Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி சிங்கள, தமிழ் மக்களுக்கு அரசு வெவ்வேறு செய்திகளை கூறுகின்றதா?

Featured Replies

இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி சிங்கள, தமிழ் மக்களுக்கு அரசு வெவ்வேறு செய்திகளை கூறுகின்றதா?

பீஷ்மர்

செய்திகளுக்கு என்றுமே அவை சொல்லப்படும் கோணங்கள் உண்டு. ஆனால் எந்தக் கோணத்தில் சொன்னாலும் ஓர் அடிப்படைச் செய்தித் தரவு இருக்கும். அது மாறுவதில்லை. மாறவும் கூடாது.

இலங்கை அரசாங்கம் குறிப்பாக அதன் வானொலிச் செய்திகளில் செய்திகளைக் கேட்கும் பொழுது சிங்கள, தமிழ் மொழிகளில் கூறப்படுவனவற்றின் வேறுபாடு திகைப்பை ஏற்படுத்துகின்றது. உதாரணமாக சனியன்று காலை அந்த வானொலிச் செய்தியில் அரசாங்கத்தின் மனிதவுரிமை மீறல்கள் பற்றிய தென்னிலங்கை நிறுவனங்கள் சில எடுக்கும் நிலைப்பாடு பலத்த விமர்சனத்துக்கு உள்ளானது. சுதந்திர ஊடக அமைப்பைச் சேர்ந்த சுனந்த தேசப் பிரிய அரசாங்கத்தின் மனிதவுரிமை மீறல்கள் சிலவற்றை முனைப்புறுத்திக் கண்டித்துள்ளமையை இராணுவ வீரர்கள் தமது இரத்தத்தாலும் வியர்வையாலும் ஈட்டிய வெற்றியை இவர்கள் கொச்சைப்படுத்துகின்றனர் என்றும் முத்துரஜாவெல சகதியிலே கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் ஐந்தும் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட கருணா குழுவினரே என்றும் நாதடுமாறாமல் எடுத்துக் கூறியது. சுதந்திர ஊடக இயக்கமும் சர்வதேசிய நிறுவனங்களும் இலங்கையின் மனிதவுரிமை மீறல்களை கண்டிப்பதை முற்றிலும் திரித்துக் கூறியது.

ஆனால், தமிழில் வந்த செய்தியறிக்கைகளே படையினரின் வெற்றியீட்டங்களை சில சர்வதேச நிறுவனங்களும் அரசசார்பற்ற நிறுவனங்களும் திரிபுபடுத்துகின்றன எனக் கூறி விடயத்தை பெரிதும் விபரிக்கவேயில்லை.

உண்மையில் இதிலே அரசாங்கத்தின் பணி பற்றிய ஓர் அடிப்படையான பிரச்சினை கிளம்புகின்றது. இலங்கை வானொலியின் சிங்கள, தமிழ் செய்தி அறிக்கைகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன. தமிழ், முஸ்லிம் கேட்போருக்குச் சிங்களம் கேட்போருக்குமிடையே செய்திக் கையளிப்பில் இதனை பாரிய வேறுபாட்டினை செய்பவர்கள் யார் என்பது முக்கிய பிரச்சினையாகும்.

பிரதான பிரதி எனப்படும் (Master Copy) ஒரு செய்தித் தயாரிப்பு இல்லையா? சிங்களத்தில் கூறப்பட்டிருப்பன அத்தனையையும் தமிழிலே கூறும் பொழுது ஏற்படக் கூடிய நாத்தயக்கம் காரணமாக தமிழ் செய்தித் தாயரிப்பாளர்கள்/ அறிவிப்பாளர்களே இதனை மாற்றுக்கின்றனரா என்பது போன்ற அடிப்படையான செய்தித் தயாரிப்புப் பிரச்சினைகள் உள்ளன.

ஆனால், இலங்கையில் கடந்த சில வருடங்களாக தனியார் வானொலிகள் செய்திகளை ஒலிபரப்பத் தொடங்கியதன் பின்னர் இலங்கை வானொலியின் தமிழ்ச் செய்திகளிலும் பார்க்க தமிழ் அறிவிப்புகளே- அதுவும் மரண அறிவித்தல்களே பெரிதும் கேட்கப்படுகின்றன. வட-கிழக்கைப் பொறுத்தவரையில் தேசிய தமிழ்ச் சேவை கேட்கப்பட முடியாததால் தனியார் வானொலிச் செய்திகளே கேட்கப்படுகின்றன. உதாரணமாக காலை 6.30 மணிக்கு வரும் தேசிய ஒலிபரப்புச் செய்திகளுக்கும் 6.45க்கு வரும் சூரியன் ஒலிபரப்புச் செய்திக்குமிடையே மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு உண்டு. மக்கள் இரண்டையும் கேட்பார்கள். ஆனால் நம்புவது (நம்ப விரும்புவது) இரண்டாவதாக குறிப்பிடப்பட்டிருப்பதைத் தான்.

அச்சு ஊடகத்தை எடுத்துக் கொண்டால் இந்தத் தமிழ், சிங்கள செய்தியறிக்கை வேறுபாடு பெரிதாக இல்லையென்பது மாத்திரமல்லாமல் அரசாங்கத்துக்கு விரோதமாகவே செல்கின்றது. ஏனெனில் தமிழில் மூன்று பிரதான தினசரிகளும் தமிழ் நிலைப்பட்ட செய்திகளையே அளிக்கின்றன. அரசாங்கத்தினால் நடத்தப்படும் தமிழ்த் தினசரியில் தமிழ் பற்றிய செய்தியறிக்கைகளை வாசிக்கும் பொழுது அவை எழுதப்படுவதிலுள்ள இடர்பாடுகள் நன்கு தெரிய வருகின்றன. இதனால் அப்பத்திரிகையின் பாரம்பரிய வாசகர்களே அத்துணை பெரிதாகப் போற்றுவதில்லை.

இந்தச் செய்தியறிக்கை வேறுபாடு இன்று நேற்று வந்ததல்ல. இது படிப்படியாக வளர்ந்து வந்துள்ளது- வளர்க்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் இப்பொழுதோ ஒரு முக்கியமான கட்டத்தை எய்தியுள்ளது.

அண்மையில் இதுபற்றிய கருத்துரையைக் கூறிய ஊடக ஆய்வாளர் ஒருவர் சிங்கள, தமிழ்ப் பத்திரிகைகள் வெவ்வேறு நாடுகளிலிருந்து வருகின்ற பத்திரிகைகளின் ஒரு தன்மையை காட்டுவதாக கூறினார். இந்த விடயத்தினை தனியாக வெகுசன தொடர்புப் பிரச்சினையாக மாத்திரம் பார்க்க முடியாது. இது இந்த நாட்டின் அரசாங்கங்கள் குறிப்பாக அந்த அரசாங்கங்களின் தொடர்பு மையங்கள் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்பதே உண்மையாகும். நாம் என்னதான் கூறினாலும் அரசாங்க மட்டத்திலிருந்து செய்யப்படும் பல நடவடிக்கைகள் தமிழரிடையே குறிப்பாக வட-கிழக்கிலே காணப்படும் உரிமைப் போராட்டம் பற்றியும் அதன் தலைமை பற்றியும் கொண்டுள்ள நிலைப்பாட்டு வேறுபாடுகளேயாகும்.

பெரு நீரோட்டத்திலே வரும் பெரும்பாலான சிங்களப் பத்திரிகைகள் பயங்கரவாதிகள் என்ற சொல்லையே பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைவரை குறிப்பிட பயன்படுத்தும் சொற்கள் சமூக உளவியல் ரீதியில், தொடர்பியல் வலு நிலையில் மிக ஆழமாக நோக்கப்பட வேண்டியவையாகும்.

இந்த அச்சு, மின்பொறி ஊடகங்கள் மூலமாக சிங்கள மக்கள் பெற்றுக் கொள்ளும் ஒரே செய்தி உரிமைப் போராட்டம் முழுவதுமே ஒரு பயங்கரவாத நடவடிக்கையென்பதாகும். இதன் காரணமாக இலங்கைத் தமிழர் உரிமைகளை வற்புறுத்தும் தென்னிலங்கைக் குழுக்களை `சிங்களப் புலிகள்', `இடதுசாரிப் புலிகள்' என வன்மையாக கடந்த சில வருடங்களாக தாக்கி வருகின்றன.

மேலோட்டமாக நுனி நாக்கால் கூறப்படும் சமாதான விருப்பு என்பது `திரஸ்தவாத', `மிலேச்\u2970?', `மினிமறு' எனும் சொற் பிரயோகங்களால் சிங்கள மக்களின் காதுகளில் சமாதானம் பற்றிய கருத்துகள் ஆழமாக விழுவதற்கே இடமில்லை. அரசாங்கம் வாய் உபசாரமாக கூறுவதைப் போல உண்மையிலேயே சமாதான நோக்கு கொண்டிருப்பதால் அதாவது தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளைக் கொடுப்பதற்கு சிங்கள மக்களைத் தயார் செய்ய வேண்டிய ஒரு கடமையுள்ளது. இதனைப் பேச்சளவிலாவது சந்திரிகா அம்மையார் பேசினார் இப்பொழுதுள்ள ஜனாதிபதியோ எண்ணக்கரு நிலையில் பேசாமல் அரசாங்கத்துக்கு சார்பாகவுள்ள தமிழ்த் தலைவர்களின் பெயர்களைப் பயன்படுத்தி அவர்கள் கேட்பனவற்றையாவது கொடுக்க வேண்டும் என்று கூறுகின்றார். ஆனால் சிங்களப் பத்திரிகைகள் எவற்றிலாவது அவர்கள் எதைக் கேட்கிறார்கள் எவற்றைக் கேட்கிறார்கள் என்பது பற்றிய குறிப்பு எதுவுமில்லை. இலங்கையின் எல்லாத் தமிழ் மக்களும் விடுதலைப் புலிகள் அல்லர் என்பதனை உதாரணமாகக் காட்டிவிட்டு அவர்களின் தமிழ் நிலைப்பட்ட அரசியற் கோரிக்கைகள் யாவை என்பதைப் பற்றிப் பேசுவதேயில்லை. இது அண்மையில் மிக நெருக்கடியான கட்டத்தை எய்திற்று. கிழக்கை படையினர் வென்றெடுத்துவிட்டார்கள். அதற்கென தனியான அலகு வேண்டாம் என்று பேசத் தொடங்கியது. இவர்களின் நிலைமையை மேலும் சிக்கற்படுத்துகின்றது. இதற்கான காரணம் தென்னிலங்கையின் அரசாங்கங்கள் ஒரு முற்றுமுழுதான சிங்கள நிலைப்பாட்டை வகுத்து வளர்த்தெடுக்கின்றன என்பதேயாகும்.

இந்த நிலைப்பாட்டில் அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் வேறுபாடு காட்டப்படாது அரச - சிங்கள நிலைப்பாட்டை இணைத்துக் காட்டுகின்றது. இதனால் பலத்த செய்தித் திரிபுகள் ஏற்படுகின்றன.

இரண்டு சம்பவங்களை உதாரணமாகக் கூறலாம். ஒன்று புதிய வெளிநாட்டு அமைச்சர் பிரித்தானிய வெளிநாட்டமைச்சரைச் சந்தித்தது. மூதூரில் கொல்லப்பட்ட பிரஞ்சு அரசசார்பற்ற நிறுவனமொன்றில் 17 ஊழியர்கள் பற்றியதாகும்.

பிரித்தானிய வெளிநாட்டமைச்சருடனான சந்திப்புப் பற்றிய இலங்கை அரசாங்கத்தின் எடுத்துரைப்பில் அந்த வெளிநாட்டமைச்சர் கிளப்பிய எந்த சந்தேகங்களுமே எழுப்பப்படவில்லை. ஆனால், லண்டனில் வெளிவந்த செய்திகளே இப்படி ஒரு தலைப்பட்சமாக கூறவில்லை.

மூதூர்க் கொலை பற்றிய சர்வதேச நீதி நிறுவனத்தின் குறிப்புரைகளை அரசாங்க சிங்கள ஊடகங்கள் தொடாமலே போய்விட்டன. ஆனால் பி.பி.சி. சிங்கள சேவையிலே அது மிகவும் விரிவான முறையில் அதேவேளையில் ஆக்கபூர்வமான முறையில் எடுத்துக் கூறப்பட்டது. அரசாங்கத்துக்கு ஓர் உண்மை நன்கு தெரியவேண்டும். பி.பி.சி.யின் சிங்கள வானொலியின் செய்தியறிக்கைகளைக் கேட்க விரும்பாத சராசரி சிங்கள வாசகர்களே இல்லையெனலாம். ஆனால், அந்த வாசகர்களை ஜே.வி.பி. உள்ளிட்ட சிங்கள இனத்துவ வாதிகள் ஏகாதிபத்திய சதிக்குப் பலியானவர்களாகவே கருதுகின்றார்கள்.

இலங்கை அரசாங்கமும் அதன் சிங்களத்துவ நிலைப்பாடும் இலங்கையின் தமிழ்ப் பிரச்சினைக்கான நியாயமான தீர்வினை இயலாமல் செய்வது மாத்திரமல்லாமல் இல்லாமலும் செய்கின்றது. அரசாங்கம் வினை விதைக்கிறது அறுவடையோ மிக மோசமாக இருக்கப் போகின்றது.

Edited by Iraivan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.