Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாநகர சபையின் மாற்றத்திற்காக மாயையிலிருந்து விடுபடுங்கள்

Featured Replies

மாநகர சபையின் மாற்றத்திற்காக மாயையிலிருந்து விடுபடுங்கள்

 

ஐக்கிய மக்கள்  சுதந்திர முன்னணியின் கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளர் அஸாத் சாலி பிரத்­தியேக  செவ்வி

–நேர்­காணல் எம்.ஆர்.எம்.வஸீம்–

கொழும்­புவாழ் மக்­களின் வாழ்வில் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­தவும் கொழும்பு மாந­க­ர­ச­பையை வினைத்­திறன் மிக்­க­தாக மாற்­று­வ­தற்கும் மக்கள் ஐக்­கிய தேசிய கட்சி என்ற நினைப்பில் இருந்து மாற்­றத்­துக்­காக இம்­முறை வாக்­க­ளிக்­க­வேண்டும். அத்­துடன் கொழும்பு மாந­க­ர­ச­பையை ஊழல் மோச­டி­யற்ற நாட்டின் சிறந்த மாந­க­ர­ச­பை­யாக மாற்­றுவேன் என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் கொழும்பு மாந­க­ர­சபை மேயர் வேட்­பா­ள­ரு­மான அஸாத் சாலி தெரி­வித்தார். 

 

கேசரி நாளி­த­ழுக்கு அவர் வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அதன் முழு­வி­பரம் வரு­மாறு;

கேள்வி: ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் நெருக்­க­மாக இருக்கும் நீங்கள் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் இணைந்து போட்­டி­யிட ஏன் தீர்­மா­னித்­தீர்கள்?

பதில்: ஐக்­கிய தேசிய கட்சி இந்த நாட்டில் பல பிர­யோ­ச­ன­மான வேலைத்­திட்­டங்­களை செய்­துள்­ளது. அத்­துடன் தமிழ் பேசும் மக்­களின் பிரச்­சி­னைகள், தேவை­களை இனங்­கண்டு பல வேலைத்­திட்­டங்­களை மேற்­கொண்ட வர­லாறு ஐக்­கிய தேசிய கட்­சிக்கு இருக்­கின்­றது. அத­னால்தான் தேர்­தலில் சிறு­பான்மை மக்கள் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு வாக்­க­ளித்து வரு­கின்­றனர். ஆனால் ஐக்­கிய தேசிய கட்­சியின் தற்­போ­தைய தலைவர் சிறு­பான்மை மக்­க­ளுக்கு எத­னையும் செய்­ய­வில்லை. குறிப்­பாக முஸ்லிம் மக்­க­ளுக்கு அவரால் எதுவும் இடம்­பெ­ற­வில்லை.

அத்­துடன் நான் ஐக்­கிய தேசிய கட்­சிக்­காக பல தியா­கங்­களை செய்­துள்ளேன். கடந்த மாகா­ண­சபை தேர்­த­லின்போது ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வரின் கோரிக்­கைக்­க­மை­யவே நான் கண்­டியில் போட்­டி­யிட்டேன். 57 ஆயி­ரத்­துக்கும் அதிக விருப்­பு­வாக்­கு­களை பெற்று வெற்­றி­பெற்றேன். அதனால் கண்­டியில் ஐக்­கிய தேசிய கட்சி வசம் இருந்த 4 சபைகள் 8 ஆக மாறி­யது. இந்­நி­லையில் கடந்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் நான் கண்­டியில் போட்­டி­யிட கேட்­ட­போது, நான் அவர்­க­ளை­ விட அதிக வாக்­கு­களை எடுத்து விடுவேன் என்ற அச்­சத்தில் அதனை கண்­டியில் இருக்கும் அமைச்­சர்கள் தடுத்­தனர். அத்­துடன் ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மைத்­து­வமும் கண்­டியில் 3 முஸ்­லிம்கள் தெரி­வா­வதை தடுக்கும் வகையில் 2 பேருக்கு மாத்­திரம் சந்­தர்ப்பம் வழங்­கியது. அதற்கு முன்னர் இடம்­பெற்ற தேர்­தலில் 3 முஸ்­லிம்கள் பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வு­செய்­யப்­பட்­டனர். அதனால் கண்­டியில் முஸ்லிம் பிர­தி­நிதி ஒருவர் இழக்­கப்­பட்டார். இது ஐக்­கிய தேசிய கட்சி முஸ்­லிம்­க­ளுக்கு செய்த துரோக­மாகும்.

அத்­துடன் பாரா­ளு­மன்ற தேர்­தலில் நாடு­பூ­ரா­கவும் பிர­சாரம் செய்­யு­மாறு எனக்கு தேசிய பட்­டி­யலில் வாய்ப்பு வழங்­கு­வ­தாகவும் ஐக்­கிய தேசிய கட்சி தலைவர் என்­னிடம் உறு­தி­ய­ளித்­த­துடன் தேசிய பட்­டி­யலில் வாய்ப்பு வழங்­கு­வ­தாக கடிதம் மூலம் தெரி­வித்தார். இறு­தியில் அது எனக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. இது தொடர்­பாக நான் ஒரு­போதும் அவ­ரிடம் கேட்­க­வில்லை. ஆனால் ஒரு­சில நிகழ்­வு­களில் ஜனா­தி­ப­தி­யுடன் பிர­த­மரும் வந்­தி­ருக்கும் போது தேசிய பட்­டி­யலில் எனது பெயர் நீக்­கப்­பட்­ட­தற்­கான கார­ணத்தை தெளி­வு­ப­டுத்­த­வேண்டும் என நான் 3தட­வைகள் கேட்­டுக்­கொண்டேன். ஆனால் எந்த பதி­லையும் இது­வரை தெரி­விக்­க­வில்லை.

இந்­நி­லை­யிலேயே இந்த தேர்­தலில் எமது தேசிய ஐக்­கிய முன்­னணி ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியுடன் இணைந்­து­போட்­டி­யிட தீர்­மா­னித்­தது. அத்துடன் கொழும்பு மாந­க­ர­ச­பையின் மேயர் வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டு­மாறு ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிதான் தீர்­மா­னித்­தது. நான் ஒரு­போதும் அவர்­க­ளிடம் இத­னை­கோ­ர­வில்லை.

கேள்வி: கொழும்பு மாந­க­ர­ச­பையை பொறுத்­த­வரை வர­லாற்று காலம் முதல் ஐக்­கிய தேசிய கட்­சியே அதி­காரம் செலுத்தி வரு­கின்­றது. இவ்­வா­றான நிலையில் இந்த சவாலை எவ்­வாறு முறி­ய­டிக்­கப்­போ­கின்­றீர்கள்?

பதில்: கொழும்பு மாந­க­ர­ச­பையை பொறுத்­த­வரை, நான் 1997 ஆம் ஆண்டு கொழும்பு மாந­க­ர ­ச­பைக்கு தெரி­வாகி சென்றேன். 2001ஆம் ஆண்டு பிரதி மேய­ராக நிய­மிக்­கப்­பட்டேன். அந்த காலப்­ப­கு­தியில் நாங்கள் செய்த வேலைத்­திட்­டங்­கள்தான் இன்றும் மக்­க­ளுக்கு நன்­மை­ய­ளித்து வரு­கின்­றன. அத்­துடன் நக­ர­ச­பைக்கு கோடிக்­க­ணக்கில் வரு­மா­னத்தை பெற்­றுக்­கொ­டுக்­கும்­வ­கையில் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்ளேன்.

அத்­துடன் மாந­க­ர­ச­பையின் இறு­தி­யாக ஐக்­கிய தேசிய கட்­சியின் ஏ.ஜே.எம்.முஸம்மில் மேய­ராக இருந்தார். அவர் பெய­ர­ள­விலே மேய­ராக இருந்தார். கோத்­த­பாய ராஜ­பக் ஷவே மாந­க­ர­ச­பையின் வேலைத்­திட்­டங்­களை மேற்­கொண்­டு­ வந்தார். அத­னாலே அவர் கோத்­த­பா­யவின் நட­வ­டிக்­கை­களை பாராட்­டி­வந்தார். அதனால் ரோஸி சேனா­நா­யக்க தெரி­வா­னாலும் மஹிந்­த­வுடன் இணைந்தே ஐக்­கிய தேசிய கட்சி கொழும்பு மாந­க­ர­ச­பையை ஆட்­சி­செய்யும். அந்­த­ள­வுக்கு ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வ­ருக்கு மஹிந்­த­வுடன் நெருக்கம் ஏற்­பட்­டுள்­ளது. இதனை மக்கள் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­ள­மாட்­டார்கள். மஹிந்­தவின் ஆட்­சியில் இடம்­பெற்ற மோச­டிகள் மற்றும் ஏதேச்சாதிகாரங்களை பொறுத்­துக்­கொள்ள முடி­யா­மலேயே மக்கள் ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­னார்கள். ஐக்­கிய தேசிய கட்­சியும் இன்று அத­னையே செய்­கின்­றது. அதனால் கொழும்பு மாந­க­ர­சபை மக்கள் மாந­க­ர­ச­பையில் மாற்றம் ஒன்றை ஏற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். மாற்­றத்தின் மூலமே ஊழல் மோச­டி­யற்ற சபை­யாக மாற்­றி­ய­மைக்க முடியும். அதற்­கான சந்­தர்ப்­பத்தை மக்கள் எனக்கு நிச்­ச­ய­மாக தரு­வார்கள் என்ற நம்­பிக்கை எனக்கு இருக்­கின்­றது.

அத்­துடன் ரோஸி சேனா­நா­யக்க கடந்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் தோல்­வி­ய­டைந்­தவர். அவரால் கொழும்பு மாந­க­ர­ச­பையை ஒன்றும் செய்­ய­மு­டி­யாது. அதனால் இந்த தேர்தல் பெரும் சவா­லாக இருக்­காது என்று நான் நினைக்­கின்றேன்.

 

கேள்வி: கொழும்பு மாந­க­ர­ச­பையை வினைத்­தி­ற­னாக கொண்­டு­செல்ல என்ன திட்­டங்­களை வைத்­துள்­ளீர்கள்?

 

பதில்: கொழும்பை அழகு படுத்தும் வேலைத்­திட்­டங்கள் எங்­க­ளிடம் இருக்­கின்­றன. கடந்த காலத்தில் கோத்தபாய ராஜபக் ஷ அழகு படுத்தும் பெயரில் கோடிக்­க­ணக்கில் ஹோட்டல் உரி­மை­யா­ளர்­க­ளிடம் பெற்­றுக்­கொண்டார். ஆனால் நான் பிரதி மேய­ராக இருக்­கும்­போது அழகு படுத்தும் வேலைத்­திட்­டங்­களை மேற்­கொண்டோம். இதன்­போது மாநக­ர­ச­பை­யி­ட­மி­ருந்து ஒரு சதம்­கூட செல­வ­ழிக்­க­வில்லை. மலர் கண்­காட்சி செய்­ப­வர்­க­ளைக்­கொண்டு செய்­து­வந்தோம். அத்­துடன் கோத்­த­பா­ய­வினால் மேற்­கொள்­ளப்­பட்ட அழகு படுத்­தல்கள் 4 மாதங்­களில் இல்­லா­ம­லாக்­கப்­பட்டு மீண்டு பாரி­ய­ளவில் செல­வ­ழிக்­கப்­பட்டு மேற்­கொண்டார். இதனால் மக்­களின் பணமே விர­ய­மாக்­கப்­பட்­டது. அதனால் நாங்கள் நக­ரத்தின் அபி­வி­ருத்­தி­களை தனியார் துறை­யி­ன­ருடன் இணைந்து பணம் விர­ய­மா­காத முறையில் மேற்­கொள்ளும் திட்­டத்தை மேற்­கொள்வோம்.

அத்­துடன் மாந­கர சபையின் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் ஒரு இடத்தில் இருந்து மக்கள் பெற்­றுக்­கொள்ளும் நிலை­யங்­களை நாங்கள் அமைத்­தி­ருந்தோம். தற்­போது அவை செயற்­ப­டு­வ­தில்லை. அந்த வேலைத்­திட்­டத்தை நான் மீண்டும் அமைப்பேன். அதுதான் எனது முத­லா­வது திட்­ட­மாகும். அத்­துடன் மாந­க­ர­சபை மக்­களின் குடும்ப பின்­ன­ணியை கணினி மயப்­ப­டுத்தி அவர்கள் ஏதா­வது தேவைக்­காக வரும்­போது உட­ன­டி­யாக அதனை செய்­து­கொடுக்கும் திட்டம் எங்­க­ளிடம் இருக்­கின்­றது. கொழும்பு மாந­க­ர­ச­பையை பொறுத்­த­வ­ரையில் பிள்ளை பிறந்­தது முதல் இறக்­கும்­வரை சேவை செய்­யக்­கூ­டிய இட­மாகும். அதனை சரி­யா­ன­மு­றையில் பிர­யோ­ச­னப்­ப­டுத்த முடி­யாமல் இருக்­கின்­றது.

நக­ர­ச­பையின் முறை­யான வேலைத்­திட்­டங்கள் இல்­லா­த­த­னால்தான் கொழும்பில் இளை­ஞர்கள் போதைப்­பொ­ருள்­பா­வனை போன்ற நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். அத்­துடன் நக­ர­ச­பைக்கு கீழ் 21 திணைக்­க­ளங்கள் செயற்­ப­டு­கின்­றன. அவை எதுவும் இன்று வினைத்­தி­ற­னாக செயற்­ப­டு­வ­தில்லை. சரி­யான முகா­மைத்­துவம் இல்­லா­மையே இதற்கு கார­ண­மாகும். அவை சரி­யான முறையில் இயங்­கினால் மத்­திய அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டங்­களை கொழும்பு மக்­க­ளுக்கு மாந­க­ர­சபை ஊடாக மேற்­கொள்ள முடியும்.

கேள்வி: கொழும்பு நகரில் ஏற்­படும் வாகன நெரி­சலை கட்­டுப்­ப­டுத்த ஏதா­வது திட்­டம் இருக்­கின்­றதா?

பதில்: ஆம் கொழும்பு நகரில் இன்று பாரிய வாகன நெரிசல் ஏற்­ப­டு­கின்­றது. இதனால் பாரி­ய­ளவில் எரி­பொருள் விர­ய­மா­கின்­றது. மக்­களின் பணமே வீண் விர­ய­மா­கின்­றது. நக­ரத்­துக்குள் முறை­யான வாகன தரிப்­பிடம் இல்லை. இதுவும் வாகன நெரி­ச­லுக்கு ஒரு கார­ண­மாகும். கொழும்பில் இன்று பாரி­ய­ளவில் முச்சக்கர வண்டிகள் ஓடு­கின்­றன. இந்­தி­யாவில் இருந்து இறக்­கு­மதி செய்யும் இந்த முச்சக்கர வண்டிகளை இந்­தி­யாவின் மும்பாய் நக­ரத்­துக்குள் ஓட­மு­டி­யாது. ஆனால் மக்­க­ளுக்கு அசெ­ள­க­ரியம் இல்­லாமல் பய­ணங்­களை மேற்­கொள்ள மாற்று திட்­டங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. அதே­போன்று கொழும்பு நகரில் வாகன நெரி­சலை கட்­டுப்­ப­டுத்த மொனோ ரேல் உட­ன­டி­யாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். கொழும்பில் இருந்து பத்­த­ர­முல்­லைக்கும் கொழும்பில் இருந்து மொரட்­டு­வைக்கும் என இந்த இரண்டு மொனோ­ரேல்­களும் ஆரம்­பிக்­கப்­பட்டால் பாரி­ய­ளவில் வாகன நெரிசல் குறை­வ­டையும்.

கேள்வி: கொழும்பு நகரில் குவியும் கழி­வுப்­பொ­ருட்­களை அகற்­று­வ­தற்கு ஏதா­வது வேலைத்­திட்­டம் இருக்­கின்­றதா?

பதில்: ஆம், தற்­போது குவியும் குப்­பை­கள் மீள் சுழற்சி செய்து அதனை உர­மாக மாற்­று­வ­தற்கும் அத்­துடன் மின் உற்­பத்­திக்கும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. அது சிறந்த வேலைத்­திட்­ட­மாகும். ஏற்­க­னவே குப்பைகளை கொண்டுசென்று கொட்டிய கொலன்னாவை மற்றும் மாதம்பிட்டி குப்பை மேடுகளை அரசாங்கத்துடன் கலந்துரையாடி அந்த பகுதியை மக்கள் சந்தோசமாக பொழுதை கழிக்கும் பூங்காவாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளோம். அத்துடன் கழிவுகளை அகற்று வதற்கு முறையான முகாமைத்துவம் ஒன்றை ஏற்படுத் தவேண்டும். அவ்வாறு இல்லாததனால்தான் அரசியல் வாதிகள் தலையிட்டு அதிலும் இலஞ்சம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் எமது வேலைத்­திட்­டங்­களை மேற்­கொள்­வ­தற்கு கொழும்பு மாந­க­ர­ச­பையில் பாரிய மாற்றம் ஏற்­ப­ட­வேண்டும். தேர்­தலில் மக்கள் இந்த மாற்­றத்­துக்­காக வாக்­க­ளிக்­க­வேண்டும். 2015 ஜன­வரி 8ஆம் திகதி நாட்டில் ஏற்­ப­டுத்­திய அர­சியல் மாற்றம் போன்று கொழும்பு மாநக­ர­ச­பை­யிலும் ஏற்­ப­டுத்த வேண்டும். அப்­போ­துதான் மாற்­றத்தின் பிர­தி­ப­லனை கண்­டு­கொள்­ளலாம். அத்­துடன் கொழும்பு மக்கள் ஐக்­கிய தேசிய கட்சி என்ற நினைப்பில் இருந்து வெளி­யேறி மாற்­றத்­துக்­காக வாக்­க­ளித்தால் மாத்­தி­ரமே கொழும்பை சிறந்­த­தொரு நக­ர­மாக மாற்­று­வ­துடன் கொழும்பு மக்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-12-30#page-8

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.