Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அமைப்பு நிர்ணய சபையை உடனடியாக கலையுங்கள்

Featured Replies

அரசியல் அமைப்பு நிர்ணய சபையை உடனடியாக கலையுங்கள்

1-3c5d682fa064be40b793e22f89e0b993373f2b54.jpg

 

சபாநாயகர் கருவுக்கு முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ கடிதம்
(ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்)

அர­சி­ய­ல­மைப்பு சபையின் உரு­வாக்­க­மா­னது செல்­லு­ப­டி­யற்­ற­தாகும். வழி­ந­டத்தல் குழுவின் அறிக்­கைகள், உப­கு­ழுவின் அறிக்கைகள் என்­பன அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணா ­னவையாகும். ஆகவே அவையும் செல்­லு­ப­டி­யற்­ற­வை­யென சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய பகி­ரங்­க­மாக அறி­விக்க வேண்டும் என்று அவ­சர கோரிக்­கை­யொன்றை முன்­வைத்து முன்னாள் நீதி­ய­மைச்­சரும் கொழும்பு மாவட்ட ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி விஜே­தாஸ ராஜபக்ஷ கடிதம் அனுப்­பி­யுள்ளார்.  

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை சபா­நா­யகர் கரு­ஜெ­சூ­ரி­ய­வி­டத்தில் இக்­க­டிதம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தோடு அதன் பிர­திகள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­த­மர்­ரணில் விக்­கி­ர­ம­சிங்க, எதிர்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன், சபை முதல்­வர்­லக் ஷமன் கிரி­யெல்ல, ஆளுந்­த­ரப்பு பிர­த­ம­கொ­றடா கயந்த கரு­ணா­தி­லக, எதிர்­கட்சி பிர­த­ம­கொ­றடா தினே‘் குண­வர்­தன, கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்றக் குழுக்­களின் தலைவர் தினே‘் குண­வர்­தன எம்.பி, உட்­பட அனைத்­து­கட்சித் தலை­வர்கள், மதத் தலை­வர்கள் ஆகி­யோருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

மேற்­கு­றித்த விட­யங்­களை வலி­யு­றுத்தும் வகையில் அதற்­கான கார­ணங்­களை விரி­வாக குறிப்­பிட்டு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யான மைத்­தி­ரி­பா­ல­சி­றி­சேன அவ­ரது அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி அப்­போது பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை கொண்­டி­ருந்த அர­சாங்­கத்தை கலைத்து அப்­போ­தைய எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­த­ம­ராக நிய­மித்­தி­ருந்தார். அப்­போ­தைய நிலையில் பிர­தான எதிர்க்­கட்சி 41 உறுப்­பி­னர்­களை மட்­டுமே கொண்­ட­தாக இருந்­தது. அதே­நேரம் புதி­தாக உரு­வாக்­கப்­பட்ட அர­சாங்கம் மொத்­த­மாக 47 உறுப்­பி­னர்­க­ளையே கொண்­டி­ருந்­தது.

அவ்­வா­றி­ருக்­கையில், 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடை­பெற்ற பொதுத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­னணி 106 ஆச­னங்­களை பெற்­ற­தோடு ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 95 ஆச­னங்­களை பெற்­றது. இதன் கார­ண­மாக வெவ்­வே­றான இரு கட்­சி­களை சேர்ந்த இருவா ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் பத­வி­களை பெற்­றுக்­கொண்டு ஆட்­சியை நடத்­து­வ­தற்கு ஆரம்­பித்­தனர்.

புதிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டதன் பின்னர் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியைச் சேர்ந்த 95 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைக் கொண்ட அணியில் 43 உறுப்­பி­னர்­களைக் கொண்ட அணி தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரித்­த­துடன், எஞ்­சிய 53 உறுப்­பி­னர்­களைக் கொண்ட அணி­யா­னது முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்‘வை ஆத­ரித்­தது. அத­ன­டிப்­ப­டையில் எந்­த­வொரு நிலை­யிலும் அல்­லது அர­சியல் விதி­களின் பிரா­கரம் இதனை கூட்டு அர­சாங்கம் என்று அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட வேண்டுமே. தவிர தேசிய அர­சாங்­க­மொன்­றாக கரு­தப்­பட முடி­யாது. இந்­நி­லையில் புதி­தாக அமைக்­கப்­பட்ட அர­சாங்­க­மா­னது தேசிய அர­சாங்­க­மாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டது.

ஐக்­கிய தேசியக் கட்­சி­யா­னது இன்­னு­மொரு அர­சியல் கட்­சி­யி­னூ­டாக 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கள­மி­றக்­கி­யி­ருந்­தது. அதன் பிரா­கரம் பரந்­த­ள­வி­லான இணக்­கப்­பா­டு­க­ளுக்கு அமை­வாக தற்­போ­துள்ள அர­சி­ய­ல­மைப்பில் மூன்று பெரும் மாற்­றங்­களை செய்­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்தார்.

ஜனா­தி­பதி பத­விக்கு அளிக்­கப்­பட்­டுள்ள நிறை­வேற்று அதி­கா­ரங்­களில் மிகை­யா­ன­வற்றை அகற்­று­வது என்றும் அவ்­வா­றான அதி­கா­ரங்­களை புதி­தாக உரு­வாக்­கப்­படும் அர­சி­ய­ல­மைப்பு பேரவை, சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் மற்றும் அமைச்­ச­ர­வைக்கு வௌிப்­ப­டைத்­தன்மை மற்றும் நல்­லாட்சி கொள்­கை­களின் அடிப்­ப­டையில் பகிர்ந்­த­ளிப்­பது என்றும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பொன்று தேவைப்­ப­டாத திருத்­தங்­க­ளுக்கு மட்­டுமே அவ்­வா­றான திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­படும் என்றும் வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்­டது.

அடுத்­தாக அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யொன்றும் புதிய சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களும் அமைக்­கப்­படும் என்றும் நடப்­பி­லி­ருந்த ஆணைக்­கு­ழுக்­களின் சுயா­தீ­னத்­தன்­மையை வலுப்­ப­டுத்­து­வ­தாக அது அமையும் என்றும் வாக்­கு­றதி அளித்­தி­ருந்தார்.

மேலும் பாரிய மோச­டி­க­ளுக்கு வாய்ப்­பாக அமைந்­தி­ருந்த விகி­தா­சா­ர­தேர்தல் முறை­மைக்கு பதி­லாக தொகுதி முற­மை­யி­லான தேர்தல் முறை­மை­யொன்று கொண்­டு­வ­ரப்­படும். அத்­தேர்தல் முறை­மை­யா­னது மக்கள் தங்­க­ளது தேர்தல் தொகு­திக்கு பொறுப்­பான பிர­தி­நி­தி­களைத் தெரிவு செய்து கொள்ள முடியும் எனவும் மறு­பக்­கத்தில் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு நியா­ய­மான பிர­தி­நி­தித்­து­வங்­களை உறுதி செய்­வ­தற்­கான விகி­தா­சார முறை­மை­யொன்றை கொண்­ட­ஒ­துக்­கீ­டொன்று காணப்­ப­டு­மென்றும் அவர் உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.

அந்த வாக்­கு­று­தி­களின் பிர­காரம் இரு மாற்­றங்­க­ளையும் புர்த்தி செய்­வதில் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திக­தி­யன்று பாரா­ளு­மன்­றத்தின் அனைத்து உறுப்­பி­னர்­க­ளதும் ஆத­ர­வுடன் 19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் நிறை­வேற்­றப்­பட்­டது. எனினும் உலகம் முழு­வ­திலும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட விதி­மு­றைகள் மற்றும் சாச­னங்­களை கருத்திற் கொள்ளும் போது, 2015 ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்­தலில் குறித்த எந்­த­வொரு அர­சியல் கட்­சியும் அத­னது தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு மக்­க­ளி­ட­மி­ரு்­நது ஆணை­யொன்றை பெற்­றி­ருக்­க­வில்லை என்­பது மறு­த­லிக்க முடி­யாத உண்­மை­யாகும்.

ஆகவே ஐக்­கிய தேசியக் கட்­சியோ அல்­லது ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியோ அவர்­க­ளது கொள்கை அடிப்­ப­டை­யி­லான விஞ்­ஞா­ப­னங்­க­ளுக்கு மக்கள் ஆணை­யொன்றை பெற்­றி­ருக்­க­வில்லை. அவ்­வா­றான நிலை­யி­லேயே 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி 6.2 மில்­லியன் மக்­களால் ஜனா­தி­ப­திக்கு வழங்­கப்­பட்ட மக்கள் ஆணைக்கு மதிப்­ப­ளித்து புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றை அர­சாங்கம் நிறை­வேற்ற வேண்டும் என்ற விவா­த­மொன்று தற்­போது நடை­பெற்­ற­வண்­முள்­ளது.

எனினும், ஜனா­தி­பதி நிறை­வேற்று அதி­கா­ரத்தின் தலை­மை­யாக இருக்­கின்ற போதிலும், அவர் சட்­ட­வாக்­கத்தின் தலை­மை­யாக இல்லை, பாரா­ளு­மன்­றத்தின் தலை­மை­யாக பிர­தமர் இருக்­கின்ற போதிலும், பாரா­ளு­மன்ற அலு­வல்­களின் செயற்­பா­டுகள் மற்றும் நடத்­து­த­லுக்­கான அதி­கா­ரங்கள் சபா­நா­ய­க­ருக்கே அளிக்­கப்­பட்­டுள்­ளன. ஜனா­தி­ப­திக்கு பாரா­ளு­மன்­றத்தில் அமர்­வ­தற்கும் அவ­ரது விருப்­பத்தின் போில் பங்­கு­கொள்­வ­தற்கும் தகு­தி­யு­டை­ய­வ­ராக இருக்­கின்­ற­போ­திலும் கூட அவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இல்லை என்­ப­தோடு அவ­ருக்கு வாக்­க­ளிக்கும் உரி­மையும் கிடை­யாது. தற்­போ­தைய ஜனா­தி­பதி எந்­த­வொரு அர­சியல் கட்­சி­யி­னதும் தலை­வ­ராக கள­மி­றங்­கி­யி­ருக்­க­வில்லை. அவர் அர­சியல் கட்­சி­யொன்றின் சார்­பாக ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரா­கி­யி­ருந்த சாதா­ரண நப­ரொ­ரு­வ­ரா­கவே காணப்­பட்­ட­தோடு அர­சி­ய­ல­மைப்பு மாற்­றங்­க­ளுக்கோ அல்­லது சட்­ட­தி­ருத்­தங்­க­ளுக்கோ ஆணை­கோ­ரு­வ­தற்­கான உரி­மையோ அவ­ருக்கு கிடை­யாது. அவ­ரது உரி­மை­யா­னது நிறை­வேற்று அதி­கா­ரங்­களை செயற்­ப­டுத்­து­வ­தற்கு மட்­டுமே ஏற்­பு­டை­ய­தா­க­வுள்­ளது.

அடுத்­துடன் 2015 ஆம் ஆண்­டு­ஓகஸ்ட் மாதம் நடை­பெற்­ற­தேர்­தலின் பின்னர் சுதந்­திரக் கட்­சிக்கும் ஐக்­கி­ய­ம­மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கும் அவர் தலை­வ­ரா­க­யி­ருந்த போதிலும், ஐக்­கி­ய­மக்கள் சுதந்­திர முன்­னணி என்ற கூட்­ட­ணியின் சார்பில் தொிவான 95 உறுப்­பி­னர்­களில் 43 பேர்­கொண்ட அணி­யொன்று மாத்­தி­ரமே அவ­ருக்கு ஆத­ர­வ­ளிக்­கின்­றது. 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடை­பெற்ற பொதுத் தேர்­தலின் போது ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யினால் மக்கள் மத்­தியில் முன்­வைக்­கப்­பட்ட இரு விஞ்­ஞா­ப­னங்­களின் அடிப்­ப­டையில் இரு கட்­சி­க­ளி­னதும் கொள்­கை­க­ளா­னது ஒன்­று­கொன்று முர­ணாக காணப்­ப­டு­வ­துடன், அவை இரண்­டிற்கும் இடை­யி­லான எந்­த­வொ­ருந ல்லிணக்­கத்­தையும் முற்­றாக நிரா­க­ரிப்­ப­தாக அமைந்­துள்­ளன என்ற திட்­ட­வட்­ட­மான உண்­மையை வௌிப்­ப­டுத்தி நிற்­கின்­றன ஆகிய ஆறு கார­ணங்­க­ளுக்­காக சாதா­ரண புத்­தி­யுள்ள எந்­த­வொரு நப­ராலும் கூட புரிந்­துக்­கொள்ள எந்­தச்­சட்ட அடிப்­ப­டையோ அல்­லது அர்த்­தப்­ப­டுத்­தலோ இல்லை என்­பது முக்­கி­ய­மா­னது.

இத­ன­டிப்­ப­டையில் 6.2 மில்­லியன் மக்­களின் ஆணை­யொன்று அர­சாங்­கத்­துக்கு இருப்­ப­தான விவா­த­மா­னது வெறும் அனு­மா­ன­மொன்று மட்­டுமே என்­பது மாத்­தி­ர­மின்றி சிறு­பிள்ளைத் தன­மா­ன­தாகும். 20 மில்­லியன் பிர­ஜைகள் வாழும் நாடொன்றில் ஜனா­தி­ப­திக்கு ஆணை வழங்­கிய 6.2 மில்­லியன் மக்­களின் அபி­ல­ரை‘யைப் புர்த்­தி­செய்­வ­தற்கு புதி­ய­அ­ர­சி­ய­ல­மைப்­பொன்று நிறை­வேற்­றப்­பட வேண்டும் என்று விவா­திப்­பது அபத்­த­மா­னது. அர­சி­ய­ல­மைப்பு என்­பது நாட்டின் அனைத்துப் பிர­ஜை­க­ளுக்கும் பொருத்­த­மான உய­ரிய விதி­களின் தொகுப்­பொன்­றாகும். அத்­த­கைய அர­சி­ய­ல­மைப்­பா­னது அதி­கா­ரத்தில் இருக்கும் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு மட்­டு­மா­ன­தல்ல என்­பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

அத­ன­டிப்­ப­டையில் மேலே மக்கள் ஆணையின் பிர­காரம் ஏற்­க­னவே அமைக்­கப்­பட்­ட­தாகச் சொல்ப்­படும் அர­சி­ய­ல­மைப்புச் சபை­யா­னது அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணா­னதும் சட்­ட­வி­ரோ­த­மா­ன­து­மாகும். அது­மட்­டு­மல்­லாது ஆரம்­பத்தில் இருந்தே செல்­லு­ப­டி­யற்­ற­து­மாகும். ஏற்­க­னவே சுட்­டிக்­காட்­டிய விடங்­க­ளுடன் பின்­வரும் ஐந்து விட­யங்­களும் அதனை உறுதி செய்­கின்­றன. அவை வரு­மாறு,

1. நடப்­பி­லுள்­ள­அ­ர­சி­ய­ல­மைப்­பை­ரத்­து­செய்­வ­தற்கும் புதி­ய­அ­ர­சி­ய­ல­மைப்­பொன்­றை­நி­றை­வேற்­று­வ­தற்­கு­மா­ன­ந­டை­மு­றை­யொன்றை 1978 ஆம் ஆண்டின் இரண்­டா­வ­து­கு­டி­ய­ர­சு­அ­ர­சி­ய­ல­மைப்பின் இரண்­டா­வ­து­அத்­தி­யா­யத்தின் 82 ஆவ­து­உ­றுப்­பு­ரை­யா­ன­து­கு­றிப்­பா­க­வ­ழங்­கு­கி­றது. அவ்­வா­றா­ன­அ­ர­சி­ய­ல­மைப்­பு­சட்­ட­மூ­ல­மொன்­றா­ன­து­பா­ரா­ளு­மன்­றத்தில் சபைக்­கு­ச­மூ­க­ம­ளிக்­கா­த­உ­றுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கை­யையும் சேர்த்து மூன்றில் இரண்­டு­பெ­ரும்­பான்­மை­உ­றுப்­பி­னர்­க­ள­து­ஆ­த­ர­வுடன் நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும் என்­ப­துடன்,அர­சி­ய­ல­மைப்பின் 85 ஆவ­து­உ­றுப்­பு­ரைக்­க­மை­ய­சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பொன்றின் மூலமும் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டவும் வேண்டும்.

2.பாரா­ளு­மன்­றத்தின் சட்­ட­வாக்­க­ந­டை­மு­றையில் நேர­டி­யா­க­வோ­அல்­ல­து­ம­றை­மு­க­மா­க­வோ­த­லை­யீ­டு­செய்­யக்­கூ­டி­ய­அல்­ல­து­செல்­வாக்­கு­செ­லுத்­தக்­கூ­டி­ய­எந்­த­வொ­ரு­நி­று­வனம் அல்­ல­து­அ­தி­கா­ர­ச­பையின் உரு­வாக்­க­மொன்­றை­அ­ர­சி­ய­ல­மைப்பின் 76 ஆவ­து­உ­றுப்­பு­ரை­திட்­ட­வட்­ட­மா­க­த­டுக்­கி­றது.

3.அர­சி­ய­ல­மைப்பின் ஏதே­னு­மொ­ரு­ஏற்­பாட்­டை­யா­தே­னு­மொ­ரு­பா­ரா­ளு­மன்­ற­உ­றுப்­பி­னர்­மீறும் பட்­சத்தில் அது­பா­ரா­ளு­மன்­ற­உ­றுப்­பி­ன­ரா­க­சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்­து­கொள்ளும் போது­அ­ளிக்கும் உறு­தி­மொ­ழி­மீ­தா­ன­மீ­ற­லா­க­வே­க­ரு­தப்­படும்.

4. சட்­டங்­களை இயற்­று­வ­தற்­கா­ன­பி­ரத்­யே­க­அ­தி­கா­ரங்கள் பாரா­ளு­மன்­றத்­துக்­கு­மட்­டு­மே­அ­ளிக்­கப்­பட்­டி­ருப்­ப­துடன்,அது­நீக்­கப்­ப­ட­வோ­அல்­ல­து­அந்­நி­யப்­ப­டுத்­தப்­ப­ட­வோ­மு­டி­யாது. பாரா­ளு­மன்­றத்­துக்­கு­நி­பு­ணர்­க­ளி­ட­மி­ருந்­த­உ­த­விகள் தேவைப்­படும் பட்­சத்தில் அதற்­கா­ன­ஏற்­பா­டுகள் பாரா­ளு­மன்­றத்­தினால் நிறை­வேற்­றப்­பட்­ட­நி­லை­யியற் கட்­ட­ளை­களில் வழங்­கப்­பட்­டுள்­ளன.94 ஆம் இலக்­க­நி­லை­யியற் கட்­ட­ளையின் பிர­காரம்,பாரா­ளு­மன்­ற­உ­றுப்­பி­னர்­களின் மத்­தியில் இருந்­து­சம்­பந்­த­பட்­ட­வி­ட­யத்தில் திற­மைகள் மற்றும் நிபு­ணத்­து­வத்­தை­கொண்­ட­வி­டே­ச­தொி­வுக்­கு­ழு­வொன்­றை­பொ­ருத்­த­மா­ன­ப­ரிந்­து­ரை­க­ளை­முன்­வைக்கும் நிமித்தம் நியமிப்பதற்குசபாநாயகருக்குஅதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

5. புதியஅரசியலமைப்பொன்றை இயற்றுவதற்குபோதுமானஏற்பாடுகளும் நடைமுறைகளும் அரசியலமைப்பில் வழங்கப்படடுள்ளபோதிலும்,திட்டமிட்டவகையில் அரசியலமைப்புக்குமுரணானவகையில் அரசியலமைப்புசபையொன்றுநியமிக்கப்பட்டுள்ளமையானதுநாட்டில் குழப்பமானதும் அராஜகமானதுமானநிலைமையொன்றைஏற்படுத்தியுள்ளது. இது தற்போதைய ஜனநாயகம் தொடர்பிலானமக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது. என்பனவே அவையாகும்.

அதேநேரம் தற்போதுள்ள அரசியலமைப்பில், இலங்கையின் ஆட்புலஎல்லைக்குள் தனிநாடொன்றைஉருவாக்குவதற்கு இலங்கைக்குஉள்ளோஅல்லதுவௌியிலோநேரடியாகவோஅல்லதுமறைமுகமாகவோஎந்தவொருநபரும் ஆதரவளிக்கவோ,ஊக்குவிக்கவோ,நிதியளிக்கவோஅல்லதுபரிந்துபேசவோ கூடாதுஎன்றுஅரசியலமைப்பின் 157அ(1) உறுப்பரையில் விதந்துரைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான நிலையில் 2017 ஆம் ஆண்டுசெப்டெம்பர்மாதம் 21 ஆம் திகதிபாராளுமன்றத்துக்குசமர்ப்பிக்கப்பட்டவழிநடத்தும் குழுவின் அறிக்கையின் சிலமுன்மொழிவுகளானதுஇந்தநாட்டைபிளவுப்படுத்தவழிவகுப்பதில் மறைமுகமாகவும் நேரடியாகவும் கருவியாகஅமையக்கூடும் என்பதை நீங்கள்(சபாநாயகர்) புரிந்துகொள்வீர்கள் என்றுநான் கருதுகிறேன்.

ஆகவே இந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு 2016 ஆம் ஆண்டுமார்ச் மாதம் 9 ஆம் திகதிநான் உட்பட நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் அமைக்கப்பட்ட தற்போதைய அரசியலமைப்புச் சபையை பாராளுமன்றத்தினால் இழைக்கப்பட்ட நல்லெண்ணதவறொன்று செல்லுபடியற்றதாக்குமாறோ அல்லது அறிவிக்க வேண்டும்.

அத்துடன் புதிய அரசியலமைப்புக்கான நியமிக்கப்பட்டுள்ள வழிநடத்தும் குழுவையும் அதன் அறிக்கைகளையும் உபகுழுவையும் அதன் அறிக்கைகளையும் தற்போது நடைமுறையில் உள்ள 1978ஆம் ஆண்டுக்கான இரண்டவாது குடியரசு அரசியலமைப்புக்கு முரணானது. ஆகவே அதனை செல்லுபடியற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என அக்கடித்தில் உள்ளது.  

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-14#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.