Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிரின் மேன்மை உணரப்படுமா?

Featured Replies

  • உயிரின் மேன்மை உணரப்படுமா?
உயிரின் மேன்மை உணரப்படுமா?
 
 

உயிரின் மேன்மை உணரப்படுமா?

நூலகத்துக்குச் சென்ற ஒரு­வன் நூல­க­ரி­டம், ‘உயிரை மாய்த்­தல் பற்­றிய நூல் ஒன்று தர­மு­டி­யுமா?’என்று கேட்­கி­றான். மிக நீண்ட கால­மாக நூல­க­ரா­கப் பணி­யாற்­றும் அவர் உயி­ரின் மேன்­மை­யை­யும், நூல்­க­ளின் பெறு­ம­தி­யை­யும் அறிந்­த­வர். அத­னால் ¶Íஅந்த நூலகர் மிக­வும் நிதா­னத்து­டன்,’ சரி தர­லாம், ஆனால் பிறகு, நூலைத் திருப்­பிக் கொண்­டு­வந்து தரு­ப­வர் யார்?’ என வினா­வுக்கு வினா­வாலே விடை பகர்ந்­தி­ருக்­கின்றார்.

வாழ்­வ­தை­விட ச் சாவது மேலா­ன­தல்ல!

வாழ்­வ­தை­விடச் சாவது மேலா­னது எனத் தவ­றாக எண்­ணித் திட்­ட­மிட்டு ஒரு­வர், தமது உயி­ரைப் போக்­கல் உயிரை மாய்த்­தல் ஆகும். ஒரு நாட்­டின் அல்­லது ஒரு மக்­கள் குழு­மத்­தின் உண்­மை­யான – நியா­ய­மான விடு­த­லைக்காக மேற்­கொள்­ளப்­ப­டும் தியா­கச் செயல்­கள் தமது உயி­ரைத் தாமே போக்­கிக் கொள்­ளும் வடி­வங் களில் நிறை­வே­றி­யதை, – நிறைவே­று­வதை வர­லாற்­றில் காண­லாம்.

அவை பற்றி அல­சு­வ­தாக இப்­ப­குதி அமை­யாது. இப்­பத்­தி­யில் பொது­வா­கத் தனிப்­பட்ட கார­ணங்­க­ளுக்­காக வாழ்­வ­தை­விடச் சாவது நல்­லது என எண்ணி தவ­றாக முடி­வெ­டுத்து அநி­யா­ய­மா­கத் தமது உயிரை மாய்ப்­ப­வர்­க­ளின் செயல் பற்­றியே ஆரா­யப்­ப­டு­கின்­றது.

வடக்கு மாகா­ணத்­தின் புள்ளி விவ­ரங்­கள்

ஆயு­தப் போருக்­குப் பின்­னர் தற்­கொ­லைச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துச் செல்­வ­தைப் புள்­ளி­வி­வ­ ரங்­கள் வௌிப்­ப­டுத்தி நிற்­கின் றன. வடக்கு மாகா­ணத்­தின் ஐந்து மாவட்­டங்­க­ளி­லும் இவ்­வாண்டு ஆவ­ணி­மா­தம் வரை­யி­லான எட்டு மாதங்­க­ளி­லும் 796 பேர் உயிரை மாய்த்­துக்­கொள்ள முயற்­சித்­தி­ருப்­ப­தா­க­ வும், அதில் 85 பேர் உயி­ரி­ழந்து போன­தா­க­வும், மருத்­து­வ­மனை வட்­டா­ரப் புள்­ளி­வி­வ­ ரங்­கள் தெரி­விக்­கின்­றன. மருத்­து­வ­ம­னை­க­ளின் பதி­வு­க­ளுக்கு அப்­பால் முயற்­சிக்­கப் பட்­டவை இத்­த­கைய தரவு விவ­ரத்­தில் சேர்க்­கப்­ப­டு­வ­தில்லை என்­ப­தை­யும் கவ­னத்­திற் கொள்­ள­வேண்டி இருக்­கி­றது.

வீரம் செறிந்த வாழ்­வி­ய­லோ­டும், வர­லாற்­றோ­டும், பண்­பாட்­டோ­டும் சிறப்­புற்று விளங்­கிய ஒரு மக்­கள் குழு­மம், இன்று தன்­னம்­பிக்கை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ள முயலும் தரப்பினர் கொண்ட சமூ­க­மாக மாறி வரு­வது மிக­வும் வேத­னைக்­கு­ரி­யது. அறுக்க அறுக்க வள­ரும் அறுகு போல­வும், வெட்ட வெட்­டத் தளைக்­கும் வாழை போல­வும் வள­ர­வேண்­டிய எமது மக்­கள் குழு­மம், உயிரை மாய்க்­கத் தலைப்­பட்­டி­ருப்­பதை என்­ன­வென்று சொல்­வது? வளர்ந்­து­வ­ரும் இந்­தச் சிக்­கலை ஆழ­மான ஆய்­வுக்கு உட்­ப­டுத்தி எமது சமூ­கம் மீண்­டெழ வழி­கள் வகுக்­கப்­பட வேண்­டி­யது முக்­கிய தேவை­யா­கும்.

 

அரி­யா­லை­யில் நடந்த உயி­ரைப் போக்­கிக்­கொண்ட சம்­ப­வம்

கடந்த ஐப்­ப­சித்­திங்­கள் இறுதி வாரத்­தில் அரி­யா­லை­யில் நடந்த ஒரு குடும்­பத்­தின் தவ­றான முடி­வெ­டுத்து உயி­ரைப் போக்­கிக்­கொண்ட செய­லா­னது பெரும் கொடு­மை­யா­ன­தொன்­றாக, மனி­த­நே­யம் கொண்ட அத்­தனை பேரா­லும் பார்க்­கப்­ப­டு­கின்­றது. ரத­ணன் கிரு­ சாந்­தன்(37) என்­ப­வர் ஒரு கோடியே பதி­னேழு இலட்­சம் ரூபா பணத்தை நம்­பிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் தனது நண்­பன் ஒரு­வ­னுக்கு ஆறு­மா­தத் தவ­ணை­யில் கட­னா­கக் கொடுத்­துள்­ளார் எனத் தெரி­ய­வ­ரு­கின்­றது. அந்­தப் பணத்தை மீளப்­பெற இரண்டு ஆண்­டு­கள் முயற்­சி­கள் மேற்­கொண்­டி­ருந்­தும் அது முடி­யா­மல் போயி­ருந்­தது.

இவ்­வ­ளவு தொகைப் பணத்­தை­யும் இரண்­டாண்டு கால­மாக மீளச்­செ­லுத்­தாது இழுத்­த­டித்து வந்த நிலை­யில் கிரு­சாந்­தன் பணத்தைப் பெற்றவருக்கு எதிராக வழக்­குத் தாக்­கல் செய்­துள்­ளார். கொடுத்த பணத்­தில் பத்து இலட்­சம் ரூபா­வுக்கே ஆதா­ரம் இருந்­துள்­ளது. அத­னைக்­கூட, கடன்­பெற்ற நபர் பகுதி பகு­தி­யா­கவே செலுத்தி இருக்­கின்­றார். இந்த நி­லை­யில், மற்­றைய ஒரு கோடியே ஏழு இலட்­சம் ரூபா கொடுத்­த­தற்கு எவ்­வித ஆதா­ர­மும் இல்­லா­த­தால் வழக்கு நீண்­டு ­கொண்டு சென்­றி­ருக்­கின்­றது.

இந்த நிலை­யில் தவ­றான முடி­வெ­டுத்து மனை­வி­யு­டன் சேர்ந்து உயிரை மாய்த்­துக் கொள்ளத் தீர்­மா­னித்து இருக்­கின்­றார் கிரு­சாந்­தன். எனி­னும் முத­லில் நஞ்சை அருந்­திய கிரு­சாந்தன் காப்­பாற்­றப்­பட்ட நிலை­யில் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு உயி­ருக்­கா­கப் போராடி மூன்று நாள்­க­ளின் பின் சாவ­டைந்­தார். ஏறக்­கு­றைய கிரு­சாந்­தன் சாவ­டைந்து இரு மாதங்­க­ளில் அவ­ரது மனைவி சுநேந்திரா (28) தனது மூன்று பச்­சி­ளம் பால­கர்­க­ளுக்­கும் நஞ்­சூட்டி அவர்­க­ளைச் சாவ­டை­
யச் செய்து தானும் கண­வ­னின் வழி­யில் தனது உயி­ரைப் போக்­கிக் கொண்­டுள்­ளார்.

சில கேள்­வி­களை இந்த வேளையில்
கேட்­டுத்­தான் ஆக­வேண்­டும்!

இவ்­வ­ளவு தொகைப் பணத்­தை­யும் கட­னா­கப் பெற்­றுக் கொண்­ட­வர்­க­ளுக்கு கடன் கொடுத்­த­வரை மோசடி செய்­வ­தற்கு எப்­படி மனம் வந்­தது? நட்­பா­யி­ருந்து கட­னைப் பெற்­றுக்­கொண்ட பின்­னர் எப்­படி ஒரு நண்­பனை இவ்­வா­றான இக்­கட்­டில் தள்ள மனம் வந்­தது? இந்­தப் பணத்­தைத் திருப்­பிக் கொடுக்­காத நிலை­யில் அந்­தக் குடும்­பம் எத்­த­கைய நெருக்­கீ­டு­க­ளைச் சந்­திக்­கும் என எண்­ணிப் பார்க்­கக்­கூட கடன்­பட்­ட­வர்­க­ளுக்கு மனம்­இ­டம்­கொ­டுக்கவில்­லையா?

அந்­தக் குடும்­பத் தலை­வ­னது சாவின் பின்­ன­ரா­வது அந்தப் ப­ணத்­தின் ஒரு பகு­தி­யை­யா­வது திருப்­பிக் கொடுப்­ப­தற்கு அவர்­க­ளது மனம் இரங்­க­வில்­லையா? கண­வ­னின் சாவையே தாங்க முடி­யாது வாழ்ந்து வந்த சுநேந்திரா, கண­வன் பட்ட கடனை எப்­ப­டிக் கொடுப்­பாள் என்­பதை கிரு­சாந்­தி­டம் கடன் பெற்­ற­வர்­கள் சிந்­தித்­தி­ருப்­பார் களா?

 

அப்­படி மனி­தா­பி­மா­னத்­தோடு நடந்­தி­ருந்­தால் சுநேந் திரா இவ்­வா­றான ஒரு தவ­றான முடிவைத் தேர்ந்து கொள்­ளாது தனது மூன்று தெய்­வப் பிற­வி­க­ளு­ட­னும் இந்­நாள்­வரை இருந்­தி­ருப்பாள் அல்­லவா?
மறு­பு­றத்­தில், இவ்­வ­ளவு தொகைப் பணத்தை எவ்­வித ஆதா­ர­மும் இன்றி கிரு­சாந்­தன் கொடுத்­தது சரி­யா­ன­து­தானா? கட­னா­கக் கொடுக்­க­லாம், ஆனால் இவ்­வ­ளவு தொகைப் பணத் தைக் கட­னா­கப் பெற்­றுக் கடன் கொடுக்­க ­வேண்­டிய தேவை என்ன?

கடன்­பட்­டுக் கொடுத்த கடனை செலுத்த முடி­யாத நிலை­யில், தான் தேர்ந்­தெ­டுத்த தவ­றான முடி­வில் ஒன்­றி­ணை­யு­மாறு தனது பிள்­ளை­க­ளோடு மனை­வி­யை­யும் கிரு சாந்தன் கோரி­யமை எவ்­வ­கை­யில் நியா­ய­மா­னது? இந்­தக் கொடுக்­கல் வாங்­கல்­க­ளை­யும் எந்தவித குற்­றங்­க­ளை­யும் அறி­யாத தெய்­வப் பிற­வி­க­ளான அக்­கு­ருத்­துக்­க­ளைச் (கர்சா-4 , சஜித்-2, சர­வணா 1 ) சாவ­டிக்க சுநேந்தி­ரா­வுக்கு எப்­படி மனம் வந்­தது?

‘நீடித்த காலம் வாழ ஆசைப்­பட்­டோம். இறு­தி­வரை போரா­டி­னோம். முடி­ய­வில்லை… போகி­றோம். எமக்­கான நீதி­யைப் பெற்­றுக்­கொ­டுங்­கள்!’ என சாவின் பிடி­யில் நின்­று­கொண்டு அப­யக் குரல் எழுப்­பிய ஓர் அப­லை­யின் இரத்­தக் கண்­ணீர் இந்­தச் சமூ­கத்­துக்­குச் சொல்­லும் பாடம்­தான் என்ன என்­பதை எமது சமூ­கம் சிந்­தித்தே ஆக­வேண்­டும்!

பரி­தா­பத்­துக்­கு­ரிய பாவச்­செ­யல்!

தவ­றான முடி­வெ­டுத்­துத் தமது உயி­ரைத் தாமே போக்­கிக்­கொள்­வதை எவ­ரும் ஓர் உயர்­வான -செய­லா­கக் கரு­தி­ய­து­மில்லை; – கரு­து­வ­து­மில்லை – கரு­தப்­போ­வ­து­மில்லை. எவ­ரா­லும் நியா­யப்­ப­டுத்­த­வும் இய­லாத இத்­த­கைய செயற்­பா­டு­களை தடுத்து நிறுத்த நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­ட­வேண்­டும்.

விலங்­கு­கள் எவையும் தற்­கொலை 
செய்­வ­தில்லை!

உயிர் வாழ்­வ­ன­வற்­றில் மனி­த­னைத் தவிர வேறு எந்த உயி­ரி­ன­மும் தம்­மு­யிரை தாமே போக்­கிக்­கொள்­வ­தில்லை என்­பதை ஆய்­வு­கள் நிரூ­பிக்­கின்­றன. தம்­மு­யி­ரைத் தாமே போக்­கிக்­கொள் வ­தில்­கூட மனி­தன்­தான் மனி­த­னுக்­குக் கார­ண­மாய் இருக்­கின்­றான் என்­பதை எண்­ணிப் பார்க்­கும்­போது’ மனித இனத்­தின் மீதே வெறுப்பு ஏற்­ப­டு­கி­றது.

தூண்­டி­க­ளாய் துலங்­கு­தல் ஆகாது!

ஒரு­வ­ரைத் தாமே தமது உயி­ரைப் போக்­கிக் கொள்­ளத் தூண்­டக்­கூ­டிய வகை­யில் குடும்­பத்­த­வர்­க­ளும், உற­வு­க­ளும், நண்­பர்­க­ளும், சமு­தா­ய­மும், ஏன் அர­சு­க­ளும்­கூட நடந்­து­கொள்­ளக் கூடாது என்­ப­தை­யும் ஒவ் வொ­ரு­வ­ரும் மனங்­கொள்ள வேண்­டும். உதா­ர­ண­மாக குடும்­பப் பெண்­ணைக் கண­வன் குடித்து­ விட்டு வந்து துன்­பு­றுத்­தும்­போது அவள் தவ­றான முடி­­வை எடுப்­ப­தற்கு அவளது கண­வன் கார­ண­மா­கின்­றான்.

 

அதே­போல கடன் பெற்­று­விட்டு அத­னைச் திருப்­பிச் செலுத்­தா­துவிடுவது கடன் கொடுத்­த­வரை மன நெருக்­கீட்­டுக்கு உள்­ளாக்கி தவ­றான முடி­வு­ எடுக்­கத் தூண்­டு­த­லாக அமை­ய­லாம். அப்­ப­டியே, கடன் கொடுத்­த­வ­ரும் கடன் பெற்­ற­வரை மன விரக்­திக்கு உள்­ளாக்­கு­தல் பிழை­யானமுடி­வு­ களை எடுக்­கத் துணை புரி­ய­லாம். ஆக, தாமா­கத் தம­து­யி­ரைப் போக்­கிக்­கொள்­ளும் சம்­ப­வங்­கள் நடை­பெ­றா­தி­ருக்க தனி­ந­பர்­கள் தன்­னம்­பிக்­கை­யில் உறு­தி­யாய் இருப்­ப­தோடு மட்­டு­மல்ல, சமூ­க­மும் தனி­ம­னி­தர்­க­ளுக்கு நம்­பிக்­கையை ஊட்­டக்­கூ­டிய வகை­யில் செய­லாற்ற முன்­வர வேண்­டும்.

குரு­வி­கள் கூடு­கட்­டு­வ­தைப் பாருங்­கள்!

குரு­வி­கள் பொது­வா­கக் கூடு­கட்­டும் போது ஒவ்­வொரு குச்­சி­க­ளா­கச் சேர்த்­துத்­தான் அவை தமது கூடு­களை அமைத்­துக் கொள்­கின்­றன. அவ்­வாறு கூடு­கட்­டும் பொழுது அது பலத்த காற்­றில் அகப்­பட்டு விழுந்து விட்­டாலோ, மழை­யால் சேத­முற்­று­விட்­டாலோ புதி­தா­கக் குச்­சி­க­ளைச் சேர்த்து கூடு­கட்­டும் முயற்­சியை அவை தொடர்­கின்­றன. இவ்­வாறு எத்­தனை தட­வை­கள் கூடு­கட்­டும் முயற்சி தடைப்­பட்­டா­லும் அத்­தனை தட­வை­க­ளும் தடை­க­ளைத் தாண்டித் தமது முயற்­சி­யில் அவை முன்­னே­று­கின்­றன. ‘முயற்சி தவ­ ற­லாம், ஆனால் முயற்­சிக்­கத் தவ­றக்­கூ­டாது’ என்­பது அக்­கு­ரு­வி­க­ளின் விருது வாக்­காக இருக்­கின்­றது போலும்!

குரு­வி­க­ளி­ட­மி­ருந்­தும் கற்­றுக்­கொள்ள 
வேண்­டி­யி­ருக்­கி­றது!

நினைத்­தது கைகூ­ட­வில்லை என்­ப­தற்­காக, எவரோ ஒரு­வர் கைவிட்­டு­விட்­டார் என்­ப­தற்­காக, எவரோ ஒரு­வர் ஏமாற்­றி­விட்­டார் என்­ப­தற்­காக, வாழ்க்­கையை முடித்­துக் கொள்­வது சரி­யா­னது தானா? உண்­மை­யில் குரு­வி­க­ளுக்கு தெரிந்த மந்­தி­ரங்­கள் இரண்டு. ஒன்று இடை­வி­டாத் தொடர் முயற்சி; மற்றையது இன்­ன­மும் வாய்ப்­புக்­கள் உண்டு என்ற நம்­பிக்கை என் பவையே.

ஆகவே, குரு­வி­கள் தங்­கள் விடாமுயற்­சி­யால் வாய்ப்­புக்­களை உரு­வாக்கி வாழ்க்­கை­யைத் தம் வச­மாக்­கிக் கொள்­கின்­றன. இத்­த­கைய ஓர்­மம் மனி­த­னுக்கு வேண்­டும். அதா­வது எமக்கு வேண்­டும். மனி­த­னுக்கு மட்­டும் தோல்வி ஏற்­பட்­டால் தனது உயிரை மாய்க்­கும் மன­நிலை ஏன் எழு­கின்­றது என்­பதை ஆராய்ந்து பார்த்து, ஆழச் சிந்­தித்து இத்­த­கைய மனப்­பாங்கு களை­யப் பட வைக்க அனை­வ­ரும் முன்வரவேண்­டும், அனை­வ­ரும் ஒரு­வ­ருக்கு ஒரு­வர் துணை­யாக இருக்­க­வேண்­டும்.

http://newuthayan.com/story/53472.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.