்தும் ஒரு அரசியல் கொலையைத் தானும் துப்புத்துலக்க முடியாத நிலைமையில் அரசாங்கம்

சிவநாதன் கிஷோர் சாடுகிறார்

அரசாங்கத்திடம் படைகளும் புலனாய்வு பிரிவுகளும் இருக்கின்ற போதிலும் இதுவரை இடம்பெற்ற ஏதாவது ஒரு அரசியல் கொலையைப் பற்றிக்கூட துப்புதுலக்க முடியாமல் இருப்பது கவலையளிக்கிறதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் பேசும்போதே கிஷோர் எம்.பி. இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில்;

இந்த அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வந்ததன் பின்னர் தான் ஒவ்வொரு நாளும் எமது தமிழ் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த அவசரகாலச் சட்டம் எமது மக்களை கடத்திச் சென்று கப்பம் கோருவதற்கும் கொலை செய்வதற்குமா கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தை அமுலுக்கு கொண்டு வந்தபோது இது எந்த மக்களையும் இன ரீதியாக வதைப்பதற்கு பயன்படுத்தப்பட மாட்டாதென கூறினீர்கள். இன்று அதற்கு மாறாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இன்று இடத்துக்கிடம் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு மத்தியில் தான் மக்கள் கடத்தப்படுகின்றனர். ஆனால், எவரும் கண்டுபிடித்ததாக தெரியவில்லை.

அரசாங்கம் தற்போது நல்லதொரு முறையை கையாளுகிறது. அதாவது ஜே.வி.பி. காலத்தைப் போன்று கொலை செய்துவிட்டு அடையாளம் தெரியாத அளவிற்கு உடலை தீயிட்டு எரித்து விடுகிறது. அவ்வாறான 10 சடலங்கள் பமுனுகமவிலும் அநுராதபுரம் பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இன்று குண்டு வீச்சுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது வவுணதீவு பகுதியில் மக்கள் மீள பலவந்தமாக கொண்டு செல்லப்படுகின்றனர். சிங்கள மக்களாக இருந்தால் அரசாங்கம் இவ்வாறு செய்யுமா?

எமது தமிழ் மக்களை இடம்பெயர வைப்பதற்கான அரசின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. எமது மக்களை வடக்கு- கிழக்கிலிருந்து இடம்பெயர வைப்பதா அல்லது முற்றாக விரட்டியடிப்பதா என்று தெரியவில்லை.

வடக்கு- கிழக்கில் ஆட்கடத்தலில் ஈடுபடுவது, புலிகள் என அரசாங்கம் குற்றஞ் சாட்டுகிறது. அப்படியெனில், கொழும்பில் கடத்தப்படுபவர்கள் யாரால் கடத்திச் செல்லப்படுகின்றனர்?

பமுனுகம பகுதியில் அண்மையில் தலைப் பகுதி எரியூட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சடலங்கள் மட்டக்களப்பு பகுதி இளைஞர்களுடையது என்கிறீர்கள். அப்படியானால், மட்டக்களப்பு பகுதியில் கொலை செய்யப்பட்ட இளைஞர்கள் எப்படி பல சோதனைச் சாவடிகளை கடந்து பமுனுகம கொண்டு வரப்பட்டனர்? இதில் எமக்கு படையினர் மீது சந்தேகம் இருக்கிறது. இதை உறுதிப்படுத்துவது போல் பொலிஸ் மா அதிபரும் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்திடம் தரைப்படை, விமானப்படை, கடற்படை என பல படைகள் உள்ளன. ஆனால், எந்த புலனாய்வு துறையினரும் ஒரு கொலையைப் பற்றிக் கூட கண்டுபிடிக்கவில்லை. எமது முன்னாள் எம்.பி.க்களான ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் இருவரினதும் கொலை பற்றி இதுவரை எதுவும் கண்டறியப்படவில்லை.

வவுனியா தாண்டினால் சிங்கள மக்கள் சுதந்திரமாக செயற்பட முடியும். ஆனால், எமது தமிழ் மக்களுக்கு இங்கு சுதந்திரமாக செயற்பட முடிவதில்லை என்றார்.

http://www.thinakkural.com/news/2007/3/9/i...s_page22944.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.