Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2020 ஆம் ஆண்டு வரையில் தேசிய அரசாங்கம் கலையாது

Featured Replies

2020 ஆம் ஆண்டு வரையில் தேசிய அரசாங்கம் கலையாது

p29-29c141122b249d4a26acb8611b3145b69864f020.jpg

 

பொதுத் தேர்தலின் பின்னரும் தேசிய அரசாங்கத்தை முன்னெடுக்கவே  தீர்மானம் என்கின்றனர் அமைச்சரவையின் இணைப்பேச்சாளர்கள்
(ஆர்.யசி)

தேசிய அரசாங்கத்தின் கால எல்லை 2020ஆம் ஆண்டு வரை நீடிக்கும். அடுத்த பொதுத் தேர்தலின் பின் னரும் தொடர்ந்து தேசிய அரசாங்கத்தை முன்னெடுக் கவே நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இரண்டு கட்சிகளுக்கு இடையி லான புரிந்துணர்வு உடன்படிக்கை 2020 ஆம் ஆண்டு  காலம் நிறைவுக்கு வந்தாலும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாக்குறுதி கள் மீறப்படவில்லை  எனவும் அரசாங்கம் குறிப்பிட்டது.  

அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது, இதில் கலந்துகொண்ட அமைச்சரவை இணைப் பேச்சாளர் தயாசிறி ஜெயசேகர மற்றும் ராஜித்த சேனராட்ன ஆகியோர் இதனை குறிப்பிட்டனர்.

அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டினை கூறுகையில்,

தேசிய அரசாங்கம் உருவாகுமா அல்லது கலையுமா என்பது குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தற்போது தேர்தல் காலம், தேர்தல் காலத்தில் பிரதான இரண்டு கட்சிகளும் தனித்து தேர்தலில் வெற்றிபெறும் நோக்கத்தில் கருத்துக்களை முன்வைக்க முடியும். அரசியல் மேடைகளில் தற்போது ஊழல், குற்றங்கள் மற்றும் தனி அரசாங்கம் அமைப்பது குறித்து கருத்துக்களை முன்வைக்க முடியும். எனினும் அரசாங்கமாக பிரதான இரண்டு கட்சிகளுக்கு நாட்டினை கட்டியெழுப்பும் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு அரசாங்கத்தை உருவாக்கியதில் இருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான தேசிய அரசாங்கமே உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய அரசாங்கமாக நாங்கள் இணைந்து செயற்படும் போது இரண்டு கட்சிகள் மத்தியிலும் கொள்கை அடிப்படையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. குறிப்பாக பொருளாதார கொள்கையில் இரண்டு கட்சிகளும் முரண்பட்டு வருகின்றன. எனினும் இணங்கி செயற்படும் காரணிகளும் உள்ளன. எவ்வாறு இருப்பினும் முரண்பாடான விடயங்களில் இணக்கம் கண்டு அதற்கமைய செயற்படவே நாங்கள் விரும்புகின்றோம். அதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றோம்.

மேலும் கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமையப்பெற்ற நிலையில் ஜனாதிபதியும், பிரதமரும் ஒரே வாக்குறுதியினை கொடுத்தனர். அதாவது 2020 ஆம் ஆண்டுவரையில் தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதாக அவர்கள் கூறினர். ஆகவே அதற்கமைய 2020 ஆம் ஆண்டு வரையில் தேசிய அரசாங்கம் முன்னெடுக்கப்படும். அதன் பின்னர் தேர்தலின் போது நாங்கள் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து சிந்திக்க முடியும்.

எவ்வாறு இருப்பினும் கடந்த மாதம் 31 ஆம் திகதியுடன் தேசிய அரசாங்கத்தின் உடன்படிக்கை கால எல்லை நிறைவடைந்துள்ளது. ஆகவே அடுத்த இரண்டு ஆண்டுகள் எவ்வாறு பயணிப்பது என்பதே இன்று பலரின் கேள்வியாக உள்ளது. எனினும் தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வது குறித்து பிரதான இரண்டு கட்சிகளும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும். இப்போது தேர்தலில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில் தேசிய அரசாங்கம் குறித்து பேச்சுவார்த்தைகள் பிட்போடப்பட்டுள்ளன. தேர்தல் முடிவடைந்த பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் என்றார்.

  ஐக்கிய தேசிய முன்னணியின் நிலைப்பாட்டை தெரிவித்த அமைச்சரவை இணை பேச்சாளர் ராஜித சேனாரத்ன கூறுகையில்,

தேசிய அரசாங்கம் 2020 ஆம் ஆண்டு வரை முன்னெடுக்கப்படும். அதில் யாரும் முரண்படத் தேவையில்லை. ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணங்கியே தேசிய அரசாங்கத்தை உருவாக்கியது. அவ்வாறு இருக்கையில் இடையில் தேசிய அரசாங்கத்தை முறித்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

அரசாங்கத்தை பிளவுபடுத்த வேண்டும் என ஒரு சிலர் மாத்திரமே முயற்சித்து வருகின்றனர். எனினும் இப்போது இடம்பெறுவது உள்ளூராட்சி மன்றத் தேர்தலே தவிர பொதுத் தேர்தல் இல்லையென்பது அவர்களுக்கு தெரியவில்லை. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரசார மேடைகளிலும் சுவரொட்டிகளிலும் மஹிந்த ராஜபக் ஷவை பிரதமர் ஆக்குவோம் என குறிப்பிட்டுள்ளனர்.

நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ மட்டும் அல்ல யாராலும் பிரதமர் ஆக முடியாது. அடிப்படை அரசியல் அறிவு இல்லாத நபர்கள் தனிக்கட்சி அமைத்தால் ஏற்படும் நிலைமைகள் இவ்வாறே அமையும். ஆகவே தேசிய அரசாங்கம் 2020 ஆம் ஆண்டு வரையில் முன்னெடுக்கப்படும். 2020 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் தனித்து போட்டியிட்டு மீண்டும் பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து செல்வது குறித்து தீர்மானம் எடுக்கப்படும். 2025 ஆம் ஆண்டு வரையில் தேசிய அரசாங்கமாக முன்னெடுக்கவே முயற்சிக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-04#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.