Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் அவலங்களை கருத்தில் எடுக்காமல் இராணுவ நடவடிக்கையில் அரசு முனைப்பு

Featured Replies

தமிழர்களின் அவலங்களை கருத்தில் எடுக்காமல் இராணுவ நடவடிக்கையில் அரசு முனைப்பு

ஒன்றரை லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தமை குறித்து தமிழ்க்கூட்டமைப்பு அதிர்ச்சி, கவலை

அரசு கிழக்கில் இராணுவ நடவடிக்கை யில் மாத்திரமே முனைப்புக் காட்டுகின் றது. மக்கள் இடம்பெயர்ந்து அவலப்படு வது பற்றியோ அவர்கள் உயிர் ஆபத்துக் களை எதிர்நோக்குவது பற்றியோ சிறிதும் கவலைப்படவில்லை.

இவ்வாறு தமிழ் தேசியக் கூட்ட மைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இராணுவ நடவடிக்கையில் மாத்திரம் கவனஞ்செலுத்தாமல் மக்களைப் பற்றியும் சிந்தித்து தற்போது புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிகளில் இருந்து அரச கட் டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந் திருக்கும் ஒன்றரை லட்சம் தமிழ் மக்களுக்கு அடிப்படை வசதிகளை உடனடி யாகச் செய்து கொடுக்க அரசு துரித நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் கூறியதாவது: மட்டக் களப்பு நகரில் இருந்து புலி களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி படையினர் மேற்கொண்டுவரும் ஷெல் தாக்குதல்கள் காரணமாக ஒரே நாளில் ஒன்றரை லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இது எம்மையெல்லாம் அதிர்ச் சிக்குள்ளாக்கும் துன்பப்படுத்தும் பாரிய மனித அவலமாகும்.

இடம்பெயர்ந்தவர்களை

எங்கே தங்கவைக்கப் போகிறது?

தங்களின் உயிர்களுக்குப் பயந்து இந்த மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வந்துள்ளனர். அவ்வாறு வந்த மக்களை அரசு எங்கே தங்கவைக்கப் போகின்றது?

எப்படி அவர்களுக்கு அடிப்படை வசதி களைச் செய்துகொடுக்கப் போகின்றது என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே வாகரை, கதிரவெளி, திரு கோணமலை ஆகிய இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பு அரச கட் டுப்பாட்டுப்பகுதிகளில் தற்போது முகாம்களில் தங்கியுள்ள மக்கள் எதிர் நோக்கும் அசௌகரியங்கள் சொல்லில் அடங்கா.

அவர்கள் தங்கியிருக்கும் கூடாரங்கள் வெயில் காலத்தில் தாக்குப் பிடிக்கக் கூடிய வையல்ல. அத்தோடு, குடிதண்ணீர், மல சலகூடம் போன்ற வசதிகளும் அவர் களுக்குப் போதாதுள்ளன.

இந்த நிலையில், மேலும் ஒன்றரை லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களை அரசு எப்படிக் கவனிக்கப் போகின்றது? அம் மக்கள் தமது வயல் நிலங்களை யெல்லாம் அப்படியே விட்டு விட்டு வந்துள்ளனர். இது அறுவடைக் காலம். இதனால் அவர்கள் பொருளாதார ரீதியாகவும் பாரிய பின்னடைவை எதிர் நோக்கியுள்ளனர்.

பாடசாலைகள், அலுவலகங்கள்

இயங்கமுடியாத நிலையில்

ஷெல் தாக்குதல் காரணமாக மக்களின் வீடு வாசல்கள் உட்பட அனைத்துச் சொத்து களுக்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள் ளன. மட்டக்களப்பு நகரில் இருந்து புலி களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி படையினர் ஷெல் தாக்குதல் நடத்துவ தால் நகரிலுள்ள கட்டடங்கள் அதிர்கின்ற ன.

தற்போது நகரிலுள்ள பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் பல இயங்க முடியாத நிலையில் மூடப்பட்டுள்ளன. இதனால், மாணவர்களின் கல்வி நடவ டிக்கை பாதிக்கப்படுகிறது.

எனவே, அரசு இராணுவ நடவடிக்கை யில் மாத்திரம் முனைப்புக் காட்டாமல் எமது மக்களைப் பற்றியும் சிந்திக்க வேண் டும். அவர்கள் பாதிப்புக்குள்ளாவதைத் தடுக்க வேண்டும். என்று தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ண சிங்கம்.

http://www.uthayan.com/pages/news/today/02.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.