Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சிறைத்தண்டனை உறுதியானது!

Featured Replies

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சிறைத்தண்டனை உறுதியானது!

 
 
Chennai: 

சொகுசுக் கார் இறக்குமதி மோசடி வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

nadarajan
 

 

சசிகலாவின் கணவர் நடராஜன் 1994-ம் ஆண்டு லண்டனிலிருந்து, 'லெக்சஸ்' என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். புதிய காரை, ஏற்கெனவே பயன்படுத்திய பழைய கார் எனக்கூறி இறக்குமதி செய்து, வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் நடராஜன் இறக்குமதி செய்தது 1994-ல் உற்பத்தி செய்யப்பட்ட புதிய ரக கார் எனத் தெரிய வந்தது. இதன்மூலம், ரூ.1.06 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகவும் நடராஜன், அவரின் உறவினர் வி.என்.பாஸ்கரன், லண்டன் தொழிலதிபர் பாலகிருஷ்ணன் மற்றும் அவர் யோகேஷ், சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கி மேலாளர் சுஸ்ரிதா உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஐந்து பேரில் ஒருவர் தலைமறைவாகிவிட்டார்.

இதைத் தொடர்ந்து இவ்வழக்கை சி.பி.ஐ விசாரித்தது. இதனிடையே ,சொகுசு கார் இறக்குமதி தொடர்பாக அமலாக்கத்துறையும், தனியாக நடராஜன் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடந்த 2010-ல் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தண்டனையை எதிர்த்து நடராஜன் உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.  

அந்த வழக்கில், இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம் நடராஜனுக்கு விதித்த இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை உறுதிப்படுத்தியது. உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் நடராஜனுக்கு, சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது அ.தி.மு.க வட்டாரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

https://www.vikatan.com/news/tamilnadu/108103-madras-hc-upholds-two-years-sentence-awarded-to-m-natarajan-by-cbi-court.html

  • தொடங்கியவர்

சிறை தண்டனை உறுதி: நடராஜன் நீதிமன்றத்தில் சரணடைவது எப்போது?

 

 


சென்னை: சொகுசு கார் வாங்கியதில் மோசடி செய்த வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலர் சசிகலாவின் கணவர் நடராஜன் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

சட்டப்படி தீர்ப்பு வெளியான அன்றோ அல்லது அதற்கு மறுநாளோ, தண்டனை பெற்றவர்கள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். அந்த வகையில், நடராஜன் இன்று அல்லது நாளை சரணடைய வேண்டியது அவசியம்.

அதே சமயம், உடல்நிலை சரியில்லை என்றாலும், சரணடைந்த பிறகு சிறை மருத்துவமனையில்தான் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற முடியும் என்ற நிலை உள்ளது.

இந்த நிலையில், உடல்நிலை பாதித்து கவலைக்கிடமான நிலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவமனையில் இருந்து சமீபத்தில் வீடு திரும்பியவர் சசிகலாவின் கணவர் நடராஜன்.

இவர் மீது தொடரப்பட்ட சொகுசு சார் இறக்குமதி வழக்கை விசாரித்த சிபிஐ முதன்மை நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறைத் தண்டனை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, அவர் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். அவ்வாறு சரணடையாமல் விலக்குப் பெற வழி இருக்கிறதா என்பது குறித்து அலசியதில், தண்டனை பெற்றவர்கள் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். அவ்வாறு சரணடைய முடியாத அளவுக்கு உடல்நிலை பாதித்து, மருத்துவ உபகரணங்களின் உதவியின்றி ஒரு நொடியும் இருக்க முடியாது என்றால், அவர்கள் அது குறித்து நீதிபதிக்கு தகவல் தெரிவித்து ஓரிரு நாட்கள் அவகாசம் கோரலாம்.

அல்லது, மாநில ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கும் தண்டனையைக் குறைக்கக் கோரி மனு அளிக்கலாம்.

நீதிமன்ற உத்தரவுகள் வந்த பிறகு, அதனைக் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தும், தண்டனையைக் குறைக்க முறையிடலாம். ஆனால், உடனடியாக நீண்ட நாள் அவகாசம் பெற வழியேதும் இல்லை என்றே தகவல்கள் கிடைத்துள்ளன.

http://www.dinamani.com/tamilnadu/2017/nov/17/சிறை-தண்டனை-உறுதி-நடராஜன்-நீதிமன்றத்தில்-சரணடைவது-எப்போது-2809801.html

அருமை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.