Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு மேலும் பணி­யாற்­ற­வேண்டும்

Featured Replies

நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு மேலும் பணி­யாற்­ற­வேண்டும்

 

நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்­கான முயற்­சிகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்ற போதிலும் அந்த முயற்­சி­களை குழப்­பி­ய­டிக்கும் வகை­யி­லான செயற்­பா­டுகள் தொடர்ந்து வரு­கின்­றன. இன, மத ரீதியில் முரண்­பா­டு­களை தோற்­று­விப்­ப­தற்கும் இன­வாத சக்­திகள் தொடர்ந்தும் முயற்சி செய்து வரு­கின்­றன. இந்த நிலை­யில்தான் நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்கு கடி­ன­மான முயற்­சி­களை எடுக்­க­வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

இன­ரீ­தி­யா­கவும் மத­ரீ­தி­யா­கவும் முரண்­பா­டு­களை தோற்­று­வித்து வன்­மு­றை­களை உரு­வாக்கி புதிய அர­சியல் யாப்­புக்­கான முயற்­சி­யையும் இல்­லாது செய்­வ­தற்கு இன­வாத சக்­திகள் முயன்­று­ வ­ரு­கின்­றன. புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சி­க­ளுக்கு எதி­ராக பொது எதி­ரணி உட்­பட பல தரப்­பி­னரும் செயற்­பட்டு வரு­கின்­றனர். நாட்டின் நான்கு பௌத்த பீடங்­களும் இந்த முயற்­சிக்கு எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளன. புதிய அர­சியல் யாப்­புக்­கான முயற்­சி­யினை அர­சாங்கம் கைவிட வேண்டும் என்றும் பௌத்த பீடங்கள் கோரிக்கை விடுத்­துள்­ளன.

இத்­த­கைய நிலை­யில்தான் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அண்­மையில் பொதுக்­கூட்டம் ஒன்றில் உரை­யாற்­று­கையில் சர்­வ­கட்சி மாநாட்­டி­னையும் சர்­வ­மதத் தலை­வர்கள் மாநாட்­டி­னையும் புத்­தி­ஜீ­விகள் மாநாட்­டி­னையும் நடத்தி பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண முய­லப்­போ­வ­தாக கருத்து தெரி­வித்­தி­ருந்தார்.

புதிய அர­சி­யல்­யாப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான செயற்­பா­டு­க­ளுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்­பி­யுள்ள நிலை­யி­லேயே ஜனா­தி­பதி இந்­தக்­கருத்­தினை கூறி­யி­ருந்தார். புதிய அர­சியல் யாப்­புக்­கான இடைக்­கால அறிக்கை அர­சியல் யாப்­பு­ச­பையில் சமர்ப்­பிக்­கப்­பட்டு விவா­தமும் நடை­பெற்­றுள்­ளது. இந்­த­நி­லையில் அதற்கு எதி­ரான எதிர்ப்­புக்கள் பெரு­ம­ளவில் கிளம்­பி­யுள்­ளன. இனங்­க­ளுக்­கி­டை­யேயும் மதங்­க­ளுக்­கி­டை­யேயும் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­த­வேண்­டி­யதன் அவ­சி­யத்தை தற்­போ­தைய நிலைமை உரு­வாக்­கி­யுள்­ளது.

இதன் ஒரு அங்­க­மாக தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யாடல் மற்றும் அர­சகரும­மொ­ழிகள் அமைச்சர் மனோ கணே­சனின் ஏற்­பாட்டில் எதிர்­வரும் 13 ஆம் திகதி கொழும்பில் மத சக­வாழ்வு மாநாடு நடத்­தப்­ப­ட­வுள்­ளது. மதங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் இந்த மாநாடு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த மாநாட்டில் பங்­கேற்­கு­மாறு அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து பீடா­தி­ப­தி­க­ளுக்கும் அமைச்சர் மனோ கணேசன் அழைப்பு விடுத்­துள்ளார்.

கண்­டிக்கு நேற்று முன்­தினம் விஜயம் செய்த அமைச்சர் மனோ கணேசன் அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து பீடா­தி­ப­தி­களை சந்­தித்து இந்த மாநாட்­டுக்­கான அழைப்பை விடுத்­துள்ளார். அஸ்­கி­ரிய மாநா­யக்க பீடத்­தி­னரை அமைச்சர் சந்­தித்­த­போது சிங்­கள மக்கள் தமிழ், முஸ்லிம், கிறிஸ்­தவ மக்­க­ளுடன் இணைந்து விட்­டுக்­கொ­டுத்து வாழ்­கின்­றனர். அண்­மையில் நாம் யாழ்ப்­பா­ணத்தில் மக்­க­ளுடன் சந்­திப்­புக்­களை மேற்­கொண்டோம். இந்த சந்­திப்பில் அந்த மக்கள் அர­சி­ய­ல­மைப்பு வேண்­டு­மென்றோ, அதி­காரம் வேண்­டு­மென்றோ கேட்­க­வில்லை. மாறாக தமக்­கான வாழ்­வா­தார நட­வ­டிக்­கைகள், தொழில்­மு­யற்­சிகள், பொரு­ளா­தாரம் மற்றும் கல்­வியை பெற்­றுக்­கொள்­ள­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து அவர்கள் எங்­க­ளிடம் வலி­யு­றுத்­தினர். அந்த மக்­க­ளது கோரிக்­கைகள் சாதா­ர­ண­மா­னதும் நியா­ய­மா­ன­து­மாகும். தெற்­கிலும் வடக்­கிலும் பசி, பட்­டினி ஒன்­றா­கவே உள்­ள­போது அர­சி­ய­லுக்­காக இவர்­களை பிரிக்­கக்­கூ­டாது. இன, மொழி அடிப்­ப­டையில் பிரச்­சி­னை­களைத் தீர்க்­கப்­போனால் ஒரு­போதும் பிரச்­சி­னை­களைத் தீர்க்க முடி­யாது என்று பீடத்­தினர் எடுத்­துக்­கூ­றி­யுள்­ளனர்.

இதே­போன்று மல்­வத்து மாநா­யக்கர் திப்­பட்­டு­வாவே சுமங்­கல தேர­ரையும் அமைச்சர் சந்­தித்துப் பேசினார். இதன்­போது கருத்து தெரி­வித்த அவர் தமிழ், சிங்­கள, முஸ்­லிம்கள் இணைந்து வாழ­வேண்டும். நீங்கள் அதற்­கான முயற்­சி­களை எடுப்­பது நல்­ல ­விடயம். சகல தரப்­பிலும் இன­வா­திகள் உள்­ளனர். எனினும் நாட்­டினை அமை­தி­யாக பாது­காத்­துக்­கொள்­ள­வேண்­டிய கட்­டாயம் அனை­வ­ரி­டத்­திலும் உள்­ளது என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

தேரர்­க­ளு­டனான சந்­திப்பில் கருத்து தெரி­வித்த அமைச்சர் மனோ கணேசன் இலங்­கையர் என்ற அடிப்­ப­டையில் பிரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ணப்­ப­ட­வேண்டும். எனது அமைச்சில் அதற்­கான சகல முயற்­சி­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­கின்றேன். நாட்டில் வடக்­கிலும் தெற்­கிலும் சில மோச­மான சம்­ப­வங்கள் நடை­பெற்­றுள்­ளன. தெற்கில் முஸ்­லிம்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. வடக்கில் தேசி­யக்­கொடியை ஏற்­ற­மாட்டோம் என சிலர் குழப்பம் விளை­விக்­கின்­றனர். இவ்­வா­றான நிலை­யில்தான் மத சக­வாழ்வு மாநாட்­டினை நடத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்ளேன். ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் உட்­பட அமைச்­சர்கள் அனை­வரும் இந்­த­மா­நாட்டில் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். சகல மதத் தலை­வர்­களும் இந்த மாநாட்டில் கலந்­து­கொள்­ள ­வேண்டும். இதன்­மூலம் மத சக­வாழ்வை ஏற்­ப­டுத்த முடியும் என்று கூறி­யுள்ளார்.

புதிய அர­சியல் யாப்­பினை உரு­வாக்­கு­வதன் மூலம் அதி­கா­ரத்தைப் பகிர்ந்து அர­சியல் தீர்வை காண­வேண்டும் என்ற விட­யத்தில் தமிழ் மக்கள் பெரும் ஆர்வம் கொண்­டுள்­ளனர். நல்­லாட்சி அர­சாங்க காலத்தில் அர­சியல் தீர்வை காண்­ப­தற்கு வழி­வ­குக்­க­வேண்­டு­மென்று தமிழ் மக்கள் எதிர்­பார்த்­துள்­ளனர். இதற்­கேற்­ற­வ­கையில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்பந்தன் தலை­மை­யி­லான கூட்­ட­மைப்­பினர் புதிய அர­சி­யல்­யாப்­புக்­கான முயற்­சிக்கு பூர­ண­மான ஒத்­து­ழைப்பை வழங்கி வரு­கின்­றனர்.

முன்­னொ­ரு­போ­து­மில்­லா­த­வாறு நாட்­டி­லுள்ள இரு பிர­தான கட்­சி­க­ளான ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் ஒன்­றி­ணைந்து அர­சி­யல்­தீர்வை காண­வேண்டும் என்ற விட­யத்தில் அக்­கறை செலுத்தி வரு­கின்­றன. அதி­காரப் பர­வ­லாக்கல் என்ற விட­யத்தில் கருத்து முரண்­பா­டுகள் இருந்­தாலும் கூட பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண வேண்டும் என்ற நிலைப்­பாடு தற்­போது மேலோங்­கி­யுள்ளது.

இவ்­வாறு இரு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண்­ப­தற்கு முன்­வந்­துள்ள நிலையில் அதற்கு எதி­ர­ணி­யான தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பும் பூரண ஒத்­து­ழைப்பை வழங்­கு­கின்­றது. வர­லாற்றில் இவ்­வா­றான ஒரு சந்­தர்ப்பம் கிட்­டி­யுள்­ளமை இதுவே முதல்­த­ட­வை­யாகும். எனவே இந்த சந்­தர்ப்­பத்தை நழு­வ­வி­டக்­கூ­டாது என்­பதில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு அக்­க­றை­யாக செயற்­பட்டு வரு­கின்­றது. ஆனாலும் இந்த ஒன்­றி­ணைந்த முயற்­சியை குழப்­பி­ய­டிப்­ப­தற்கு இன­வாத சக்­திகள் முயன்­று ­வ­ரு­கின்­றன. இன­ரீ­தி­யா­கவும் மத ரீதி­யா­கவும் முரண்­பா­டு­களை தோற்­று­விப்­ப­தற்­கான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. எனவே தற்­போ­தைய நிலையில் நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது அர­சியல் தீர்வின் அவ­சியம் குறித்தும் புதிய அர­சி­யல் ­யாப்பின் அவ­சரம் தொடர்­பா­கவும் நாட்டு மக்­க­ளுக்கு குறிப்­பாக பெரும்­பான்­மை­யின சிங்­கள மக்­க­ளுக்கு விளங்­கப்­ப­டுத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மாக உள்­ளது.

இன­ரீ­தி­யா­கவும் மத ரீதி­யா­கவும் முரண்­பா­டு­களை தவிர்க்கும் வகையில் மாநா­டு­க­ளையும் கூட்­டங்­க­ளையும் நடத்­த­வேண்­டிய தேவை எழுந்­தி­ருக்­கின்­றது. அந்­த­வ­கையில் தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு மத சக­வாழ்வு மாநாட்­டினை நடத்­து­வ­தற்கு தற்­போ­தைய சூழ்­நிலையில் நட­வடிக்கை எடுத்­துள்­ளமை வர­வேற்­கத்­தக்க விட­ய­மாக அமைந்­துள்­ளது.

அமைச்சர் மனோ கணேசன் இனங்­க­ளுக்கிடையே சக­வாழ்வை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் மதங்­க­ளி­டையே நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் தன்­னா­லான முயற்­சி­களை தொடர்ச்­சி­யாக எடுத்து வரு­கின்றார். சிங்­கள மொழிமூலமான தொலைக்காட்சிகள் உட்பட ஊடகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இன, மத, நல்லிணக்கம் தொடர்பிலும் புதிய அரசியல் யாப்புக்கான அவசியம் குறித்தும் வலியுறுத்தி வருகின்றார்.

தேசிய சகவாழ்வு அமைச்சுப்போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் தேசிய நல்லிணக்க அமைச்சு செயற்பட்டு வருகின்றது. இதற்குக்கீழே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் தேசிய நல்லிணக்கத்திற்கான செயலகம் பணியாற்றி வருகின்றது. எனவே இந்த அமைச்சு மூலமாகவும் இன, மத, நல்லிணக்கம் தொடர்பிலும் புதிய அரசியல் யாப்புக்கான அவசியம் குறித்தும் சிங்கள மக்கள் மத்தியில் பரப்புரைகள் செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்ய முடியாவிடின் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் அமைச்சுடன் இணைந்தாவது இந்தப் பணிகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இதன்மூலமாகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு வழி பிறக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.  

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-05#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.