Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலாவின் அக்கா மகள்,மருமகனுக்கு சிறை

Featured Replies

சொத்து குவிப்பு,வழக்கு,சசிகலா,அக்கா,மகள்,சிறை

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலாவின் அக்கா மகள்,மருமகனுக்கு விதிக்கப்பட்ட, சிறை தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதன்படி,
சசிகலா அக்கா மகளுக்கு, மூன்று ஆண்டுகள்; 1.68 கோடி ரூபாய் சேர்த்த, மருமகனுக்கு,
ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஏற்கனவே
தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சசிகலா குடும்பத்துக்கு, அடி மேல் அடி விழுவதால், கோடிகளை குவித்த அவர்களின் சொந்தங்களுக்கு, கிலி ஏற்பட்டுள்ளது.

 

சொத்து குவிப்பு,வழக்கு,சசிகலா,அக்கா,மகள்,சிறை

ரிசர்வ் வங்கியில், அதிகாரியாக பணியாற்றியவர் எஸ்.ஆர்.பாஸ்கரன். இவரது மனைவி, சீதளாதேவி. சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகள்; தினகரனின் சகோதரி. 1998ல், பாஸ்கரனின் வங்கி லாக்கரை சோதனையிட்ட போது, அதிலிருந்த, 80தங்கக் கட்டிகள், பறிமுதல் செய்யப்பட்டன.
 

சி.பி.ஐ., வழக்கு பதிவு


வருமானத்துக்கு அதிகமாக, 1.68 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, பாஸ்கரன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், இந்த வழக்கு பதியப்பட்டது. வழக்கை விசாரித்த, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம்,

பாஸ்கரனுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை, 20 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. அவரது மனைவிக்கு, மூன்று ஆண்டு சிறை, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. 2008 ஆகஸ்டில், இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. தண்டனையை எதிர்த்து, இருவரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
 

சட்டம் அனுமதி


இந்த மனுக்களைவிசாரித்த, நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:

சொத்துக்கள் வைத்திருக்க, பொது ஊழியருக்கு சட்டம் அனுமதி அளிக்கிறது. ஆனால், அந்த சொத்துக்கள் சட்டப்படியானதாக இருக்க வேண்டும். வருமான கணக்கை காட்டாமல், வருமான வரித்துறையினரிடம் தாமதமாக வருமானத்தை தெரிவிப்பதால் மட்டுமே, அது, சட்டப்படியான வழியாகி விடாது. சொத்துக் கான வருவாய் ஆதாரங்களை, வருமான வரி சட்டத்தின்படி, பாஸ்கரன் தெரிவிக்கவில்லை.

அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனையிட்டு, ஆதாரங்களை கைப்பற்றிய பின், வருமான வரி கணக்கை, பாஸ்கரன் தாக்கல் செய்துள்ளார். அதில், வருமான விபரங்களை தெரிவிக்கவில்லை என்பதை ஏற்று, வருமான வரி செலுத்தவும் முன் வந்துள்ளார். வரி செலுத்துவதால், வரி செலுத் தாததில் இருந்து விடுவிக்கபடுகிறார். ஆனால், வருமானத்துக்கான ஆதாரம் கறைபடிந்ததாக இருந்தால், வருமான வரி செலுத்துவதால், அது சுத்தமாகி விடாது.

சட்டப்பூர்வ வருமான ஆதாரங்களையும் தாண்டி, வெளியில் காட்டாத வருமானம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆவண

 

சாட்சியங்களின்படி,இருவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களையும், சி.பி.ஐ., தரப்பு நிரூபித்துள்ளது. மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட காரணங்கள், பரிசீலனைக்கு தகுதியானதாக இல்லை.

வருமான வரித்துறை கணக்கெடுப்பின்படி, பாஸ்கரன் பெயரில்,1.14கோடி ரூபாய், அவரது மனைவி பெயரில், 56 லட்சம் ரூபாய் மதிப்பில், சொத்துக்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான சொத்துக்களின் மதிப்பீடு, ஆவணங்கள் மற்றும் வங்கி இருப்பின், அடிப்படையிலானது.

80 தங்க கட்டிகளின் மதிப்பை பொறுத்தவரை, எந்த பிரச்னையும் இல்லை. எனவே, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனை, உறுதி செய்யப்படுகிறது. மேல்முறையீட்டு மனுக்கள், தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு, நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறைத்தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில், அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. சமீபத்தில், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கு சொந்தமான, 187 இடங் களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, 1,430 கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணைக்கும், சம்பந்தப் பட்டவர்கள் அலைந்து திரிகின்றனர்.

இந்நிலையில், சசிகலா மற்றும் இளவரசிக்கு அடுத்ததாக, அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த, சீதலதேவி மற்றும் பாஸ்கரனுக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படி அடிமேல் அடி விழுவதால், கோடிகளை குவித்த, சசிகலாவின் உறவுகள், தங்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்ற, 'கிலி'யில் உள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1898314

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.