Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுபான்மை மக்களின் உரிமைகளை வழங்க தொடர்ந்தும் மறுத்து வந்தால் பேரழிவுதான் மிஞ்சும்

Featured Replies

சிறுபான்மை மக்களின் உரிமைகளை வழங்க தொடர்ந்தும் மறுத்து வந்தால் பேரழிவுதான் மிஞ்சும்

சிறுபான்மை இன மக்களின் உரிமைகளை வழங்க பெரும்பான்மை இனம் தொடர்ந்தும் மறுக்குமானால் ஒருபோதும் நாட்டை பேரழிவிலிருந்து மீட்டெடுக்க முடியாது போகுமெனத் தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் கடைப்பிடித்துவரும் தவறான அணுகுமுறை காரணமாக தேசத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

பல்லின மக்கள் வாழும் நாட்டில் 75 சதவீதமான பெரும்பான்மை இனம் 25 சதவீதமான சிறுபான்மைச் சமூகங்களை அடக்கியாள எண்ணுவது ஜனநாயகத்தை அழிக்கும் ஒரு முயற்சியாகவே கொள்ள வேண்டியுள்ளதாகவும் அக்கட்சி தெரிவிக்கின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுலககத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருந்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

நாட்டில் மனித உரிமைகள் மிக மோசமாக மீறப்பட்டு வருகின்றது. மனித உரிமை மீறலைத் தடுக்கவேண்டிய ஆட்சியாளர்களே அதில் சம்பந்தப்பட்டிருப்பது நிரூபணமாகியுள்ளது. அரசு மீது நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்திருப்பது மட்டுமன்றி அச்சச்சூழ்நிலையிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆட்கடத்தல், கப்பம் கோரல், படுகொலை என்பன இன்று சர்வசாதாரணமாக நடைபெறும் நிகழ்வுகளாகக் காணப்படுகின்றன. இச் சம்பவங்களின் பின்னணியில் அரசியல் காணப்படுவதாகவும், பாதுகாப்புத்தரப்பின் மறைமுக ஈடுபாடு காணப்படுவதாகவும் பொலிஸ் மா அதிபரே சந்தேகம் தெரிவித்திருக்கின்றார்.

அதேபோன்று மனித உரிமை மீறல்களும் தொடர்கின்றன. பெண் ஊடகவியலாளர் பரமேஸ்வரி மூன்று மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சந்தேகம் காணப்படின் அவற்றை நிவர்த்திக்க மூன்று மாதகாலம் போதவில்லையா என்று கேட்க வேண்டியுள்ளது.

விடுதலைப் புலிகளுடன் ஜனாதிபதி இரகசிய உடன்படிக்கை பற்றிய தகவல் ஷ்ரீபதி சூரியாராச்சியால் இப்போதுதான் வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய உடன்படிக்கை பற்றிய தகவல் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஜெனீவாவில் உறுதி செய்யப்பட்டதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஜெனீவா மாநாட்டின் போது அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஆரம்ப நிகழ்வில் கடும் தொனியில் கருத்துக்களை வெளியிட்டு போர் நிறுத்த உடன்படிக்கை சட்டத்துக்கு முரணானது எனவும் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால் மட்டுமே பேச்சு எனவும் அடித்துப்பேசினார்.

மறுதினமும் மூன்றாம் நாளும் நிலைமை தலைகீழானது. ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஷ ஜெனீவா விரைந்து புலிகள் தரப்பினருடன் இரகசிய ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்ந்தும் பேணப்படுமெனவும், கருணா தரப்பு உட்பட பரா இராணுவத்தினர் நிராயுதபாணிகளாகக்கப்படுவர் என்ற உடன்பாட்டுக்கு வந்தனர்.

ஜனாதிபதியும் அரசும் தெற்கு மக்களுக்கு ஒன்றைச் சொல்கின்றனர். சர்வதேசத்திடமும் விடுதலைப் புலிகளிடமும் இன்னொரு விதமாக நடந்து கொள்கின்றனர்.

எந்த விதத்திலும் எம்மால் சர்வதேசத்தை புறக்கணித்துச் செயற்பட முடியாது. இதனை ஜனாதிபதி நன்கு புரிந்துள்ளார். அதனால்தான் இரட்டை வேடம் போடத் தொடங்கியுள்ளார். இதன் பின்விளைவுகள் எவ்வாறாக அமையப்போகின்றது என்பதை அறிய நீண்டகாலம் தேவைப்படாது.

http://www.thinakkural.com/news/2007/3/14/...s_page23254.htm

ஏதோ இவர்கள் சிறுபான்மையினருக்கு துக்கிக் கொடுத்தது போலல்லவா பேசுகின்றார்கள். வராலறு ஒரே மாதிரியே சிறுபான்மையினரின் தரப்பிற்கு சுழன்று கொண்டு வருகின்றது. ஐதேக அன்று செய்ததை இன்று சு.க கூட்டணி செய்கின்றது. இது நாளை கவிழ்ந்த பின் வருபவர்கள் அதையே தான் செய்யப் போகின்றார்கள். அவர்கள் வீழ்ந்தபின் வருபவர்கள்......... சக்கரம் ஒரே மாதிரியே சுழலும் எம் இனம் சுதந்திரமடையும் வரை.

ஈழத்திலிருந்து

ஜானா

  • தொடங்கியவர்

ஏதோ இவர்கள் சிறுபான்மையினருக்கு துக்கிக் கொடுத்தது போலல்லவா பேசுகின்றார்கள். வராலறு ஒரே மாதிரியே சிறுபான்மையினரின் தரப்பிற்கு சுழன்று கொண்டு வருகின்றது. ஐதேக அன்று செய்ததை இன்று சு.க கூட்டணி செய்கின்றது. இது நாளை கவிழ்ந்த பின் வருபவர்கள் அதையே தான் செய்யப் போகின்றார்கள். அவர்கள் வீழ்ந்தபின் வருபவர்கள்......... சக்கரம் ஒரே மாதிரியே சுழலும் எம் இனம் சுதந்திரமடையும் வரை.

ஈழத்திலிருந்து

ஜானா

இவர்கள் செய்ததைதான் அவர்கள் செய்கிறார்கள், அவர்கள் செய்தைதான் இவர்கள் செய்கின்றனர், அவர்களது கொள்கைகள் வேறுவேறாக இருந்தாலும், தமிழருக்கெதிரன கொள்கைகளில் மட்டும் ஒற்றுமையுள்ளவர்கள். ஆடு நனைகின்றது என ஓநாய் அழுத கதைதான் இது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.