Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடுமையாக அழுத்தங்களை பிரயோகிக்கப்போகும் ஜெனிவா

Featured Replies

கடுமையாக அழுத்தங்களை பிரயோகிக்கப்போகும் ஜெனிவா

 

இலங்­கை­யா­னது நம்­ப­ க­ர­மான பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை  முன்­னெ­டுக்­கா­விடின் இந்த  விவ­காரம் சர்­வ­தேச நியா­யா­ திக்­கத்தை  நோக்கிப் பய­ணிக்கும் 

செய்ட் அல் ஹுசேன்

இலங்கை அர­சாங்கம் குறிப்­பிட்ட காலப்­ப­கு­திக்குள் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு நீதியை நிலை­நாட்­டா­விடின் பல்­வேறு நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­றலாம். ஐ.நா. மனித உரிமை பேர­வையில் உள்ள இந்த விவ­காரம் ஐ.நா. பாது­காப்பு சபைக்கு செல்­லலாம். இவ்­வாறு  பல நிலை­மைகள்  ஏற்­ப­டலாம் 

பென் எமர்ஷன் 

இலங்­கைக்குள் நம்­ப­க­ர­மான மற்றும் சுயா­தீ­ன­மான பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுத்து நீதியை நிலை­நாட்­டா­விடின் சர்­வ­தேச மட்­டத்தில் நீதியை தேடு­வ­தற் கான முயற்­சிகள் மிகவும் வலு­வான முறையில் இடம்­பெறும்  

பப்லோ டி கிரிப்

நிலைமை படிப்­ப­டி­யாக மாறிக்­கொண்­டி­ருக்­கின்­றது. ஆரம்­பத்தில் இலங்கை அர­சாங்­கத்­துக்கு கடும் ஆத­ரவுப் போக்கை வெ ளியிட்டு வந்த ஐக்­கிய நாடுகள் சபை தற்­போது சற்று இறுக்­கிப்­பி­டிக்க ஆரம்­பித்­தி­ருக்­கின்­றது என்றே தோன்­று­கின்­றது. அது மட்­டு­மன்றி ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை மட்­டத்தில் பல்­வேறு நெருக்­கு­தல்­களை அர­சாங்­கத்­துக்கு பிர­யோ­கிக்கும் செயற்­பாட்டில் சர்­வ­தேச மட்­டத்தில் நிலை­மைகள் மாற்­ற­ம­டை­வதை காண முடி­கின்­றது.   

 

அதா­வது ஐக்­கிய நாடுகள் பாது­காப்பு சபைக்கு இலங்கை விவ­காரம் கொண்­டு­செல்­லப்­ப­ட­வேண்டும் என்று கோரிக்­கைகள் வலுத்­தாலும் அதற்­கான சாத்­தியம் தற்­போ­தைய நிலை­மையில் குறை­வாக இருப்­ப­தா­கவே தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் ஜெனிவா மனித உரிமை பேரவை மட்­டத்தில் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் அழுத்­தங்கள் அதி­க­ரிக்­கப்­ப­டலாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு ­கின்­றது.

கடந்த 12 மாத காலப்­ப­கு­திக்குள் இலங்­கைக்கு வரு­கை­தந்த மூன்று ஐக்­கிய நாடு­களின் விசேட பிர­தி­நி­தி­களும் இலங்­கையின் பொறுப்­புக்­கூறல் தாமதம் தொடர்பில் கடும் அதி­ருப்­தியை முன்­வைத்­த­துடன் பல்­வேறு வகை­யான எச்­ச­ரிக்­கையை விடுத்துச் சென்­றுள்­ள­மை­யா­னது ஐக்­கிய நாடு­களின் அதி­க­ரிக்­கின்ற நெருக்­கு­தல்­களை வெளிக்­காட்­டி­நிற்­கின்­றது.

நல்­லாட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்து மூன்று வரு­டங்கள் நிறை­வ­டை­யப்­போ­கின்­றன. இந்­நி­லையில் அர­சாங்கம் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுக்கும் என்று நம்­பிக்­கொண்­டி­ருப்­பதில் அர்த்தம் இல்லை என்­ப­தனை ஐக்­கிய நாடுகள் சபை உணர்ந்­துள்­ள­தா­கவே தெரி­கின்­றது.

அத­னா­லேயே அர­சாங்கம் மீதான நெருக்­கு தல்­களை அதி­க­ரிக்கும் போக்கை கையாள்­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சிப்­பதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. இலங்­கைக்கு இவ்­வ­ரு­டத்

தில் விஜயம் மேற்­கொண்ட உண்மை நீதி நட்­ட­ஈடு மற்றும் மீள்­நி­க­ழாமை தொடர்­பான ஐக்­கிய நாடு­களின் விசேட நிபுணர் பப்லோ டி கிரிப் மற்றும் பயங்­க­ர­வா­தத்தை ஒடுக்கும் போது அடிப்­படை சுதந்­திரம் மற்றும் மனித உரி­மையை பாது­காப்­பது தொடர்­பான ஐ.நா.வின் விசேட நிபுணர் பென் எமர்ஷ­ன் மற்றும் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் ஆகிய மூவரும் அர­சாங்­கத்தை விமர்­சித்தே மதிப்­பீட்டு அறிக்­கை­களை வெ ளியிட்­டுள்­ளனர் என்று கூறலாம்.

முதலில் இலங்­கைக்கு இவ்­வ­ரு­டத்தில் விஜயம் மேற்­கொண்ட உண்மை நீதி நட்­ட­ஈடு மற்றும் மீள்­நி­க­ழாமை தொடர்­பான ஐக்­கிய நாடு­களின் விசேட நிபுணர் பப்லோ டி கிரிப் வெ ளியிட்­டுள்ள மதிப்­பீ­டு­களின் சாரம் சத்தை பார்ப்போம்.    

அதா­வது யுத்­த­வெற்றி வீரர்­களை நீதி­மன்­றத்தின் முன் கொண்­டு­வ­ர­மாட்டோம் என யாரும் கூற முடி­யாது. அதனை நீதி­மன்­றமே தீர்­மா­னிக்­க­வேண்டும். யுத்த வெற்­றி­வீ­ரர்­களை இவ்­வாறு பாது­காப்­ப­தாக கூறு­வது சுயா­தீன நீதித்­து­றையின் பண்­பு­களை மீறு­வதைப் போன்­ற­தாகும்.

இலங்­கைக்குள் நம்­ப­க­ர­மான மற்றும் சுயா­தீ­ன­மான பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுத்து நீதியை நிலை­நாட்­டா­விடின் சர்­வ­தேச மட்­டத்தில் நீதியை தேடு­வ­தற்­கான முயற்­சிகள் மிகவும் வலு­வான முறையில் இடம்­பெறும் என்­பதை அனை­வரும் மனதில் கொள்­ள­வேண்டும்.

இதற்கு சிறந்த உதா­ர­ண­மாக பிரே­ஸிலில் அண்­மையில் இலங்­கையின் முன்னாள் இரா­ணுவத் தள­பதி ஜகத் ஜய­சூ­ரி­ய­வுக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கை குறிப்­பி­டலாம். இது­போன்ற சம்­ப­வங்கள் எதிர்­கா­லத்தில் தொடர்ந்தும் இடம்­பெறும். பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை தொடர்ந்தும் தாம­த­மாக்­க­வேண்டாம்.

இவ்­வாறு தொடர்ந்தும் இந்த செயற்­பாட்டை தாம­த­மாக்­கு­வது உள்­நாட்­டிலும் சர்­வ­தேச மட்­டத்­திலும் பல்­வேறு கேள்­வி­களை எழுப்­பு­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றது. கால அட்­ட­வ­ணை­யுடன் கூடிய பரந்­து­பட்ட மற்றும் சுயா­தீ­ன­மான நிலை­மா­று­கால நீதிப்­பொ­றி­முறை ஒன்றை அர­சாங்கம் உட­ன­டி­யாக முன்­வைக்­க ­வேண்டும்.

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை உட­ன­டி­யாக நீக்­கு­வ­துடன் அதற்குப் பதி­லாக கொண்­டு­வ­ரப்­படும் சட்டம் சர்­வ­தேச தரங்­களைப் பின்­பற்­று­வ­தாக அமை­ய­வேண்டும். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் தொடர்­பான விட­யங்­களை உட­ன­டி­யாக மீளாய்வு செய்­ய­வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் காணப்­ப­டு­கின்ற இரா­ணுவப் பிர­சன்­னத்தைக் குறைக்­க­வேண்டும். இரா­ணு­வத்­தி­னரால் கைப்­பற்­றப்­பட்­டுள்ள காணி தொடர்­பான ஒரு வரை­ப­டத்தை உட­ன­டி­யாக தயா­ரிக்­க­வேண்டும். காணி விடு­விப்பு தொடர்­பான ஒரு நேர அட்­ட­வணை அவ­சி­ய­மா­கின்­றது.

மீள­ளிக்­கப்­ப­டாத காணி­க­ளுக்கு நட்­ட­ஈடு வழங்­கு­வது அவ­சி­ய­மா­ன­தாகும். சுயா­தீன தன்மை வெளிப்­ப­டைத்­தன்மை என்­ப­ன­வற்றின் அடிப்­ப­டையில் காணாமல் போனோர் குறித்த அலு­வ­ல­கத்­துக்கு ஆணை­யா­ளர்கள் நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும். காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்தை கண்­கா­ணிப்­ப­தற்­காக பாதிக்­கப்­பட்­டோரினால் ஒருங் ­கி­ணைக்­கப்­பட்ட ஒரு குழுவை நிய­மிப்­பது குறித்து அர­சாங்கம் பரி­சீ­லிக்­க­வேண்டும்.

அனைத்து பாதிக்­கப்­பட்ட சமூ­கங்­களின் நன்மை கருதி உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­குழு ஒன்று நிறு­வப்­ப­ட­ வேண்டும். உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழு­வுக்­கான ஆணை­யாளர் நிய­ம­னத்தில் பாதிக்­கப்­பட்டோர் இடம்­பெ­று­வதை உறு­திப்­ப­டுத்­த­வேண்டும்.

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நட்­ட­ஈடு வழங்­கு­வது தொடர்­பாக ஒரு பரந்­து­பட்ட திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட ­வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது உயி­ரி­ழந்த உற­வு­களை நினை­வு­கூர்­வ­தற்­கான உரி­மையை உறு­திப்­ப­டுத்த வேண்டும். இவ்­வாறு நினை­வு­கூரும் செயற்­பா­டா­னது நட்­ட­ஈடு பெறு­வதைப் போன்ற ஒரு உணர்வைக் கொண்­டது. இவையே பப்லோ டி கிரிப்பின் மதிப்­பீ­டு­களில் மிக முக்­கி­ய­மா­ன­வை­யாக காணப்­ப­டு­கின்­றன.

குறிப்­பாக பப்லோ டி கிரிப் இதற்கு முன்னர் பல தட­வைகள் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்தார். ஆனால் அம்­முறை முன்­வைத்­துள்ள பரிந்­து­ரை­களை விட இம்­முறை முன்­வைத்­துள்ள பரிந்­து­ரைகள் சற்று வித் தி­யா­ச­­மா­னவை­யாக உள்­ளன.  

இந்­நி­லையில் பப்லோ டி கிரிப்பின் இலங்கை விஜயம் குறித்த மதிப்­பீட்டு அறிக்கை தொடர்பில் சட்ட கற்­கை­க­ளுக்­கான தெற்­கா­சிய நிறு­வ­னத்தின் தலை­வரும் சட்­டத்­த­ர­ணி­யு­மான நிரான் அங்­கேட்டல் குறிப்­பி­டு­கையில், இதற்கு முன்னர் வந்த பென் எமர்ஷன் என்ற ஐக்­கிய நாடு­களின் நிபுணர் கார­சா­ர­மான பரிந்­து­ரை­களை முன்­வைத்­தி­ருந்தார்.   

ஆனால் இம்­முறை வந்த ஐக்கிய நாடு­ களின் நிபுணர் பப்லோ டி கிரிப்பின் அறிக்கை வலு­வா­ன­தாக இல்லை. அதில் உண்­மையை கண்­ட­றியும் ஆணைக் கு­ழுவை நிறு­வு­மாறும் பொறுப்­புக்­கூ­றலை தாம­தப்­ப­டுத்­த­வேண்டாம் என்று மட்­டுமே குறிப்­பிட்­டி­ருந்தார்.  

பப்லோ டி கிரிப் கொழும் பில் நடத் திய செய்­தி­யாளர் சந்­திப்பில் சில வலு­வான விட­யங்­களை குறிப்­பிட்­டி­ருந்தார். ஆனால் அவர் வெளியிட்ட அறிக்­கையில் வலு­வான விட­யங்கள் இருப்­ப­தாக நான் கரு­த­வில்லை. காரணம் சர்­வ­தேசம் அறிக்­கை­யையே பரி­சீ­லிக்கும். மேலும் தற்­போ­தைய நிலை­மையில் இலங்­கையின் விவ­கா­ரத்தில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் நெருக்­கு­தல்கள் அதி­க­ரிக்­கலாம். ஆனால் இலங்கை விவ­காரம் பாது­காப்பு சபைக்கு செல்லும் என்று கூற முடி­யாது. அவ்­வாறு எதிர்­பார்க்­கவும் முடி­யாது என்று சுட்­டிக்­காட்­டு­கின்றார்.

 இத­னி­டையே பயங்­க­ர­வா­தத்தை ஒடு க்கும் போது அடிப்­படை சுதந்­திரம் மற்றும் மனித உரி­மையை பாது­காப்­பது தொடர்­பான ஐ.நா.வின் விசேட நிபுணர் பென் எமர்சன் கடந்த ஜூலை மாதம் இலங்­கைக்கு விஜயம் செய்து மனித உரிமை நிலை­மை­களை ஆராய்ந்­தி­ருந்தார். அந்த சந்­தர்ப்­பத்தில் அவரும் கடும் அதி­ருப்­தி­யு­ட­னான கருத்­துக்­க­ளையே முன்­வைத்­தி­ருந்தார். அவர் முன்வைத்த கருத்­துக்­களை பார்ப்போம்.

அதா­வது இலங்கை அர­சாங்கம் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்கும் செயற்­பாட்டில் எவ்­வி­த­மான முன்­னேற்­றத்­தையும் வெளிப்­ப­டுத்­தாமல் இருக்­கின்­றது முன்­னேற்றம் தாம­த­ம­டைந்­துள்­ளது என்­ப­துடன் அவை கள­ரீ­தி­யாக நிறுத்­தப்­பட்­டு­விட்­டன என்றே கூற­வேண்டும்.  

தற்­போ­தைய கள நிலை­மையை பார்க்­கும்­போது அர­சாங்கம் குறிப்­பிட்ட கால வரை­ய­றைக்குள் நீதியை நிலை­நாட்டும் என எதிர்­பார்ப்­பது கடி­ன­மாக உள்­ளது. இந்த விட­யத்தில் சர்­வ­தேச சமூ­கத்தின் பொறு­மைக்கும் எல்லை இருக்­கின்­றது.

இலங்கை அர­சாங்கம் குறிப்­பிட்ட காலப்­ப­கு­திக்குள் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு நீதியை நிலை­நாட்­டா­விடின் பல்­வேறு நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­றலாம். ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் சலு­கை­களை இலங்கை இழக்­கலாம். ஐ.நா. மனித உரிமை பேர­வையில் உள்ள இந்த விவ­காரம் ஐ.நா. பாது­காப்பு சபைக்கு செல்­லலாம். இவ்­வாறு பல நிலை­மைகள் ஏற்­ப­டலாம்.

பயங்­க­ர­வாத தடை சட்­ட­மா­னது இன்­று­வரை தமிழ் சிறு­பான்மை மக்­களை பாதிக்கும் ஒரு சட்­ட­மா­கவே பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­துள்­ளது. தற்­போது புதி­தாக உரு­வாக்­கப்­ப­டு­கின்ற சட்­ட­மூலம் தொடர்­பா­கவும் விமர்­ச­னங்கள் உள்­ளன. இந்த விட­யங்­களை ஆராய்ந்து சர்­வ­தேச தரத்­திற்கு அமைய புதிய சட்­ட­மூ­லத்தை அர­சாங்கம் கொண்­டு­வ­ர­வேண்டும் என்று பென் எமர்ஷன் குறிப்­பிட்­டுள்ளார்.

இது இவ்­வாறு இருக்க ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் கடந்த 36 ஆவது மனித உரிமை பேரவை கூட்டத் தொடரின் ஆரம்ப அமர்வில் உரை­யாற்­றும்­போது பல்­வேறு கார­சா­ர­மான விட­யங்­களை முன்­வைத்­தி­ருந்தார்.

அதா­வது இலங்கை அர­சாங்கம் காணா­மல்­போனோர் தொடர்­பான அலு­வ­ல­கத்தை உட­ன­டி­யாக நிறு­வ­வேண்டும் என்று அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கின்றேன். விசே­ட­மாக இரா­ணு­வத்­தினால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள காணி­களை உட­ன­டி­யாக விடு­விக்­க­வேண்டும். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தினால் பதி­வு­செய்­யப்­பட்­டுள்ள வழக்­கு­களை உட­ன­டி­யாக தீர்க்­க ­வேண்டும்.

அது­மட்­டு­மன்றி ஐ.நா. மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட 30/1 பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­த­வேண்டும். அத­னூ­டாக பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை அர­சாங்கம் உரு­வாக்கி அதன் செயற்­பா­டு­களை ஒரு கால­நேர அட்­ட­வ­ணைக்குள் செயற்­ப­டுத்­த­ வேண்டும்.

இலங்­கை­யா­னது சர்­வ­தேச மனி­தா­ பி­மான சட்டம் மற்றும் சர்­வ­தேச மனித உரிமை சட்­டங்கள் மீறப்­பட்­ட தாகக்கூறப்­படும் விடயத்தில் நம்­ப­க­ர­மான பொறுப்­புக்­கூறல் பொறி­ மு­றையை முன்­னெ­டுக்­கா­விடின் இந்த விவ­காரம் சர்­வ­தேச நியா­யா­திக்­கத்தை நோக்கிப் பய­ணிக்கும் இவ்­வாறு செய்ட் அல் ஹுசேன் சுட்டிக்காட்டியிருந்தார்.   

அந்தவகையில் அரசாங்கத்துக்கு பாதகம் மற்றும் சாதகமான நிலையில் சர்வதேச நகர்வுகள் காணப்படுகின்றன. ஆனால் பாதிக் கப்பட்ட மக்களை பொறுத்தவரை இதுவரை நீதி கிடைக்காத அல்லது தாமதமடைகின்ற நிலையே நீடிக்கின்றது.

சர்வதேச மட்டத்தில் இலங்கை மீதான ஆதரிப்பு போக்கில் படிப்படியாக மாற்ற ங்கள் வருவதாக கூறப்பட்டபோதிலும் அவை பாதிக்கப்பட்ட மக்களின் நலன்கருதியாக அமைகின்றனவா என்பதே இங்கு முக்கி ய மாகும். ஆனால் தற்போதைய நிலைமையில் சர்வதேசத்தின் போக்கை கண்டு அரசா ங்கம் விழித்துக்கொள்ளவேண்டியது அவசியமா கும்.

தொடர்ந்தும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை வழங்­காமல் அர­சாங்கம் இழுத்­த­டிக்கும் நிலை­மையை கடை­ப்பி­டிக்­கு­மானால் அது மேலும் நெருக்­கு­தல்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக அமைந்­து­விடும். இலங்­கையின் விவ­காரம் தற்­போ­தைய நிலை­மையில் ஐக்­கிய நாடுகள் பாது­காப்பு சபைக்கு போகா­வி­டினும் ஆய்­வா­ளர்கள் கூறும் வகையில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் அழுத்­தங்கள் அதி­க­ரிக்­கலாம். எதிர்­வரும் காலங்­களில் அழுத்­தங்கள் அதி­க­மா­கவே வரலாம்.

எனவே அர­சாங்கம் தற்­போ­தைய நிலை­மையில் விழித்­துக்­கொண்டு அதற்­கேற்ற வகையில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் நலன்­க­ருதி விரைவாக நடவடிக்கைகளை எடுக்கின்றதா என்று பார்ப்போம்.

ரொபட் அன்­டனி

http://epaper.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.