Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்

Featured Replies

கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்

ஐ.தே.க.கோரிக்கை; மீள்குடியேற்றத்துக்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு அரசாங்கம் கிழக்கை கைப்பற்றிவிட்டோம் என்று பெருமை பேசிக்கொண்டிருக்காமல் கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் தற்போது இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது. மனிதஉரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றன. இவற்றைத் தடுக்க அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கிழக்கில் அதிகமானோர் இடம் பெயர்ந்துள்ளமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:.

அரசாங்கம் கிழக்கை கைப்பற்றிவிட்டோம் என்று தொடர்ச்சியாக பெருமை பேசிக்கொண்டிருக்கின்றது. ஆனால் கிழக்கில் மக்கள் தொடர்ந்து இடம் பெயர்ந்து வருகின்றனர். இடம் பெயர்ந்தவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளதா ? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அரசாங்கமோ இராணுவ வெற்றிகளைப் பற்றி பேசுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது. மாறாக இடம் பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்ததாகத் தெரிவியவில்லை. .

எனவே தொடர்ச்சியாக இடம் பெயர்ந்து வருகின்ற மக்களை மீளக்குடியமர்த்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் தற்போது இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். இலங்கையில் அகதிகள் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டிருப்பது சர்வதேச மட்டத்தில் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அரசாங்கம் மக்களை மீள் குடியமர்த்தும் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். நாட்டின் பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமடைந்து வருகின்றது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமையே ஏற்பட்டுள்ளது. மனித உரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றன. இவற்றைத் தடுக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரியவில்லை. மக்களின் அடிப்படை மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். .

அதற்கு அரசாங்கமே நடவடிக்கை எடுக்கவேண்டும். நாட்டு மக்களின் மனித உரிமைகள் மீறப்படாமல் இருப்பதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்கவேண்டும். இந்தப் பொறுப்பிலிருந்து அரசாங்கத்தால் விலகிச்செல்ல முடியாது. சர்வதேச நாடுகள் எமது நாட்டு நிலைமைகளை அவதானித்துக்கொண்டிருப்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். ஐக்கியதேசியக் கட்சி மனித உரிமை மீறல்களை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுக்கும். .

கயந்த கருணாதிலக்க கருத்து இவ்விடயம் தொடர்பாக ஐக்கியதேசியக்கட்சியின் காலிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக கருத்துத்தெரிவிக்கையில் கூறியதாவது:.

அரசாங்கம் இனப்பிரச்சினை தீர்வுக்கான அரசியல் தீர்வுத்திட்டத்தை சமர்ப்பித்து பிரச்சினையை முடிவுக்கொண்டுவர முயற்சி செய்யுமானால் ஏனைய பிரச்சினைகள் தானாகவே தீர்ந்துவிடும். அந்தவகையில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணுமிடத்து அகதிகள் பிரச்சினையும் தீர்ந்துவிடும். எனவே அரசாங்கம் உடனடியாக இனப்பிரச்சினை தீர்வுக்கான அரசியல் தீர்வுத்திட்டத்தை முன்வைக்கவேண்டும். அதன் பின்னர் அனைத்துக் கட்சிகளினதும் தீர்வு யோசனைகளை ஆராய்ந்து அவற்றை அடிப்படையாகக் கொண்டு பொதுவான அரசியல் தீர்வுத் திட்டத்தை அரசாங்கம் முன்வைக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சி வலியுறுத்திக்கூறுகின்றது. .

நாட்டின் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் எமது கட்சி முக்கியமான விடயமொன்றை எச்சரிக்கையாக முன்வைக்க விரும்புகின்றது. அதாவது அரசாங்கம் அரசியல் தீர்வுத்திட்டத்தை முன்வைக்க தாமதமாகின்ற அளவுக்கு நாட்டில் அசம்பாவிதங்களும் மனித உரிமை மீறல்களும் தொடரும் அபாயம் உள்ளது. எனவே அரசாங்கம் இந்த இக்கட்டான நிலைமையை கருத்திற் கொண்டு அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும். .

வீரகேசரி நாளேடு

virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.