Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிக்27 ரக யுத்த விமான கொள்வனவில் இடம்பெற்ற ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும் - 600 மில்லியன் ரூபா ஊழல் இடம் பெற்றுள்ளது

Featured Replies

மிக்27 ரக யுத்த விமான கொள்வனவில் இடம்பெற்ற ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும் - 600 மில்லியன் ரூபா ஊழல் இடம் பெற்றுள்ளது

மிக்27 விமான கொள்வனவில் ஊழல் இடம்பெற்றுள்ளமையினால் அது குறித்து விசாரணைகள் நடத்தி குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிடம் முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீரவும் , ஸ்ரீபதி சூரியாராச்சியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிற்கு நேரடியாக விஜயம் செய்த இருவரும் யுத்த விமானங்கள் கொள்வனவில் இடம்பெற்ற ஊழல் குறித்து முறைப்பாட்டினை தெரிவித்ததுடன் அதற்கான சில ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த முறைப்பாடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; இலங்கை வரலாற்றில் ஆயுதங்கள் மற்றும் யுத்த விமானங்கள் கொள்வனவு செய்ததன் போது கூடுதலான நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.

மிக் 27 ரக யுத்த விமானம் கொள்வனவு செய்த போதே இந்த ஊழல் இடம்பெற்றுள்ளது. இந்த ஆயுத கொள்வனவுகளுக்கு பாதுகாப்பு செயலாளரே முழுமையாக பொறுப்பு கூறவேண்டும் எனவே இந்த ஆயுத கொள்வனவின் போது இடம்பெற்ற ஊழல் மோசடியில் அவர் சம்பந்தப்பட்டுள்ளாரா? என்பது குறித்து விசாரணைகள் நடத்த வேண்டும் என்றும் நாம் இந்த முறைப்பாட்டில் கேட்டுக்கொண்டுள்ளோம்.

ஸ்ரீபதி சூரியாராச்சி கருத்து

இந்த முறைப்பாடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சி கருத்து தெரிவிக்கையில் இந்த விமானங்கள் கொள்வனவின் போது 600மில்லியன் ரூபா ஊழல் இடம் பெற்றுள்ளது இது குறித்து விசாரணைகள் நடத்து மாறு இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குவிடம் முறைப்பாடு செய்துள்ளோம் கொள்வனவு செய்யப்பட்ட மிக் 27 ரக ஆயுதங்கள் விமானங்கள் 27 வருடங்கள் பழமையானவையாகும் .2000 ஆம் ஆண்டு 176 பில்லியன் குறைந்த தொகைக்கு இந்த விமானங்கள் கொள்வனது செய்யப்பட்டன.

எனினும் ஏழு வருடங்களுக்கு பிறகு 27 வருடங்களுக்கு பலமையான விமானங்கள் 280 பில்லியன்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளோம் அந்த முறைப்பாடு குறித்து விசாரணைகள் நடத்துமாறு இலஞ்ச ஊழலுக்கு எதிரான ஆiணக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

  • கருத்துக்கள உறவுகள்

போர் விமானக் கொள்வனவில் ஊழல், மோசடிக் குற்றச்சாட்டு- மங்கள, ஸ்ரீபதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு

[15 - March - 2007]

-எம்.ஏ.எம்.நிலாம்-

இலங்கை விமானப் படைக்கு நான்கு விமானங்கள் கொள்வனவிலும் பழைய விமானங்களை திருத்துவதிலும் பெரும் ஊழல் இடம்பெற்றிருப்பதாகவும் சுமார் 60 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீரவும் ஸ்ரீபதி சூரியாராச்சியும் நேற்று புதன்கிழமை இலஞ்சம், ஊழல் தொடர்பான ஆணைக்குழுவின் தலைவர் அன்வர் இஸ்மாயிலிடம் முறைப்பாடொன்றைக் கையளித்துள்ளனர்.

கோதாபய ராஜபக்‌ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பதவியேற்றதன் பின்னர் முப்படைகளின் செயற்பாடுகளில் பெரும் ஊழல்களும் நிதி மோசடிகளும் இடம்பெற்றுள்ளதாகவும் தங்களின் உயிரைப் பணயமாக வைத்து தேசத்தைப் பாதுகாக்கப் போராடும் படை வீரர்களை அவமதிக்கும் விதத்தில் பாதுகாப்பு உயர்மட்டத்தில் சட்டவிரோதச் செயற்பாடுகள் சர்வசாதாரணமாக இடம்பெற்றுவருவதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த முன்னாள் அமைச்சர்கள் மங்களவும் ஸ்ரீபதியும் இதுவிடயத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டு உண்மைகள் வெளிக் கொணரப்பட வேண்டுமெனவும் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் இலஞ்ச விசாரணை ஆணையாளரிடம் கேட்டுக் கொண்டதாகவும் குறிப்பிட்டனர்.

நேற்று புதன்கிழமை மாலை மூன்று மணியளவில் கொழும்பு 7 இல் பௌத்தாலோக மாவத்தையில் உள்ள இலஞ்சம் மற்றும் ஊழல் முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர்கள் மங்களவும் ஸ்ரீபதியும் நான்கு பக்கங்களைக் கொண்ட தமது முறைப்பாட்டு மனுவை ஆணையாளர் அன்வர் இஸ்மாயிலிடம் ஒப்படைத்து துரித விசாரணைக்கு நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த மனுவை ஒப்படைத்த பின்னர் வெளியே வந்த மங்கள சமரவீரவும் ஸ்ரீபதி சூரியாராச்சியும் வெளியே கூடி நின்ற ஊடகவியலாளர்கள் மத்தியில் விளக்கமளித்ததுடன் முறைப்பாட்டுக் கடிதத்தின் பிரதிகளையும் விநியோகித்தனர்.

2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற விமானப் படைக்கான மிக் 27 ரக நான்கு விமானங்களையும் கொள்வனவு செய்தல், விமானப் படையிடமிருக்கும் சில விமானங்களைத் திருத்தியமைத்தல் மற்றும் ஆயுதக் கொள்வனவு விடயங்களிலும் பாரிய ஊழல் இடம்பெற்றிருப்பதுடன் சுமார் நூறு கோடி ரூபா மோசடி இடம்பெற்றிருப்பதாகவும் போதிய ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பாளர் என்ற வகையில் கோதாபய ராஜபக்‌ஷ இக்குற்றச்சாட்டுக்குப் பதிலளித்தாக வேண்டும். ஆணைக்குழு விசாரணையை தாமதப்படுத்தாமல் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புபட்ட விவகாரம் என்பதால் உடனடியாக விசாரணை நடத்தி உண்மைகளை அம்பலத்துக்குக் கொண்டு வருவதோடு இந்த ஊழல், மோசடியில் தொடர்புபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படுவதற்கு வகை செய்ய வேண்டுமெனவும் கேட்டிருக்கின்றோம் என்று மங்களவும் ஸ்ரீபதியும் தெரிவித்தனர்.

முறைப்பாட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கும் முக்கியமான அம்சங்கள் வருமாறு;

இலங்கை விமானப் படையும் பாதுகாப்பு அமைச்சும் 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு அண்மித்ததான நாளில் யுக்ரேன் மாஷ் என்ற நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் மிக் 27 ரக விமானங்கள் நான்கும் மிக் 23 ரக யூ.பி.ட்ரேனரும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

இந்த விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்களில் மிக் 27 ரக நான்கு விமானங்களையும் தலா 2,462,000 அமெரிக்க டொலர் வீதம் அதாவது 266 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி நான்கு விமானங்களுக்கும் 1,064 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. மேலும், உடன்படிக்கையின் பிரகாரம், இந்த விமானங்கள் 1980 க்கும் 1983 ஆம் ஆண்டுக்குமிடையில் உற்பத்தி செய்யப்பட்டனவெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 2000 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி மிக் 27 ரக நான்கு விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் விலை தலா 1.75 மில்லியன் அமெரிக்க டொலர் அதாவது 189 மில்லியன் ரூபாவாகும். அந்த விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்ட காலம் 1982 க்கும் 1985 க்கும் இடையிலாகும். அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் திகதி மிக் 27 ரக இரண்டு விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. அவற்றின் விலை தலா 172.8 மில்லியன் ரூபாவாகும். 1984 இல் உற்பத்தி செய்யப்பட்ட மிக் 23 ரக யூ.பி.ட்ரேனர் விமானம் 97.2 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பார்க்கும்போது 2000 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட விமானங்களின் விலைகளின் அடிப்படையில் நோக்கினால் 2006 ஜூலை மாதத்தில் கொள்வனவு செய்யப்பட்ட விமானங்களுக்கான விலைகளின்படி அரசுக்கு 77 முதல் 94 மில்லியன் ரூபா ஒரு விமானத்தின் பேரில் நஷ்ட மேற்பட்டுள்ளது. நட்டம் என்று குறிப்பிடுவதைவிட அரசாங்கம் வஞ்சிக்கப்பட்டிருப்பதாகவோ பெருமளவு பண மோசடி இடம்பெற்றுள்ளதாகவோ பரவலாகப் பேசப்படுகின்றது.

அதுவும் கடந்த வருடத்தில் கொள்வனவு செய்யப்பட்ட விமானங்கள் மிகப் பழைமை வாய்ந்தவையாகும். அதேசமயம், அன்றைய விலையை விடவும் கூடுதல் விலை செலுத்தி வாங்கப்பட்டிருப்பதன் காரணமாக இக்கொடுக்கல் வாங்கல் விவகாரம் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

மேலும், கொள்வனவு செய்யப்பட்ட மிக் 27 ரக நான்கு விமானங்களில் இரண்டு டீ.எஸ்.அலயன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் 2000 ஆம் ஆண்டு மே மாதத்தில் 189 மில்லியன் ரூபா வீதம் வழங்குவதற்கு உடன்பாடு காணப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்றாவது விமானத்தை அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில் 172 மில்லியன் ரூபாவுக்கு வழங்குவதற்கு முன்வந்திருந்தது. இந்த விமானங்கள் உகந்தவையல்லவென விமானப்படை அன்று தெரிவித்து நிராகரித்திருந்தது.

தற்போது இந்த விமானக் கொள்வனவுகள் இரண்டு நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் இங்கிலாந்தின் பெலிமிஸ்ஸா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தினூடாக பணம் செலுத்தப்பட்டிருப்பதன் மூலம் பெருமளவு நிதி மோசடி இடம்பெற்றிருப்பதாகவும் ஒரு தனியார் நிறுவனத்தினூடாக பணக் கொடுப்பனவு இடம்பெற்றமை பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாகவே நோக்க வேண்டியுள்ளது.

இதேபோன்று, விமானப் படையினரிடம் காணப்படும் மிக் 27 ரக விமானங்கள் நான்கையும் முற்றுமுழுதாக திருத்துவதற்கும் மிக் 23 ரக யூ.பீ.ட்ரேனர் விமானத்தை திருத்துவதற்கும் உடன்பாடு காணப்பட்டுள்ளது. ட்ரேனர் விமானத்தை திருத்துவதற்கு 118 மில்லியன் ரூபாவை செலுத்த இணக்கம் காணப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டில் இந்த ட்ரேனர் விமானம் 97.2 மில்லியன் ரூபாவுக்கே கொள்வனவு செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இதிலிருந்து பெரும் மோசடியும் ஊழலும் இடம்பெற்றிருப்பதை பகிரங்கமாகக் காணமுடிகிறது.

பாதுகாப்பு அமைச்சின் பிரதான உயரதிகாரி அதன் செயலாளரான கோதாபய ராஜபக்‌ஷவாகும். அவர் அறியாமல் எந்தவொரு கொடுக்கல் வாங்கல்களுக்கும் இடம்பெற முடியாது. இந்தக் கொடுக்கல் வாங்கல்களுக்கும் அவரே பொறுப்புக் கூற வேண்டும். அத்துடன், அவரதும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவினதும் நெருங்கிய உறவினரான உதயங்க வீரதுங்க இந்த ஊழல் மோசடி நடவடிக்கைகளின் பின்னணியில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

இலங்கை மக்களின் பணம் இவ்வாறு முறைகேடாக கையாளப்பட்டிருப்பது ஒப்புவிக்கப்படக் கூடியதாக இருப்பதால் இதன்படி சுமார் 600 மில்லியன் ரூபாவுக்கும் கூடுதலான தொகை மோசடி செய்யப்பட்டிருப்பதாகவே நாம் உறுதியாக நம்புகின்றோம்.

எனவே, இதுவிடயத்தில் முழு அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை எமது மனுவின் மூலம் வலியுறுத்த விரும்புகின்றோம். பாரபட்சமற்ற பூரணத்துவமான விசாரணையொன்றின் மூலம் உண்மைகள் வெளிக் கொண்டுவரப்பட வேண்டும். அத்துடன், தவறிழைத்தோர் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றோம்.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.