Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

300 கோடி ரூபா பெறுமதியான காணியை பெறும் பலாத்தகார நடவடிக்கையில்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

300 கோடி ரூபா பெறுமதியான காணியை பெறும் பலாத்தகார நடவடிக்கையில் மகிந்தவும் பசிலும்: 'ராவய' வார ஏடு

[திங்கட்கிழமை, 12 மார்ச் 2007, 18:08 ஈழம்] [கொழும்பு நிருபர்]

தனியார் உரிமையாளர் ஒருவருக்கு சொந்தமானதும், ரஸ்ய தூதரக அலுவலகத்திற்கு சொந்தமானதுமான 300 கோடி ரூபாவுக்கு அதிகமான பெறுமதி கொண்ட காணியை பலாத்காரமாக உரிமையாக்கிக் கொண்டு அதில் வாகனத் தரிப்பிடத்தை அமைக்கும் பணி, அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச அறிவுறுத்தலின் கீழ் இடம்பெற்றது.

இத்தகவலை கடந்த வாரம் வெளிவந்த 'ராவய' வார இதழ் தனது செய்தியில் வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

குறிப்பிட்ட அந்த இடத்தில் வாகனத் தரிப்பிடத்தை அமைத்து அதனை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்த கருத்தின் மூலமும், கொழும்பு நகர ஆணையாளரிடமிருந்து ராவயவினால் பெறப்பட்ட தகவலின் மூலமும் இவ்விடயம் தெளிவாகியுள்ளது.

இந்த காணியின் உரிமையாளரான இஸ்மாயில் மொகமட் தாகிர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் பிரகாரம் அந்த காணிக்குள் வெளிநபர்கள் உட்பிரவேசிப்பது மார்ச் 15 ஆம் நாள் வரை தடை செய்யப்பட்டிருந்தது. இந்த தடை உத்தரவு பெப்ரவரி 2 ஆம் நாள் கிடைக்கப்பெற்றுள்ள அதேவேளை பெப்ரவரி 9 ஆம் நாள் பொரளைச் சந்தியில் வைத்து அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, பெப்ரவரி முதல் வாரத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாகக் கூறி காணி மீட்டல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், காணி மறுசீரமைப்பு நிறுவனம் என்பனவற்றை தன்னகப்படுத்திக் கொண்டார். இந்த நடவடிக்கைக்கும் பௌத்தாலோக்க மாவத்தை காணிக்கும் தொடர்பிருப்பதாக சந்தகம் எழுந்துள்ளது.

மேலும் தாகீரின் கொலை தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகளின் படி அந்த காணியில் 40 பேர்ச்சஸ் இடத்தைக் கோரி பாதாள உலகத்தினருடன் தொடர்புடைய அமைச்சர் ஒருவர் அவரை அச்சுறுத்தியதாக தெரிய வந்துள்ளது. இந்த அச்சுறுத்தல் குறித்து தமது வீட்டின் அருகாமையில் வசிக்கும் உயர் காவல்துறை அதிகாரியிடம் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

குறிப்பிட்ட அந்த இடத்தில் பலாத்காரமாக வாகனத் தரிப்பிடம் அமைக்க தேவையான பொருட்கள் மற்றும் உபகரணங்களுக்கு மட்டும் கொழும்பு மாநகர சபை 79 லட்ச ரூபவை ஒதுக்கியுள்ளது. இந்த நிதி உறுப்பினர்களின் ஒதுக்கீட்டு நிதியிலிருந்தே பெறப்பட்டுள்ளது. இந்த நிதிக்கென பதினொரு உறுப்பினர்கள் தமது ஒதுக்கீட்டு நிதியைப் பயன்படுத்தியுள்ளனர்.

நகர சபைக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ உரிமையற்ற தனியார் இடத்திற்கு நகர சபையின் நிதி ஒதுக்கீடு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்று 'ராவய' கொழும்பு மாநகர சபை ஆணையாளரிடம் வினவியப் பொழுது அவர் நகர சபையின் சட்ட திட்டங்களின் படி விசேட சந்தர்ப்பங்களில் அவ்வாறு செய்ய முடியும் என்று குறிப்பிட்டார்.

இது குறித்து கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் வாசுதேவ நாணயக்காரவிடம் வினவியப் பொழுது மாநகர சபையின் சட்டதிட்டங்களில் அவ்வாறு தனிப்பட்ட இடங்களில் நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

இந்த காணி தொடர்பான கொழும்பு மாநகரசபையின் தலையீடு குறித்து அடுத்த சபைக் கூட்டத்தில் கேள்வி ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ம் செய்வாங்கள் இவங்கள் இவரிட்டை மட்டுமா ஊரெல்லாம் கொள்ளைதானே நடக்குது

ம் செய்வாங்கள் இவங்கள் இவரிட்டை மட்டுமா ஊரெல்லாம் கொள்ளைதானே நடக்குது

ஈழவன் உங்களுக்கு ஏதாவது அனுபவம் இருக்கா?? அதாவது நீங்கள் உங்களது உடமைகளை பறிகொடுத்துள்ளீர்களா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழவன் உங்களுக்கு ஏதாவது அனுபவம் இருக்கா?? அதாவது நீங்கள் உங்களது உடமைகளை பறிகொடுத்துள்ளீர்களா??

ஏன் இவங்கடை இராணுவம் எங்கடை மண்ணிலை என்ன செய்தது...? என்ன செய்யுது இப்ப..

இதைவிட வேறை என்ன உதாரணம் வேணும்.. இவங்கடை வாரிசுகள்தானே சிறீலங்கா இராணுவம்..

ஈழவன் உங்களுக்கு ஏதாவது அனுபவம் இருக்கா?? அதாவது நீங்கள் உங்களது உடமைகளை பறிகொடுத்துள்ளீர்களா??

நான் பொதுவாகத்தான் சொன்னேன் ஹெல்பிங் காசை கைவைத்து நீதிமன்றில் மாட்டி பிறகு ஆட்சிக்கு வந்தபின் தன் அரசியல் பலத்தால் அவ்வழக்கில் இருந்து வந்தது உலகமறியும்

தற்போதய ராஜபக்ஸ குடும்பத்தின் செயற்பாடு படி பார்த்தால லங்காவ சல்லி மகிந்த அன் கோ சல்லி அவ்வளவே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.