Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் இரு நாட்களில் 1-1/2 இலட்சம் மக்கள் இடம்பெயர்வு

Featured Replies

மட்டக்களப்பில் இரு நாட்களில் 1-1/2 இலட்சம் மக்கள் இடம்பெயர்வு

[

மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி கடந்த வியாழக்கிழமை முதல் இடம்பெற்று வரும் பாரிய படை நகர்வுகளையடுத்து ஒரு இலட்சத்து 30,000 க்கும் மேற்பட்ட மக்கள் வீடு வாசல்களை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்தப் படை நடவடிக்கை மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 30 வீதமான மக்கள் கடந்த இரு நாட்களில் பாரிய இடப்பெயர்வைச் சந்தித்துள்ளதாக மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருக்கும் படுவான்கரை பகுதி நோக்கி கடந்த வியாழக்கிழமை மிகக் கடுமையான ஷெல் தாக்குதலையும் பல்குழல் ரொக்கட் தாக்குதலையும் நடத்தியவாறு இரு முனைகளில் பாரிய படை நகர்வு ஆரம்பமானது.

செங்கலடியிலிருந்து மட்டக்களப்பு- பதுளை வீதியை (ஏ-15) மையமாக வைத்தே இந்தப் படை நகர்வு இடம்பெற்றது.

செங்கலடியிலிருந்து கறுத்தப்பாலம் ஊடாக ஏ-15 வீதியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள கொடுவாமடு நோக்கியும், அம்பாறை மாவட்டத்தின் எல்லையிலிருக்கும் புல்லுமலை ஊடாகவுமே முதல் நாள் இந்தப் படை நகர்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பு- திருகோணமலை வீதியில் வாழைச்சேனை முதற்கொண்டு மட்டக்களப்பு வரையான பல கிலோமீற்றர் தூரங்களிலுள்ள பத்திற்கும் மேற்பட்ட படை முகாம்களிலிருந்து ஒரே நேரத்தில் புலிகளின் பகுதிகளை நோக்கி மிக உக்கிர ஷெல் தாக்குதலையும் பல்குழல் ரொக்கட் தாக்குதலையும் நடத்தியவாறே இந்த பாரிய படைநகர்வு முயற்சி இடம்பெற்றது.

வியாழக்கிழமை காலை ஆரம்பித்த இந்த ஷெல் மற்றும் ரொக்கட் தாக்குதல்கள் நேற்றுக் காலையும் தொடர்ந்தன. மக்கள் குடியிருப்புப் பகுதிகளை இலக்கு வைத்தே இந்த ஷெல் தாக்குதல்கள்

இடம்பெற்று வருவதாக வீடு வாசல்களிலிருந்து உடுத்த உடுப்புடன் வெளியேறி மட்டக்களப்பு நகர் பகுதிக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்கள் தெரிவித்தனர்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தையும் தவறவிடாது மிகக் கடுமையான ஷெல் தாக்குதல் நடைபெற்று வருவதாக இவர்கள் தெரிவித்தனர்.

செங்கலடியிலிருந்து கறுத்தப்பாலம் ஊடாக முன்னேறிய படையினர் வியாழக்கிழமையே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாக புலிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, புல்லுமலைப் பகுதியூடாகவும் புளுக்குணாவ பகுதியிலிருந்து உன்னிச்சையூடாகவும் நகரும் முயற்சிகளில் படையினர் ஈடுபட்டனர்.

வெள்ளிக்கிழமை புல்லுமலைப் பகுதியில் கடும் மோதல்கள் நடைபெற்ற நிலையில் பலத்த இழப்புகளுடன் படையினர் பின்வாங்கியதாக புலிகள் தெரிவித்தனர்.

இங்கு தாங்கள் மேற்கொண்ட மிகக் கடுமையான தாக்குதலில் 20 இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் இதில் ஆறு படையினரது சடலங்களையும் பல ஆயுதங்களையும் தாங்கள் கைப்பற்றியதாகவும் புலிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை மோதல்களில் 20 இற்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டதாக படையினர் கூறினர்.

இந்நிலையில் உன்னிச்சை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்றும் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்றன. ஏனைய பகுதிகளில் மோதல்கள் தணிந்திருந்தன.

நேற்றுக் காலை வரை மட்டுநகர் பகுதியிலிருந்து பலத்த ஷெல் தாக்குதல்கள் நடைபெற்றன. காலைக்குப் பின்னர் ஷெல் தாக்குதல் குறைந்திருந்தது.

124 கிராம சேவகர் பிரிவு மக்கள் இடம்பெயர்வு

இதேநேரம், வியாழக்கிழமைக்குப் பின்னரான ஷெல் தாக்குதல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதலால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள 124 கிராம சேவகர் பிரிவுகளிலிருந்து 1,30,000 க்கும் மேற்பட்ட மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி இடம்பெயர்ந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத் தகவல்கள் நேற்று தெரிவித்தன.

இது முழு மாவட்ட சனத்தொகையின் 30 சதவீதமென்றும் தெரிவிக்கப்பட்டது.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் 1,62,613 பேர் வாழ்வதாகவும் இதில் 95 வீதத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மாவட்ட செயலகத் தகவல்களின் படி,

வவுணதீவு பிரதேச செயலர் பிரிவிலுள்ள 7,846 குடும்பங்களைச் சேர்ந்த 30,025 பேரும், வெல்லாவெளி பிரதேச செயலர் பிரிவிலுள்ள 10,226 குடும்பங்களைச் சேர்ந்த 41,590 பேரில் 39,300 பேரும் (ஏனைய 2,290 பேரும் ஏற்கனவே இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசிக்கின்றனர்), பட்டிப்பளை பிரதேச செயலர் பிரிவிலுள்ள 6,651 குடும்பங்களைச் சேர்ந்த 25,644 பேரும், கிரான் பிரதேச செயலர் பிரிவில் (புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி) 4,290 குடும்பங்களைச் சேர்ந்த 20,074 பேரும், ஏறாவூர் பற்று பிரதேச செயலர் பிரிவில் (12 கிராம சேவகர் பிரிவு) 5,362 குடும்பங்களைச் சேர்ந்த 23,653 பேரும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இடம் பெயர்ந்து வந்துள்ளனர்.

மிக மோசமான ஷெல் தாக்குதல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதலுக்கு அஞ்சியே இவர்கள் இங்கு இடம்பெயர்ந்துள்ளனர். ஒரிரு நாட்களில் ஏற்பட்ட பாரிய இடப்பெயர்வு இதுவாகும்.

இவ்வாறு இடம் பெயர்ந்து இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்த மக்களில் மிகக் குறைந்தளவானோரே ஓரளவு இருப்பிட வசதிகளைப் பெற்றுள்ளனர். ஏனையோர் இருப்பிட வசதியின்றி வீதியோரங்கள், மரநிழல்கள், பாடசாலைகள் மற்றும் கோயில்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

தொண்டர் அமைப்புகளும் மிகக் குறைந்தளவிலேயே உதவிகளைச் செய்துள்ளன.

இடம் பெயர்ந்த மக்கள் தேத்தாதீவு, கல்லாறு, செட்டிபாளையம், குருக்கள்மடம், கிரான்குளம் பகுதிகளிலும் தஞ்சமடைந்துள்ளதுடன் இருக்க இடமின்றி அலைந்து திரிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஷெல்கள் விழாத இடங்களே இல்லையென்பதால், இவ்வாறு தாங்கள் இடம் பெயர்ந்திருக்காவிடின் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாமென்றும் மக்கள் தெரிவித்தனர்.

இதேநேரம் அம்பாறை கொண்டைவெட்டுவான் முகாமிலிருந்தும் அரந்தலாவ மற்றும் புளுக்குணாவ முகாம்களிலிருந்தும் ஷெல் தாக்குதல்கள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது

f_baticalm_fb66802.jpg

http://www.thinakkural.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.