Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய இலங்கை கடற்பகுதியில் கூட்டுக் கண்காணிப்பு குறித்து கருணாநிதி விளக்கம்

Featured Replies

இந்திய இலங்கை கடற்பகுதியில் கூட்டுக் கண்காணிப்பு குறித்து கருணாநிதி விளக்கம்

இந்தியா-இலங்கைக்கிடையிலான கடற்பகுதியில் இரு நாடுகளும் இணைந்து கூட்டுக் கண்காணிப்பு பணியை நடத்துவதற்கு தாம் ஒப்புதல் தந்துவிட்டதாக வெளியான செய்திகள் தவறு என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி இன்று செவ்வாய்க்கிழமை விளக்கமளித்துள்ளார்.

இத்தகைய கூட்டுக் கண்காணிப்பு என்பது, இந்திய அரசு ஒப்புதல் தந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்று கூறியிருக்கும் கருணாநிதி, இது இந்திய நடுவணரசின் முடிவைப் பொறுத்தது என்றும் தெரிவித்திருக்கிறார்.

தம்மைப் பொறுத்த வரையில், மீனவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் தமது கவலை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்துவதை கண்டித்து ஆளும் திமுக சார்பில் நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட கண்டன ஆர்பாட்டத்தின் முடிவில், தமிழக அமைச்சர்கள் குழு ஒன்று, இலங்கை துணைத்தூதர் பி.எம்.ஹம்சாவிடம் மனு ஒன்றை கையளித்தனர்.

அப்போது, தமிழக அமைச்சர்களிடம் பேசிய ஹம்சா, இதுபோன்ற பிரச்சினைகள் நடக்காமல் தடுப்பதற்கு ஏதுவாக இந்திய இலங்கை கடற்பகுதியில் இரு நாட்டு கடற்படையினரின் கூட்டு கண்காணிப்பு மேற்கொள்வதற்கு இலங்கை அரசு தயாராக இருப்பதாக யோசனை தெரிவித்ததாக, கருணாநிதி நேற்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

இத்தககைய கூட்டு கண்காணிப்பு, தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் கருணாநிதி தெரிவித்திருந்தார்.

இந்திய இலங்கை கடற்படை கூட்டு கண்காணிப்புக்கு ஆதரவாக கருணாநிதி தெரிவித்த இந்த கருத்து, இந்திய ராணுவம் மற்றும் ராஜாங்க வட்டாரங்களிலும், இலங்கை ஆய்வாளர்கள் மத்தியிலும் ஆச்சரியத்தை தோற்றுவித்தது. காரணம், இப்படி ஒரு கூட்டு கண்காணிப்பு ஏற்பாட்டை, இலங்கை அரசு நீண்ட நாட்களாகவே கொரிவருகிறது. குறிப்பாக, தற்போதைய இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ இத்தகைய கூட்டு கண்காணிப்பு அவசியம் என்று வெளிப்படையாகவே இந்தியாவிடம் கோரிக்கை வைத்தார்.

ஆனால், இந்தியா இந்த யோசனையை இது வரை அதிகாரப்பூர்வமாக ஏற்கவில்லை. காரணம், இலங்கையின் வடகடல் பகுதியில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் பிரிவு செயற்பட்டு வரும் பின்னணியில், இலங்கை கடற்படையுடன் இந்தியக் கடற்படை கூட்டுக் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டால், ஏதோ ஒரு சந்தர்பத்தில் கடற்புலிகளோடு, இந்திய கடற்படை நேரடியாக மோத வேண்டிய சூழல் உருவாகக்கூடும் என்றும், இந்தியாவுக்கு இது தேவையற்ற தலைவலி என்று இந்திய அரசு கருதுவதகாவும், இந்திய ராணுவ பகுப்பாய்வாளர்கள் கருதுகிறார்கள்.

கடற்புலிகள் untitled.bmp

இந்தியாவில் தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்புடன் எந்த விதத்திலும் நேரடி தொடர்புகளை வைத்துக்கொள்வதில்லை என்கிற இந்திய அரசின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாட்டின் ஒருபகுதியாகவே, புலிகளுடன் ராணுவரீதியிலான நேரடி மோதலையும் இந்தியா தவிர்ப்பதாகவும் சில பகுப்பாய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இந்தப் பிரச்சினையின் ராணுவ மற்றும் ராஜீய ரீதியிலான சிக்கல்களை கருணாநிதி தற்போது முழுமையாக புரிந்துகொண்டதன் வெளிப்பாடாகவே அவரது இன்றைய விளக்கம் அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, இந்திய இலங்கை கடற்படையின் கூட்டுக் கண்காணிப்பு யோசனையை, தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ நெடுமாறனும், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவனும் எதிர்த்துள்ளனர். கூட்டு கண்காணிப்பின் மூலம் விடுதலைப்புலிகளுடன் இந்திய கடற்படையை மோத வைக்க இலங்கை அரசு முயற்சி செய்வதாகவும், இந்த சூழ்ச்சிக்கு இந்திய அரசு பலியாகிவிடக்கூடாது என்றும், இவர்கள் இருவரும் தனித்தனி அறிக்கைகள் மூலம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதை கண்டித்து தமிழகத்தில், ரமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதிகளில் இன்று முழு அடைப்பு நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

இது இவ்வாறிருக்க, தமிழக மீனவர்கள் பாதுகாப்பு குறித்து இந்திய கடலோர காவல்படை மற்றும் தமிழக உளவுத்துறை காவல்துறைத் தலைவர்கள் மற்றும் உயரதிகாரிகள் இன்று ஹெலிகாப்டரில் பறந்தபடி ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின்போது, கடலோர பாதுகாப்பு குறித்தும், இலங்கையில் இருந்து படகில் தமிழகம் வரும் அகதிகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப் பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.