Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பள்ளிப்பருவத்திலே திரைவிமர்சனம்

Featured Replies

பள்ளிப்பருவத்திலே திரைவிமர்சனம்

பள்ளிப்பருவத்திலே திரைவிமர்சனம்

பள்ளிப்பருவத்திலே திரைவிமர்சனம்

 

பலவிதமான படங்கள் வித்தியாசமான கதைகளை தாங்கி எடுக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. அதில் சில உண்மை சம்பவங்களை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

அது அத்தனைக்கும் காதல் விசயத்தில் ஒரு ஒற்றுமையிருக்கும். ஆனாலும் மாறான விதத்தில் எளிமையான கதையாக ஒரு சில படம் வந்து போவது மக்களிடம் இடம் பிடித்துவிடும்.

அதை போல வெளிவந்துள்ள பள்ளிப்பருவத்திலே கடந்த கால காதலை நினைவுபடுத்துமா, மனதில் இடம் பிடிக்குமா என பார்ப்போம். பள்ளிப்படுவம் போகலாம்.

கதைக்களம்

கே.எஸ்.ரவிக்குமார் கிராமத்தில் பள்ளி தலைமையாசிரியர். இவரின் மனைவி ஊர்வசி மிகவும் வெகுளி. இவர்களுக்கு ஒரே ஒரு ஆண் பிள்ளை. அவர் தான் ஹீரோ நந்தன் ராம். படத்தில் இவரின் பெயர் கலை.

அப்பா வேலை பார்க்கும் பள்ளிகூடத்தில் தான் இவரும் படிக்கிறார். இவருக்கு நெருங்கிய நண்பர்களாக பொரி உருண்டை என்பவரும், இன்னொருவரும். போகும் இடமெல்லாம் மூவரும் ஒன்றாக தான் செல்வார்கள்.

தன் சகவகுப்பில் படிக்கும் கனி (வெண்பா) மீது கலைக்கு காதல். அதுவும் பள்ளிப்பருவ காதல். கனியின் அப்பா பொன்வண்ணன். ஊரில் செல்வாக்கான குடும்பம்.

இவரின் தம்பி ஆர்.கே,சுரேஷ் டான் போல கட்டபஞ்சாயத்து என செல்வார். பல வருடங்களாக இதே ஊரில் தலைமையாசிரியர் என்பதால் ரவிக்குமார் மீது ஊரார் எல்லாம் உறவினர்கள் போல நட்பாக இருக்கிறார்கள்.

ஒருபக்கம் கனியை கலை ஃபாலோவ் பண்ணிக்கொண்டே இருக்க விசயம் பொன்வண்ணனுக்கு போகிறது. பின் என்ன, பொறுமையாக கையாள்கிறார். ஆனால் காதல் தான் கண்ணை கட்டிவிடுமே.

கனி கனி என அலைய பகை பொறி பற்றுகிறது. ஊர் பஞ்சாயத்து கூடுகிறது. கனிக்கு அவசர அவசரமாக கல்யாண ஏற்பாடுகள் ஒருபக்கம். காதல் சோகத்தில் கலை மறுபக்கம்.

பின் கதை வேறுவிதமாய் நகர, இருகுடும்பத்திற்கும் மோதல் வெடிக்கிறது. மானம், மரியாதைக்காக கலையை ஆணவக்கொலை செய்ய கனி அப்பா, சித்தப்பா இருவரும் பிளான் போடுகிறார்கள்.

கனியும் கலையும் காதலில் ஜெயித்தார்களா, ஆணவ கொலை இங்கேயும் நடந்தேறுகிறதா? ஊர் என்னானது பள்ளிப்பருவ காதல் உண்மையானதா என்பதை சொல்லும் கதை தான் இந்த பள்ளிப்பருவ காதல்.

படத்தை பற்றிய அலசல்

ஹீரோ நந்தன் ராம் சினிமாவிற்கு புதிது. இது தான் அவரின் முதல் படம். இவரின் அப்பா பல படங்களில் தமிழ் சினிமாவில் பணியாற்றியவர். முதல் படம் என்றாலும் இந்த கதை அவருக்கு எளிமையானதாக அமைந்திருக்கும்.

ஸ்கேல் அளந்து நடித்திருக்கிறார். பள்ளிப்பருவத்திற்கான அதே பாவனை அப்படியே இயல்பாக நடித்திருக்கிறார். பையன்களுக்கு அப்பா என்றாலே ஒரு முறைப்பு இருக்குமே அந்த விசயம் இங்கேயும் தொடர்கிறது.

பல ஹிட் படங்களை கொடுத்த ரவிக்குமார் இப்போதெல்லாம் படங்களில் ஸ்பெஷல் கேரக்டர்களில் நடித்து வருகிறார். ஊர் பிள்ளைகளுக்கெல்லாம் அப்பா போல இருப்பவர் தன் பிள்ளைக்கு அப்பாவாக இருந்தாரா, தலைமையாசிரியராக இருந்தாரா என்பதை நீங்கள் படத்தில் சென்று பாருங்கள்.

ஆனால் செயற்கை தனம் இல்லாத நடிப்பு. கடைசியில் இவருக்காக ஊரே அழும். ஹீரோயின் வெண்பா அதிகம் பேசமாட்டார். கிளைமாக்சில் தான் வாய் திறப்பார். வயது வந்த கிராமத்து பெண்ணின் எதார்த்தம்.

படத்திற்காக காட்சியை இப்படி வைக்கலாம் என்பது போலில்லை. இப்படித்தான் நடந்திதிருக்கும் எனகாட்சிகள் பிரதிபலிக்கிறது. ஊர்வசி தன்னுடைய ரோலில் காமெடி புகுத்திவிடுவார் எப்போதும்.

ஒரு வெகுளியான அம்மாவாக குறும்பாக அவர் செய்யும் செயல், பேச்சு என படத்தின் சீரியஸ்க்கு நடுவிலும் சிரிப்பை வரவைக்கும். மகனை பெற்றவளாக அவர் படும் பாடு என்ன சொல்ல.

தம்பி ராமையா, கஞ்சா கருப்பு என காமெடிக்கு இருக்கிறார்கள். வழக்கம் போல கஞ்சா கருப்பை டம்மியாக்கும் காட்சிகளும் இதில் இடம் பிடிக்கின்றன். பிக்பாஸ்க்கு பிறகு நமீதா நமீதா என மீண்டும் இங்கே புகழ் பாடுவார்.

பொன் வண்ணன் ஒரு மகளை பெற்றவராக இருந்தாலும் ஊர்க்காக குணம் மாறும் நடைமுறையை அப்படியே காட்டுகிறார். படத்தின் கதையை சரியாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர்.

கிளாப்ஸ்

ஆணவ கொலை சம்பவத்தை சரியாக பிரதிபலித்தவிதம் எதார்த்தம்.

நந்தன், வெண்பா இருவரும் கதைக்கு போதுமான நடிப்பு. அலட்டல் இல்லை.

படத்திற்கு விஜய் நாராயணனின் போதுமான பின்னணி இசை. கேட்கும் படியான பாடல்கள்.

பல்பஸ்

படத்தின் மிக நீளம் என்பதால் எப்போது முடியும் என்ற ஃபீல் வருகிறது.

படம் எந்த சம்பத்தை பிரதிபலிக்கிறது என்பதை பற்றி நேர்முகமான தகவல் இல்லை.

முடியப்போகும் கூட கூத்து பாடல் தேவை தானா என சின்ன முகம் சுளிப்பு.

 

மொத்தத்தில் பள்ளிப்பருவம் பள்ளிப்பருவம் தான். ஆனால் சினிமாக்கு இப்போதிருக்கும் நிலையில் இப்படி ஒரு எளிமையான கதை எடுபடுமா என யோசிக்க வைக்கிறது.

http://www.cineulagam.com/films/05/100895?ref=reviews-feed

  • தொடங்கியவர்

‘ஸ்கூல் பசங்களை வெச்சு இப்படிப் படம் எடுக்கலாமா இயக்குநரே..!’ - ‘பள்ளிப்பருவத்திலே’ விமர்சனம்

 

இளம் பிராயத்தில் நிகழும் காதலும் அதனால் இருவர் வாழ்வில் நிகழும் மாற்றங்களும்தான் 'பள்ளிப்பருவத்திலே' படம். டைட்டில் கார்டிலேயே ‘காதலிப்பது உயிரைக் கொல்லும்’ என போட்டே தொடங்கியிருக்கலாம். அந்த அளவுக்குப் படத்தில் பள்ளிக் கால காதலை ‘வேறு கோணத்தில்' அலசிக் காயப்போட்டிருக்கிறார்கள். 153 நிமிடங்கள் ஓடும் நீளம் வேறு நம் பொறுமையை சோதிக்கிறது.

பள்ளிப்பருவத்திலே விமர்சனம்

 

வாசுதேவ் பாஸ்கரின் இயக்கத்தில் அறிமுக நாயகன் (இசையமைப்பாளர் சிற்பியின் மகன்) நந்தன் ராம்- வெண்பா ஜோடியோடு கே.எஸ்.ரவிக்குமார், ஊர்வசி, பொன்வண்ணன், 'பருத்திவீரன்' சுஜாதா, கஞ்சா கருப்பு, தம்பி ராமைய்யா, ஆர்.கே.சுரேஷ் எனப் பெருங்கூட்டமே நடித்திருக்கும் படம் இது. ‘பலே’ காஸ்ட்டிங்கை வைத்துக்கொண்டு ‘பல்பு’ கொடுத்துள்ளார் இயக்குநர். ஒருவேளை கால் நூற்றாண்டுக்கு முன் இப்படம் வந்திருந்தால் பேசப்பட்டிருக்குமோ என்னவோ?

கதை..? தஞ்சாவூர் பக்கத்தில் இருக்கும் அழகான கிராமத்தில் பள்ளியின் இறுதிஆண்டில் படிக்கிறார்கள் நந்தன்ராமும் வெண்பாவும். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.எஸ்.ரவிக்குமாரின் மகன்தான் நந்தன் ராம். ஊரே மதிப்புவைத்திருக்கும், மாணவர்கள் மீது அன்புவைத்திருக்கும், பார்க்கும் வேலையில் உண்மையாக இருக்கும் நல்ல மனிதர் கே.எஸ்.ரவிக்குமார். ஊரில் பெரிய மனிதராக இருக்கும் பொன்வண்ணனின் மகள் வெண்பாவைக் காதலிக்கிறார் நந்தன் ராம். இந்த விஷயம் கேள்விப்பட்டு கோபமாகிறார்கள் வெண்பாவின் அப்பா பொன்வண்ணனும் சித்தப்பாவான ஆர்.கே.சுரேஷும். நந்தன் ராமும் காதலில் தீவிரம் காட்ட... விவகாரம் ஊர்ப் பஞ்சாயத்து வரைக்கும் வந்துவிடுகிறது. பஞ்சாயத்தில் தான் காதலிக்கவில்லை என வெண்பா சொன்னதும் கடுப்பான வெண்பா உறவினர்கள் நந்தன் ராமை அடிக்கிறார்கள். காதலி, தன் காதலை நிராகரித்த அவமானத்தால் புழுங்கும் நந்தன் ராம், தன்னால், தன் மகனை கண்டிப்புடன் வளர்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் மனம் வெதும்பும் அப்பா கே.எஸ்.ரவிக்குமார், குடும்ப கௌரவத்துக்கு வேட்டு வைத்த நந்தன் ராமை கொல்ல திட்டம் போடும் ஆர்.கே.சுரேஷ் என சுவாரஸ்ய முடிச்சிட்டு இந்தப் பள்ளிப் பருவத்து காதல் என்னவாகிறது என்பதை நீண்ட கொட்டாவி வர வைக்கும் திருப்பங்களோடு சொல்லியிருக்கிறார்கள்.  

பள்ளிப்பருவத்திலே விமர்சனம்

ஹீரோ நந்தன் ராம் பார்க்கவே பாவம் போல இருக்கிறார். ஓரளவு நடித்திருந்தாலும் காட்சிகள் மனதில் ஒன்றாததால் அவர் நடிப்பும் மனதில் நிற்கவில்லை. நாயகி வெண்பாவுக்கு நன்கு நடிக்க வருகிறது. அனைத்து ஃப்ரேம்களிலும் அழகாக உள்ளார். ஆனால், அவரின்  உழைப்பு ஊரே சேர்ந்து தோண்டவேண்டிய கிணற்றை ஒருவர் மட்டும் தோண்டுவதைப் போல் பயனில்லாமல் போகிறது. நல்ல, நல்ல ஸ்கிரிப்ட்டாக தேர்ந்தெடுத்து நடித்தால் வெண்பாவுக்கு நல்ல பெயர் கிடைக்கும். இவர்கள் தவிர படத்தில் நடித்தவர்கள் நன்றாக நடித்திருந்தாலும் மேக்கிங்கிலும், திரைக்கதையிலும் புதுமை இல்லாததால் படத்தோடு நம்மால் ஒன்ற முடியவே இல்லை. பிற்பாதியில் சென்டிமென்ட் ஏரியாவில் கோட்டை கட்டிய இயக்குநர் அதையே ஓவர் டோஸாக கொடுத்ததால் படம் முடியும்போது 'அப்பாடா!' என்று தோன்றுகிறது. காமெடி என்ற பெயரில் தம்பி ராமைய்யா பண்ணுவதெல்லாம் கொலை முயற்சியன்றி வேறில்லை.

படத்தின் ஒரே ப்ளஸ் கே.எஸ்.ரவிக்குமார் சம்பந்தப்பட்ட சில காட்சிகள். ஒரு நல்லாசிரியரைக் கண்முன்கொண்டு வந்து நிறுத்துகிறார். அப்படியே ‘சாட்டை’யை எடுத்து ஏதோ கதை சொல்லப் போகிறார்களோ என எதிர்பார்த்தால், நம் எதிர்பார்ப்பில் இரண்டு லிட்டர் பெட்ரோலை ஊற்றி கொளுத்திவிடுகிறார்கள். பள்ளி மாணவர்களை வைத்துப் படம் எடுக்கும்போது கடைபிடிக்க வேண்டிய அடிப்படை விஷயங்களைக்கூட கவனத்தில் கொள்ளாமல், மாணவர்களை வைத்துக்கொண்டு மது குடிப்பதும், கள்ளக் காதலைப் பற்றி பேசுவதும் என அபத்தமான காட்சிகளைவைத்து கடுப்பேற்றியிருக்கிறார்கள். இதனால் படத்தில் வரும் ஒரு பாட்டி படும் பாடுதான் நம் நிலையும்! பாடல் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் தவறாமல் இடம்பிடித்துவிடுகிறார் அந்தப் பாட்டி. சைக்கிளை அவர்மேல் போட்டு விளையாடுவது, ஒரே மிதியில் தலைகீழாக விழவைப்பது, சகதியை அவரது முகத்தில் எறிவது, தண்ணீருக்குள் தத்தளிக்க விடுவது என அந்தப் பாட்டியை வன்கொடுமை பண்ணியிருக்கிறார்கள். பார்க்கவே பாவமாக இருக்கிறது. ஆர்.கே.சுரேஷும் தன் பங்குக்கு, ‘இவனெல்லாம் ஒரு ஆளு, அவனெல்லாம் ஒரு ஆளு, நீயெல்லாம் ஒரு ஆளு...’ எனப் படம் முழுக்கவே பைல்ஸ் வந்தவரைப்போல கோபமாகவே வருகிறார்.

பள்ளிப்பருவத்திலே விமர்சனம்

 

‘கனி கல்யாணம் நடக்காது’ எனப் பேசும் ஹீரோ கலை, கல்யாணம் நடக்கிற அன்று கண்மாய்க்குள் சும்மாதான் உட்கார்ந்து இருக்கிறார். ‘பையனை தப்பா புரிஞ்சுக்கிட்டோம்’ என ஃபீல் பண்ணும் ஹீரோவின் அப்பா, அடுத்து ஏதோ பண்ணப்போகிறார் என்று பார்த்தால் அதுவும் இல்லை. எல்லாப் பக்கத்திலும் அடிபட்டு, மிதிபட்டு, துன்பப்பட்டு,துயரப்பட்டு நிற்கும் ஹீரோ இனிமேல் லூஸுத்தனமாக எதுவும் செய்யமாட்டார் என நாம் நினைக்கும்போது அங்கும் ஏமாற்றம்தான். இப்படி எந்த சீனும் சுவாரஸ்யம் இல்லாமலேயே நகர்வது ‘கேட்டை எப்போ சார் திறப்பீங்க?’ என நம்மைக் கேட்க வைக்கிறது.

https://cinema.vikatan.com/movie-review/110977-palli-paruvathile-movie-review.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.