Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''15ஆவது ஆண்டு நிறைவில் கடற்புலிகளின் மகளிர் படையணி''

Featured Replies

''15ஆவது ஆண்டு நிறைவில் கடற்புலிகளின் மகளிர் படையணி''

-தெ.றஞ்சித்குமார்-

எதிரிக்கு பெரும் சாவாலக அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் கடற்படையின் பரியவளர்ச்சி அமைந்துள்ளது. சிறிலங்காப் படையினர் பல்வேறு நாடுகளில் இருந்தும் நவீனம் வாய்ந்த கடற்கலங்கள் மற்றும் கனரக ஆயுதங்களை கொள்வனவு செய்து அதன் மூலம் தமிழ் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த சூழ்நிலையில் அதற்கு முகம் கொடுக்கும்.வகையில் கடற்புலிகள் தங்களை பலப்படுத்தினர்.

எதையும் சவாலாத்; தாங்கும் சக்தியை விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் பெற்றுள்ளார்கள். சிங்களப் படைகள் கடலில் நடாத்தும் இன வெறிபடித்த தாக்குதல்களுக்கு தகுந்த முறையில் பாடம் கற்பிக்க கடற்புலிகள் தவறியதில்லை. இன்றைய கடலாதிக்க நிலையில் விடுதலைப் புலிகள் பலம்பெற்று கடலில் பல சாதனைகளைப் படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தப்பரிணாம வளர்ச்சியில் அவர்கள் பல இடர்களையும் இன்னல்களையும் கண்டும் உள்ளனர். தமக்கு ஏற்படும் சவால்களுக்கு எதிர் நீச்சல் போட்டு வாழ்கையே கடலின் மீதானதாகிவிட்டது. தரை என்றால் எவ்வாறாயினும் எதிரியிடம் இருந்து தாப்பிவிடலாம். கடலில் பயணிக்கும் போது சென்ற வேலைகளை முடித்து விட்டு கரை திரும்பினால் தான் எமக்கான பாதுகாப்பு.

விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்ற காலத்தில் கடற்புறாவாக இருந்து பின்னர் கடற்புலிகளாக மாறி, இன்று பல்கிப் பெருகி விரிந்து எதிரியின் வலுவுடன் போரிடும் ஆற்றல் பெற்று விளங்கி வருகின்றனர் கடற்புலிகள்.

கடற்புலிகளின் தோற்றத்தினால் விடுதலைப் போராட்டம் உத்வேகமும், பலபடி வளர்ச்சியும் பெற்றது. இதில் கடற்புலிகளில் ஆண்கள் மட்டும் செயற்பட்டு வந்த காலத்தில் ஆண்போராளிகளே கடலில் சண்டை, மற்றும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னேடுத்து வந்தனர்.

போராட்டத்தில் பெண்கள் பங்கு மேலோங்கத் தொடங்கியதும் பெண்களும் கடற்புலிகளோடு சேர்ந்து இயங்க வேண்டிய தேவை போராட்டத்திற்கு ஏற்பட்டதால், தலைவரின் சிந்தைனயோட்டத்தில் 1992ஆம் ஆண்டு மார்ச் முதலாம் நாள் உருப்பெற்றதுதான் கடற்புலிகள் மகளிர் படையணி லெப்.கேணல் நளாயினி; தலைமையில் குறிப்பிட்ட போராளிகளோடு செயற்படத்தொடங்கியது.

இன்று எதிரிகளுக்கு தரையில் சவால் விடும் மகளிர் படையணிகளைப் போல் கடலிலும் அவர்களின் செயற்பாடுகள் எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கின்றது. ஆண்களோடு நிகராக பல கடல்மைல்களுக்கு அப்பால் சென்று எதிரியின் இலக்குகளை தகர்க்கும் திறனை மகளிர் அணி பெற்றுள்ளது.

பெண்கள் என்றால் மெண்மையானவர்கள் என்ற கோட்பாட்டை உடைத்து அவர்களுக்குள் இருக்கும் வீர உணர்வுகளை பகுத்துக்காட்டி வளர்த்து விடப்பட்டுள்ளது

கடற்புலிகளின் மகளிர் படையணியினர் பல்துறை சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.; அவர்கள் தமக்கான வேலைகளை தாமே செய்து முடிப்பதற்காக பல்துறைப்பட்ட வேலைகளை தாங்களாகவே செய்கின்றனர். இயந்திரம் பழுதுபார்ப்பது, படகுகளை ஓட்டுவது, நிர்வகங்களை மேற்கொள்வது, அத்துடன் நீரடிநீச்சல் பிரிவு எனவும், மற்றும் சண்டையில் வழிநடத்துபவர்களாகவும், படகுகள் கட்டுவது, என ஆண்கள் ஆற்றுகின்ற சகல பணிகளையும் தாங்களே செய்கின்றனர்.

விடுதலைப் போராட்டத்தில் ஒரு போராளி தனது உச்ச அர்ப்பணிப்பாக நாட்டுக்காக செய்யும் கடமை கரும்புலியாகப் போய் எதிரியின் இரும்புக்கூண்டுக்குள் சென்று எதிரியையும் தன்னையும் அழிக்கும் திறன்தான்.

இதிலும் கடற்புலிகளின் மகளிர் அணி பின் நிற்க வில்லை. கடற்புலிகளின் மகளிர் படையணியில் பெண்களும் கடற்கரும்புலிகளாக மாறி பலதாக்குதல்களை நடாத்துகின்றார்கள்.

இதில் ஒன்று தான் கடற்புலிகளின் மகளிர் கடற்கரும்புலிகளின் உருவாக்கம். கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கன்னியின் 1994ஆம் ஆண்டு 8ஆம்மாதம் 16ம் நாள் காங்கேசன்துறை முகாமில் தரித்து நின்ற கண்காணிப்புக் கட்டளைக் கப்பல் மீதான தாக்குதலுடன் மகளிர் கடற்கரும்புலிகளின் தாக்குதல்; ஆரம்பிக்கிறது.

எதிரியின் கடல் கோட்டைகளில் எதிரிக்கு சவால் விடுத்து, நீருடன் நீராக மாறி எதிரியின் கலங்களைத் தகர்த்து பெரும் வெற்றிகளுக்கு மகளிர் கடற்கரும்புலியினர் வழிசெய்துள்ளனர்.. எப்பவும் ஆண்களோடு நிகராய் பெண்களையும் வளர்தெடுத்த நளாயினியும் 1994ஆம் ஆண்டு சிலாவத்துறையில் தாக்குதல் ஒன்றில் தன்னை அர்ப்பணித்தார். தமிழ் மக்களுக்கு பெரும் இன்னல் விளைவித்துக் கொண்டிருந்த சாகரவர்த்தனா என்ற கப்பல் மீது தாக்குதல் நடாத்தி லெப்.கேணல் நளாயினி, மேஜர் மங்கை, கப்டன் வாமன், கப்டன் லக்ஸ்மன் உட்பட்ட நான்கு மாவீரர்களும் விடுதலைப் போராட்டத்தின் பெரும் வெற்றிக்கு வித்திட்டு தமது இன்னுயிர்களை ஆகுதியமை தெரிந்ததே.

மகளிர் படையணியொடு இணைந்த கடற்புலிகளின் கடலாதிக்கமும். போராட்டத்தின் தேவைக்கேற்ப தமது செயற்திறனை விடுதலைப் போரில் ஆற்றிவரும் பங்கும் வியக்கத்தக்கதாகும்.

நன்றி

ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.