Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள்தான் சுட்டனர்: இலங்கை புழுடா

Featured Replies

கொழும்பு: தமிழக மீனவர்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை. விடுதலைப் புலிகள்தான் இதற்குக் காரணம் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

தமிழக மீனவர்கள் மீது சமீப காலமாக இலங்கை கடற்படையினர் கடும் தாக்குதலை முடுக்கி விட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றுள்ளது.

நேற்று காலை இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாம்பன் மீனவர் கிறிஸ்டோபர் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். பல்வேறு போராட்டங்களை அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு தங்களது நாட்டு கடற்படை காரணம் அல்ல, விடுதலைப் புலிகள்தான் சுட்டனர் என்று இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் கொழும்பில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இதுபோன்ற சம்பவங்களில் இலங்கை கடற்படை ஈடுபடவில்லை. துப்பாக்கிச் சூட்டுக்கும், இலங்கை கடற்படைக்கும் தொடர்பு இல்லை.

இந்திய கடல் எல்லைக்குள் ஊடுறுவி கடற்படை எந்தத் தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை. விடுதலைப் புலிகள்தான் இதற்குக் காரணமாக இருக்க முடியும்.

இதன் மூலம் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான வலுவான உறவை சீர்குலைக்க அவர்கள் சதி செய்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் கட்டமைப்பை உடைக்க தமிழக அரசு தற்போது தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்களது ஆயுதக் கடத்தலைத் தடுத்து அவர்களின் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் இதை திசை திருப்பும் வகையில் புலிகள் அமைப்புதான் இந்த செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கடற்படை அதிகா>களிடம் விசாரிக்கப்பட்டது. அப்போது, இந்த சம்பவத்தில் கடற்படைக்குத் தொடர்பு இல்லை என்பது தெரிய வந்தது. கச்சத்தீவு பகுதியில் இலங்கை கடற்படை கப்பல் எதுவும் அந்த சமயத்தில் இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடற்படையுடன் இணைந்து கூட்டு ரோந்து மற்றும் பாதுகாப்பில் ஈடுபடுவது குறித்து இலங்கை அரசு பரிசீலித்து வருகிறது. இந்திய அதிகாரிகளுடன் இதுகுறித்து விவாதிக்கப்படும்.

இலங்கை கடல் எல்லைக்குள் ஊடுறுவி வரும் இந்திய மீனவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம் என இலங்கை கடற்படைக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு டெல்லி வந்திருந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே, விடுதலைப் புலிகளை ஒடுக்க இந்திய, இலங்கை கடற்படைகள் கூட்டு ரோந்தில் ஈடுபடலாம் என யோசனை தெரிவித்திருந்தார். ஆனால் இதற்கு தமிழகத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் மத்திய அரசும் இந்த யோசனையை எடுத்த எடுப்பிலேயே நிராகரித்து விட்டது.

இந்த நிலையில் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி விட்டு, இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க கூட்டு ரோந்து செல்லலாம் என்ற தனது பழைய யோசனையை தூசி தட்டி எடுத்துள்ளது இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது

http://thatstamil.oneindia.in/news/2007/03/12/lanka.html

பொய் சொல்வதற்க்கு இவர்களிடம்தன் படிக்கவேண்டும் :angry: :angry:

  • தொடங்கியவர்

சிறிலங்கா - இந்திய கூட்டுக்கடல் கண்காணிப்பை ஏற்படுத்த சிறிலங்கா அரசு சதி

இந்திய மீனவர்கள் மீது தாம் தாக்குதல்களை நடத்தவில்லை என சிறிலங்கா கடற்படையினர் மறுத்துள்ளதுடன், இரு தரப்பு கடல் எல்லைகளின் இருபுறமும் மீனவர்களை கண்காணிப்பதற்கு இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து செயற்படும் திட்டம் ஒன்றையும் சிறிலங்கா அரசு முன்வைத்துள்ளது.

இரு தரப்பும் இணைந்து கடல் எல்லைகளை கண்காணிப்பதுடன், மீனவர்களின் நகர்வுகள் தொடர்பாக தகவல்களையும் பரிமாறிக் கொள்ளும் திட்டம் ஒன்றை செய்து கொள்ள சிறிலங்கா அரசு விரும்புவதாக அதன் வெளிவிவகார அமைச்சு நேற்று ஞாயிற்றக்கிழமை தெரிவித்துள்ளது.

அண்மையில் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய தாக்குதலில் இந்திய மீனவர்களுக்கு காயங்களும், உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பான விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பதாகவும், அதற்குரிய குழுவை இந்தியாவிற்கு அனுப்புவதாகவும் சிறிலங்கா தெரிவித்துள்ளது.

இந்த மாதம் 10 ஆம் நாள் கச்சதீவின் தென்மேற்கு பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய தாக்குதலில் இந்திய மீனவர் ஒருவர் பலியாகி இருந்தார். எனினும் எமது கடற்படை ஒருபோதும் இந்திய கடல் எல்லைக்குள் சென்றதில்லை. அவர்கள் நவீன உபகரணங்களை கப்பல்களில் கொண்டிருப்பதனால் தவறுகள் நிகழ வாய்புக்கள் இல்லை எனவும் எம்மீது பழியைப் போடுவதற்காக விடுதலைப் புலிகளே தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனவும் சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் சிறிலங்கா கடற்படையினர் திட்டமிட்டு இந்திய மீனவர்கள் மீது தாக்குதலை நடத்தி அதன் மூலம் இந்திய - சிறிலங்கா கூட்டுக்கண்காணிப்பு என்ற வலைக்குள் இந்திய கடற்படையினரையும் இந்திய அரசையும் வீழ்த்துவதற்கு முயன்று வருவதாகவும் இந்த தந்திரோபாய விளையாட்டில் அப்பாவி இந்திய மீனவர்களின் உயிர்களும் உடமைகளும் இழக்கப்பட்டு வருவதாகவும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.eelampage.com/?cn=31085

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.