Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேள்விக்குள்ளாகியுள்ள வீட்டுச் சின்னமும் ஒற்றுமையும்

Featured Replies

கேள்விக்குள்ளாகியுள்ள வீட்டுச் சின்னமும் ஒற்றுமையும்

 

தமிழ் மக்­களின் ஆயுத ரீதி­யான உரிமைப் போராட்டம் 2009 ஆம் ஆண்டு மௌனிக்கச் செய்­யப்­பட்­டதன் பின்னர் தமிழ்த் தேசிய அர­சி­யலை கொண்டு செல்ல வேண்­டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தோள்­களில் தானா­கவே வந்து இறங்­கி­யது. தமி­ழீழ விடு­தலைப்புலிகள் இருந்த காலத்தில் அவர்­க­ளது ஆத­ர­வுடன் உரு­வாக்­கப்­பட்டு ஜன­நா­யக ரீதி­யாகச் செயற்­பட்ட அமைப்­பா­கவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு செயற்­பட்டு வந்­த­மையே அதற்கு காரணம். 2001 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உரு­வா­கிய போது தமிழர் விடு­தலைக் கூட்­டணி, அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ், ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி (ஈ.பி.­ஆர்­.எல்.எப்.), தமி­ழீழ விடு­தலை இயக்கம் (ரெலோ) ஆகிய நான்கு கட்­சி­களின் கூட்­டா­கவே அது இருந்து வந்­தது. தமிழர் விடு­தலைக் கூட்­டணியின் உத­ய­சூ­ரியன் சின்­னத்­தி­லேயே முதலில் தேர்­தலில் களம் இறங்­கி­யது. தமிழர் விடு­தலைக் கூட்­டணி தலைவர் வீ.ஆனந்­த­சங்­க­ரி­யுடன் ஏற்­பட்ட கருத்­தியல் முரண்­பாட்டின் கார­ண­மாக அந்த கட்­சியின் உத­ய­சூ­ரியன் சின்னம் கைவி­டப்­பட்டு தமி­ழ­ரசுக் கட்­சியின் வீட்டுச் சின்னம் 2004 ஆம் ஆண்டு தேர்­தலில் தூசி தட்டு எடுக்­கப்­பட்­டது. அன்­றி­லி­ருந்து கடந்த 13 வருட கால­மாக தமிழ் மக்கள் தமது தலை­மை­களின் ஒற்­று­மைக்கு வழங்­கிய சின்­ன­மா­கவே வீட்டுச் சின்னம் இருந்து வரு­கின்­றது. கடந்த காலங்­களில் இந்த கூட்­டுக்­க­ளுக்குள் ஏற்­பட்ட முரண்­பா­டு­களும், கருத்­தியல் மோதல்­களும் பிள­வு­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­த­துடன், சில புதிய கூட்­டுக்­க­ளையும் கூட்­ட­மைப்பு ஏற்­ப­டுத்தி கொண்­டது. ஒரு சிறிய குடும்பம் ஒன்­றுக்­குள்­ளேயே ஆயிரம் கருத்து வேறு­பா­டு­களும், முரண்­பா­டு­களும் உள்ள நிலையில் பல கட்­சி­களின் கூட்­டாக இருப்­ப­வர்­க­ளிடம் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­வது என்­பது தவிர்க்க முடி­யா­தவை தான். ஆனாலும் அந்த பிரச்­சி­னைகள் எவ்­வாறு ஏற்­பட்­டன...?, அதனை தீர்ப்­ப­தற்­கான வழி­வ­கைகள் என்ன...? என்­பது குறித்து அதன் தலைமை கவனம் செலுத்­தாமை அல்­லது தலை­மையின் வினைத்­தி­ற­னற்ற செயற்­பாடே அதில் பிள­வு­களை ஏற்­ப­டுத்­தி­யது என்­பதை ஏற்றுக் கொண்டே ஆக­வேண்­டி­யுள்­ளது.

2009 ஆம் ஆண்டு முள்­ளி­­வாய்க்கால் பேர­வலம் ஏற்­பட்ட பின்னர் 2010 ஆம் ஆண்டு தேர்­த­லுக்­கான நட­வ­டிக்­கைகள் தீவிரம் பெற்ற நிலையில் இந்­தி­யாவின் நிகழ்ச்சி நிரலை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தலைமை ஏற்றுக் கொண்­டது. விடு­தலைப் புலி­களால் கட்சி சாராத வகை யில் கூட்­ட­மைப்­புக்குள் உள்­வாங்­கப்­பட்­ட­வர்கள் 2010 இல் வேறு வேறு கார­ணங்­களை கூறி கூட்­ட­மைப்பு தலைவர் இரா.சம்பந்தன் அவர்­களால் வெளி­யேற்­றப்­பட்­டனர். அதில் சிலர் தமது இருப்­புக்­காக அர­சுடன் சேர்ந்­த­துடன், சிலர்  தமிழ்த் தேசிய அர­சி­யலில் இன்றும் தமிழ் தேசிய மக்கள் முன்­னணி என்ற கட்­சி­யுடன் இணைந்து பய­ணிப்­பதை காண முடி­கி­றது. 

2010 ஆம் ஆண்டே சம்பந்தன் தரப்­புடன் ஏற்­பட்ட கருத்து மோத­லை­ய­டுத்து கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ் கூட்­ட­மைப்பில் இருந்து வெளி­யே­றி­யது. இன்று அந்த அமைப்பு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் செயற்­பாட்­டுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய ஒரு தரப்­பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணி­யாக செயற்­ப­டு­கின்­றது. இருப்பின் அவர்­க­ளது செயற்­பா­டுகள் அடி­மட்ட மக்­களை சென்­ற­டை­யா­மையும், மக்கள் மயப்­ப­டுத்­தப்­பட்ட நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டா­மையும் அவர்­களால் ஒரு மாற்று அணி­யாக இன்று வரை எழுச்சி பெற முடி­யாமல் இருக்­கின்­றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி 2010, 2015 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களில் அகில இலங்கை தமிழ் காங்­கி­ரஸின் சைக்கிள் சின்­னத்தில் போட்­டி­யிட்ட போதும் அவர்­களால் ஒரு ஆச­னத்தை கூட பெற முடி­யாத நிலை ஏற்­பட்­டது. அவர்கள் கடந்த காலங்­களில் இடம்­பெற்ற உள்­ளூ­ராட்சி தேர்­தல்கள் எதிலும் போட்­டி­யி­டா­மையும், அந்த கட்­சியின் அடி­மட்ட கட்­ட­மைப்பு வலுப்­பெ­றா­மையும் அவர்­களின் தோல்­விக்கு கார­ண­மாக அமைந்­தது. அவர்­க­ளது தொடர் தோல்­வியே, கொள்­கைசார் மற்றும் கருத்­தியல் முரண்­பா­டுகள் உள்ள போதும் கூட்­ட­மைப்­புக்குள் இருந்து பங்­கா­ளிக் ­கட்­சிகள் வெளி­யேற தயக்கம் காட்­டு­வ­தற்கு காரணம். தமது எதிர்­கால அர­சியல் இருப்பு கேள்­விக்­கு­றி­யாகி விடுமோ எனவும் பங்­காளிக் கட்­சிகள் அச்சம் கொள்­கின்­றன. இதுவே அவர்கள் கூட்­ட­மைப்பில் இருந்து அதா­வது தமி­ழ­ரசுக் கட்சி அணியில் இருந்து வெளி­யேற முடி­யா­மைக்கு காரணம். குறிப்­பாக மக்கள் ஐக்­கி­யத்தை விரும்­பிய நேரத்தில் அதற்கு எதி­ராகச் செயற்­பட்டு தனித்து நின்ற கார­ணத்­தி­னா­லேயே 2010 ஆம் ஆண்டு நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் புளொட் அமைப்பு மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்­டது. ஆனால் 2012 ஆம் ஆண்டு கூட்­ட­மைப்­புக்குள் வந்த பின் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தனது கட்சி சார்பில் இரண்டு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை அது பெற்­றி­ருக்­கின்­றது என்­பதும் இங்கு கவ­னிக்­கத்­தக்­கது.

2012 இற்கு பின்னர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு என்­பது, புளொட் மற்றும் தமிழர் விடு­தலைக் கூட்­டணி என்­பன உள்­வாங்­கப்­பட்டு ஐந்து கட்­சி­களின் கூட்­டாக  இருந்­தது. 2013 ஆம் ஆண்டு நடை­பெற்ற வடக்கு மாகா­ண ­சபைத் தேர்தல் தோல்­வி­யுடன் ஆனந்தசங்­கரி தலை­மை­யி­லான தமிழர் விடு­தலைக் கூட்­டணி கூட்­ட­மைப்பில் இருந்து மாய­மா­கி­யது. அதன் பின்னர் நான்கு கட்­சி­களின் கூட்­டாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இருந்து வரு­கின்­றது. இதில் மூன்று கட்­சிகள் தனித் தமி­ழீழம் கேட்டு ஆயுத வழிப் போராட்­டத்தை முன்­னெ­டுத்து மீண்டும் ஜன­நா­யக நீரோட்­டத்­திற்குள் திரும்­பி­ய­வர்கள். தமி­ழ­ரசுக் கட்சி அன்று முதல் மித­வாத கட்­சி­யாக இருந்து வரு­வ­துடன், இளை­ஞர்கள் ஆயுதம் ஏந்­து­வ­தற்கும் அந்த கட்­சியே கார­ண­மா­கவும் இருந்­தி­ருக்­கி­றது. இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு என்­பது இன்­று ­வரை ஒரு கட்­சி­யாக பதிவு செய்­யப்­ப­டாது வெறும் தேர்தல் கூட்­டா­கவே இருந்து வரு­கின்­றது. கொள்கை ரீதி­யான உடன்­பா­டுகள் எவையும் பங்­கா­ளிக் ­கட்­சி­க­ளிடம் ஏற்­ப­ட­வில்லை. கூட்டு கட்­சி­க­ளி­டையே கட்சி ஜன­நா­யகம் பாது­காக்­கப்­ப­ட­வில்லை. தன்­னிச்­சை­யா­கவே தலைமை செயற்­பட்டு வரு­கின்­றது. இத­னா­லேயே கூட்­ட­மைப்­புக்குள் முரண்­பா­டுகள் ஏற்­பட்டு வரு­கி­ன்றன. 

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் 2010ஆம் ஆண்டு முதல் முரண்­பா­டுகள் ஏற்­பட்டு வரு­கின்­றது. அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ் வெளி­யே­றிய பின்­னரும் கூட ஏனைய பங்­கா­ளிக்­ கட்­சிகள் தமி­ழ­ரசு கட்­சி­யுடன் முரண்­பட்டு உள்­ள­துடன், அக் கட்­சியின் செயற்­பாடு குறித்தும், தலை­மையின் செயற்­பாடு குறித்தும் விமர்­சித்தும் உள்­ளன. தேர்­தல்கள் வரு­கின்ற போது வேட்­பாளர் பங்­கீட்டில் கூட பல முரண்­பா­டுகள் எழுந்­தி­ருக்­கின்­றன. ஆனால் அந்த சந்­தர்ப்­பங்­களில் தமி­ழ­ரசுக் கட்­சியின் எதேச்­ச­தி­கார போக்கை பங்­காளிக் கட்­சிகள் கண்­டித்த போதும், ஒற்­று­மைக்­காக விட்டுக் கொடுத்தே செயற்­பட்­டி­ருக்­கின்­றன. 2015 ஆம் ஆண்டு ஜெனிவா விவ­காரம் முதல் இவ்­வாண்டு ஜெனிவா மனி­த­வு­ரி­மைகள் பேர­வையில் இலங்கை அர­சாங்­கத்­திற்கு இரண்டு வருட காலஅவ­காசம் வழங்­கு­வ­தற்கு தமி­ழ­ரசுக் கட்சி இணக்கம் தெரி­வித்­தது வரை­யி­லான செயற்­பா­டு­களை பங்­கா­ளிக்­ கட்­சிகள் எதிர்த்து இருந்­தன. ஆனாலும் அவை கூட்­ட­மைப்­பா­கவே செயற்­பட விரும்­பின. புதிய அர­சி­ய­ல­மைப்பில் தமிழ் மக்­க­ளுக்கு நிலை­யான தீர்வு கிடைக்கும் என கூட்­ட­மைப்பு தலைமை கூறி­ வந்த நிலையில் தமக்குள் ஏற்­ப­டு­கின்ற பிளவு அந்த தீர்வு முயற்­சியை குழப்பி விடக்­ கூ­டாது என்­பதற்­கா­கவே அந்த ஒற்­றுமை நீடித்­தது. 

ஆனால், புதிய அர­சியல் அமைப்பின் இடைக்­கால அறிக்கை வெளி­யா­கி­யுள்ள நிலையில் அதில் தமிழ் மக்­க­ளது அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் சமஷ்டி தீர்வோ, வடக்கு - கிழக்கு இணைப்போ இல்லை. தொடர்ந் தும் பௌத்­தத்­திற்கே முத­லிடம் போன்ற விட­யங்கள் தமிழ் மக்கள் மத்­தியில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. தமிழ்­மக்கள் தரப்பில் புத்­தி­ஜீ­விகள் தொடக்கம் சாதா­ரண மக்கள் வரை அதை எதிர்த்து விமர்­சித்து வரு­கின்­றனர். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பெயரால் தமி­ழ­ரசுக் கட்சி அதனை ஆத­ரித்து வரு­கின்­றது. இது கூட்­ட­மைப்பின் கொள்கை என்ன என்ற கேள்­வியை எழுப்­பி­யி­ருக்­கின்­றது. தன்னால் தேர்தல் காலங்­களில் வெளி­யி­ டப்­பட்ட தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் இருந்து தமி­ழ­ரசுக் கட்சி வில­கியே செயற்­பட்டு வரு­கின்­றது. இத்­த­கைய நிலை­யி­லேயே அங்­கத்­துவக் கட்­சி­களில் ஒன்­றா­கிய ஈ.பி­.ஆர்­.எல்.எப். கட்சி தமி­ழ­ரசுக் கட்­சி­யுடன் இணைந்து தேர்­தல்­களில் போட்­டி­யிட முடி­யாது என அறி­வித்­தி­ருக்­கின்­றது. 

சமஷ்டி கட்சி என்று அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற தமி­ழ­ரசுக் கட்சி விடு­தலைப் புலி­க­ளுக்கு பின்­ன­ரான தற்­போ­தைய சூழலில் தனது தீர்வுப் பாதை குறித்து அதா­வது தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வு குறித்து மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்த தவ­றி­யி­ருக்­கின்­றது. தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வு எத்­த­கை­யது என்­பது குறித்தும், புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை குறித்தும் அந்த கட்சி தனது பங்­காளிக் கட்­சி­க­ளுடன் கலந்­தா­லோ­சித்து முடி­வெ­டுக்­க­வில்லை. கடந்த ஒரு­ ச­தாப்த கால உரிமை போராட்­டத்தை தமி­ழ­ரசுக் கட்சி எங்கு நோக்கி நகர்த்­து­கின்­றது என்ற கேள்வி இயல்­பா­கவே பல­ரி­டமும் எழுந்­தி­ருக்­கின்­றது. தமி­ழ­ரசுக் கட்­சியின் இத்­த­கைய செயற்­பா­டுகள் பங்­காளிக் கட்­சிகள் மத்­தியில் அதி­ருப்தி நிலை­யையும் உரு­வாக்­கி­யுள்­ளது. 

2015 ஆம் ஆண்டு இந்த நாட்டில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்தை தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தலைமை குறிப்­பாக தமி­ழ­ரசுக் கட்சி மேற்­கொள்ளும் இணக்க அர­சியல் பல்­வேறு சந்­தே­கங்­க­ளையும், விமர்­ச­னங்­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. இன்று தமிழ் மக்கள் காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்கு நீதி வேண்­டியும், தமது நிலங்­களை மீட்டுத் தர கோரியும், அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­கா­கவும் கடந்த 9 மாதங்­க­ளாக போராடி வரு­கின்­றார்கள். நல்­லாட்சி எனப்­படும் இந்த அர­சாங்­கத்­துடன் இணங்க அர­சியல் செய்யும் கூட்­ட­மைப்பால் இதற்­கான ஒரு தீர்­வினைப் பெற்றுக் கொடுக்க முடி­யாத நிலை தொடர்­கி­றது. இதனால் மாற்றுத் தலைமை பற்­றிய சிந்­த­னை­களும், கருத்­துக்­களும் மக்­க­ளாலும் பர­வ­லாக முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது. 

மாற்­றுத்­த­லைமை பற்­றிய கருத்­துக்­களை தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணியும், ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணியும் பகி­ரங்­க­மாக முன்­வைத்து வரும் நிலையில் தற்­போது தமி­ழ­ரசுக் கட்சி எதி­ராக பல­மான ஒரு கூட்டை உரு­வாக்­கு­வது தொடர்­பிலும் பேச்­சுக்கள் இடம்­பெ­று­கி­றது. ஐந்து கட்சி, நான்கு கட்சி என­வி­ருந்த கூட்­ட­மைப்பு தற்­போது தமி­ழ­ர­சுக்­கட்சி, ரெலோ, புளொட் என்கின்ற மூன்று கட்சிகளின் கூட்டாக இருப்பதுடன், அதில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) மட்டுமே ஆரம்பம் முதல் அங்கத்துவம் பெற்ற கட்சியாகவும் உள்ளது. கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது இருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து அதாவது தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேறி வெளியில் நிற்கின்றன. இவை அனைத்தும் கொள்கை ரீதியில் ஒன்று சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற கட்சியை பதிவு செய்ய முடியாத நிலையிலேயே இருக்கின்றன. 

ஆக, தமிழ்த் தேசிய இனத்தை பொறுத்த வரை இன்று தமது உரிமை போராட்டத்தை காத்திரமாகவும், வினைத்திறனுடனும் கொண்டு செல்வதற்கு ஒரு தலைமை இல்லாத நிலையே உணரப்படுகின்றது. அந்த வெற்றிடத்தை நிரப்பி தமிழ்த் தேசிய அரசியலை முன்னகர்த்தப்  போவது யார் என்பதே தற்போதைய கேள்வியாகவுமுள்ளது. உரிமைக்காக குரல் கொடுக்க மக்கள் தயாராக இருக் கின்ற போதும் அவர்களை வழிகாட்ட ஒரு தலைவன் இல்லாமை தமிழ் மக்க ளின் சாபக்கேடே. 

ருத்­திரன்

http://epaper.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.