Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்கரன் எழுதிய ''அரச புலனாய்வுப் பிரிவின் சீர்திருத்தம் புலிகளின் புலனாய்வு வியூகத்தை வெல்லுமா?''

Featured Replies

''அரச புலனாய்வுப் பிரிவின் சீர்திருத்தம் புலிகளின் புலனாய்வு வியூகத்தை வெல்லுமா?''

-ச. சங்கரன்-

அரச புலனாய்வு நிறுவனத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது விருப்பத்திற்கும், தனது ஆட்சி அதிகாரத்தினை நிலை நிறுத்துவதற்குமாக புனரமைப்பு செய்கிறார் விடுதலைப் புலிகளுடன் இராணுவ புலனாய்வு ரீதியில் போரிடும் ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கும் விடுதலைப் புலிகளின் தந்திரோபாயங்களுக்கு எதிரான மூலோபாயங்களை வகுப்பதற்கும் விடுதலைப் புலிககளின் திட்டங்களை தகர்தெறிவதற்காகவும் சிறிலங்கா புலனாய்வு நிறுவனங்களில் மகிந்தர் சீர் திருத்தம் செய்கிறார்.

தற்போதைய திட்டமானது தமிழர் தாயகத்தினை மையப்படுத்தியும் விடுதலைப் புலிகளின் சர்வதேசவலைப்பின்னலினை மையப்படுத்தியும்; உருவாக்கப் பெற்றிருக்கின்றது.

இத்திட்டங்களினால் புலிகளை தோற்கடிக்க முடியுமா அல்லது வெற்றிகொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியே. அரசின் புலனாய்வு வியூகத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள் உண்டு. பல குழறுபடிகள் உண்டு. அரசின் இப்புதிய திட்டம் புலிகளை எதுவும் செய்து விடப் போவதில்லை. மேலும் வாய்ப்பான சூழலினையே உருவாக்கும்.

சிறிலங்கா உளவுத்றையின் மாற்றங்கள் புலிகளின் புலனாய்வுத் துறை தொழில் நுட்பத்தினை வெற்றி கொள்ள உதவப் போவதில்லை.

புலிகளின் புலனாய்வு வலையில் வீழ்ந்து நொருங்கி உடைந்து அவமானப்பட்டுப் போய் இருக்கும் அரச புலனாய்வு இயந்திரத்தினை மீண்டும் நிமிர்த்தி நிலைப்படுத்த அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவின் நேரடித் பணிப்பின் பெயரில் அரச புலனாய்வுப் பீடத்தில் தேடிப்பிடிக்கப்பட்ட புதிய இளம் அதிகாரிகள் முன்னுக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மகிந்த விசேட சலுகைகள் வழங்கி தனது செல்லப் பிள்ளைகளாக்கிவிட்டு மூத்த அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளார். அல்லது ஓரம் கட்டியுள்ளார்.

மூத்த பல அதிகாரிகள் பழிவாங்கும் முயற்சியாக களமுனைகளுக்கு அனுப்பப் பட்டு ள்ளனர் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட அல்லது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் சமகால களமுனை அனுபவம் பெறவேண்டும் என்று உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டு அவர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள் அல்லது தூக்கி வீசப்பட்டு;ள்ளனர். இதுவரை காலமும் விசேட ஆய்விற்கும், பகுப்பாய்விற்கும் மதிப்பீடுகளுக்குமாக இருந்த புலனாய்வுப் பீடத்தில்; தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதுவரை காலமும் தனி விசேட தகவல் வங்கியாக அது இயங்கி வந்தது. இங்கு பணியாற்றியவர்களுக்கு விசேட வளங்களும் சலுகைகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் வழங்க்பட்டிருந்தன. இவர்கள் நீண்ட காலமாக பதவிகளை அலங்கரி;தனர். ஆனால் தற்போது இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர். இது இப்போது பெரும் சர்ச்சையினையும் உருவாக்கியுள்ளது.

சந்திரிக்கா குமாரதுங்காவின் ஆட்சிக் காலத்தில் அவருக்கு விசுவாசமானவர்களாக இருந்தார்கள் என்ற காரணத்தாலும், மகிந்த சிந்தனைக்கு உடன்பாடு இல்லாதவர்கள் என்பதற்காகவும் இப்பதவி மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

அதனால் அரச புலனாய்வுப் பீடத்தின் உயர்மட்டத்தில் ஒரு விரிசல் நிலை தோன்றியுள்ளதாகவும் புதிய அதிகாரிகளுக்கும் பழைய அதிகாரிகளுக்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. உளவுத்துறையில் இருந்த மூன்று இரண்டாம் நிலை அதிகாரிகள் வேறு படைப்பிரிவுகளுக்கு மாற்றலாகிச் செல்ல விண்ணப்பித்திருப்பதாகவும், இரு அதிகாரிகள் பதவியை இராஜினாமாச் செய்துள்ளமதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

தேசிய காவல்துறை ஆணையகத்தினால் தற்போது உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்ட இடமாற்றங்களின்படி தெரியவருவதாவது-

டி.ஐ.ஜி ஆக இருக்கும் அசோக்க விஜயதிலக்க புதிதாக உருவாக்கப்பட்ட அல்லது புனரமைக்கப்பட்ட பன்னாட்டுப் புலனாய்வு நிறவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அவ் வெற்றிடத்திற்கு அசோக்க விஜயதிலக்கவிற்கு பதிலாக மகிந்தவின் செல்லப்பிள்ளையும் குடும்ப நண்பருமான டி.ஐ.ஜி உபாலி குணசேகர நியமிக்கப்படுவார் என தெரிய வருகிறது. இவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் வளர்க்கப்பட்டவராவார்.

உளவுத் துறையின் இயக்குனராக பன்னிரண்டு ஆண்டுகள் பணி புரிந்த எஸ.எஸ்.; பி.யான சிசிர மெண்டிஸ் வவுனியா பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் மீது சந்திரிக்காவுக்கு ஆதரவானவர் என்றும் சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்திட்டங்களுக்கு உதவியவர் என்ற குற்றச்சாட்டும் உள்ளன. சிசிர மெண்டிஸ்சின் இடத்திற்கு கனடாவில் உள்ள சிறிலங்காத் தூதுவராலயத்தில் பணிபரியும் நிர்மல் குலத்துங்கா நியமிக்கப்படவுள்ளார்.

ஏ.எஸ்.பி மேவின் சில்வா தலைமன்னாருக்கும் ஏ.எஸ்.பி. சினேக குணசிங்க வவுனியாவிற்கும் ஏ.எஸ்.பி. விக்கிரமசிங்க மட்டக்களப்பிற்கும் மாற்றப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் பன்னாட்டு வலைப்பின்னலின் வளர்;ச்சியினைக் கட்டுப்படுத்துவதற்காக சனாதிபதி மகந்த ராஜபக்ச விசேட திட்டமொன்றை கொண்டுவந்துள்ளார். டி.ஐ.ஜி விஜயதிலக்க அவர்களின் தலைமையில் விடுதலைப்புலிகளின் சர்வதேச நடமாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கான வலைப்பின்னல் நடவடிக்கை ஒன்றை மேறட்கொள்ளும்படி உத்தவிடப்பட்டுள்ளது.

டி.ஐ.ஜி விஜய திலக்கவின் கீழ் மூன்று விசேட புலனாய்வு அதிகாரிகள் நியமிக்;கப்பட்டுள்ளனர் அவர்கள் மூவருக்கும் புலிகள் ஆயுதக்கடத்தல் முறியடிப்பு, நிதி சேகரிப்பு முறியடிப்பு, பரப்புரை முறியடிப்பு எனப் பணி பிரிக்கப்பட்டுள்ளது.

டி.ஐ.ஜி விஜய திலக்கவின் நேரடிப் பார்வையின் கீழ் புலிகளின் சர்வதேச பிரமுகர்கள் மீதான புலனாய்வு செயற்பாட்டுத் திட்;டம், கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை முறியடிப்பதற்கு அரசாங்கமும் அரச புலனாய்வு பீடமும் முயற்சி செய்கின்றது சர்வதேச ரீதியில் பலிகளுக்கு பெருகிவரும் இராஜதந்திர செல்வாக்கினை முறியடிப்பதற்கே இவ்விசேட திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. அரச புலனாய்வுப் பீடம் காலத்திற்கு காலம் உயர்மட்ட, அடிமட்ட ஆட்களைவ ஆட்தெரிவு. புதிய நியமங்கள். பதவி இறக்கங்கள், பதவி உயர்வுர்கள் என பலவற்றைச் செய்தும் புலிகளின் ஊடுருவலை தடுக்க முடிய வில்லை

புலிகளின் இராணுவ, அரசியல், புலனாய்வு, பொருளாதார வளர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. அண்மைக் காலத்தில் புலிகளின் பிரதேசங்களில் சிவிலியன்கள் மீதான தாக்குதல்களை நடாத்த முடிந்ததே தவிர புலிகளின் இலக்குகளை ஊடுருவி அழிக்க முடியவில்லை.

அரசு புலனாய்வு பீடத்தில் எவ்வாறான மாற்றங்கள் செய்தாலும், எவ்வாறான நவீன தொழில் நுட்பங்களை ஏற்படுத்தினாலும் புலிகளின் புலனாய்வு வியூகத்தை உடைக்கவும் முடியாது. புலிகளின் அபார வளர்ச்சியை தடுத்தவும் முடியாது.

நன்றி

ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.