Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தபுலி உடன்படிக்கை குறித்து விசாரிப்பதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்படவேண்டும் ஜே.வி.பி.

Featured Replies

மஹிந்தபுலி உடன்படிக்கை குறித்து விசாரிப்பதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்படவேண்டும் ஜே.வி.பி.

மக்களுக்கு உண்மையை அறியும் உரிமை உள்ளது என்கிறது ஜே.வி.பி. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது உடன்படிக்கையொன்று செய்யப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த அனைத்துக் கட்சிகளும் அடங்கிய பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைத்து நாட்டு மக்களுக்கு உண்மையை öவளிப்படுத்தவேண்டும். பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்படுமிடத்து நாங்கள் அதற்கு முழுமையான ஆதரவினை வழங்குவோம் என்று ஜே.வி.பி. யின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்கவேண்டும் என்று ஜே.வி.பி. அரசாங்கத்திடமும் உள்ளூர் தொண்டர் அமைப்புக்களிடமும் கோரிக்கை விடுக்கின்றது என்றும் அவர் மேலும் கூறினார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக கேசரிக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது. ஜே.வி.பி. க்கு தெரிந்தவகையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பினருக்கும் விடுதலை புலிகளுக்குமிடையில் எந்தவிதமான உடன்படிக்கையும் செய்துகொள்ளப்படவில்லை. ஆனால் எங்களுக்குத் தெரியாதவகையில் மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பினருக்கும் விடுதலை புலிகளுக்குமிடையில் உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டதா ? என்று எமக்குத் தெரியவில்லை. பாராளுமன்ற தெரிவுக்குழு அவசியம் எப்படியிருப்பினும் அவ்வாறு எங்களுக்கு தெரியாத வகையில் விடுதலை புலிகளுடன் உடன்படிக்கை செய்யப்பட்டிருந்தால் அது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயமாகும். அது எம்மையும் ஏமாற்றும் செயலாகும். எனவே இவ்விடயம் குறித்து ஆராய உடனடியாக பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைத்து விசாரணைகள் நடத்தப்படவேண்டும். மக்களுக்கு உண்மை வெளிப்படுத்தப்படவேண்டும். இவ்விடயம் தொடர்பாக உண்மையை அறிவதற்கு மக்களுக்கு உரிமையுண்டு. அரசாங்கத்தின் பிரபல எம்.பி. க்களான ஸ்ரீபதி சூரியாராச்சியும் மங்கள சமரவீரவும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். எனவே இவ்விடயத்தை வெறுமனே விட்டுவிட முடியாது. இந்த விடயம் குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்படுமிடத்து எமது கட்சி அதன் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவினை வழங்கும்.

சு.க.வின் யோசனை மஹிந்த சிந்தனையை மீறக்கூடாது இனப்பிரச்சினை தீர்வு குறித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யோசனை விரைவில் வெளிவரும் என்று தெரிவிக்கப்படுகின்றது. அந்த யோசனை அதிகாரப்பகிர்வை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் என்று கூறப்படுகின்றது. அவ்வாறு அதிகாரப் பகிர்வை அடிப்படையாக கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இனப்பிரச்சினை தீர்வு யோசனையை முன்வைத்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. மஹிந்த சிந்தனையை மீறும் வகையில் எந்தவிதமான யோசனை முன்வைக்கப்பட்டாலும் ஜே.வி.பி. அதனை கடுமையாக எதிர்க்கும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முதலில் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவிடமே தீர்வு யோசனையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் பின்னர் ஊடகங்கள் மூலம் தீர்வு யோசனைøயின் உள்ளடக்கங்களை நாங்கள் ஆராய்ந்துவிட்டு எமது அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். எப்படியிருப்பினும் எமது கட்சி சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் கலந்துகொள்ளாது.

சுதந்திரக்கட்சியின் யோசனை மஹிந்த சிந்தனையை மீறுவதாக இருந்தால் நாங்கள் அதனை கடுமையாக எதிர்ப்போம். கடந்த ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்காலத்தில் அந்த அரசாங்கத்தை எதிர்த்து எமது கட்சி பாரிய எதிர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டது. அந்த வகையில் தீர்வு யோசனை மஹிந்த சிந்தனையை மீறுமிடத்து இந்த அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் குறித்து நாங்கள் தீவிரமாக ஆராயவேண்டியேற்படும். இனப்பிரச்சினை தீர்வு குறித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யோசனையை அரசாங்கத்தின் யோசனை என்று எடுத்துக்கொள்ளமுடியாது. காரணம் தற்போது அரசாங்கத்தில் சுதந்திர கட்சியினரைவிட ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களே அதிகமாக இருக்கின்றனர். இடம்பெயர்ந்துள்ள மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படவேண்டும்.

இதேவேளை கிழக்கில் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரியவருகின்றது. இடம்பெயர்ந்துள்ள மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் செய்துகொடுக்கவேண்டும். இடம்பெயர்ந்துள்ள மக்களில் அதிகமான சிறுவர்கள் இருக்கலாம். எனவே சிறுவர்களுக்கான வசதிகள் செய்துகொடுக்கப்படவேண்டும். மக்களுக்கான உணவு, தங்குமிட மற்றும் ஏனைய அனைத்து வசதிகளையும் அரசாஙக்ம் செய்துகொடுக்கவேண்டும்.

உள்ளூர் தொண்டர் நிறுவனங்களும் இடம்பெயர்ந்த மக்களுக்கான தேவைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும். இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை செய்துகொடுக்கவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால் அந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றவேண்டியது உள்ளூர் தொண்டர் அமைப்புக்களின் கடமையாகும். கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது அரசாங்கமும் உள்ளூர் அமைப்புக்களும் இணைந்துசெயற்பட்டமையை நாங்கள் நினைவுகூறவேண்டும். அரசாங்கம் பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்ற அதேவேளை மக்களின் மனிதாபிமான தேவைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

[virakesari.lk]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.