Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''மகிந்தராஜபக்ச மேற்கொண்ட சீனப்பயணத்தின் நோக்கம்''

Featured Replies

''மகிந்தராஜபக்ச மேற்கொண்ட சீனப்பயணத்தின் நோக்கம்''

-மனோகரன்-

சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் சீனக்கடற் தலைவர் செங்கீ இலங்கைக்கு தன்னுடைய பிரதானிகளுடன் வந்ததாக கடற்பயணங்கள் குறித்த வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

செங்கீயின் இலங்கைக்கான வருகையை அடையாளப் படுத்தும் விதமாக அவர் பொறித்த நினைவுக்கல் இன்னமும் கொழும்பு மியூசியத்தில் உண்டென்றும் கூறப்படுகிறது. சீனாவுக்கும் இலங்கைக்குமான தொடர்புகள் இதற்கு முன்னரே இருந்ததாகவும், சீன வணிகர்களும் சீனத்துறவிகள் மற்றும் பயணிகளும் இலங்கைக்கு வந்து சென்றதாகவும் பல வரலாற்றுக் கதைகள் உண்டு.

இலங்கையின் வரலாற்றை இந்தத் தொடர்புகள் குறிப்பிட்ட அளவுக்கு பாதித்திருக்கலாம். சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச 260 பேர் கொண்ட பெருங்குழுவுடன் சீனாவுக்கு ஆனால், அதற்கான அடையாளங்கள் இது வரையில் துலக்கம் பெறவில்லை. இப்போது பயணம் செய்தவிட்டுத் திரும்பியிருக்கிறார். மகிந்த ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணங்கள் அநேகமாக இப்படித்தான் பெரும்படையெடுப்புடன் நடக்கின்றன அவர் கியூபா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சென்ற போதும் நூற்றுக்கு மேற்பட்ட பிரதானிகள் அமைச்சர்கள் கொண்ட குழு அவரோடு பயணம் செய்திருந்தது.

இப்போது சீனாவுக்கான பயணமும் அப்படியே நடந்துள்ளது. ஆனால,; மகிந்த ராஜபக்சவின் சீனப் பயணம் ஏனைய பயணங்களை விடவும் வேறுபட்டிருப்பதுடன் சற்று முக்கியமானதாகவும் இருக்கிறது. மகிந்த ராஜபக்சவின் அரசுக்கு இப்போது மறைமுகமாக அழுத்தங்களை இந்தியா உட்பட, அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் உள்ளடங்கிய இணைத்தலைமை நாடுகள் கொடுத்து வருகின்றன.

இலங்கைத்தீவில் போரற்ற ஒரு நிலை பேணப்படுவதையே மேற்படி நாடுகளும், நாடுகள் அங்கம் பெறுகின்ற அமைப்புகளும் விரும்புகின்றன. போரில்லாத இலங்கைத்தீவில் அவற்றின் வணிக நலனை முழுமையாக பேணலாம் என அவை கருதுகின்றன. அத்துடன் உலகம் முழுவதிலும் மேலாதிக்க நிலையைப் பேணுவதற்காக முயன்று வரும் அமெரிக்காவுக்குச் சார்பான வகையில் இலங்கைத்தீவின் அரசியல் பொருளாதார அசைவுகளும் இருக்க வேண்டும் என்ற தேவையும் அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் அவசியம். மேலும் இனப்பிரச்சினை என்ற ஒரு விவகாரம் இலங்கைத்தீவில் உள்ளவரை அதைச் சாட்டாக வைத்துக் கொண்டு பிராந்தியத் தலையீடுகளும், சில வேளை எதிரணிகளின் தலையீடுகளும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் இந்த அமெரிக்கத் தலைமையிலான கூட்டுநாடுகளுக்கு உண்டு. அப்படி ஒரு தலையீடு இலங்கைத்தீவில் நிகழ்ந்தால் அது மேற்படி கூட்டு நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் பல வகையில் சவாலாகிவிடும் என்று அவை கருதுகின்றன.

இத்தகையதொரு அரசியல் பின்னணியில் தான,; மகிந்த ராஜபக்சவின் சீனப்பயணம் நிகழ்ந்துள்ளது. மகிந்த ராஜபக்சவிற்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்களில் இருந்து அவர் விடுபடவும் முயற்சிக்கிறார். அல்லது அந்த அழுத்தங்களைத் தவிர்ப்பது- முடிந்தால் அதற்கெதிரான வியூகத்தைவகுப்பது என அவர் நினைக்கிறார். இங்கே இந்தப் பலமான கூட்டமைப்புக்கு எதிரான வியுகத்தை இலங்கை அரசு தனியே வகுக்க முடியாது. அது சீனாவுடன் இணைந்து நிற்பதன் மூலம் அப்படியொரு தோற்றத்தைக் காட்ட முடியும் என நினைக்கிறது.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை நோக்கி சனாதிபதி சிந்திக்க வேண்டும்;: அதுவே வழியென மேற்படி கூட்டுநாடுகள் தொடர்ந்து அறிவித்தும் வலியுறுத்தியும் வருகின்றன. இந்த நாடுகளின் பின்னணியால் உருவாக்கப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டமை இந்த நாடுகளுக்கு முதலில் கிடைத்த அதிர்ச்சி. தொடர்ந்து போர் நிலைமையே தீவிரமாக வளர்ச்சி பெற்று வருகின்றது.

மீண்டும் நடைபெறவள்ள போர் மேலே கூறப்பட்டுள்ளவாறு இந்த நாடுகளுக்கு பாதகமான அம்சங்களையே கொடுக்கும். தவிரவும் விடுதலைப்புpகளின் அடுத்தகட்டப் போரின் வெற்றிகள் சர்வதேச அரசியல் அணுகுமுறைகளில் தவிர்க்க முடியாத முன்மாதிரிகளை உருவாக்கிவிடும் எனவும் அவை எதிர்பார்க்கின்றன.

குறிப்பாக விடுதலைக்காகப் போராடும் தரப்பினர்களிடையே விடுதலைப்புலிகளின் வெற்றி ஆழமான நம்பிக்கையையும் வலுவான முன்மாதிரியையும் உருவாக்கிவிடும் என அவை நம்புகின்றன.

ஆகவே இத்தகைய நிலைமைகளின் விளைவுகளை எதிர் கொள்வதற்கு முன்னர் இணக்கப்பாடானதொரு சூழ்நிலையை உருவாக்கிவிட வேண்டும் என அவை விரும்பகின்றன. ஆனால் அவற்றின் விருப்பத்துக்கு மாறாகவே இலங்கையின் களயதார்த்தம் இருக்கிறது. சிங்களத் தீவிரவாதக் கட்சிகளும், அவற்றுக்கு இசைவான அரசாங்கமும் போர்ச்சூழலையே முற்றாக உருவாக்கி வைத்துள்ளன. அத்துடன் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கோ, நியாயமான அணுகு முறைகளுக்கோ சிறிலங்கா அரசாங்கம் தயாரில்லாமல் இருக்கின்றது. உருவாக்கப்பட்டிருக்கும் சிங்களத் தேசியவாத அரசியலுக்குள்ளிலிருந்து கொண்டு (சிங்களத் தேசியவாதம் என்பது சிங்கள மேலாதிக்க வாதம் அல்லது சிங்கள இனவாதம் என்று பொருள் கொள்ள வேண்டும் ஏனெனில் அதுவே யதார்;த்தமானது) இனப்பிரச்சினைக்கான நியாயமான அரசியல் தீர்வு குறித்து சிந்திக்க முடியாது.

இந்த நிலையில் போருக்குச் செல்வது சிறிலங்கா அரசுக்கு தவிர்க்க முடியாததும் சிரமங்கள் குறைந்ததுமாகும். அப்படிப் போருக்குச் செல்லும் போது வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேற்கில் முதன்மை பெறுகின்ற கூட்டு நாடுகள் போரைத் தவிர்க்க விரும்புகின்றன பதிலாக இந்தக் கூட்டு நாடுகளிடம் தான் இலங்கை உதவியையும் கடனையும் பெறவேண்டியுள்ளது. இந்த நிலைமையைப் பயனபடுத்திக் கொண்டு அந்த நாடுகள் இலங்கைக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்கின்றன. ஜேர்மனியும் பிரிட்டனும் தமது உதவிகள் குறித்து விடுத்த அறிவிப்புக்களை அண்மையில் வெளியிட்டிருந்தமை இங்கே கவனிக்கத்தக்கது.

ஆத்துடன் இந்த கூட்டுநாடுகளுக்கிசைவான சர்வதேச மனிதநேய அமைப்புக்கள் தொண்டு நிறுவனங்கள் இலங்கையில் மனிதப் பேரவலம் நிகழ்வதாக கூறுவதும், மனித உரிமைகள் மீறப்படுவதாக கூறுவதும,; மனித உரிமைகள் மீறப்படுவதாகக் கண்டிப்பதும் மறைமுக அழுத்தமே. இன்றைய அரசியல் தலையீட்டுக்கும் ஆதிக்கத்திற்கும் மேற்கில் முதன்மை பெறுகின்ற அரசியல் அணி இந்த உபாயத்தையே பின்பற்றுகின்றது.

ஆக, போரினால் சனங்கள் பாதிக்கப்படுகின்றனர் மனிதப் பேரவலம் நிகழ்கிறது மனித உரிமைகள் மீறப்படுகின்றன என பிரச்சாரப்படுத்தி அதனை அனுமதிக்க முடியாதென அவை சிறிலங்கா அரசை வற்புறுத்துகின்றன.

இந்த நிலைமை தொடருமானால் இலங்கைக்கான உதவிகள் படிப்படியாக மட்டுப்படுத்தக்கூடிய நிலைமைகள் அதிகரிப்பதுடன் நேரடியாக தொண்டர் அமைப்பக்களினூடான நிதிக்கையாள்கையும் மக்களிற்கான உதவி நலத்திட்டங்களும் அதிகரிக்கும். இதெல்லாம் சிறிலங்கா அரசைப் பலவீனப்படுத்துவதாகவே அமையும். அத்துடன் போரின் போது விடுதலைப் புலிகளின் போர் உபாயங்களும் அவர்களால் ஏற்படுத்தப்படும் போது, போருக்கெதிரான சிங்கள மக்களின் நெருக்கடியை ஏற்படுத்தவும் செய்யும்.

புலிகளின் போரிடும் திறன் குறித்து சிங்கள ஆட்சியாளர்கள் சனாதிபதியை கடுந்தொனியில் எச்சரித்தே வருகின்றனர் எனவே இவையெல்லாவற்றுக்குமான ஒரு முன்தளத் தயாரிப்பாகவே மகிந்த ராஜபக்ச சீனப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். சீனாவைப் பெறுத்தவரை அதற்கு இப்போது புதிய சந்தைகள் அவசியம். வளர்ச்சி பெற்று வரும் சீனப் பொருளாதாரத்தை மேலும் விருத்தியடையச் செய்வதே இன்றைய சீனாவின் பிரதான இலக்கு.

இதற்காக அது பல நாடுகளோடு உறவை தொடங்குகின்றது. தென்னாசியப்பிராந்தியத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானையும் நேபாளத்தையும் இலங்கையையும் தனக்குச் சார்பாக கையாள அது முனைகிறது. இதற்கு இலங்கையில் போர் நடந்தாலென்ன விட்டாலென்ன முதலில் சந்தை வேண்டும். அதற்குப்பின் நிலைமையைப் பொறுத்து அதனை வலுப்படுத்தலாம். அல்லது அந்தச் சந்தையை தனக்கு இசைவானதாக்கலாம் என அது எண்ணுகிறது.

இதற்குள் மகிந்த ராஜபக்ச தன்னுடைய தூண்டிலைப் போட முயல்கிறார். மேற்கு கூட்டுநாடுகளின் அழுத்தங்கள் கட்டளைகள் அறிவுறுத்தல்கள் அறிவிப்புகள், ஆலோசனைகள் கோரிக்கைகள் என்பவற்றை அவர் பொருட்படுத்த முடியாத நிலையில் தனக்குரிய பாதுகாப்பு அரணாக அவர் சீனாவைக் கையாள விரும்புகின்றார். இதன்படியே அவர் தொழிலதிபர்கள், அமைச்சர்கள், பிரதானிகள், ஆலோசகர்கள் கொண்ட மிகப் பெரிய அணியுடன் சீனாவுக்குப் பயணம் செய்தாh.; போகும் போது பெரும் பரிசாக ஒரு யானைக் குட்டியையும் கொண்டு சென்றார்.

சீனாவில் அவர் செய்து கொண்ட வர்த்தக உடன்படிக்கைகள் நேரடியாக இந்தியாவையே பாதிக்கவுள்ளதாக சொல்கிறார்கள். இந்தியாவின் உற்பத்திகள் கடந்த பதினைந்து ஆண்டுகளில் இலங்கைச் சந்தையை நிரப்பியிருந்தன. இலங்கையில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திடமும் ஒவ்வொரு வீட்டிலும் இந்தியப் பொருட்களே ஆதிக்கம் பெற்றுவந்தன. இப்போது இதற்குப் போட்டியாக சீனப் பொருட்களும் சீனச் சந்தையும் விரிவடைந்து வருகின்றன. அதற்கு மகிந்த ராஜபக்ஸ ஒரு வாய்ப்பை அளிக்கமுயன்றிருக்கிறார்.

மகிந்த ராஜபக்ச சீனச்சந்தைக்கு வாய்ப்பளிக்கும் போது அதற்குப் பிரதியுபகாரமாகவும் சீனச் சந்தையைப் பாதுகாக்கவும் என மகிந்தவுக்கு சீனா குறிப்பிட்டளவு இராணுவ உதவிகளை வழங்க சம்மதித்தள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆக, ஒரு பக்கம் தனக்கு ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்கவும், விடுதலைப்புலிகளுடனான போருக்கு இராணுவ ஆயுத உதவிகளைப் பெறவும், பொருளாதார நெருக்கடிகளை ஈடுசெய்யக்கூடிய ஒரு உபாயப் பயணமாகவே மகிந்தவின் சீனப்பயணம் அமைந்துள்ளதாக அவதானிகள் சொல்கிறார்கள்.

சர்வதேச அரசியலை குறிப்பாக சர்வதேச அரசியல் முகாம்களை கையாள்வதன் மூலம் தனக்குச் சாதகமான தளத்தை உருவாக்க முயல்வதே சிறிலங்கா சனாதிபதியின் நோக்கம். அவர் விடுதலைப்புலிகளுடனான புரிந்துணர்வு உடனபடிக்கையை செயலிழக்கச் செய்ததும், எதிர்கட்சித் தலைவர் ரணில் வி;கிரமசிங்க உடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையை மீறியதும் இவற்றின் அடிப்படையில் தான்.

இப்போது மறுவளமாக மகிந்தவக்கு இரட்டை நெருக்கடிகள் உண்டு. முதலாவது விடுதலைப்புலிகளை- தமிழ்மக்களை எதிர்கொள்ள வேண்டியது. மகிந்த ராஜபக்சவால் நிச்சயம் போரிலும் தாக்குப் பிடிக்க முடியாது. சமாதானத்திலும் சீரியஸாக ஈடுபடமுடியாது. இதனால் ஏற்படவுள்ள நெருக்கடிகள் மிகப்பயங்கரமாகவே இருக்கப்போகின்றன.

விடுதலைப் புலிகளும் தமிழ்மக்களும் தமது அரசியல் அபிலாசைகளுக்கான, உரிமைக்கான போராட்டத்தில் முன் அனுபவங்களுடன் தீவிரமடைந்துவருகின்றனர். அதன் விளைவுகள் மிகப் பயங்கரமாகவே சிறிலங்கா அரசுக்கு இருக்கும்.

அதுபோல மேற்கு கூட்டுக்கும், இந்தியா ஜப்பானுக்கும் சவாலாக மகிந்த நடந்துகொள்ளும் விதம் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் சீனா பகைமையையும் போட்டியுமுள்ள தரப்பு அதேபோலவே மேற்கும்.

ஆக- மகிந்தராஜபக்ச இப்போது தன்னைச்சற்றி ஆபத்தான வலையத்தையே உருவாக்கியுள்ளார். சீனப்பயணம் எதிர்காலத்துக்கான வெடிகுண்டாகலாம். செங்கியின் பயணம் இலங்கையில் பொறிக்கப்பட்டுள்ளதைப் போல வேண்டுமானால் மகிந்தவின் பயணமம் சீனாவில் பொறிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அது சீனாவுக்கான ஆதாயத்துடன் மட்டுமே.

-நன்றி ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.