Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''போரும், சமதரப்பு நிலைப்பாடும்''

Featured Replies

''போரும், சமதரப்பு நிலைப்பாடும்''

-நா. யோகேந்திரநாதன்-

அண்மையில் அமைச்சர் மகிந்த சமரசிங்கவும் அமெரிக்க, ஜெர்மன், இத்தாலி தூதுவர் உட்பட சில வெளிநாட்டு ராஜதந்திரிகளும் மட்டக்களப்புக்கு விஜயத்தை மேற்கொள்ளுமுகமாக மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் வந்திறங்கிய போது அங்கு எறிகணைகள் விழுந்து வெடித்துள்ளன. இச்சம்வத்தின் போது அமெரிக்க தூதுவர் உட்பட சில ராஜதந்திரகளும் பாதுகாப்புத் தரப்ப்பினர் சிலரும் காயமடைந்தனர்.

தமிழீழவிடுதலைப்புலிகள் தாங்களே இத்தாக்குதலை நடத்தியதாகவும், இம்மைதானம் வழமையாக இராணுவத் தேவைகளுக்கு மட்டும் பாவிக்கப்படுவதாகவும், ராஜதந்திரிகளின் வருகையைப் பற்றி தமக்கு எதுவும் தெரியாதெனவும் உடனடியாகவே அறிவித்தனர். மேலும் விடுதலைப்புலிகளின் சாதானச் செயலகத்திற்கு இதுகுறித்து அறிவிக்கப்பட்டதும். தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதுடன் எதிர்பாராத விதமாக ராஜதந்திரிகளுக்கு ஏற்பட்ட சம்பவத்திற்கும் அவர்களால் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. அது மற்றுமன்றி ராஜதந்திரிகளின் வருகைப் பற்றி தமக்கு அரசாங்கத்தால் அறிவிக்கப்படாமை தொடர்பாக விடுதலைப்புலிகள் தமது கண்டணத்தையும் வெளியிட்டிருந்தனர்.

ஆனால் இந்த விஷயம் தொடர்பாக நாங்கள் விடுதலைப் புலிகளுக்கு அறிவிக்க வேண்டிய தேவை எதுவுமில்லையென உடனடியாகவே இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க திடீரென ஒரு கருத்தை வெளியிட்டிருந்;தார். ஆனால், பலாலிக்கு விமான மூலம் முக்கிய பிரமுகர்கள் வந்திறங்கும் போது பாதுகாப்பு காரணங்களுக்காக அரசதரப்பு விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்திற்கு அறிவிப்பது வழமையாகப் பின்பற்றப்படும் ஒரு நடைமுறையாகும். ஆனால் அப்படி அறிவிக்கத் தவறிய காரணத்தால் ஒரு பாரதூரமான சம்பவம் நடந்த பின்பும் கூட அப்படி அறிவிக்கும் தேவை இல்லை என்று கூறுவது ராஜதந்திரிகளின் பாதுகாப்பு தொடர்பாக சிறிலங்கா அரசு கொண்டுள்ள அக்கறை பற்றி கேள்விகளை எழுப்பத்தான் செய்கிறது. இன்னும் சொல்லப்போனால் வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு உயிராபத்தை ஏற்படுத்துவதன் மூலம் விடுதலைப்புலிகளுக்கும் அந்த நாடுகளுக்குமிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் திட்மிட்டுச் செயற்படுகிறதாக என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

அதே வேளையில் இச்சம்பவம் தொடர்பாக வெளிநாடுகள் குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஐரோப்பிய ஒன்றியம்போன்றவை; பெரும் கண்டனங்களை வெளியிடுமெனவே சிறிலங்கா அரச தரப்பால் எதிர்பார்க்கப்பட்டது அப்படியான ஒரு நிலைமையைத் தோற்றுவிக்கும் வகையிலேயே சிறிலங்கா அரசதரப்பின் அறிக்கைகளும் அமைந்திருந்தன.

ஆனால் நிலைமையோ அவர்hகின் எதிர்பார்ப்பிற்கு மாறாகவே அமைந்திருந்தது. பொதுவாகவே அந்த நாடுகள் இரு தரப்பினரும் வன்முறைகளைக் கைவிட்டுசமாதான முயற்சிகளுக்கு திரும்பவேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் வலியுறுத்தியிருக்கிறது என்ற வகையில் தமது கருத்துகளை வெளியிட்டன. அதிலும் இரு தரப்பினரும் வன்முறையைக் கைவிட்டு அதிகாராப்பரவலாக்கல் மூலம் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்ற அமெரிக்காவின் கருத்து ஜாதிக ஹெல உறுமயவின் கடும் கண்டனங்களுக்கு ஆட்படும் வகையில் அவர்களுக்கு ஏமாற்றம் தரும் வகையிலேயே அமைந்துவிட்டது.

இங்கு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க அவர்கின்; இச்சம்பவம் தொடர்பாக, அதாவது இராஜதந்திரிகளின் வருகை தொடர்பாக விடுதலைப்புலிகளுக்கு அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்து மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

தமிழீழ விடுதலைப்புலிகளையும் சிறிலங்கா அரசையும் சமதரப்பாக ஏற்றுக் கொண்டுதான் சர்வதேச அனுசரணையுடன் பரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது இதன் ஒவ்வொரு விதிகளும் இருதரப்பினதும் சமதரப்பு நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டே வகுக்கப்பட்டன. இவ்வொப்பந்தம் இன்று சிறிலங்கா அரசினால் செல்லாக்காசாக்கி விடப்பட்ட போதிலும் இன்னும் பெயரளவில் இது நரடைமுறையில் இருப்பதாகவே கொள்ளப்படுகிறது இது இன்னும் கூட ஏதோ ஒரு தரப்பினாலும் உத்தியோக பூர்வமாகக் கிழித்தெறியப்படவில்லை.

ஆனால் மகிந்த ராஜபக்ச அவர்கள் சனாதிபதியாகப் பதவியேற்ற பின்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் பெருட்படுத்தப்படவில்லை என்பது மட்டுமன்றி அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் சமதரப்பு என்ற அம்சத்தை நிராகரிக்கும் வகையிலே அமைந்துள்ளது. இவ்வகையிலேயே ராஜதந்திரிகளின் வருகை பற்றி விடுதலைப்புலிகளுக்கு அறிவிக்கத் தேவையில்லை என்ற கருத்து சமதரப்பு என்ற நிலைப்பாட்டை நிராகரிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.

எனினும் இன்றுவரை சிறிலங்கா அரசுதான் சமாதான முயற்சிகளில் நம்பிக்கை வைத்திருப்பதாகவே கூறி வருகிறது. அது மட்டுமன்றி இனப்பிரச்சினை தொடர்பாக சர்வகட்சி மாநாடு அறிவுஐPவிகளின் குழுவின் ஆலோசனைகள் என பல்வேறுபட்ட திசைத்திருப்பங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன ஆனால் இவையனைத்துமே காலத்தை இழுத்தடிக்கும் ஒரு ஏமாற்று என்பதைத் தமிழ்மக்கள் nதிளிவாகவே புரிந்து கொண்டுள்ளனர்.

இன்றைய இனப்பரச்சினை தொடர்பாக தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் விடுதலைப்பலிகள் என்ற அம்சம் ஏற்றுக் கொள்ளப்பட்டே விடுதலைப்புலிகளுடனான சமாதான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் காரணமாக சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. எனவே தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தமிழீழ விடுதலைப்புலிகளும் சிறிலங்கா தரப்பிலே சிறிலங்கா அரசாங்கமும் சமாதான முயற்சிகளில் இரு தரப்புக்களாக இருக்கின்றன இங்கே இருதரப்பபும் சமாதான முயற்சிகளில் இரு தரப்புகளாக இறங்கின இங்கே இரு தரப்பினரதும் சமநிலை பேணப்படுவது மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் விடுதலைப் புலிகளினதும் சிறிலங்கா இரானுவத்தினதும் கட்டுப்பாட்டு பிரதேசங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு இராணுவ சூனியப்பிரதேசங்கள் வரையறுக்கப்பட்டு இரு தரப்பினரதும் சமநிலை அங்கீகரிக்கப்பட்டது.

அதாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றால் என்ன- இரு தரப்பினருக்குமிடையே இடம் பெற்ற பேச்சவார்த்தைகள் என்றால் என்ன- சமதரப்பு என்ற அடிப்டையிலே இடம் பெற்றன. இப்படியான ஒரு நிலையில் சிறிலங்கா அரசு சமதரப்பு என்ற நிலையைப் பேண மறுக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் சமாதானத்தை விட்டுத் தூரத் தூரவிலகிச் செல்லும் முயற்சியாகும். இவ்வாறு சமாதானத்திற்கும் யதார்த்தத்திற்கும் மிடையே விரிந்து செல்லும் இடை வெளியை சர்வகட்சி மாநாட்டின் தீர்மானங்களினாலோ புத்திஜீவிகள் குழுவின் பரிந்துரைகளாலோ இட்டு நிரப்பிவிட முடியாது.

இப்படியான ஒரு சூழ்நிலையில் தான் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம் பெற்ற எறிகணை வீச்சை அடுத்து பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க சமதரப்பு என்ற நிலைப்பாட்டை நிராகரிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர் அது சமாதானம் தொடர்பான சிறிலங்கா அரசின் போலி நிலைப்பாட்டையும் போர் முனைப்பையும் தெளிவாகவே எடுத்துக் காட்டுகிறது. விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசக்குமான சமதரப்பு நிலைப்பாடு என்பது எவராலும் மனமிரங்கி வழங்கப்ட்டதோ அல்லது வைளிநாடுகளின் அழுத்தத்தின் பேரில் உவந்தளிக்கப்பட்டதோ அல்ல. கடந்த இருபது ஆண்டுகள் இடம் பெற்ற போரில் விடுதலைப் புலிகள் வெல்லப்பட முடியாதவர்கள் என்ற நிலையில் முல்லைத்தீவு ஆனையிறவு போன்ற படைத்தளங்கள் முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட நிலையில், யாழ் குடாநாடு விடுதலைப்புலிகளிடம் விழுந்துவிடாமல் தடுக்க இந்தியாவிடம் ஓட வேண்டிய சூழல் ஏற்பட்ட நிலையில், அக்கினிச் சுவாலை நடவடிக்கையில் படைத்தரப்பு நிலைகுலையுமளவுக்கு அழிவுகளைச் சந்தித்த நிலையில் தான் சிறிலங்கா அரசு சமாதானத்திற்காக கரங்களை நீட்ட வேண்டிய நிலை எழுந்தது. இப்படியான ஒரு கட்டத்திலேயே விடுதலைப் புலிகளைச் சமதரப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்ந்தமும் ஏற்பட்டது. அதாவது விடுதலைப் புலிகளின் வெல்லப்பட முடியாத பலமும் வெற்றியை நோக்கிய வேகமான நகர்வுமே அடிப்படைக் காரணங்களாக அமைந்தன.

இப்படிப் போரின் மூலமும், போரின் வெற்றிகள் மூலமும் உருவான சமதரப்பு நிலைப்பாட்டை சமாதானத்தின் பேரால் இல்லாமற் செய்ய முயல்வது மீண்டும் விடுதலைப் விடுதலைப்புலிகளைப் போரை நோக்கித் தள்ளும் நோக்கம் கொண்டது என நம்புவதில் தவறு இருக்க முடியாது.

முன்னாள் சனாதிபதிகளான ஜே. ஆர். ஜேயவர்த்தனா, ஆர். பிரேமதாச, திருமதி. சுந்திரிக்கா விஜயகுமாரதுங்க என விடுதலைப்புலிகளை போரை நோக்கித் தள்ளியவர்கள் மிகவும் கசப்பான அனுபவங்களையே சந்தித்தனர். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் சமாதானத்திற்கான போர் போன்ற சகல கோசங்களும் மண்கவ்வுவதற்கான கோசங்களாக மாறின.

கடந்த கால வரலாறு தந்த அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ள மறுக்கும் திரு மஹிந்த ராஜபக்ச மீண்டும் விடுதலைப்பலிகளைப் போருக்குள் தள்ளும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளாh.; வரலாறு நிச்சயம் அவருக்கும் தகுந்த பாடங்களைக் கற்றுக் கொடுக்கும்.

நன்றி

ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.